தப்பிப்பு

This entry is part 1 of 21 in the series 21 அக்டோபர் 2012

ஏரி நீர்ப்பரப்பில்
மீன் கொத்தி
லாகவமாக
இறங்கி மேலெழும்பிய போது
அதன் அலகில் மீன்
இருந்ததா
என அவதானிக்கவில்லை

வரப்பு வளையில் பதுங்கும்
நண்டு
வேட்டையிலிருந்து தப்பித்த
ஒன்று தான்

முட்டையிலிருந்து வெளி வந்த
சில மணி நேரத்தில்
வல்லூறுக்கு அகப்படாதவையே
கடலுள் உயிர்க்கும்
ஆமைகள்

தராசுத் தட்டுக்கோ
செண்டுக்கோ சரத்துக்கோ
போகாமல்
செடியிலுருந்த மலர்கள்
விழும்முன் சருகாய்

மனவெளிக்கும் சொற்களுக்கும்
பிடிபடாத ஒரு கவிதை
எரிகல்லாய்

யதார்த்தத்திலிருந்து தப்பிப்பு
உண்டு
விடுதலை இல்லை என்றது
கீறி
காலைச் சவரம்
காட்டிய ரத்தம்

Series Navigationதிரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *