தளபதி .. ! என் தளபதி ..!

This entry is part 10 of 31 in the series 2 டிசம்பர் 2012

Cover Image Walt Whitman-1

மூலம் : வால்ட் விட்மன்
(1819-1892)
(புல்லின் இலைகள்)

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா



ஓ காப்டன் ! என் காப்டன் !
ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !
கப்பல் தளங்கள் தப்பின சூறா வளியை !
தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !
அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை !
வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !
ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !
ஓடுது பார் செந்நிறத் துளிகள் !
கப்பல் தளத்தில் கவிழ்ந்து கிடக்கிறார்
காப்டன் மரித்து சில்லிட்டுப் போய் !

 

ஓ காப்டன் ! என் காப்டன் !
எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !
எழுவாய் ! கொடி பறக்கும் உனக்காய் !
சங்க நாதம் முழங்கும் உனக்காய் !
தோரணம், மலர் வளையம் உனக்காய் !
காத்திருக்கும் கூட்டம் கடற் கரையில் !
அழைப்பது மக்கள் உன்னைத் தான் !
ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !
உன் தலைக் கடியில் என்னிரு கரங்கள் !
இங்கு பாரீர் காப்டன் ! என்னரும் பிதாவே !
கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !
சில்லிட்டுக் கிடக்கிறீர் செத்த உடலாய் !

 

மௌன மாகி விட்டார் என் காப்டன் !
வெளுத்த இதழ்கள் ! முடங்கிய உடல் !
பிதா என் கைத் தொடுகை உணர வில்லை !
இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !
பாதுகாப்பு நங்கூரம் கப்ப லுக்கு ! பயணம் முடிந்தது !
பயங்கரப் பயணத்தில் குறிக்கோள் வென்றது !
கொண்டாடும் கடற்கரை ! ஆலய மணி ஓசை !
தடுமாற்றம் துக்கம் என் கப்பல் தளத்தில் !
சில்லிட்டு கிடக்கிறார் விழுந்தென் காப்டன்
செத்த உடலாய்க் கப்பல் தளத்தில் !

++++++++++

 

Abraham Lincoln -1

(ஆப்ரஹாம் லிங்கன் மரணத்தைப் பற்றி வால்ட் விட்மன்)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 29, 2012)] [R-1]

Series Navigationநீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *