மீட்பரின் பாதங்களைக்
கழுவிக் கொண்டிருக்கிறேன்
மெசியா தான் இவர் என்று
நம்பிக் கொண்டிருக்கிறேன்
அவருக்கு பயந்து
ஓய்வு நாளில்
ஒன்றும் செய்வதில்லை
நியாத்தீர்ப்பில் மீண்டும்
சந்திக்க வேண்டியிருக்கும்
அவரை
இந்த விதை அழியப் போகிறது
என்று முன்பே அவர் சொன்னது
எங்களால்
புரிந்து கொள்ள முடியவில்லை
உங்களிடையே பிரிவினையை
ஏற்படுத்த வந்ததாக
அவர் கூறியது
மலையில் பட்டு எதிரொலித்தது
கடவுளைக் காண வேண்டுமா
எனக் கூறி என்னை
கடலில் அமிழ்த்திய
போது தான்
எனக்கு ஞானம் பிறந்தது
வார்த்தைகளற்ற மௌனத்தில் தான்
நாங்கள் நிறையக்
கற்றுக் கொண்டோம்
அவரை சிலுவையில்
அறைந்த போது
வெளிப்படுத்திக் கொள்ளாமல்
வேடிக்கைப் பார்த்தோம்
சீடர்களில் என்னை
மட்டும் மீண்டும்
உலகுக்கு அனுப்பிய
மனுஷகுமாரனை மன்றாடிக்
கேட்டுக் கொள்கிறேன்
இயேசுவின் கருத்துக்களையே
தஙகளுக்கு ஏதுவாக
மாற்றி வைத்திருக்கும்
மனிதர்களிடம் எப்படி
நீங்கள் வரப்போவதை
புரிய வைப்பேன்.
- எதிரி காஷ்மீர் சிறுகதை
 - உணவு நச்சூட்டம்
 - நட்பு
 - புகழ் பெற்ற ஏழைகள்  – 24
 - ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி
 - ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை
 - டௌரி தராத கௌரி கல்யாணம் ……19
 - தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்
 - ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)
 - குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
 - நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.
 - தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !
 - கம்பராமாயணக் கருத்தரங்கம்
 - மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…
 - முக்கோணக் கிளிகள் [5]
 - ஞாநீ
 - ஆமென்
 - துகில்
 - அப்பா என்கிற ஆம்பிளை
 - சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !
 - தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு
 
வார்த்தைகளற்ற மௌனத்தில் தான்
நாங்கள் நிறையக்
கற்றுக் கொண்டோம்
நித்திலமான வரிகள், அவரை விரும்பும் நேயர்களுக்கு அது நிச்சயம் புரியும். உங்கள் மௌனம் கற்றுக்கொண்டதை போல அவரின் வார்த்தைகள் பேசக்கூடியவை. நிர்பந்தத்தின் வாசலில் சத்தியம் பேசும் வசனங்கள்