தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்

This entry is part 9 of 28 in the series 3 ஜூன் 2012

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தீவிர வலிபோல் தாக்கியது
என் ஆத்மாவை
உன் கீதத்தின் இசை !
என் இதயம் எப்படித் துடித்தது
என்று அறியும்
இதயம் மட்டுமே !
பற்றிக் கொண்டு உன்னை
பகல் இரவாய்க் காத்து வருகிறேன்
உற்று உன் முகம் நோக்கி
முற்றுகை செய்யும் என் விழிகள் !

உனக்காகத் தான் செய்கிறேன்
உந்தும் தாகம் அதிகம்
வழிபட்டுச் செய்யும் அவசியம்
பெரு மகிழ்ச்சியில்
பேரவ லத்தில்
பேரன்பு நேசத்தில்
இரவில் தூக்கம் இல்லை எனக்கு
இந்தப் பிறவியில்
உடைமையாய் வேண்டிய அனைத்தும்
கிடைக்கப் பெற்றேன்,
இதயமும், மனமும்
மிதந்து அப்பால் சென்றன
மரணத்தால் மட்டும்
இழுக்கப் பட்டு !

++++++++++

+++++++++++++++++++
பாட்டு : 57 தாகூர் தன் 32 ஆம் வயதில் எழுதியது (ஜூலை 10, 1893).
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford

University

Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 29, 2012

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *