வெற்றிக் கோப்பை

This entry is part 19 of 31 in the series 7 ஏப்ரல் 2013

 

 

நீங்கள் கைப்பற்றலாம்

விலங்குகள் இல்லா கானகத்தை

உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம்

தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை

உங்கள் தீர்மானத்துக்கு தலையாட்டலாம்

இறையாண்மையை அடகு வைத்து

பூம்பூம்மாட்டினைப் போல்

உறக்கத்தில் கனவுகளுக்கு தடை போடலாம்

சிறைக்கு உள்ளே மனதை விலங்கிட்டு

உங்கள் ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கலாம்

கடனை திருப்பித் தர இயலாத கிராமத்திலிருந்து

வாசலில் கோலமிட்டு அழைக்கலாம்

நீல வண்ணத்தில் யார் வந்தாலும்

நீங்கள் நதியை நாடலாம்

பாவமூட்டையை இறக்கி வைக்க

உங்கள் கால்களை வருடும் அலைகள்

ஆழ்கடலிடம் சொல்லிவிட்டு வருவதில்லை

உங்களை பின்தொடரும் நிழல்

காயங்களும்,வடுக்களும் நிறைந்ததாக இருக்கலாம்

வரிசையில் நின்று தரிசனம் பெறலாம்

அருள் வேண்டி முடியை காணிக்கை தரலாம்

எல்லா போட்டிகளிலும் தோற்றவனுக்காக

வெற்றிக் கோப்பை தவங்கிடக்கலாம்.

Series Navigationஎம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *