சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்

author
8
0 minutes, 11 seconds Read
This entry is part 21 of 28 in the series 3 ஜூன் 2012

சுற்றுச்சூழலால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
An Ancient Civilization, Upended by Climate Change
By RACHEL NUWER
ரேச்சல் நுவெர்

 

இந்து சமவெளி நாகரிகம்(indus civilization) என்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்ட இடத்தில் இன்றும் நிலவியலாய்வாளர்களும், அகழாராய்வாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள். வேதங்கள் என்னும் புராதன புத்தகங்கள் இங்கேயே 3000 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக கூறினர். இந்த வேதங்கள்  சரஸ்வதி என்னும் மாபெரும் நதி இங்கே பாய்ந்து சென்றதாக கூறுகின்றன. இந்த சரஸ்வதி என்ற பெயரிலேயே கல்விக்கான கடவுள் அழைக்கப்படுகிறாள். ”எல்லா நதிகளிலும் பிரம்மாண்டமானதும் மகத்தானதுமான சரஸ்வதி” என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால், 4000 ஆண்டுகளுக்கு முன்னால், சுற்றுச்சூழல் மாறுபாடால் இந்த நதி காணாமல் மறைந்ததாக இன்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 நிலவியலாய்வாளர்களும், புவிமாற்ற ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும், கணிதவியலாய்வாளர்களும் ஒன்றிணைந்து பல நூற்றாண்டுகளாக கேள்விக்குள்ளான புதிர் “இந்து சமவெளி நாகரிகம் என்னவாயிற்று” என்பதை ஆராய்ந்து மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளார்கள்.

 இந்த மாபெரும் நாகரிகம் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கே எழுந்தது. இது 600 ஆண்டுகள் மிகவும் செழித்து நின்றது. அதன் பின்னர் மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தது. முந்திய ஆராய்ச்சியாளர்கள், வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்புப் படையால் இந்த நாகரிகம் அழிந்தது என்று கருதிவந்தார்கள். மற்றவர்களோ, சுற்றுச்சூழல் மாறுபாடே இதற்கு காரணம் என்று சொல்லிவந்தார்கள். Proceedings of the National Academy of Sciences அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டு இரண்டாம் கொள்கையே சரி என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

லிவியூ ஜியோசான் Liviu Giosan என்ற Woods Hole Oceanographic Institution in Massachusettsஇல் பணிபுரியும் புவியாய்வாளரே இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கியவர். ”சுற்றுச்சூழல் எவ்வாறு மக்களை பாதிக்கிறது என்பதைத்தான் பார்க்க மறந்திருக்கிறார்கள்” என்று கருதினோம் என்று இவர் கூறுகிறார். மாறுதல்களை பெருமளவில் ஆய்வு செய்து இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

 

துணைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் மூலமாகவும், நில அளவை மேடு பள்ளம் ஆகியவற்றை ஆராய்வதன் மூலமும், இந்த  ஆற்றுப்படுகையின் நிலப்பரப்பை டிஜிட்டல் வரைபடங்களாக உருவாக்கினார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் படுகைகளின் வருடக்கணக்கை ஆராய்ந்து எந்த நிலம் நதியாலும் எந்த இடம் காற்றாலும் மாறுபாடு அடைந்துள்ளது என்பதை டிஜிட்டல் வரைபடங்களில் பொருத்தினார்கள். இந்த செய்திகுவியல், ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த அகழ்வாராய்வு மாதிரிகள் மீது படியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள், 10000 வருடங்களாக இந்த இடம் எவ்வாறு மனிதர்களின் வரலாற்றையும், அதன் மீது நிலப்பரப்பின் மாறுபாடுகளையும், எது அவர்களை இங்கேயிருந்து விரட்டியது என்பதையும் மிகத்துல்லியமாக அறிய உதவின.

இந்த வரலாறு  இவ்வாறு போகிறது:

காட்டாறாக, கட்டுப்பாட்டுக்கு அடங்காத ஆறுகள் இந்து சமவெளியின் இதயத்தினூடாக பாய்ந்து சென்றன. இந்த ஆறுகள் எந்த காலத்தில் எந்த திசைக்கு மாறும் என்று திட்டமுடியாதபடிக்கு இருந்ததால், இதன் கரையில் எந்த ஒரு நகரமும் அமைக்கப்பட முடியாததாக இருந்தது. பல நூற்றாண்டுகள் சென்றபின்னால், பருவமழையின் வரவு குறைந்த பின்னால், வெள்ளங்களின் வலிமை குறைந்த பின்னால், விவசாயம் செய்யவும் வீடுகள் அமைக்கவும் வசதியான நிலைப்பட்ட  சூழல் உருவானது.

இன்றைக்கு பாகிஸ்தானாகவும், வடமேற்கு இந்தியாவாகவும், தெற்கு ஆப்கானிஸ்தானகவும் இருக்கும் இந்து சமவெளி நாகரிகம் 625000 சதுர மைல்கள் பரப்புள்ளதாக புராதன எகிப்து, மெஸபட்டோமியாவின் சாதனைகளுக்கு சவால் விடும் வண்ணம் மிகப்பெரியதாகவும் வளமுள்ளதாகவும் வளர்ந்தது. அதன் நகரங்களில், வீட்டுக்குள்ளேயே தண்ணீர் கொண்டுவரும் குழாய்களும், குளியலறைகளும், வடிவமைக்கப்பட்ட தெருக்களும், மிகப்பெரிய அறிவுஜீவி வாழ்க்கை முறையும் இருந்தது.

விவசாயத்துக்கு வாய்க்கால்களை கட்டி வாழ்ந்த எகிப்தியர்களையும் மெஸபட்டோமியர்களையும் போலல்லாமல், ஹரப்பாவில் இருந்தவர்கள், நம்பிக்கையான பருவமழை தரும் தண்ணீரையும், அங்கு இருந்த சிறிய ஆறுகளையும் சார்ந்திருந்தார்கள்.

ஆனால், பின்னால் வந்த தலைமுறைகள் கண்டறிந்தது போல, 2000 வருடங்களுக்கு பின்னர் விவசாயத்துக்கான நம்பத்தகுந்த நிலைமை அழிந்து விவசாயம் பொய்க்க ஆரம்பித்தது.

காலம் செல்ல செல்ல, பருவமழை பலவீனமாக ஆகிக்கொண்டே சென்றது. ஆறுகள் எதிர்பார்த்தது போல குறித்த நேரத்தில் குறித்த காலத்தில் வெள்ளத்தை கொண்டுவரவில்லை. இதனால் பயிர்கள் அழிந்தன. விவசாயம் உருவாக்கும் அதிகப்படி வருமானம்  இல்லாததால், சமூகத்தால், வியாபாரிகளையும், கலைஞர்களையும், கைவினைஞர்களையும், அறிவாளிகளையும்  ஆதரிக்க  முடியவில்லை.

மக்கள் நகரங்களை விட்டு வெளியேறி, கிழக்கே கங்கை நதிக்  கரையை நோக்கி கிளம்பினர். அங்கே கங்கைக்கரையில் மழை நம்பத்தகுந்தாற்போல இருந்தது. ஆனால், ஒரு  பெரு நகரத்தை தாங்கும் வண்ணம் நம்பத்தகுந்தாற்போல இல்லை. சமவெளியில் வாழ்ந்த சமூகம் சிதறியது. சின்னஞ்சிறு கிராமங்களாகவும், சிறு நகரங்களாகவும் சிதறியது.

 “நகரங்கள் அழிந்த  சிதிலம் அடைந்து நசிகின்றன. ஆகின்றன. அவை முழுக்க முழுக்க காணாமல் போவதில்லை” என்று ஜியோசன் கூறுகிறார். “இறுதியில், இந்த நகரங்கள், உதிரி மக்களின் தற்காலிக தங்கும் இடமாக ஆகிவிடுகிறது”

 சரஸ்வதி நதியின் புவியியல் சிதிலங்கள், காக்கர்-ஹக்ரா பள்ளத்தாக்கில் இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். இமயத்திலிருந்து ஓடிவரும் தண்ணீரால் மட்டுமே இந்த சமவெளி நாகரிகம் இருந்ததாக இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்ததற்கு மாறாக, பருவமழையினால் மட்டுமே இந்த நாகரிகம் வாழ்ந்து வந்ததை அறிந்தார்கள். சுற்றுச்சூழல் வறண்டநிலமாக ஆக ஆக, பருவ மழை பொய்க்க பொய்க்க, சரஸ்வதி என்ற நதியும் அதன் நாகரிகமும் புராதன கதைகளில் ஒன்றாக ஆகி பின்னுக்கு மறைந்தது.

அன்றைய ஹரப்பா வாழ் மக்களிடமிருந்து இன்று வாழும் மக்கள் கற்றுகொள்ள நிறைய பாடங்கள் உண்டு என்று டாக்டர் ஜியோசன் கருதுகிறார். “நாம் நாளையை பற்றி சிந்திக்கிறோம். நாம் நமது பிள்ளைகள் , நமது பேரப்பிள்ளைகளை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால், தொடர்ந்து மாறிகொண்டே செல்லும் சுற்றுச்சூழலும் மிக மிக மெதுவாக மாறுவதால், நமது சிந்தனைக்குள்ளும் நமது விவாதப் பொருள்களிலும்  அது வருவதில்லை” என்கிறார்.

 

நவீன கால கலாச்சாரங்கங்களும், எதிர்கால கொள்கை வகுப்பவர்களும், ஆழமான  காலத்தை மிகவும் ஆய்ந்து  புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். மிக மிக மெதுவாகவும் சிறியதாகவும் நடக்கும் சிற்சில மாறுதல்களும், இன்று நாம் பயன்படுத்தும் பொருள்கள் , மூன்றாவது, நான்காவது ஐந்து தலைமுறைகளுக்கு அப்பால் என்ன மாறுதல்களை உருவாக்கும் என்று சிந்திக்க வேண்டுமென்கிறார். சில பயன்பாடு பொருள்களில் , உதாரணமாக, பெட்ரோலியம் போன்ற பயன்பாடு பொருள்களில் இருக்கும் மாறுதல்கள் (குறைவுகள்) அவ்வளவு மெதுவாக நடக்கவில்லை.மிக விரைவாகவே இந்தப் பொருள்கள் அருகி வருகின்றன.

“இந்து சமவெளி நாகரிகத்துக்கு நடந்தது போல, நாமும் ஒரு பயன்பாடு பொருளை   நம்பி வாழ்கிறோம். அது வருகிறது. பிறகு சென்று மறைந்து  விடுகிறது. இன்றைக்கு நாம் தீவிரமாகக் கருதவேண்டிய பயன்பாடு பொருள பெட்ரோலியம் ஆகும். ” என்கிறார் டாக்டர் ஜியோசன்.

http://green.blogs.nytimes.com/2012/05/29/an-ancient-civilization-upended-by-climate-change/

Series Navigationஇஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதைவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
author

Similar Posts

8 Comments

  1. Avatar
    தங்கமணி says:

    முக்கியமான பதிவு.

    ஆக “ஆரியர்” ஆக்கிரமிப்பால் “திராவிட” சிந்து சமவெளிநாகரிகம் அழிந்தது” என்ற திராவிட இயக்க அடிப்படை கருதுகோள் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது!

    தமிழக சிந்தனைதளமே மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    1. Avatar
      Eswar says:

      அது திராவிட இயக்க கருதுகோள் என்று சொல்வதை விடவும், அப்படிப் பார்ப்பதை விடவும், சமீபத்திய அறிவியல், மொழியியல் ஆய்வுகளைப் பார்த்தால், அது ஆரியத்தை விட திராவிடமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதாக உள்ளது என அறியலாம்.

  2. Avatar
    velmurugan says:

    முதலில் சிந்து சமவெளி நாகரீகம்தான் திராவிடர்கள் நாகரீகம் என்பதே நாம் அனைவரும் உடன்படுகிறோமா? பிறகுதான் உங்கள் கேள்வி.

  3. Avatar
    Kavya says:

    ஆங்கிலக்கட்டுரைகள் தமிழில் போடப்படும்போது மொழிபெயர்ப்பாளரின் பெயர், இதை திண்ணைக்கு அனுப்பியவர் பெயர் முதலியன போடப்படுவதில்லை. பொதுவாக எல்லாதளங்களிலும் போடுவதுண்டு.

    இக்கட்டுரையை மொழிபெயர்த்தவர் பெயரென்ன?

  4. Avatar
    Paramasivam says:

    The picture shows a bull.Dravidians never knew horses.The horses were brought by Aryans and attempts were made to convert the pictures of bulls into horses.Indus valley civilization certainly belong to Dravidians.This is the view of many historians.

  5. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள பரமசிவம்,
    many historians என்று சொல்கிறீர்களே அவர்கள் யார்?
    For Harappa, see Bhola Nath, “Remains of the Horse and the Indian Elephant from the
    Prehistoric Site of Harappa (West Pakistan)” in Proceedings of the All-India Congress of Zoology
    (Calcutta: Zoological Society of India, 1961). See also Bhola Nath, “Advances in the Study of
    Prehistoric and Ancient Animal Remains in India – A Review” in Records of the Zoological
    Survey of India, LXI.1-2, 1963, pp. 1-64.
    7
    Sándor Bökönyi, “Horse Remains from the Prehistoric Site of Surkotada, Kutch, Late 3rd
    Millennium B.C.,” South Asian Studies, vol. 13, 1997 (New Delhi: Oxford & IBH), p. 299.
    8
    Sándor Bökönyi, 13 December 1993, in his report to the Director General of the
    Archaeological Survey of India, quoted by B. B. Lal in The Earliest Civilization of South Asia,
    op. cit., p. 162.
    The Horse and the Aryan Debate / p. 18

    இதெல்லாம் அந்த many historians லிஸ்டில் வருமா?

    மேலும் படிக்க
    http://www.archaeologyonline.net/artifacts/horse-debate.html

    இதெல்லாம் எப்பவோ பழைய விவாதங்கள். முடிந்து போய் விட்டன.
    தமிழில் இவையெல்லாம் வரவில்லை என்பதால் இவை இல்லவே இல்லை என்று நினைத்துகொள்ளலாம் போலிருக்கிறது.

    1. Avatar
      Eswar says:

      Horse and Aryan debate was heavily criticized by the linguists, and the related articles were considered as misleading articles, by Parpola, et al. Hope further discussions would enlighten people.

  6. Avatar
    Dr.G.Johnson says:

    In theJuly 2000 issue of the NATIONAL GEOGRAPHIC there was an illustrious article on the INDUS VALLEY CIVILISATION. Based on the deciphering of the inscripions on the shreds collected at the excavation sites at HARRAPA and MOHANDIJARO, it was found that they resembled closely to TAMIL and the other DRAVIDIAN languages. Hence it is assumed beyond doubt that it was the DRAVIDIAN CIVILISATION which flourished in the INDUS VALLEY. If its downfall was not due to ARIAN invasion but due to natural calamities, it is welcome news for it is a proof that the DRAVIDIANS were in no way inferior to the ARIYANS in might and warfare. THe dark-skinned Dravidians would have migrated eastward ( Nepal, BENGAL ) and middle INDIA ( MADYA PRADESH ) and SOUTH INDIA. This is the reason for the close resemblance of the people of SOUTH INDIA with those of NEPAL and BANGLA DESH today. When exactly the INDIAN SUB-CONTINENT was occupied by the ARYANS is an interesting subject…Anyway DRAVIDIANS are proud today that their origin is from the glorious INDUS CIVILISAION which excels that of the EGYPT and MESOPOTAMIAN civilisation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *