ஆள்காட்டி மழை
ஜன்னல் கம்பிகளில்
தொற்றிக்கொண்டிருந்த
மழை நீரை
ஆள்காட்டி விரல் கொண்டு
ஒரு முனையிலிருந்து
மறுமுனை வரை
அழுத்தி வடித்து விட்டேன்.
மறு நாள் மழை
வரவில்லை.
ஆள்காட்டி விரல்
காரணமாயிருக்குமோ ?
அஞ்சறைப்பெட்டி
அஞ்சறைப்பெட்டியில்
அம்மா போட்டு வைத்த
மீதக்காசில்
சீரகத்தின் மணமும்
கடுகின் வாசமும்
வெந்தயத்தின் நெடியும்
மஞ்சள்பொடியின் கமறலும்
மிளகின் காரமுமாக
அடித்த வாசம்
இன்னும் என் மனதினுள்
வட்டமடிக்கிறது
அந்தக்காசில்
வாங்கித்தின்ற
மிட்டாயின் மணம்
ஏனோ நினைவில் இல்லை.
சின்னப்பயல்
– chinnappayal@gmail.com
- முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்
- கதையல்ல வரலாறு (தொடர்) 1
- சலனப் பாசியின் பசலை.
- நிழல் வேர்கள்
- நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
- ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்
- காற்றும் நானும்
- ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..
- சமன் விதி
- புறமுகம்.
- புழுக்கம்
- நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.
- (71) – நினைவுகளின் சுவட்டில்
- சனி மூலையில் தான் நானும்
- வினா ….
- இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)
- மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக
- பிறந்த மண்
- காலம் – பொன்
- ப.மதியழகன் கவிதைகள்
- காட்சியும் தரிசனமும்
- ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
- சின்னப்பயல் கவிதைகள்
- காகித முரண்
- அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்
- விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
- மேலதிகாரிகள்
- அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்
- என்னைக் கைது செய்யப் போகிறார்கள்
- கவிஞனின் மனைவி
- வாழ்தலை மறந்த கதை
- ஊதா நிற யானை
- இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
- “அறுபத்து நான்காவது நாயன்மார்“
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5
- பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6
- கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
- ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்
- திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்
- இருள் குவியும் நிழல் முற்றம்
- பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
- பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..
Rain drops running along the window rods would remind us abacus. The drops fighting the gravitation would finally succumb. No child would miss a chance to wipe the pearls. Rain is a ceaseless wonder whatever form it presents to us.
Coins carry the smell of the childhood era. The balance coins mother stored in the provisions box is the reserve and the guilt of taking away the vital savings robs the smell and taste of the candy purchased out of such treasure.
Poems transport me to the pristine past.
மனதைத் தொடும் எளிமையான வரிகள்