அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும்
என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல்,
ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டுகொள்ளாமல்,
சிட்டுக்குருவிகள் அருகி வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல்,
நிலத்தடி நீர் வற்றி, பூமி முழுதும் பாலைவனமாக மாறிவருகிறது
என்பது பற்றிக்கவலை கொள்ளாமல்,
பவளப்பாறைகள் கூண்டோடு அழிக்கப்படுகிறது என்று அறிந்துகொள்ளாமல்,
அருகி வரும் மொழிகளுள் நமதும் ஒன்று என்றுணராமல்,
நாளொன்றிற்கு நான்கு பறவையினங்கள்
இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்றன என்றுணராமல்,
அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்
நமது கலைகள் அழிந்து வருகின்றன என்பதைப்பொருட்படுத்தாமல்,
நமது கிராமத்தை மறக்கவைத்து உலகமே ஒரு கிராமம்
என்ற திட்டமிட்ட பரப்புரையை உணர்ந்துகொள்ளாமல்,
நான் பேசும் என் தாய்மொழியால் என்ன பலன் என
அதையும் ஒரு நுகர்வுக்கலாச்சாரத்தின் மனப்பாங்குடனேயே
பலரும் உணரமுற்படுதலை அறிந்துகொள்ளாமல்,
உள்ளூர்க்கோழியை வறுத்துத்தின்னவும் வெளியூர்க்காரனின்
தொழில்நுட்பம் எதற்கு என்பதைப்பற்றிக் கேள்வி ஏதும் கேட்காமல்,
மஞ்சளின் மகிமையறிந்து அன்னியன் அவனுக்குச் சொந்தமாக்கிக்கொண்ட கொடுமையைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல்,
அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்
உலகின் அத்தனை சாதனைகளும் பலமுறை முயன்ற பின்னரே
சாத்தியமானது என்று உணரமுற்படாமல்,
தனக்குள் என்ன சக்தி இருக்கிறது என்று ஆராயவிருப்பில்லாமல்,
தன்னால் என்ன துறையில் பிரகசிக்க இயலும் என்று
அறிந்துகொள்ள முற்படாமல்,
வெறுமனே தாமே இவ்வுலகின் மூத்தகுடி என்று கூறிக்கொண்டே
ஆக்கப்பூர்வச் செயலென எதையும் தெரிந்து செயல்படாமல்,
அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்
வெந்ததை மட்டுமின்றி வேகாததைத்தின்றாலும்
விதி வந்தால் சாவோம் என்று உணராமல்,
என் கடவுளே பெரிது என்று பிதற்றித்திரிபவரை விலக்கி
உழைப்பே கடவுள் என்பதை உணர்ந்து கொள்ளாமல்,
நாளைக்குச்செய்தாலும் இந்தச்செயல் நடக்குமெனக்கருதி
இன்றைய பொன்னாளை வெறுமனே வீணடிப்பதை உணராமல்,
அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்
இத்தனை கூறிய பின்னரும்
எந்த ஆக்கப்பூர்வச் செயலையும் செய்ய விருப்பின்றி
நீங்களும் இந்தக்கவிதையின் தலைப்பையே
உங்களுக்குள் எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தீர்களெனில்
இங்கனம் கவி எழுதி ஒரே நாளில்
யாரையும் திருத்தி விட இயலாது என்று
எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்.
– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
- முள்ளாகும் உறவுகள்
- சங்கர் தயாளின் “ சகுனி “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
- உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்
- நினைவுகளின் சுவட்டில் – 90
- சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
- எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)
- மனநல மருத்துவர்
- முள்வெளி அத்தியாயம் -14
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
- கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
- பழையபடி மரங்கள் பூக்கும்
- திருக்குறள் விளம்பரக்கட்டுரை
- திருடுப் போன கோடாலி
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்
- தப்பித்து வந்தவனின் மரணம்.
- துருக்கி பயணம்-7
- தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
- மஞ்சள் கயிறு…….!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
- நினைவுகள் மிதந்து வழிவதானது
- காசி
- இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
- குரோதம்
- நினைவு
- “காலம் தீண்டாத கவிஞன்…….கண்ணதாசன்”
- “செய்வினை, செயப்பாட்டு வினை“
- பஞ்சதந்திரம் தொடர் 49
- நான் ‘அந்த நான்’ இல்லை
- நீட்சி சிறுகதைகள் – பாரவி
- நிதர்சனம் – ஒரு மாயை?
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து
- இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்
- அவனுடைய காதலி
- எனது வலைத்தளம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58
- கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )
- எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2