தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.

This entry is part 16 of 41 in the series 8 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மௌனத்தில் வசிப்பாய் நீ என்
இதயத்தில்,
வேனிற் பொழுதின்
அந்தரங்கத் தனிமையில் மிளிரும்
பௌர்ணமி இரவு போல்.
என் வாலிபம், என் வாழ்க்கை
என் மெய் உலகம்
முழுவதும்
நீ பெரும் பீடுடன்
நிரப்பி வைப்பாய்
நீடித்த மௌன இரவு போல்.

உன் கண்கள் பரிவு மேவி
ஏகாந்தக் கண்காணிப்பில்
என்னை விழித்திருக்க வைக்கும் !
உன் முகத்திரை நிழல்
பாதுகாப் பிடம் அளிக்கும்
என் இதயத் துக்கு !
எனது துயரும் மன வலியும்
நிறை வேறிய என் கனவுகளும்
நிரப்பப் படும்
நின் நறுமணத்தில்
நீடித்த மௌன இரவு போல் !

+++++++++++++++++++
பாட்டு : 62 தாகூர் தன் 34 ஆம் வயதில் எழுதியது (நவம்பர் 1895). இதில் வரும் உவமை தனது மனைவி மிருளாளினி தேவியைப் பற்றி ஒருவேளை இருக்கலாம். திருமணமாகி 12 வருடங்கள் கடந்து நாலாவது பிள்ளையாக மூன்றாம் பெண் குழந்தை பிறந்த தமது தாம்பத்திய இன்பத்தில் படைத்தது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] July 2, 2012

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *