சீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]

This entry is part 14 of 34 in the series 10 நவம்பர் 2013

 

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

சீதாயணம் படக்கதை

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

 

படம் : 10 & படம் : 11

 

Scene -10

 

Scene -11
++++++++++++++++++++++++++++++++++++++++
image (5)

காட்சி மூன்று

ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு

 

 

இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.

நேரம்: மாலை

அரங்க அமைப்பு:  வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.

 

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்! வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது! சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவி யாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன். அப்படிக் கனவு காண்கிறேன்!  ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தர மாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).

வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா ? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?

சீதா: அது என் விருப்பம்தான், மகரிஷி! ஆனால் அது நடக்காது. வேண்டாம், அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்புத் தினமும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிஷி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!

வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.

சீதா: வேண்டாம் மகரிஷி! நாடு கடத்தப் பட்டு நான் ஆசிரமத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டாம். காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள் ? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?

வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆசிரமத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஆசிரத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், சிசுவின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.

சீதா: மிக்க நன்றி மகரிஷி. அரண்மனை கைவிட்டாலும், ஆசிரமம் ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் ஆசிரமப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரைப் படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.

வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே ஆசிரமத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ ஆசிரம வாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விபரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் ஆசிரமத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.

சீதா: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிஷி. உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருத வில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிஷி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!

வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)

[சில மாதங்கள் கழித்து ஆசிரமத்தில் சீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்கு குசா என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு லவா என்றும் சூட்டுகிறார். லவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, யோகா உடற்பயிற்சி, மனப்பயிற்சி, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்ற வற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் வில்பயிற்சியில் மேதமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதா சிறுவர் மீது தீராத அன்பைக் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். லவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]

[தொடரும்]

+++++++++++++++

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

 

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅதிரடி தீபாவளி!தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

45 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புள்ள ஆசிரியருக்கு,

    முதல் பத்தியை மூன்றாகப் பிரித்துப் போடுங்கள். எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து விட்டன.

    சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப் பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டு விட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்!

    வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது!

    சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவி யாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தர மாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது!

    (கோவென்று கதறி அழுகிறாள்.)

  2. Avatar
    ஷாலி says:

    நம்ம கிராம காவல் தெய்வம் கருப்புசாமிக்கும் இராமாயணத்திற்கும் தொடர்பு உண்டா?ஆம்!உண்டு.லவகுசர்களும் தீக்குளிப்பு.

    கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.

    ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் (குசன் என்றால் தர்ப்பை) என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.

    ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன் மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.

    http://sivabhogam.com/siru-theivangal.html

  3. Avatar
    ஷாலி says:

    சென்னை-கோயம்பேடு என்னும் குசலவபுரி ஸ்ரீ.வைகுண்டவாசல் பெருமாள் திருக்கோயில் தல புராண செய்தி.

    ஸ்ரீ இராமனின் புதல்வர் லவகுசர்கள் “கோ” என்னும் அரசனாகிய இராமனின் அசுவமேத யாகக் குதிரைகளை “அயம்” என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத் தலம் கோயம்பேடு எனப் பெயர் பெற்றது. “பேடு” என்றால் வேலி எனப்பொருள்.இங்கு இராமபிரான் அரசர் கோலத்தில் இல்லாமல் “மரவுரி கோலத்தில் உள்ளார்.இத்தலத்தில் பெருமாள் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.இங்கு சீதை கர்ப்பிணி கோலத்தில் இருக்கிறாள்.வால்மீகியின் இருபுறமும் லவனும் குசனும் இருக்கிறார்கள்.அருணகிரியார் இத்தலத்தை திருப்புகழில் “கோசைநகர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    மதிப்பிற்குறிய நண்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கம்.

    ஒரு சம்சயம்.

    இந்தப் படைப்பில் எழுதப்பட்ட விஷயங்கள் அனைத்தும் கதை மேலும் கதையைத் தவிர வேறு அல்ல தானே.

    ஒவ்வொரு பதிவின் கீழும் பல நூற்களை குறிப்பிட்டுள்ளீர்கள். இவை வெறும் ஔபசாரிகமாக பகிரப்பட்டுள்ளனவா? அல்லது இவற்றை நீங்கள் ஆழ்ந்து வாசித்துள்ளீர்களா? அதன் அடிப்படையில் உங்கள் படைப்பு படைக்கப்பட்டுள்ளதா?

    எல்லாம் கதை – அதுவும் தங்கள் புனைவு – என்றால் எனக்கு மேற்கொண்டு ஏதும் சொல்ல இல்லை. இல்லையென்றால் I am smelling rat about many many things. Coupled with the fact that you do poor homework in presenting your write ups on any matter other than writeups on science, I ponder as to should I go for a rebuttal.

    I was not doing well. Feeling well these days. But I feel there is enough ground for going in for a dissection of this weird write up.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் கிருஷ்ணக்குமார்,

      நாடக மேதை பெர்னாட் ஷா “சீஸர் & கிளியோபாத்ரா” நாடகத்தையும், ஷேக்ஸ்பியர் “ஜூலியஸ் சீஸர்,” “அண்டனி & கிளியோபாதரா” நாடகங்களையும் தம்தம் தனித்துவக் கண்ணோட்டத்தில்தான் படைத்துள்ளார்.
      அந்த முறையில் என் சீதாயணம் நாடகமும் பொது நபருக்கு என் தனித்துவக் கண்ணோட்டத்தில் உருவானது.

      சி. ஜெயபாரதன்.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      கிருஷ்ணகுமார் மடலில் ஓர் இந்துத்துவ மிரட்டல் ஒளிந்து கொண்டுள்ளது.

      யார் இந்த அயட்டோலா கோமேனி ?

      இராமயணம் பன்முறை இவரது பாட்டனார்கள் வரலாற்று உண்மையைத் திரித்து முறித்து மானிட இராமனை மட்டும் இறைவனாகப் போற்றிப் புனைந்த ஓர் கலப்படப் புராணக் காவியம்.
      சீதாவை மீட்க உதவி செய்த தென்னவரைக் குரங்குகளாகக் காட்டிய முரண்பாட்டுக் காவியம்.

      சி. ஜெயபாரதன்.

  5. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அருணகிரியார் இத்தலத்தை திருப்புகழில் “கோசைநகர்” என்று குறிப்பிட்டுள்ளார். \

    அன்பர் ஷாலி,

    கோசை நகர் பற்றிய திருப்புகழ் பகிர வேணுமாய் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  6. Avatar
    ஷாலி says:

    திருப்புகழ் – பாடல் 699 – கோசைநகர்

    ராகம் -….; தாளம் –

    தானதன தானதன தானதன தானதன
    தானதன தானதன …… தனதான

    ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
    தாலிலையெ னாமதன …… கலைலீலை

    யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
    லாசைமிக வாயடிய …… னலையாமல்

    நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
    னானபத மாமலரை …… நலமாக

    நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
    நாடியரு ளேயருள …… வருவாயே

    சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
    சீதசல மாசடில …… பரமேசர்

    சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
    சீறிவரு மாவசுரர் …… குலகாலா

    கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
    பாலுமுற வீறிவரு …… குமரேசா

    கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
    வேசமுரு காவமரர் …… பெருமாளே.

    அன்பும் இன்பமும் தருவதான கனத்த மார்பகங்கள், விலைமாதர்களுடைய இடுப்பு நூலைப் போன்றது, வயிறு ஆலின் இலையைப் போன்றது, என்று உவமை கூறி, மன்மதனுடைய காம சாஸ்திர விளையாடல்கள் எல்லாம் உண்டாகும் குழியான முக்கோணமான பெண்குறியில் மிக்க ஆசை கொண்டு அடியேன் அலைச்சல் உறாமல், நாதனே, நூறு கோடி ஆகம மந்திர உபதேசப் பொருள்களை சத்தத்தால் தெரிவிக்கும் சிலம்புகள் முன்னதாகவே விளங்கும் பாதத் தாமரைத் திருவடிகளை நன்மை பெறுமாறு, நான் நாள்தோறும் நினைக்கும்படி, உனது கருணையை நாடிவரும்படி, உனது திருவருளை அருள் புரிய வருவாயாக. குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு, அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர் (இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான் உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே, நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம் உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும் பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே, கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே, முருகனே, தேவர்களின் பெருமாளே.

    * கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.
    http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/thiruppugazh/thiruppugazh_699.html#.UoUsQrDfpdg

  7. Avatar
    IIM Ganapathi Raman says:

    //எல்லாம் கதை – அதுவும் தங்கள் புனைவு – என்றால் எனக்கு மேற்கொண்டு ஏதும் சொல்ல இல்லை. இல்லையென்றால் I am smelling rat about many many things. Coupled with the fact that you do poor homework in presenting your write ups on any matter other than writeups on science, I ponder as to should I go for a rebuttal.//

    தேவையற்ற மிரட்டல்.

    இராமாயணம் விதவிதமாக எழதப்பட்டிருக்கிறது. சீதை இராவணனின் தங்கை என்று கூட எழுதப்பட்டிருக்கிறது.

    அவரவரவர் பார்வையில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அவரவர் எழுதிவைத்தவை நம்மை ‘இராமன் எத்தனை இராமனடி’ என வியக்கவைக்கின்றன். (சீதை எத்தனை சீதையடி என்றும் சொல்லலாம்) இவை இன்று நேற்றன்று. தொன்று தொட்டு நடந்துவரும் செயல்கள். எழுதியோரை இராமயணத்தைத் திரிக்கிறீர்கள் என எவரும் சொன்னதாக யான் படிக்கவில்லை.

    எவரையும் இப்படித்தான் பார்க்கவேண்டும் என்று ஆணையிட இராமாயாணம் இப்படித்தான் நடந்தது என அசைக்கமுடியா ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். த்ரேயுத யுகத்தில் நடந்த கதை எனச்சொல்வர். த்ரேயுத யுகம்=74 Lakh years. இதிஹாசங்கள் இரண்டிலும் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரங்கள் கிடையா. இருப்பதாகச்சொல்வது பலியுணர்ச்சியில் புனையும் கற்பனைகள். எனவேதான் இவ்விரு காவியங்களையும் வரலாறு எழுத ஆராய்ச்சியாளர்கள் எடுப்பதில்லை.

    வால்மீகி காட்டும் இராமனும் கம்பர் காட்டும் இராமனும் ஒருவரல்ல. கம்பரைப்பார்த்து, “I am smelling rat!” என்றொருவர் சொன்னால் எப்படியிருக்கும்? ஒரு எ.கா: வால்மீகியின் இராமன் சத்திரிய குலதர்மமான மாமிசம் உட்கொள்ளல், சுரபானம், சோமபானம் அருந்துதல் இவற்றைக்கைகொண்டான். கம்பரோ இராமனைப் பிராமணனாக்கத்தான் செய்தார்.
    நான் ஏறகனவே முடித்துவைத்துவிட்டேன்:

    ஜயபாரதனின் சீதாயாணம் அவரின் பார்வையே. விரும்பியோர் ஏற்றுக்கொள்ளலாம். விரும்பாதவர் திண்ணையில் வேறு பலவற்றைப்படிக்கலாமே?

    — திருவாழ் மார்பன்

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    உங்களுக்கு கேட்ட கேழ்விக்கு பதில் தெரியவில்லை என்றால் உடன் வசவுகளில் இறங்கி விடவேண்டியது. அப்படித்தானே.

    \ சீதாயணம் நாடகமும் பொது நபருக்கு என் தனித்துவக் கண்ணோட்டத்தில் உருவானது. \

    \ கிருஷ்ணகுமார் மடலில் ஓர் இந்துத்துவ மிரட்டல் ஒளிந்து கொண்டுள்ளது. \

    Nope. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது உங்கள் விஷயத்தில் வாஸ்தவமாக இருக்கலாம். ஸ்ரீமான் ஜெயபாரதன் படைப்பில் ஹிந்து மதக்காழ்ப்பு ஒளிந்து கொண்டுள்ளது என்பது மட்டிலும் என் ஆரோபம் இல்லை. இந்த விஷயம் தனியாக விசாரிக்கப்படும். குறித்துக்கொள்ளவும்

    \ இராமயணம் பன்முறை இவரது பாட்டனார்கள் வரலாற்று உண்மையைத் திரித்து முறித்து மானிட இராமனை மட்டும் இறைவனாகப் போற்றிப் புனைந்த ஓர் கலப்படப் புராணக் காவியம். சீதாவை மீட்க உதவி செய்த தென்னவரைக் குரங்குகளாகக் காட்டிய முரண்பாட்டுக் காவியம். \

    ஸ்ரீமான் ஜெயபாரதன், ஏசுபிரானாக இருக்கட்டும் ராமன் அல்லது கண்ணனாக இருக்கட்டும் வரலாறு என்று நீங்கள் கதையடித்தால் ஆதாரம் என்பது கேழ்க்கப்படும். வரலாறை வரலாறாக மட்டிலும் அணுகுவேன் ஆதாரங்கள் சார்ந்து. இதை முதலில் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

    ராமாயணத்தில் நீங்கள் என்ன வரலாற்று விஷயங்களைக் கண்டீர்கள். அது யாது.

    இங்கு குரங்கு சமாசாரம் பற்றி கதையளந்துள்ளீர்கள்.

    பல ராமாயாணம் என்று முக்காடு போட்டுக்கொண்டு விஷயத்திற்கு வராது கதை அளக்க முயற்சிக்கக் கூடாது. தென்னவரை குரங்காகச் சொல்லியுள்ளது என்றால் நீங்கள் குறிப்பிடுவது வேறு பாஷையிலான ராமாயணமா? ராமாயணம் பல என்றால் நீங்கள் குறிப்பாக கதையளக்கும் வரலாறு என்ற சமாசாரம் எந்த ராமாயணத்தில் எந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. தமிழிலா? சம்ஸ்க்ருதத்திலா? ப்ராக்ருதத்திலா? அதன் குறிப்புகளை – ராமாயணத்தின் பெயர் — பாடல் எண் – இவற்றைப் பகிரவும்.

    கம்பராமாயணம் அல்லது வால்மீகி ராமாயணம் என்று தலைப்பை மட்டும் படித்து விட்டு கம்ப ராமாயணத்தில் அல்லது வால்மீகி ராமாயணத்தில் அறவே சொல்லப்படாத விஷயங்களைச் சொன்னதாகக் கதையளக்கக் கூடாது.

    காந்தி இறந்ததற்கு சாவர்க்கர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் புளுகி விட்டு ஆதாரம் கேட்டதற்கு ….. நீங்கள் சமர்ப்பிக்கும் ஆதாரம் என்ன சொல்கிறது என்று வாசித்தும் பார்க்காமல் ஆதாரம் என்று உரலைக் காட்டி புறமுதுகிட்டு ஓடிவிட்டு ….. நீங்கள் காட்டிய ஆதாரமே அவர் வருத்தம் தெரிவித்ததற்கு ஆதாரமாக இருந்ததை …..இந்த உலக முழுதும் மற்றும் இந்த தளம் முழுதும் நீங்கள் அடித்து விட்ட புளுகை…… வாசித்தது நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.

    வரலாறு என்ற பெயரில் உங்கள் புனைவுகளைத் திணிக்க முயன்றால் கண்டிப்பாக ஆதாரங்கள் கேழ்க்கப்படும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சரி என்று நம்பி நீங்கள் சொன்ன விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் விஷயத்துக்கு வாருங்கள். ஹிந்துத்வம், மிரட்டல்,பாட்டனார், வரலாறு……இத்யாதி முகமூடிகள் அணிந்து நீங்கள் அடித்து விட்ட விஷயங்களிலிருந்து ஓட முயற்சிக்காதீர்கள்.

    அப்படி இல்லை என்றால்…….

    நீங்கள் படைத்ததாகச் சொல்லிக்கொள்வது என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

    வசவுகளில் உங்களுடன் என்னால் போட்டியிட முடியாது.

    உங்கள் பாஷையில் சொன்னால்……எனது அன்பார்ந்த நண்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் எப்போது வசவுகள் இல்லாது கண்யமுடன் நாகரீகமாகப் பேசக்கற்றுக்கொள்வார்?

    தான் சொன்ன விஷயங்களுக்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு ஆதாரம் என்ற ஒன்றை சமர்ப்பிப்பாரா? அல்லது வழக்கம் போல் ஓடிப்பிடித்து விளையாடுவது கண்ணாமூச்சி ஆடுவது போன்ற பச்சைக்குழந்தை விளையாட்டு விளையாடுவாரா?

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார் இராமருக்கு God Father மாதிரி சொந்தம் கொண்டாடுகிறார். அவருக்கு இரண்டு கொம்பு முளைத்துள்ளது. பள்ளிக்கூடப் பையன் மாதிரி மிரட்டிப் பார்க்கிறார் பதில் சொல் என்று. வேடிக்கை.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        nallavan says:

        //திரு. கிருஷ்ணகுமார் இராமருக்கு God Father மாதிரி சொந்தம் கொண்டாடுகிறார். அவருக்கு இரண்டு கொம்பு முளைத்துள்ளது. பள்ளிக்கூடப் பையன் மாதிரி மிரட்டிப் பார்க்கிறார் பதில் சொல் என்று. வேடிக்கை.

        சி. ஜெயபாரதன்

        //

        give respect to people

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (எ) காவ்யா (எ) திருவாழ்மார்பன் (எ) ருத்ர பரமசிவம் (எ) Tamil (எ) பல பெயர் கொண்ட அன்பர் அவர்கள் அய் அய் எம் கணபதி ராமன் என்ற பெயரில் ஓளிந்து எழுதி வருகையில் அதை வினவியதற்கு தன்னை ப்ரகடனம் செய்து திருவாழ்மார்பன் என்று துணிந்ததற்கு வாழ்த்துக்கள்.

    புரிகிறது. வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு கருத்துக்களைப் பொழுது போக்காகப் பகிர்வதற்கு வெவ்வேறு பெயர்கள் உபயோகப்படுகின்றன என்ற அரும் கருத்து தங்களது செயல்பாடுகளால் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    பொழுது போக்காக கருத்துப் பகிர்வது உங்கள் செயல்பாடு. உங்களுடன் பொழுது போக்க வேண்டி கதைக்க வேறு யாருடனாவது நீங்கள் முயலலாமே.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் ஆதாரம் அடுக்காது அடித்து விடும் விஷயங்களுக்கு உங்களால் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர் புனைவில் உங்களுக்கு என்ன பங்கு?

    மிகக் குறிப்பாக விஷயம் சார்ந்து ஏதும் சொல்ல விழைந்தால் உங்களுடன் கருத்துப் பகிர இயலுமே.

    \ இதிஹாசங்கள் இரண்டிலும் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரங்கள் கிடையா. \

    இதை நீங்கள் உபதேசம் செய்ய வேண்டியது இதிஹாசங்களை வரலாற்றுடன் கலந்தடிக்க முனையும் ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு. I have made it amply clear to shali when you chose antardhanam. be updated on your avirbhava.

    \ கம்பரைப்பார்த்து, “I am smelling rat!” \

    நான் “I am smelling rat!” என்பது ஸ்ரீமான் ஜெயபாரதன் அடித்து விடும் விஷயங்களை. TO EXTRAPOLATE AND INDULGE IN VIDANDAVADA IS NOTHING NEW TO YOU IRRESPECTIVE OF THE AVATARA YOU ARE IN?

    \ சீதை இராவணனின் தங்கை என்று கூட எழுதப்பட்டிருக்கிறது. \

    ரெவரெண்டு ஜோ ஃபெர்னாண்டோ அவர்களே, that has no relevance to the topic. JB has borrowed and spoiled that one of the versions of Ramayan wherein Rama and Sita are husband and wife. Could you for a difference talk something relevant, if you are to be taken seriously

  10. Avatar
    IIM Ganapathi Raman says:

    ஜயபாரதன் எழுதுவதற்கும் கிருஸ்ணகுமார் எழுதுவதற்கும் ஆதாரங்கள் கிடையா. வெட்டவெளியில் அந்தரத்தில் தொங்குபவர்கள்தான் இருவரும் ! அப்படித் தொங்க முடியாது. கற்பனையாகத்தான்.

    இராமாயணம் பலரால் பலவிதமாக எழுதப்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றில் இராவணன் தங்கை சீதை. இது ரெலவெண்டு வெரி வெரி ரெல்வன்ட் ஆர்குமென்ட். ஹியர். ஷாலிமட்டும் சொல்லவில்லை. வரலாறு சொல்லிவிட்டது. மறுக்கமுடியால் கிருஸ்ணகுமாரால்.

    75 லட்சங்களுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் கதையிது இக்கதைக்கு எவரேனும் ஆதாரம் தரமுடியுமா என்ற கேள்வி ரெல்வன்ட். இப்படிப்பட்ட ஒன்றை பலரும் அவரவர் கற்பனைக்கேற்ப எழுதித்தள்ளுவார்கள் என்பதும் ரெலவண்ட். ஆக, கிருஸ்ணகுமாரோ, ஜயபாரதனோ, தங்கள்தங்கள் கற்பனைக்கேற்ப புனைந்துகொள்ள இந்துமதம் அனுமதிக்கிறது. மறுக்க முடியுமா? முடியாது.

    சரி, இதில் என் கருத்தென்ன? முதலிலேயே சொல்லப்பட்டதுதான்: பிடித்தவர்கள் படிக்கட்டும் என்றுதான் திண்ணை போடுகிறது. பிடிக்காதாவர்கள் வேறுகட்டுரைகளைப்படிக்கலாமே? என்ன பிரச்சினை?

    ஒருதாயிடம் மகள் வருத்தத்துடன் சொன்னாள்: “அம்மா அவன் என்னையே பார்க்கிறான்”

    தாய்: “அவன் பார்க்கிறான் என்று உனக்கு எப்படி தெரிந்தது?”

    அதேதான் நான் கிருஸணகுமாரிடம் சொல்வது: ஜயபாரதனின் சீதாயாணம் சரியன்று எப்படித் தெரிந்தது? ஏனென்றால் அதைப்படிக்கிறார் இவர். எனக்குத்தெரியவில்லை. ஏனெனில் நான் படிப்பதே கிடையாது. அதே வேளையில் அவரெழுதுவதற்கு திண்ணை அனுமதித்தல் சரியே. என் வாதமெல்லாம் அவருக்குள்ள உரிமையைப்பற்றியே. அந்த உரிமை எப்படி வருகிறது என்றும். மேலும் பலர் விரும்பலாம். ஒரு இதழ் பலருக்குமென்றிருந்தால் ஒருவருக்குப் பிடித்ததுமட்டுமே போடப்படும் என்பது அவரின் மூர்க்கத்தனம்.

    பிறரெழுத‌ – அவர் வேறுமதத்தவராகயிருந்தாலும் கூட – அனுமதி மறுததலோ ஆவேசப்படுதலோ இந்துவின் குணமன்று. இந்துப்பெயரை வைத்துக்கொண்டால் போதாது. மனத்தாலும் இந்துவாக இருக்க வேண்டும். பரந்த மதம் இம்மதம். இங்கிருப்போர் பரந்த மனதுடையாராக இருந்தால் மட்டுமே இந்து. சகிப்புத்தனமை இல்லாத இந்து தீவிரவாதி. You cant alter Kuran. But you can do with Ramayanam if you like. You enjoy the freedom in this religion. Why r you denying that to Jeyabarathan? This is the most relevant question for you! Take it.

    விதவிதமான இராமாயணங்கள் எழுதியோர் கிருத்துவரோ இசுலாமியரோ இல்லை. தெரியாதமாதிரி நடிக்கக்கூடாது.

    இவ்வாரம் மட்டுமே ஜயபாரதன் கதையின் படங்களப் பார்த்தேன். அதிலிருந்து ஒன்று சொல்லலாம். பெரியபிராட்டி கண்ணீர் வடிக்கும் படங்களைக்காணும்போது, இவரன்றோ உண்மை இந்து என்று ஜயபாரதனைப்பார்த்துச்சொல்லத் தோன்றுகிறது. But the credit should be shared with the illustrator. Seethai is weeping, touching her eyes with the end of her saree. That lacerates. If Jeyabarathan can bring out the sorrow more and more, I shall thank him.

    — TM

  11. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வழி வழியாய் வந்த இந்திய & தமிழ்க் கலாச்சார இலக்கியப் படைப்பு வரலாறுகளில் இராமனும், சீதாவும் வரவில்லையா ? மகா அலெக்ஸாண்டர் கடல் கடந்த படையெடுப்புக்குச் சான்றாய் எகிப்தில் அலெக்ஸாண்டிரியா நகரம் இருப்பது போல், கடல் கடந்த இராமனுக்குத் தமிழ் நாட்டிலே இராமேச்சுவர நகரம் வரலாற்றுச் சான்றாக உள்ளதே.

    சி. ஜெயபாரதன்.

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    \ இராமயணம் பன்முறை இவரது பாட்டனார்கள் வரலாற்று உண்மையைத் திரித்து முறித்து மானிட இராமனை மட்டும் இறைவனாகப் போற்றிப் புனைந்த ஓர் கலப்படப் புராணக் காவியம்.சீதாவை மீட்க உதவி செய்த தென்னவரைக் குரங்குகளாகக் காட்டிய முரண்பாட்டுக் காவியம். \

    இந்த விஷயத்தை எழுதியது தாங்கள் தானே. அல்லது யாராவது மண்டபத்தில் எழுதிக்குடுத்ததையோ அல்லது க்றைஸ்தவ சபையில் எழுதிக்கொடுத்ததையோ இங்கு நீங்கள் கக்கியுள்ளீர்கள் என்றால் சொல்லி விடுங்களேன்.

    \ பன்முறை இவரது பாட்டனார்கள் வரலாற்று உண்மையைத் திரித்து முறித்து மானிட இராமனை மட்டும் இறைவனாகப் போற்றிப் புனைந்த ஓர் கலப்படப் புராணக் காவியம் \

    நான் ராமனைப் பற்றி என்ன தங்களிடும் கேட்டுள்ளேன் என்னை ராமனின் God Father ஆக்குவதற்கு. நான் கேட்டுள்ளது தாங்கள் திருவாய்மலர்ந்துள்ள (அல்லது பினாத்தியுள்ள) குரங்கு விஷயத்தைப் பற்றி. வேண்டுமானால் எத்தையோ உளறி விட்டும் விழிபிதுங்கும் ஸ்ரீமான் ஜெயபாரதனை குரங்குகளின் God Father என்று சொல்லிக்கொள்ளலாம்.

    ராமனை விட்டு விடுங்கள். இப்போது நான் ராமனைப் பற்றிப் பேசவே இல்லை. மாறாக ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் பேத்தியுள்ள குரங்கு விஷயம் பற்றி அவர் என்ன வாசித்துள்ளார்? எங்காவது ஏதாவது வாசித்திருந்தால் பகிரலாம்.

    சீதாவை மீட்க உதவி செய்த தென்னவரைக் குரங்குகளாகக் காட்டிய முரண்பாட்டுக் காவியம் என்று தாங்கள் பைபிளில் இருந்து கண்டு பிடித்திருக்க முடியாது. எந்த நூலில் இருந்து நீங்கள் இதைக் கண்டு பிடித்தீர்கள் என்று சொல்லலாமே/ நீங்கள் ஏதாவது மொழியிலான ராமாயணத்தில் இப்படி படித்திருந்தால் ராமாயணத்தின் பெயர் மற்றும் பாடல் எண்ணைப் பகிரலாமே.

    அல்லது உங்கள் கற்பனைக் கழுதையைத் தட்டி விட்டு அதன் மேலேறி நீங்கள் கண்டதைப் பினாத்தியுள்ளீர்கள் என்றால் அதனை அப்படியே கக்கி விடலாமே.

    எந்த நூலில் இருந்து நீங்கள் வாசித்தபடிக்கு இப்படி எழுதியுள்ளீர்கள் என்பதை நீங்கள் பகிர இயலாவிடில், இதுவும் ஸ்ரீமான் ஜெயபாரதனின் புளுகுமூட்டையில் இருந்து உதிர்ந்த பொய் என்பது அம்பலமாகும். Its too bad that you are becoming a habitual lier.

    உங்கள் புளுகுமூட்டைப் படைப்பை வாசிப்பவர்கள் எல்லோரும் நீங்கள் கீழே அனுபந்தமாகக் கொடுத்துள்ள நூற்களை வாசித்து ஆராய்ந்து ஜெயபாரதன் ஏதோ எழுதியுள்ளதாக நினைத்துக்கொள்வர். நீங்கள் அவற்றை வெறும் cut paste செய்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.

    அடிக்க ஆரம்பிக்கு முன்னரே வீறிட்டு அழத்துவங்கும் குழந்தை போலுள்ளது உங்கள் பதில்கள். I am sorry to say that you are just demonstrating your intellectual bankruptcy.

  13. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    நீங்கள் எழுதும் விஷயங்களைப் பற்றி உங்களுக்கு அடிப்படை அறிவு / புரிதல் இருக்கும் என பலரும் நினைக்கிறார்கள். எனக்கு மட்டும் (உங்கள் விக்ஞான வ்யாசங்கள் விடுத்து) அந்த மூட நம்பிக்கை அறவே இல்லை. முதலில் மஹாத்மா காந்தியின் மரணம் என்று ஒரு வ்யாசம் எழுதி நீங்கள் எழுதும் எந்த விஷயத்தைப் பற்றியும் உங்களுக்கு அடிப்படைப் புரிதல் கூட இல்லை என உலகிற்கு நிரூபித்தீர்கள். இப்போது அது தொடர்கிறது. பொலிக பொலிக.

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ரெவரெண்டு ஜோ ஃபெர்னாண்டோ அவர்களுக்கு

    \ இவர். எனக்குத்தெரியவில்லை. ஏனெனில் நான் படிப்பதே கிடையாது. அதே வேளையில் அவரெழுதுவதற்கு திண்ணை அனுமதித்தல் சரியே. என் வாதமெல்லாம் அவருக்குள்ள உரிமையைப்பற்றியே. \

    முதலில் நீங்கள் எழுதியது மட்டும் சரி. நீங்கள் வ்யாசத்தையோ மற்றவர் உத்தரங்களையோ எப்பவும் படித்ததாக சரித்ரமே கிடையாதே. உங்கள் பாட்டுக்கு சித்தம் போக்கு சிவன் போக்கு – சாரி கோபித்துக்கொள்ளாதீர்கள் – ஏசு போக்கு — என்று சம்பந்தமே இல்லாது கதைப்பது தானே உங்கள் பொழுதுபோக்கு.

    நிர்விவாதமான விஷயத்தை விவாதமாக்கி விவாதாஸ்பதமான விஷயத்தை கபள சோற்றில் மறைக்கும் சுவிசேஷக் கடமையை – உங்கள் வாக்கு தத்தத்தை நடத்துகிறீர்கள்.

    இங்கு ப்ரச்சினை ஹிந்து – முஸ்லீம் – க்றிஸ்து – ஜெயபாரதன் உரிமை – எதுவுமே இல்லை. இது இப்போது என் விவாதத்திலேயே இல்லாத விஷயம்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு முற்று முழுதாக புளுகுவதற்கு / பேத்துவதற்கு உரிமை உள்ளது என நான் வழிமொழிகிறேன். அவர் எதை வேண்டுமானாலும் பினாத்தலாம்.

    \ விதவிதமான இராமாயணங்கள் எழுதியோர் கிருத்துவரோ இசுலாமியரோ இல்லை. தெரியாதமாதிரி நடிக்கக்கூடாது. \ இந்துப்பெயரை வைத்துக்கொண்டால் போதாது \ மனத்தாலும் இந்துவாக இருக்க வேண்டும்.\

    உங்களைப் பற்றியும் ஜெயபாரதன் பற்றியும் ஏன் இப்படி முனைந்து ப்ரசம்சை.

    நடிப்பது நீங்கள். க்றிஸ்தவம் இஸ்லாமியம் இவற்றை விட்டு…… ஜெயபாரதன் பேத்திய விஷயத்தை அப்படியே மறைக்க முயல்கிறீர்கள்.

    ஜெயபாரதன் அவர்கள் முதலில் குரங்கு பத்தி பேத்தியுள்ளது (தென்னவரை ரூம்பு போட்டு யோஜித்து குரங்காக ராமாயண காவியம் சித்தரித்தமை) — விதவிதமான — ராமாயணத்தில் எந்த ராமாயணத்தில் எழுதியுள்ளது (உங்கள் அண்ணன் தங்கை ராமாயணமாகக் கூட இருக்கலாம்) — இதை ஜெயபாரதனிடம் மட்டும் தான் கேழ்க்க முடியும். ஏனால் பேத்தியுள்ளது அவர்.

    இந்த பேத்தல்களை அவர் ராமாயணத்தில் வாசித்தாரா — அல்லது உண்மை ஹிந்து என இன்னொரு உண்மை ஹிந்துவான உங்களால் ஞானஸ்னானம் பெற்று க்றைஸ்தவ சபையில் கேட்டு விட்டு பேத்தியுள்ளாரா என்று சொல்லட்டுமே. அவர் எத்தையாவது எங்காவது வாசித்திருந்தால் எதற்காக ஓடிப்பிடித்து விளையாட வேண்டும். இதோ பார் இந்த ராமாயணத்தில் இந்தப் பாடலில் என்று ஒற்றை வரியில் எழுதி விடலாமே.

    ம்……..புறமுதுகிட்டோடும் ஜெயபாரதனைப் பிடிக்கத் துரத்துவது போதாது என்று நீங்களும் அவருடன் சேர்ந்து ஓட ஆரம்பித்தால் நான் யாரைத் துரத்துவது சொல்லுங்கள். நான் விவாதிக்க விரும்பும் விஷயத்தை மட்டிலும் – இந்த அலக்கியப் படைப்பு சம்பந்தப்பட்ட அவலங்களை மட்டிலும் — விவாதிக்க முடியும். அதுவும் ஜெயபாரதன் பேத்தியுள்ள விஷயங்களை குறிப்பாக அடைக்குறியிட்டே விவாதிக்கிறேன். அவர் சொல்லாத எந்த விஷயங்களைப் பற்றியும் நான் கேழ்க்க மாட்டேன்.

    மற்றபடி பொழுதுபோக்க மானாவாரியாக சுவிசேஷ பின்னூட்டங்கள் ரொப்புவது உங்கள் உரிமை.

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இராமாயணம் பலரால் பலவிதமாக எழுதப்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றில் இராவணன் தங்கை சீதை. இது ரெலவெண்டு வெரி வெரி ரெல்வன்ட் ஆர்குமென்ட். \

    Have you read what Jeyabharathan had scribbled? hope not!!!!!!!!

    ரெவரெண்டு ஜோ அவர்களே ஸ்ரீமான் ஜெயபாரதனின் அலக்கியம் பேசும் விஷயம் ராமன் சீதை என்ற கணவன் மனைவி பற்றி என்பதை இது வரை நீங்கள் படிக்கவில்லையானால் அதற்கு யார் பொறுப்பு? You can never talk anything relevant to the topic under discussion. Nobody denies that there is a Ramayan where Ram and Sita are depicted as brother and syster. What Jeyabharathan has written has nothing to do about such a ramayan. Is that clear.

  16. Avatar
    ஷாலி says:

    //ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (எ) காவ்யா (எ) திருவாழ்மார்பன் (எ) ருத்ர பரமசிவம் (எ) Tamil (எ) பல பெயர் கொண்ட அன்பர் அவர்கள் அய் அய் எம் கணபதி ராமன் என்ற பெயரில் ஓளிந்து எழுதி வருகையில் அதை வினவியதற்கு தன்னை ப்ரகடனம் செய்து திருவாழ்மார்பன் என்று//

    திரு.IIM.கணபதி ராமன் அவர்களே! நம்ம க்ருஷ்ணாஜி முன்பெல்லாம் என்னைத்தான் பல பெயரில் எழுத்தும் பலவேஷக் குரல்காரன் என்று கூறிக்கொண்டு இருந்தார்.பின்பு மாற்றிக்கொண்டார்.இப்ப நீங்க மாட்டிக்கொண்டீர்கள்.எப்படி தப்ப போகிறீர்கள்?.கிருஸ்துவ பெயர் உள்ளது.ஹிந்துப் பெயர் உள்ளது.அழகிய தமிழ் பெயரும் உள்ளது.அண்ணனிடம் சொல்லி ஒரு முஸ்லிம் பேரையும் சேர்த்துக்கொண்டால் சர்வமதமாகி வாசுதேவ குடும்பமாகி விடலாம்.இப்ப க்ருஷ்ணாஜி குரங்குப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கும் தென்னவர்.யார்?

  17. Avatar
    ஷாலி says:

    இன்று சனிக்கிழமை. அனுமனுக்கு உகந்த நாள் என்று கூறுவார்கள். காஞ்சி பெரியவா அனுமனை பத்தி விளக்கியதை நினைவு கூர்வோம். என்வரையில், அனுமனை பற்றி வேறு ஒரு ஞானி விளக்கியதில் மிக உன்னதமான விளக்கம் இது தான் என்று சொல்வேன். நீங்களும் படித்து மனதிருத்துங்கள்.

    ”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது ‘குரங்கு புத்தி’ என்கிறோம்.

    ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம் என்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவனந்தலஹரி – 20). ‘பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ ! வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்; நானும் பிழைத்துப் போவேன்’ என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, ‘ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்கிற வர்த்தையைப் போட்டிருக்கிறார்.

    ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?

    சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் ! வாயு குமாரர். ‘வாதாத்மஜர்’ என்றும் சொல்வார்கள். ‘வாத’ என்றாலும் வாயுதானே? ‘ஆத்மஜன்’ என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.

    வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
    ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

    ‘யூதம்’ என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் ‘வாநர-யூத-முக்யர்’.
    இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?

    வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.

    மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
    ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
    வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
    ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||

    ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.
    ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க
    http://atmaanubhavangal.blogspot.com/2012/03/blog-post_31.html

  18. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இப்ப க்ருஷ்ணாஜி குரங்குப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கும் தென்னவர்.யார்? \

    எனதன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்.

    தான் எழுதிய அலக்கியத்தை பரிசீலனை செய்யும் படி எனக்கு அறைகூவல் விடுத்து …. பின் அவரை அவர் சுயமாக பேத்தித் தள்ளிய விஷயங்களை அவரிடம் வினவும் போது …….ஒப்பாரி வைத்து வசவுகளில் இரங்கும் ஸ்ரீமான்.

    ராமாயண காவ்யத்தை படைத்த மற்றைய பெரியோர்களாகிய வால்மீகி, கம்பர், வ்யாசர் இவர்களின் படைப்பில் ஸ்ரீமான் குறை காணுவதை நான் பொருட்படுத்தவில்லை. குற்றம் சுமத்துமுன் குறைந்த பக்ஷம் ராமாயணம் என்ற க்ரந்தத்தை இவர் வாசித்திருந்தால் இவர் சொல்ல விழையும் விஷயங்கள் எந்த ராமாயணத்தில் எந்தப் பாடலில் உள்ளது என ஒரு வரியில் சொல்ல முடியும்.

    ஒரு அலக்கியத்தைப் படைக்க ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஒரு இலக்கியத்தை குற்றம் சாட்டுவது என்பது மிகக் குறிப்பாக இருக்க வேண்டும். இது வரை முதல் கேழ்விக்கே — அதுவும் ஸ்ரீமான் ஜெயபாரதன் திருவாய் மலர்ந்தருளியுள்ள — வாசகம் எந்த ராமாயணத்தில் இவரால் வாசித்து அறியப்பட்டது என்பதற்கு இது வரை பதில் இல்லை.

    உளறுவது கூட ஸ்ரீமான் ஜெயபாரதனுடைய உரிமையே தான். ஸ்ரீமான் அவர்கள் தான் எந்த ராமாயணத்தையும் வாசிக்காது ஹிந்து மதக்காழ்ப்பின் காரணமாக இவ்வாறு உளறியுள்ளதாக ஒப்புக்கொண்டால் முடிந்தது விவாதம்.

  19. Avatar
    IIM Ganapathi Raman says:

    இந்துத்வம் வேறு; இந்து வேறு. இதைப்புரிந்தால் தன் கருத்தை ஏற்காதவரை பிறமத்ததவன் எனப்பொயுயுரைகூறல் தானாகவே நின்றுவிடும்.

    சரி, கிடக்கட்டும். இந்த வார சீதாயாணத்தை மட்டுமே பார்ப்போம். படங்களும் வசனங்களும் மட்டுமே. படிப்பது புரிவது இலகு.

    ஏற்கனவே ஜயபாரதன் சொல்லிவிட்டார் தான் இராமனை ஒரு மனிதனாகத்தான் பார்க்கிறேன். இந்துக்களும் மஹா விஷ்ணு எடுத்த அவதாரங்களுள் மனித அவதாரம் இது என்பர். மேலும், நான் ஏற்கன்வே விளக்கியபடி, மனித அவதாரம் எடுத்தபடியாலே இராமன் மனிதர் செய்யும் தவறுகளையும் செய்தானென்பர். பழுத்த வைண்வரான இராஜாஜி அக்னிபிரவேசக்காட்சியை விளக்கும்போது இராமனைக்கடிந்து சீதைக்காக மனவருந்திப்பேசுகிறார். அப்பேச்சும் இந்த எபிசோடும் ஒன்றே. அங்கு இராஜாஜி, இங்கு ஜயபாரதன். ஆட்கள்தான் வேறு. இறுதியில் நான் சொன்ன விளக்கத்தைச் சொல்லி இராமன் தன் அவதாரக்க்டமையைச்செய்யவேண்டியதிருக்கிறது என்று முடிக்கிறார்.( ‘இராமாய்ணம்’ வானதி பதிப்பகம்)

    இதை விரிக்கும் கலாசேபக்காரர்கள்: அத்தவறுகளை இராமன் செய்யவேண்டிய நோக்கமே ஒரு வழிகாட்டலே. அதாவது அப்படிச்செய்யாதீர்கள் என்பதாகும்.

    இவை ஜயபாரதன் போன்ற கிருத்துவர்களுக்கும் இசுலாமியருக்கும் தேவையில்லை. அவர்கள் அவதாரமாக பார்க்கவேண்டியதில்லை. மனிதராக மட்டுமே பார்த்து இராமாயணத்தைப்பேசுகின்றனர். அப்படிப்பேசும் போது ஒரு கணவன் தன் அப்பழுக்கில்லா தர்ம பத்தினியின் கற்பை பிறர் ஐயுறுமாறு அவளை நடாத்தும்போது அப்புனித வதிக்காக மனமிரங்கா மனிதர்கள் மனிதர்களே அல்ல. இவ்விரக்கத்தை யான் கிருஸ்ணகுமாரிடம் காணவில்லை. எபிசோடில் என்ன எழுதப்பட்டிருக்கிறது; காட்டப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றிக்கவலையேயில்லை. இந்துமதத்தைக்காக்கிறேன் பேர்வழி என்று அம்மதத்தை அடிப்படை உணர்வுகளுக்கெதிராக எழுதுகிறார்.

    சீதைக்காக பரிந்துவரும் ஜயப்பாரதன் இந்துக்களிலெல்லாம் மஹா இந்து. அவர் மறுக்கலாம். அதற்காக இப்படிச்சொல்லலாம்: ஒரு நல்ல மனிதனிடம் இருக்கவேண்டிய குணமிருக்கிறது. எல்லோருக்கும் இருக்குமானால், நம் சமூஹத்தில் பெண்கள் நன்றாக வாழ்வர் மணவாழ்க்கையில். நலிந்தோருக்கு இரங்கல் ஒரு வைணவனின் ஐந்து குணங்களில் ஒன்று. ஒரு வைணவனுக்குப்பெண்மனமும் வேண்டும். அப்படியிருந்தால் பெண்ணின் கண்ணீர் நெஞ்சைத்துளைக்கும்.

    இராமாயணம் சீதைக்கு நீதியைத்தரவைல்லை என கருதி சீதாயாணம் அவசியம் என நினைத்தல் சரியே.

    TM

  20. Avatar
    IIM Ganapathi Raman says:

    கிருஸ்ணகுமார் ஒன்றைப்புரிந்து கொள்ளுதல் நலம்.

    ஒரு தர்மபத்தினிக்கு அவள் கணவன் தன் வாழ்வில் செய்யக்கூடாதவைகளில் தாங்க முடியாதது என்னவென்றால் அவன் அவளின் கற்பைப் கேள்வியாக்கல். அத்தவறைச் செய்யாதீர் எனபதுதான் இராமாயணம் நமக்குச் சொல்வது. அதை படங்களில் காட்டி நம்மை கஷ்டப்படுத்துகிறார் ஜயபாரதன்.

    ஜீ டிவியில் மதியம் 12 அளவில் ஒரு நிகழ்ச்சிவரும் ரெயிலாடி ஷொ. அதில் இப்படி கணவன் மனைவி சண்டைதான். அவர் அடிக்கிறார் மிதிக்கிறார் என்று சொல்லிமுடித்தவள் அதைக்கூட என்னால் தாங்க முடியும். என்னை ‘எவனிடம் படுத்துவிட்டு வந்தாய்’ எனப்போட்டு உதைக்கிறார். அவர் ஒரு சந்தேஹப்பிராணி. என்னை விடுவியுங்கள் என அழுகிறார்கள்.

    பாருங்கள் இராமாயணத்தில் இராமன் செய்த தவற்றின் ஆழத்தைப்புரிய உதவும்.

    TM

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ சீதைக்காக பரிந்துவரும் \

    ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதால் அது ஏன் அழுகிறது என்று புரிவது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் எவ்வாறு ஹிந்து மதக்காழ்ப்பு கொண்டு இந்த அலக்கியம் படைத்துள்ளார் என்பது தனியாக விவாதிக்கப்படும். இந்த விவாதத்தில் ஸ்ரீமான் அவர்களின் மதக்காழ்ப்பும் விவாதிக்கப்படும்.

    பின்னிட்டும் முந்தைய இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளை ஒரு அக்ஷரம் கூட வாசிக்காது அவர் வழக்கம் போல் பேத்திவிட்டு எந்த ராமாயணத்தில் இப்படி ஒரு கருத்தை வாசித்தீர் ஸ்ரீமான் ஜி என்று வினவியதிற்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் மௌனம் சாதிப்பது என்பது மதம் சாராதும் விவாதிக்கப்படலாம். ஒட்டு மொத்தமாக அனைத்து முந்தைய ராமாயண இலக்கியப் படைப்பாளிகளையும் தன் கற்பனைப் (அ)புரிதல்களால் விமர்சித்தமையை எத்தனை சுவிசேஷிகள் மத முகமூடிகள் கொண்டு முனைந்தாலும் மறைக்க முடியாது. இந்தப் பேத்தல்கள் தனியாக விவாதிக்கப் படும்.

  22. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ரெவெரெண்டு ஜோ அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளல் நலம்.

    ஆப்ரஹாமிய மதமாற்ற பித்தலாட்ட கும்பல்களின் அடாவடித்தனங்களை முனைந்து மறைத்து அவர்களின் கடுகு போன்ற சேவைகளை மலை போல் அவதானித்து உடன் தேசத்துக்காகவும் உலகநலனுக்காகவும் பணி செய்த ஹிந்துக்களின் குறைகளை முனைந்து பெரிது படுத்தி அவர்களின் நிறைவான பணிகளை முனைந்து மறைத்தல் முகமூடி சுவிசேஷிகளின் செயல்பாடு.

    ஹிந்துக்களது செயல்பாடு – எந்த நபரைப் பற்றி இருந்தாலும் அவர்கள் – எந்த மதத்தைச் சார்ந்து இருந்தாலும் – அவர்களது ஏற்கத்தகுந்த ஏற்கவொண்ணாத என்ற இரண்டு பக்கங்களையும் போற்றி மற்றும் மறுத்து செயல்படுவது.

    முகமூடி சுவிசேஷிகளின் மற்றும் ஹிந்துக்களின் கருத்துக்கள் இவற்றுக்கு சாக்ஷி.

    ஹிந்துக்களும், முஸல்மான் களும் க்றைஸ்தவர்களும் – இவர்களில் நேர்மையாக கருத்துப்பதிபவர் யாருக்கும் மாதத்துக்கு ஒரு பெயர் தளத்துக்கு ஒரு பெயர் தேவையாக இருப்பதில்லை. முகமூடி சுவிசேஷிகளுக்கு இது மிக முக்யமான தேவை.

  23. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸீதா பரித்யாகம் என்ற விஷயத்தில் ராமன் என்ற அரசனையும் ராமன் என்ற கணவனையும் இது பற்றிப் பேசும் இதிஹாசமான வால்மீகி ராமாயணம் பின்னர் வந்த வ்யாசரின் அத்யாத்ம ராமாயணம் மற்றும் பவபூதியின் உத்தரராமசரிதம் பின்னாட்களில் வந்த காவ்யங்கள் இவற்றை வாசித்தறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் காலக்ஷேபம் கேட்டபடிக்கு — வைஷ்ணவர்களிடம் பிராட்டியிடம் உள்ள பரிவு பெருமானிடம் உள்ள ப்ரபத்தி இரண்டும் குலையாது உத்தரராம சரிதம் எவ்வாறு புரியப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன்.

    சீதாபிராட்டி தற்கொலை செய்து கொண்டாள் என்று ஹிந்துப்பெயர் தாங்கி க்றைஸ்தவ ப்ரசாரம் செய்யும் அன்பர் ஒருவர் எழுதுவது அவர் உரிமை என்று சாதிக்கலாம் தான். இது போன்ற அபத்தக்கருத்துக்களை பழுத்த வைஷ்ணவரான ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமிகள் ஏற்கவொண்ணார் என்பதனையும் அறிவேன். (பொய்ப்பெயர்களில் ஒளிந்து முகமூடி சுவிசேஷ சேவை செய்வதை ஒப்பிடுகையில் நேர்மையான விஷயம் ஹிந்துப் பெயர் தாங்கி க்றைஸ்தவ ப்ரசாரம் செய்வது. )

    ஆனால் உத்தர ராமசரிதத்தின் முடிவு என்பது சீதா பிராட்டியின் தற்கொலை என்பது தான் வைஷ்ணவர் ஏற்க வேண்டிய கருத்து என்று சாதிப்பது முகமூடி சுவிசேஷிகள் செய்யும் இழிவான மத துஷ்ப்ரசாரமின்றி வேறில்லை.

    மஹாத்மா காந்தியை கோட்சே டுப்பென்று துப்பாக்கியால் கொலை செய்தான். ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் மஹாத்மா காந்தியின் ராமராஜ்யத்தை இழிவு செய்தும் மஹாத்மா காந்தியடிகள் கடிந்துரைத்த க்றைஸ்தவ மதமாற்ற பித்தலாட்டங்களை ஆதரித்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கருத்துப் பகிர்வது அவரது உரிமை என்றாலும் — மஹாத்மா காந்தியடிகளை ஹலால் முறையில் தினம் கொலை செய்து வருவது போலாகும். போதாதென்று ராமாயணம் படைத்த படைப்பாளிகளை தன் (அ) புரிதல் கருத்துக்களால் கொலை செய்தும் சீதையை தற்கொலை செய்ய வைத்த தன் அலக்கியத்தின் மூலம் கொலை செய்துள்ளார். Why this kolaveri J

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      எதையெதையோ எழுதிக் கொண்டிருக்கும் பின்னர் எழுதுவேன் என்கிறீர்கள். அதையேன் இப்போது செய்யக்கூடாது.? ஆபிரஹாமிய மதக்காரகளும் ரெவரண்டுகளும் சுவிசேஷ கூலிகளும் செய்யும் பேத்தல்களையும் பித்தலாட்டங்களையும் நீங்கள் ஏன் தனிக்கட்டுரகளில் எழுதக்கூடாது? அமரர் மலர்மன்னன் செய்தாரே? அவருக்குப்பின் நீங்களேன் செய்யக்கூடாது? அடுத்தவாரம் எதிர்பார்க்கலாமா?

      அதைப்படிக்கவில்லை. இதைப்படிக்கவில்லை என எழுதித்தள்ளிக்கொண்டிருக்கும் கிருஸ்ணகுமார்! இதோ இங்கே போடப்பட்டிருக்கும் படங்களைப் பார்த்து ஏன் கருத்துக்களைச் சொல்லக்கூடாது? இது படக்கதை என்றுதானே சொல்கிறார்? அப்படங்கள் உங்களுக்கு என்ன சொல்கின்றன? அதைச்சொல்லக்காணேமே? ஏன்? இராமனுக்கு நீதி? சீதைக்கேன் இல்லை? என்ற கேள்விக்குப் பதிலெங்கே? இராமனின் இடத்திலிருந்து பார்க்கும் இராமாயாணம் இருக்கும்போது, ஏன் சீதையின் இடத்திலிருந்து பார்க்கும் சீதாயணமாக எழுதப்படக்கூடாது?

      ஜயபாரதன் எழுதுவதை இந்துமத வெறுப்பு என்று சொல்லும் கிருஸ்ணகுமார் இப்படி உணர்ச்சிகரமாக தனிநபர் தாக்கங்களில் இறங்குவதைவிட அவரே ஒரு பதில் சீதாயாணம் ஏன் எழுதக்கூடாது? அதுதான் நாகரிகம்.

      எழுதுங்கள்…படக்கதைகளாகப்போடுங்கள். Get a good expert illustrator. Jayabharatan is lucky to have got one. உங்களுக்கும் ஒரு ஓவியர் கிடைப்பார். வாழ்த்துக்கள்.

  24. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திரு கிருஷ்ணகுமார்ஜி,

    நான் என் “சீதாயணம்” நாடகத்தில் இராம ராஜியத்தையோ, இந்து மதத்தையோ எந்த வாசகத்திலும் இகழவில்லை.

    உங்கள் இராமாயணத்தில் சீதா தேவி எப்படி காலமானாள் ? பூமி பிளந்து பூமாதேவி ஏற்றுக் கொண்டாளா ?

    அவதார தேவன் இராமன் எப்படிக் காலமானான் ?

    சி. ஜெயபாரதன்.

  25. Avatar
    ஷாலி says:

    திரு.க்ருஷ்ணாஜி,கிழே உள்ள செய்தியை படித்துப்பாருங்கள் Tamilhindu தளத்தில் எஸ்.ராமனால் மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை.இவர் எந்த சுவிஷேச முகமூடி போட்டு எழுதுகிறார்?கொஞ்சமாவது அறிவை பயன்படுத்துங்க ஸார்! மஸ்து(மதம்)அதிகமானால் சிக்கல்தான்.நிதானத்திற்கு வாருங்கள்.கோடானு கோடி ஜனம் வாழ்ந்து போன உலகம்.இந்து மதத்தை நீங்கள் காப்பற்ற வேண்டாம்.அது யாரையும் நம்பி இல்லை.அதற்க்கு விலங்கு போட்டு கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செயாதிர்கள்.அது தாலிபானிசம். சரி படியுங்கள்.
    “பலாத்காரமாக அபகரிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர்க் கதைகள் சரித்திரத்தில் நிறையவே உள்ளன. அத்தகைய பெண்களை மீட்பதற்காகவே போர்களும் நடந்துள்ளன; அப்படியிருந்தும் அவர்களைத் திரும்பவும் தங்கள் சமூகத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி பாதிக்கப்பட்டவர்களின் சொந்த பந்தங்கள் இடையேகூட பிரச்சினைகளும் இருந்திருக்கின்றன. ஜாதிப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு தற்காலத்தில் நடக்கும் “கௌரவக் கொலைகள்” கூட இந்த வகையில் சேர்ந்தவைதான். வீண் கௌரவமும், சமூகத்தில் உள்ள அவலத்தை எதிர்க்கும் துணிவும் இல்லாததுதான் இதற்கெல்லாம் காரணங்கள். வால்மீகியும் அன்று நடந்த அவலத்தை ஆதரிப்பவராகத் தெரியவில்லை; நடந்ததை நடந்தபடியே எழுதியிருக்கிறார். மனைவியிடம் சந்தேகம் இல்லாதபோதும், மற்ற காரணங்களைக் காட்டி அவளை ஒதுக்கும் அவலநிலையைத் தொடர்பவனும், அதன்படி செயலாற்றுபவனும் பாவச் செயல்களில் ஈடுபடுபவனே.
    பகவத் கீதையில் வரும் “சம்ஸயாத்ம வினஸ்யதி” என்பதன் பொருளும் ‘சந்தேகப்படுபவனுக்கு வாழ்வில் வீழ்ச்சியே அவனது விதி’ என்பதுதான். ஆக எல்லோரும் நல்லது நடக்கவேண்டும் என்றுதான் விரும்பினார்கள், எழுதினார்கள். ஆனால் இங்கோ துரதிர்ஷ்டவசமாக அத்தகைய பெண்களை, தன்னளவில் எந்த சந்தேகமும் இல்லாவிட்டாலும் சமூகத்திற்காகப் பயந்து, விலக்கி வைக்கும் அணியில் இராமரும் இருப்பது நல்லோர் எவருக்கும் ஒரு நெருடலான விஷயம்தான். இந்தக் காட்சி பின்னால் சொல்லப்போகும் “இராமரும் ஒரு மனிதன்தான்” என்பதையும், ஒரு சராசரி மனிதன் தன்னளவில் இல்லாவிட்டாலும் சமூகப் பார்வையில் இப்படித்தான் இருக்கிறான் என்றும் காட்டுவதற்கோ.’
    http://www.tamilhindu.com/2013/04/raman_part_30/

  26. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

    நீண்ட லிகிதத்திற்கு எனது க்ஷமாயாசனங்கள்.

    அன்பு என்பது உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பகிர்வது என்று நான் புரிந்துள்ளவன்.

    தாங்கள் எழுதிய வ்யாசங்களில் ச்லாக்யமானவையாக இருந்த வ்யாசங்களை உள்ளபடி உகந்துள்ளதை தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். முக்யமாக கணிதமேதை ராமானுஜன் வ்யாசத்தில் மிகப்பல கணிதப் பதங்களுக்கு தாங்கள் ஆங்க்ல பதங்களுடன் கூடவே தமிழ்ப்பதங்களும் அளித்த வ்யாசத்தை நான் save செய்து வைத்துள்ளேன். நான் மிகவும் உகந்த வ்யாசம். நான் உகந்தது இன்னொன்று ஓபன் ஹைமர் வ்யாசம். Brighter than thousand suns பற்றியும் ஒரு வ்யாசம் எழுத நான் விக்ஞாபித்திருந்தது என் நினைவுக்கு வருகிறது.

    நீங்கள் விக்ஞான வ்யாசங்கள் படைப்பதில் எடுக்கும் கவனத்தில் நூற்றில் ஒரு பங்கையும் விக்ஞானம் சாரா வ்யாங்கள் / படைப்புகளில் எடுப்பதில்லையா அல்லது தங்களது நிலைப்பாடுகளில் இழையோடும் ஹிந்துமதக்காழ்ப்பு மற்றும் ஆப்ரஹாமிய ஆதர்சம் மற்றும் அதீத பக்ஷபாதக் கருத்துக்கள் தங்கள் வ்யாசத்தில் பேசப்படும் நிலைப்பாடுகளை நிலைகுலைய வைக்கின்றனவா நான் அறியேன்.

    முன்னர் எழுதிய மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசம் என்னால் மறுதலிக்கப்பட்டுள்ளது – தங்களது தகவற் பிறழ்வுகள் — அதீத பக்ஷபாத நிலைப்பாடுகள் — ஹிந்துமதக்காழ்ப்பு நிலைப்படுகள் இவற்றை இடித்துரைத்து.

    உத்தரராமசரிதத்தில் பல கட்டங்கள் இருப்பினும் ஸீதா பரித்யாகம் அதீத சோக ரசம் நிறைந்த கட்டம். ப்ரதானமான கட்டம். இது தங்கள் படைப்பில் (தங்களுக்கு எதை வேண்டுமானால் எழுத உரிமை உண்டு என்பதில் எனக்கு அபிப்ராய பேதமில்லை) – தங்களது pre conceived notions களால் ஜோடுக்குத் தகுந்தபடிக்கு செதுக்கப்பட்ட பாதங்களாக ரணகளரியுடன் காட்சியளிக்கிறது என்றால் மிகையாகாது.

    எங்கள் முருகப்பெருமானிடமிருந்துதித்த தெய்வத்தமிழ்த்திருமொழியில் அமுதூற கம்பநாட்டாழ்வாரால் படைக்கப்பட்டு திருவரங்கன் சன்னதியில் அங்கீகரிக்கப்பட்ட கம்பராமாயணம் ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது என அறிவேன். முறையாகப் பயின்றதில்லை. தமிழில் உத்தர ராம சரிதம் உள்ளதா என அறியேன். நிற்க.

    உங்கள் ராமாயணம் என்ன சொல்கிறது என்று ஸ்ரீமான் ஜி அவர்கள் வினவியுள்ளார். .

    கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் என ஒவ்வொரு அக்ஷரமும் கோகிலத்தின் குரலையொத்து சுவை ததும்ப தன் காவியத்தை கட்டமைத்த ஆதிகவி வால்மீகியின் ராமாயணம் நான் ஆதரமாக எடுக்க விழையும் க்ரந்தம். இதையும் முறையாகப் பயின்றதில்லை. ஆனால் வாசிப்பிலுள்ள க்ரந்தம். இது சிறியேனான எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகமுழுதும் உள்ள பாஷாபேதமற்ற ராமபக்தர்களுடையதும் மற்றும் பாஷாபேதமற்று இலக்கியத்தை சுவைக்க விரும்பும் அன்பர்களுடையதும் என் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

    உத்தரராமசரிதத்தை சம்ஸ்க்ருத நூற்கள் வழியாகவே அறிகிறேன். என் வசம் கைப்ரதியாகவுள்ள அருமையான சம்ஸ்க்ருத காவ்யம், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் மற்றும் பவபூதியின் சம்ஸ்க்ருத நாடக அமைப்பையொட்டி ப்ராக்ருத மற்றும் சம்ஸ்க்ருத பாஷையில் வடிக்கப்பட்டுள்ள உத்தரராம சரித நாடகம் – இவற்றின் வழி உத்தரராம சரிதம் அறிவேன். முன்னிரண்டு க்ரந்தங்களும் நான் வாசித்து மகிழ்ந்தவை. பின்னர் சொன்னது எனக்கு அறிமுகமாய் அறைகுறை வாசிப்பிலுள்ள க்ரந்தம்.

    நான் உங்களது படைப்பை மூன்று விபாகங்களாக அணுக உள்ளேன். முதல் விபாகத்தில் உங்களது படைப்பில் நான் காணும் நிறைகள் மற்றும் குறைகள் மேலும் இந்த படைப்பை அலக்கியம் என நான் ஏன் காண்கிறேன். இரண்டாவது விபாகத்தில் நீங்கள் பகிர்ந்துள்ள Oft repeated stereo types – இது மூல க்ரந்தமாகிய ஆதிகவி வால்மீகி ராமாயணத்தில் எவ்வாறு அணுகப்பட்டுள்ளது. இதற்கு நான் ப்ரதானமாக இணையத்தில் இருக்கும் ராமாயணத்தையும் மேலும் உத்தரகாண்டத்திற்கு நான் எடுக்கவிருக்கும் பதிப்பு எது என்பதனையும் பகிர்கிறேன். இந்த இரண்டு விபாகங்களும் சீதாராம யுகளத்தின் அருளால் என்னால் இயன்ற படிக்கு விரைவில் சமர்ப்பிக்க ப்ரயத்னம் செய்கிறேன்.
    மூன்றாவது நான் வாசித்துள்ள க்ரந்தங்கள் வாயிலாக கட்டமைக்க விழையும் மைதிலீ விஜயம். மூன்றாவது விபாகத்தை நான் சமர்ப்பிக்க இயலுமா? விரைவிலா? கால அவகாசம் எடுக்குமா? அறியேன்.

    இந்த வ்யாசங்களை நான் தமிழ் ஹிந்து மற்றும் திண்ணை தளங்களில் சமர்ப்பிக்க உள்ளேன். சம்ஸ்க்ருத இலக்கியங்களில் ருசி உள்ள சான்றோர்கள் பலர் தமிழ் ஹிந்து தளத்திற்கு பங்களிக்கிறார்கள். நான் எழுத உள்ள கருத்துக்களுக்கு அவர்களது அபிப்ராயங்களை அவச்யம் அறிய விழைகிறேன். திண்ணை தளத்தில் அந்த சான்றோர்களது உத்தரங்களை நான் பார்த்ததில்லை. ஆகவே இரண்டு தளங்களிலும் பகிர்வு. திண்ணை தளத்தாருக்கு இதில் அபிப்ராய பேதம் இருக்காது என நினைக்கிறேன்.

    அன்பர் ஜோ

    \ எதையெதையோ எழுதிக் கொண்டிருக்கும் \

    முன் எழுதியுள்ளதில் தங்களது ப்ரச்னங்கள் பலவற்றுக்கு உத்தரம் கிடைத்திருக்கலாம். முதல் இரண்டு விபாகங்கள் விரைவில் பகிரப்படும். சரீர தர்மம் இடம் கொடுத்தால் சீதாராம யுகள அருளால் மூன்றாம் விபாகம் பகிரப்படும். இதற்கு நான் வெகுவாக உழைக்க வேண்டும்.

  27. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திரு. கிருஷ்ணகுமார் அவர்களே

    ///தாங்கள் எழுதிய வ்யாசங்களில் ச்லாக்யமானவையாக இருந்த வ்யாசங்களை உள்ளபடி உகந்துள்ளதை தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். முக்யமாக கணிதமேதை ராமானுஜன் வ்யாசத்தில் மிகப்பல கணிதப் பதங்களுக்கு தாங்கள் ஆங்க்ல பதங்களுடன் கூடவே தமிழ்ப்பதங்களும் அளித்த வ்யாசத்தை நான் save செய்து வைத்துள்ளேன். நான் மிகவும் உகந்த வ்யாசம். நான் உகந்தது இன்னொன்று ஓபன் ஹைமர் வ்யாசம். Brighter than thousand suns பற்றியும் ஒரு வ்யாசம் எழுத நான் விக்ஞாபித்திருந்தது என் நினைவுக்கு வருகிறது ///

    என் விஞ்ஞானக் கட்டுரைகளை ரசித்ததற்கு மிக்க நன்றி. இந்திய/உலக விஞ்ஞானிகள் பற்றியும்,அண்டவெளித் தேடல், அணுசக்தி பற்றியும் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் பழைய / புதிய திண்ணையிலும், என் வலைத் தொகுப்பிலும் உள்ளன.
    http://jayabarathan.wordpress.com/
    சி. ஜெயபாரதன்

  28. Avatar
    IIM Ganapathi Raman says:

    Mr Krishna Kumar

    வியாகங்கள் என்றால் கட்டுரைகளா?

    கட்டுரைகளூக்கடியில் அருஞ்சொற்பொருள்கள என இணைத்துவிடவும். வடமொழிதெரியா அப்பாவி திண்ணைவாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

    விரைவில் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

    போகட்டும். ஒரு சிறிய கருத்து. (அடுத்த மடலில்)

  29. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன், எனது மற்றைய ஹிந்து மற்றும் மாற்று மத சஹோதரர்களே

    இந்த படைப்பு சம்பந்தமான எனது கருத்துக்களை தொகுத்து வருவதால் என்னால் கருத்துப்பரிவர்தனங்களில் முழுமையாகத் தொடர்ந்து பங்கேற்க இயலாது. எனது க்ஷமா யாசனங்கள்.

    பின்னும் சில பகிரவேண்டிய கருத்துக்களை பகிர நினைப்பதால் எனது சில ப்ரச்னோத்தரங்கள்.

    முதலில் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு சில ப்ரச்னங்கள்

    1. இந்தப் படைப்பை உருவாக்க ஸ்ரீமான் அவர்கள் அடிப்படியயாகக் கொண்டது எந்த நூல்? வால்மீகி ராமாயணத்தின் ஏதாவது ஆங்க்ல மொழிபெயர்ப்பா?

    2. தென்னவரை ராமாயண காவ்யம் குரங்குகளாகச் சித்தரித்ததாக தாங்கள் சொல்லியுள்ளீர்கள்? எந்த மொழியிலான ராமாயணம். மிகக் குறிப்பாக பாடல் எண்கள் தங்களால் பகிர முடியுமா?

    தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம். பாரதவர்ஷத்தின் அங்கமாக அறியப்படும் பாரதத்தை ஒட்டியதாக உள்ள த்வீபாந்தரங்கள் – இன்று தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா என்று அறியப்படும் தேசாதிகளில் உள்ள ராமாயணமா?

    நான் கருத்துக்களை மிகக் குறிப்பாக அவதானிக்க விழைவதால் – வெட்டி விதண்டாவாதமாக இல்லாது – அறிவுசார்ந்த ஒரு விவாதத்தின் ஒரு அங்கமாக – படைப்புகள் மற்றும் கருத்துப் பரிவர்த்தனங்கள் இருக்க வேண்டும் என்பதில் ஆக்ரஹம் உள்ளவனாவதால் – இதை மிகக் குறிப்பாகக் கேட்கிறேன்.

    அல்லது எந்த ராமாயணத்தையும் சாராது இது தங்கள் ஊஹமா? என் கருத்துக்கள் இது சம்பந்தமாகத் தெளிவாக பகிரப்படும்.

    3. ராமராஜ்யத்தைப் பற்றி தாங்கள் தங்கள் படைப்பில் ஏதும் எழுதவில்லை என்று குறித்திருந்தீர்கள். மறுக்கவில்லை. தங்கள் உத்தரங்களில் பதிந்துள்ளீர்கள். மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    இராமனின் இராம ராஜியத்தில் பொது மக்கள் குரல் எடுத்துக் கொள்ளப்படும்; ஆனால் நியாயம் ஒருதலைப் பட்சமாக இருக்கும். இருபுறக் குரல்கள் கேட்கப்பட மாட்டா. 9-11-13 திகதி 2.45 மணிக்கூறுக்கு பகிரப்பட்ட உத்தரம்.

    நானும் ஓர் இந்துதான். ஆனால் மதவாதம் பிடிக்காதவன். 8-11-13 திகதி 7.46 மணிக்கூறுக்கு பகிரப்பட்ட உத்தரம்.

    ஆனால் பாருங்கள் மதவாதம் பிடித்த அல்லது (உங்கள் அளவுக்கு) ராமாயணத்தை முழுதுமாக வாசித்தறியாத மஹாத்மா காந்தியடிகள் ஏன் ஹிந்துஸ்தானத்தில் ராமராஜ்யம் அடைய பிடிவாதம் கொண்டிருந்தார் என்று உங்களுக்கு புரியாத புதிராக இருக்கலாம் இல்லை.

    விக்ஞானம் சாராத உங்கள் படைப்பில் ஹிந்துமதக்காழ்ப்பு இல்லாமல் இருப்பது என்பது Oxymoron. விமர்சனத் தொகுப்பில் அவற்றைப் பகிர்கிறேன்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்,

      ////1. இந்தப் படைப்பை உருவாக்க ஸ்ரீமான் அவர்கள் அடிப்படியயாகக் கொண்டது எந்த நூல்? வால்மீகி ராமாயணத்தின் ஏதாவது ஆங்க்ல மொழிபெயர்ப்பா? ///

      எனது தனித்துவச் சீதாயண நாடகத்துக்குக் கீழே குறிப்பிடப் பட்டுள்ள ஏடுகளே நான் படித்தவை,கையாண்டவை.

      தகவல்

      1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

      2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

      3. Mahabharatha By: Rosetta William [2000]

      4. The Wonder that was India By: A.L. Basham [1959]

      5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

      6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

      **************

      S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

      http://jayabarathan.wordpress.com/

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்,

      ///2. தென்னவரை ராமாயண காவ்யம் குரங்குகளாகச் சித்தரித்ததாக தாங்கள் சொல்லியுள்ளீர்கள்? எந்த மொழியிலான ராமாயணம். மிகக் குறிப்பாக பாடல் எண்கள் தங்களால் பகிர முடியுமா? ///

      நமது புராண, இதிகாசங்களைப் பிரதிபலிக்கும் நமது இந்து கோயில்களில் வைக்கப்பட்டுள்ள இராம, சீதா சிற்பச் சிலைகளுக்கு அடியில் மண்டியிட்டுள்ள அனுமார் ஏன் குரங்கு போல் காட்டப்பட்டுள்ளார் ?
      இராமர் பட்டாபிசேகப் படங்களிலும் அனுமார் குரங்கு போல் ஏன் காட்டப் பட்டுள்ளார் ?
      அனுமார் கோயிலில் அனுமார் குரங்கு வாயுடன் ஏன் காணப்படுகிறார் ?
      இலங்கா புரியில் மரத்துக்கு மரம் தாவும் குரங்காக அனுமார் காட்டப் படவில்லையா ?
      அவர் வாலில் வைத்த தீ இராவணன் மாளிகையை எரிக்க வில்லையா ? இவை எல்லாம் மெய்யா ? அல்லது புனை கதையா ?
      சி. ஜெயபாரதன்

  30. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அமரர் மலர்மன்னன் செய்தாரே? அவருக்குப்பின் நீங்களேன் செய்யக்கூடாது? \

    எனக்கும் திருநாடேகிய அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயருக்கும் பரமப்ரியரான ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களுக்கு Shalom.

    சிறு தன்னிலை விளக்கம். அமரர் மலர்மன்னன் அவர்களை என்னுடன் எவ்விதத்திலும் ஒப்பிட இயலாது. அவர் பரந்த வாசிப்புள்ளவர். சிறியேன் குறைந்த வாசிப்புள்ளவன். அவரும் ஸ்ரீமான் ஜெயபாரதன் போன்றோரும் ஆற்றொழுக்குப் போன்ற மொழிநடை கொண்டவர். சிறியேன் கலப்பு மொழிநடையில் திக்கித் திணறித் திண்டாடுபவன். அமரர் அவர்கள் ஹிந்து இயக்கத்தின் திக்கஜம். சிறியேன் ஹிந்து இயக்கங்களில் உபயுக்தமாக பயிற்சி பெற்று மிகச் சிறிய அளவில் – யதாசக்தி என்னால் இயன்ற படிக்கு- சமூஹப்பணியாற்றி வருபவன். சமுத்ரத்தையும் – சமுத்ர லஹரி அல்ல – சமுத்ரத்தின் ஒரு பிந்துவையும் ஒப்பிட வேண்டாம்.

    உங்களது பரந்த வாசிப்பு என்னால் உங்களது வர்த்தமான அவதாரத்திலும் உங்களது முந்தைய பல அவதாரங்களிலும் பகிரப்பட்டது நினைவிருக்கும் என நினைக்கிறேன். கூடவே உங்களது சுஷ்க தர்க்கம், குதர்க்கம், அன்யோன்ய ஆச்ரய தோஷாதி வாத க்ரமங்கள்.

    பிறிதொரு அவதாரத்தில் ( எந்த அவதாரம் – நினைவிலில்லை) தங்களது சுஷ்க தர்க்கம் (ஏசு பிரானின் சாரித்ர சம்பந்தமுள்ள வ்யாசம் என நினைவு) தங்களது வாத க்ரமங்களையே வைத்து Western Logic மற்றும் பாரதீய ந்யாய சாஸ்த்ரங்கள் சார்ந்து- அவை எப்படி Fallacial என்று சிறியேனால் நிர்த்தாரணம் செய்யப்பட்டது நினைவுக்கு வருகிறது.

    இதை எழுதுவதற்குக் காரணம் – நான் தங்களது பரந்த வாசிப்பின் பயனை ஸ்வீகரிக்க – மிகத் தடையாய் இருப்பது தங்கள் விதண்டா வாத ப்ரக்ரியைகள்.

    என் உத்தரத் தொகுப்பில் Objective மற்றும் Subjective என இரண்டு தன்மையதான விசாரங்கள் இருக்கும். பின்னதில் நீங்கள் பொளந்து தள்ளுவீர்கள் என அறிவேன். ஆயினும் முன்னதில் தங்களது பரந்த வாசிப்பின் பயனை ஸ்வீகரிக்க விழைகிறேன். பின்னதற்கான உத்தரங்களில் எனது கவனத்தை அதிகம் செலுத்தப்போவதில்லை. முன்னதில் தங்கள் மேலான Context சார்ந்த கருத்துக்கள் என் சென்னியிலேற்றப்படும்.

    \ ஜயபாரதன் எழுதுவதை இந்துமத வெறுப்பு என்று சொல்லும் கிருஸ்ணகுமார் இப்படி உணர்ச்சிகரமாக தனிநபர் தாக்கங்களில் \

    நான் தங்களது வாத ப்ரக்ரியைகளில் பக்ஷபாதாதிகளை ஆரோபித்தால் – ஆ பைல் முஜே மார் – பொலிகாளையே என்னை முட்டு – என்று நான் வசிக்கும் உத்தர பாரதத்தில் புழங்கும் வசனத்திற்கேற்ப தேவரீர் உத்தரமிடுகிறீரே.

    யாரந்த அயடொல்லா கொமெய்னி ; இரண்டு கொம்பு முளைத்துள்ளவர் – இவை தனி நபர் தாக்குதல்கள்.

    ஹிந்து வெறுப்பு, தன் அபிப்ராயங்களைப் பகிர்ந்த பின் அதை எங்கு வாசித்தபடி பகிர்ந்தீர்கள் – அதற்கு ஆதாரம் என்ன போன்றவை தனிநபர் தாக்கங்கள் இல்லை. தனிநபரின் கருத்தை இடித்துரைக்கும் வாதங்கள்.

    உங்களுடனான கருத்துப் பரிவர்த்தனங்களை சலிக்க வைப்பதாக ஆக்காதீர்கள்.

    \ வியாகங்கள் என்றால் கட்டுரைகளா? \

    I enjoyed that mistakenly spelled sweet abuse.

    விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் phobia.

    என்னுடன் அன்றாடம் மன்னாடும் அப்பாவித் திண்ணை வாசகர்களுக்கு எனது பல கலப்பு மொழிநடைப் பதங்கள் கண்டஸ்தம். அதில் பஹு ப்ரயோகமான பதம் இது.

    ஆனால் உரிமையுடன் உங்கள் காதைத் திருகி ஒரு பிழை திருத்தம் –

    என் எழுத்து நடையில் அது வ்யாசம் – உங்கள் எழுத்து நடையில் அது வியாசம். *வியாகங்கள்* தப்பு, தப்பு, தப்பு. அதன் பொருளை எப்படி சார் கண்டுபிடித்தீர்கள் :-)

  31. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி,

    \ Tamilhindu தளத்தில் எஸ்.ராமனால் மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை.இவர் எந்த சுவிஷேச முகமூடி போட்டு எழுதுகிறார்?கொஞ்சமாவது அறிவை பயன்படுத்துங்க ஸார்! \

    ராமன் சாருடைய வ்யாசங்கள் சிறியேனால் உகக்கப்பட்டும் எங்கு இடித்துறைக்கப்பட வேண்டுமோ அங்கு இடித்துறைக்கப்பட்டும் உள்ளது. சுவிசேஷ முகமூடிகளின் தன்மைகள் மிகத் தெளிவாக சிறியேனால் விளக்கப்பட்டுள்ளன. அந்த அலகீட்டில் லவலேசமும் பொருந்தாதவர் ஸ்ரீ ராமன். ஸ்ரீமான் ராமன் இது வரை அல்லேலூயா பாட்டுப்பாடி அல்லது ஆப்ரஹாமியத்துக்கு தொண்டு செய்து சிறியேன் பார்த்ததில்லை. இணையத்தில் அப்படி ஒரு குறிப்பிருந்தால் தாங்கள் பகிரலாமே உரலுடன்.

    தேவரீர் சகலகலா வல்லி / வல்லர் என்று விதந்தோதப் பட்டவர் என்றால் உங்கள் அளவுக்கு எல்லோருக்கும் (அ) வித்யா விலாஸாதிகள் இருக்கும் என எதிர் பார்க்கலாமோ :-)

    உங்களுக்கு எப்போதிலிருந்து ஜெயபாரதன் சார் போன்று தலைப்பை படித்து விட்டு எழுதும் பழக்கம் வந்துள்ளது.

    ஸ்ரீமான் ராமன் அவர்கள் எழுதிய தொடரில் ராம பிரானை மனிதராகக் கருதுவது சரியா என்பது மிகக் காட்டமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக இந்த உத்தரத்தை உங்கள் கவனத்துக்கு கொணர்கிறேன். 28-04-13 திகதி 9-24 மணிக்கூறு

    \ ஸ்ரீ கிருஷ்ண குமார் அவர்களின்:

    “… வால்மீகி முனிவர் ராமன் வாய்மொழி வழியாக அவனை மனிதனாகக் காட்டினும் மற்ற பாத்ரங்கள் மூலம் அவனது ஸ்வாமித்வத்தையும் கூடவே நெடுகக் காண்பிப்பதை மறுக்க இயலாது. ”

    அதை இந்தத் தொடர் எங்காவது மறுத்திருந்தால் வாசகர்கள் சுட்டிக் காட்டவும். மக்களிடம் மனிதத் தன்மை மேம்படுவதற்கு என்றே இத்தொடர் தொடங்கப்படதுவே அல்லாமல், இராமரின் தெய்வத்தன்மையை எவ்வழியிலும் குறைப்பதற்கு அல்ல. இதுதான் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை உள்ளது. \

    பிம்பாத் இவோத்தித: பிம்ப: என்ற படிக்கு ஜோ சாரை ஒத்தபடி தங்கள் வ்யாக்யானாதிகள் இருந்தாலும் உங்களது உத்தரங்களில் விதண்டாவாதம் குறைவாக இருப்பதாக அவதானித்துள்ளேனே.

    விதண்டாவாத மானாவாரிப் பின்னூட்டங்களில் தங்களுக்கு நம்பிக்கையிருப்பின் தாங்கள் ரொப்பித் தள்ளலாம். அதில் சிறியேனால் பங்கெடுக்க இயலாது. வாதம் சார்ந்து குறிப்பாக கருத்துப் பகிர தங்களால் இயலும் என்பதில் எனக்கு இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கெடுக்க வேண்டாம். க்ருஷ்ணனின் சரித்ர இருப்பைப் பற்றி பரஸ்பரம் கருத்துப் பகிர்ந்தது நினைவில் உள்ளது தானே.

    பெண்கள் சன்யாசம் வாங்க முடியாது என்ற தங்களின் தடாலடி நாலு வார்த்தை வாசகத்திற்கு நேரடியான ச்ருதி சார்ந்த ஆதாரம் இதுவரை இந்த தளத்தில் பகிரப்படவில்லை. சுற்றி வளைத்து என்னென்னவோ காலக்ஷேபம் செய்துள்ளீர்கள். நிற்க.

    ஐந்தாம் பாகத்தில் தாங்கள் பகிர்ந்த விஷயத்திற்கு வருவோம்.

    \ \ இராவணன் சீதையை கவர்ந்து சென்றதன் காரணம் காமமுமல்ல,காதலுமல்ல. தன் தங்கை மீனாட்சி (அழகிய மீன் போன்ற கண்களை உடையவள்) சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான். \

    தாங்கள் வெகு சௌகர்யமாக சூர்ப்பனகையின் ரூப சௌந்தர்யத்தை விளக்கியுள்ளீர்கள். கம்பராமாயணத்தில் எனக்குப் பயிற்சியில்லை. எனது புழக்கத்தில் உள்ள வால்மீகி ராமாயணம் சூர்ப்பனகையின் குரூபத்தைச் சொல்லுகிறது.
    ஆனால் நான் விவாதத்தில் வைத்த விஷயம் இதுவன்று. நான் விவாதத்திற்கு வைத்த விஷயம். ராவணன் சீதையை*க்* கவர்ந்து சென்றதன் காரணம் காமமுமல்லம், காதலுமல்ல என்பதற்கு தாங்கள் முன்வைக்க வேண்டிய ராமாயண ப்ரமாணம்.

    மிகத் தெளிவாக காமம் மிகவே ராவணன் சீதையைக் கவர்ந்தான் என வால்மீகி ராமாயணம் சொல்லுகிறது.

    \ இது போல் 300 க்கு மேல் தினுஷ் தினுசாக இராமாயாணம் உள்ளது. \

    300 ஏன்? சைபரில் ஏன் வஞ்சனை. மானாவாரியாகக் கருத்துப்பதிய இன்னொரு சைபர் கூட சேர்த்துக்கொள்ளலாமே. தினுசு தினுசான ராமாயணங்களின் context நிச்சயம் வேறு. இந்த படைப்புக்கு அதன் சம்பந்தம் என்ன? அறிவு சார்ந்த விவாதத்திற்கு வேண்டியதெல்லாம் substantiation and details

    \ தன் தங்கையையே இராமன் மணம் முடித்தான் என்று கூறும் இராமாயணம் இருப்பது தங்களுக்குத் தெரியுமா?\

    தெரியாதே? ராமாயணத்தின் பெயர். எந்த பாஷையில் எழுதப்பட்டது? தாங்கள் சொல்லும் கருத்துக்குகந்த பாடல் எண் – பாடத்தின் மூலம் – மொழிபெயர்ப்பு பகிர்ந்தால் நம் கருத்துப் பரிவர்த்தனம் பயனுள்ளதாகும். நான் பரிஹாசம் செய்வதாக எண்ண வேண்டா. ஆர்வமேலிடவே கேட்கிறேன். தாங்கள் வாசித்த படிக்கு கருத்துப் பகிர்ந்தால் வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் பயனுறுவர்.

    \ வேறு சில இராமயாணத்தில் சீதையின் தந்தை சாட்சாத் இராவணன் என்று கூறுவது தெரியுமா? \
    Mutatis Mutandis, earlier question is applicable here too

    \ இந்த இராமாயணங்களை எழுதியது ஆபிரகாமிய முகமூடிகள் அல்ல.எல்லாம் உங்க அவாள்தான். \

    எவாள்? க்ரந்த கர்த்தாக்களின் பெயர் என்ன? க்ரந்தங்களின் பெயர் என்ன?

    Details, Details, Details – is what is required from Sakala kala valla Shaali

  32. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஜோ / ஷாலி

    ஹிந்து மதம் / ஹிந்துத்வம் சார்ந்த விவாதங்கள்

    நான் ஒரு ஹிந்து. அதில் பெருமிதம் உள்ளவன். அதில் ஒளிவு மறைவு எனக்குத் தேவையில்லை.

    ஹிந்து என்ற படிக்கு என் மதத்தை இழிவு செய்யும் படிக்கான பதிவுகளைப் பார்க்க நேருகையில் எனக்குப் புரிந்த வரைக்கு அதற்கு ப்ரத்யுத்தரம் செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. இவை subjective ஆன விஷயம் என்பதனைத் தெளிவாக அறிவேன். எந்த சப்ஜெக்டிவ் ஆன விஷயமும் பல விதத்தில் விளக்கத்திற்கு உரியது எனவும் அறிவேன். என் உத்தரங்களின் components களில் இதுவும் ஒரு அங்கம். இதுவே என் உத்தரங்களின் சாரம் அன்று.

    தர்மம் – சார்ந்த – (நூல் சார்ந்த ஆப்ரஹாமிய மதங்கள் அல்லாது) ஹிந்து மதத்தைத் தாங்க வேண்டியது (தர்மத்தின் படி ஒழுகுவதின் மூலம்) ஒவ்வொரு ஹிந்துவின் கடமை என்பது என் புரிதல்.

    என்னால் மட்டிலும் – அல்லது என் புரிதலால் – அல்லது (அ) புரிதலால் – ஹிந்து மதம் உன்னதியை அடைய முடியும் என்று இறுமாப்புக் கருத்துக்கள் என்னால் எங்கும் பகிரப்படவில்லை.

    என் கருத்துக்களில் அப்படி இறுமாப்பு எங்காவது தொனித்திருந்தால் தெளிவில்லாத படிக்கு கருத்துப் பகிர்ந்த என் முறைமையில் அல்லது பாஷா சைலி சரியில்லாத என் உத்தரத்தில் பிழை இருக்கும். அதற்கு என் க்ஷமா யாசனங்கள். மேலதிகமாக இது சம்பந்தமாக நான் சொல்வதற்கு வேறு ஏதுமில்லை.

  33. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஜோ

    அண்ணன் தங்கை ராமாயணத்தில் அண்ணன் தங்கையை மணமுடித்ததாகச் சொல்லியுள்ளீர்கள். அதில் உத்தர ராம சரிதம் என்று சீதை மீண்டும் வனவாசத்திற்கு சென்ற படிக்கான கதையம்சங்கள் உள்ளனவா? அப்படி இருந்தால் மட்டிலும் இப்படைப்புக்கு சம்பந்தம் உள்ளது ஆகும். உங்களிடமிருந்து இது சம்பந்தமான பகிர்வை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

    அங்கு கேட்டது இங்கு கேட்டது என்ற படிக்கில்லாது முழுமையான விபரங்கள் சார்ந்த கருத்துப் பகிர்வுகள் அனைவருக்கும் பயனுள்ளவையாக இருக்கும்.

    ம்……..சீதா பிராட்டியின் துக்கம் மிகுந்த வனவாசம் என்பது வைஷ்ணவர்களால் எப்படி நோக்கப்படுகிறதோ அவ்வாறே வைஷ்ணவனல்லாத ஆனால் வைஷ்ணவாபிமானியான சிறியேனால் நோக்கப்படுகிறது. என் உத்தரத்திலும் கோடி காட்டப்பட்டுள்ளது.

    அதி ப்ரயாசை மிகுந்த எனது மூன்றாம் விபாகத்தில் கம்பீரமான மைதிலியை சித்தரிக்க முன்னோடிகளான வ்யாச வால்மீகி மற்றும் பவபூதியை அனுசரிக்க முயல்கிறேன்.

    நான் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களே தத்சமயம் எஞ்சியுள்ளது என நினைக்கிறேன். மிகக் குறிப்பாக நான் context சார்ந்து ஏதும் சொல்ல வேண்டுமானால் பகிர்கிறேன்.

    புதஜனவிதேயன்
    க்ருஷ்ணகுமார்

  34. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ நடந்ததை நடந்தபடியே எழுதியிருக்கிறார். \

    அன்பர் ஷாலியிடமிருந்து இப்படி ஒரு உத்தரத்தை எதிர்பார்க்கவில்லை.

    Oops! I don’t expect this sort of a reply from dear friend Shali. I fail to understand as to how Ramayana is considered as history. The happennings are all in a celestial Realm. In Bhavuka world, in the celestial Realm, even today, one may experience Rama. check up in life and times of Pujya samartha Ramadas. If Shali considers Ramayana as actual history in the near past, may please share relevant evidences. The locus of history is evidence of as many sorts normally accepted in historical research. The locus of the current story of Ramayana could be any one of the existing versions or if it is not based on any existing versionm, that can be one’s own imagination.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் போன்று கற்பனையில் வடிக்க முடிந்த விஷயங்களை சரித்ரம் என்று நான் எண்ணியதில்லை. க்ருஷ்ணன் மற்றும் ஏசுபிரான் விஷயம் சம்பந்தமாக தாங்களும் அப்படியான கருத்தை ஏற்றுக்கொண்டதாகவே நான் நினைக்கிறேன். சரித்ரம் என்றால் சாரித்ர ஆதாரங்கள் இல்லாது புனைவுகளின் அடிப்படையிலான விஷயங்களை எப்படி சரித்ரம் என்று ஏற்பது?

    வால்மீகி ராமாயணத்தை பாவுகமாக மட்டிலும் வாசித்த எனக்கு ஆராய்ச்சி என்ற பெயரிலோ அல்லது தகவல் பகிர்வு என்ற பெயரிலோ வாசிப்பது அதீதமான கசப்பு மருந்து சாப்பிடுவது போலுள்ளது.

    ராம பிரான் மீது ஆராய்ச்சி வழியில் சென்று குற்றங்கள் காண்பிப்பவர்கள் கூட ராமபிரான் என்ற ஒட்டு மொத்த அவதார புருஷன் / அல்லது மனிதன் மீது குறைகள் மட்டிலும் நிறைந்தவனாக ஒரு பிம்பத்தை முன் வைத்ததில்லை. ஸ்ரீ ராமன் (தமிழ் ஹிந்து) அவர்கள் *ஆத்மானம் மானுஷம் மன்யே* ச்லோகத்தை எடுத்து ராம பிரானை மனிதராகக் காண்பிக்க முயன்றும் — குறைந்த அறிவு மற்றும் வாசிப்புடைய என்னாலும் – வைஷ்ணவ சான்றோர்களான – சம்ப்ரதாயமறிந்த – பரந்த வாசிப்புள்ள ஸ்ரீமான் கந்தர்வன் மற்றும் ஸ்ரீமான் சாரங்கன் அவர்களாலும் எவ்வாறு அவதானிக்கப்பட்டுள்ளது என்பதையும் தாங்கள் உத்தரங்கள் வாயிலாக வாசித்தறியவும்.

    காவ்ய ரூபமான உத்தர ராம சரிதத்தை வாசிக்க முடியாது குளமாகிய கண்களுடன் வாசித்தது என் நினைவுக்கு வருகிறது.

  35. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த நண்பர் வைத்ய ஸ்ரீ ஜான்சன் அவர்களுடன் பகிர வேண்டிய உத்தரம்.

    நட்பின் உரிமையில் சிறியேன் அன்பர் அவர்களுடன் இந்த உத்தரத்தைப் பகிருகிறேன்.

    காஷ்மீரத்தில் நான் இருந்த போது பலமுறை கேழ்க்க நேர்ந்த உர்தூ கஹாவட் (வசனம் – பழமொழி)

    பைகானி ஷாதி மே அப்துல்லா தீவானா

    கூகுள குருகண்டால் இதற்குத் தரும் வ்யாக்யானம்,

    jisko us shadi se koi matlab na ho phir bhi wo bahut khush ho raha ho … In simple words, it means poking your nose in someone else

    இந்த படைப்பில் தங்களது இரு உத்தரங்கள் வாசித்த போது எனக்கு அப்படித் தான் தோன்றியது.

    பொறுப்பற்ற உத்தரங்கள்.

    These were not contextual exchange of ideas which could be in the form of value additions but were (honestly as I feel) simply exchange of religious hatred normally exchanged by immature bigots. I always share my ideas on other religions on the basis of baisc principles or ideologies and desist from heresay or rank abuses. I would try to stick on to my line (try to) . Without hestitations, I did not expect this sort of a retort from expected Doctor.

    நான் க்றைஸ்தவம் சம்பந்தமான யஹூதிய ஆராய்ச்சிகளை மதிப்பிற்குறிய ரப்பிப்பெருமகனார்களின் கருத்துக்களை பகிர்ந்தது ஆராய்ச்சியாதரங்களின் படி சரியென்றாலும்…….இஸ்லாமிய க்றைஸ்தவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை நான் மிகவும் மதிப்பவன் என்ற படிக்கு…….ஏசுபிரான் என்ற நபர் தேவகுமாரன் மட்டிலுமே என்ற படிக்கு மட்டிலும் க்றைஸ்தவர்களின் நம்பிக்கைகளை மதிக்கும் படிக்கு……..அவர் சரித்ரத்தில் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை பல ஆராய்ச்சிகளின் வாயிலாக வாசித்து தெளிவுள்ள எனக்கு……நான் பகிர்ந்தது வம்பு என்று மட்டிலுமே சொல்ல முடியும்.

    அது எனதன்பார்ந்த வைத்ய ஸ்ரீ ஜான்சன் அவர்களது மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு என் மனதார்ந்த க்ஷமா யாசனங்கள்.

    Armageddon புதினத்தில் Leon Uris அவர்கள் க்றைஸ்தவர்களது யஹூதிய வெறுப்பை நிந்தித்து (the term *jew* is an abuse among european, african and american christians) a chirstian who denies the jewish past could not be a true christian (I could not get the correct description – somewhere near this expression) என்று சொல்லியிருப்பார். அதை நான் க்றைஸ்தவர்களுடைய உத்தரங்களில் பார்க்கக் காணேன்.

    பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
    காரோன் அனுகூலனுக்கு கன்னிமரி சேயனுக்கு
    கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம்

    (எனக்கு கண்டஸ்தமான வேதநாயகம் சாஸ்திரியாரின் மணிப்ரவாள கீர்த்தனங்களில் ஒன்று)

    ஸ்தோத்ரம் வைத்ய ஸ்ரீ ஜான்சன்.

  36. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்

    தாங்கள் ஆரோபம் தெரிவித்தது ராமாயண காவ்யத்தின் பால்.

    தங்களுடைய ஆரோபம்,

    தென்னவரை ராமாயண காவ்யம் குரங்குகளாகச் சித்தரித்ததாக

    இதற்கான விடையை தாங்கள் ராமாயண காவ்யத்திலிருந்து தரவேண்டும்.

    கோவில் சிற்பங்களிலிருந்து இல்லை.

    என் தொகுப்பில் இந்த விஷயம் ராமாயணம் சார்ந்து விசாரிக்கப்படும்.

  37. Avatar
    ஷாலி says:

    க்ருஷ்ணகுமார் says:
    November 24, 2013 at 10:32 am
    \ நடந்ததை நடந்தபடியே எழுதியிருக்கிறார். \
    அன்பர் ஷாலியிடமிருந்து இப்படி ஒரு உத்தரத்தை எதிர்பார்க்கவில்லை.
    Oops! I don’t expect this sort of a reply from dear friend Shali. I fail to understand as to how Ramayana is considered as history. The happennings are all in a celestial Realm. In Bhavuka world, in the celestial Realm, even today, one may experience Rama. check up in life and times of Pujya samartha Ramadas. If Shali considers Ramayana as actual history in the near past, may please share relevant evidences. The locus of history is evidence of as many sorts normally accepted in historical research. The locus of the current story of Ramayana could be any one of the existing versions or if it is not based on any existing versionm, that can be one’s own imagination.
    க்ருஷ்ண குமார் அண்ணே! உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.எப்பேர்பட்ட மனுஷன் கடைசியில் இந்த நிலைமைக்கு வந்துட்டீக. யாரு எதை சொல்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதற்க்கு காரணம் அதீத(தாலிபான்) மதப்பிடிப்பு.விசயத்திற்கு வருகிறேன்.//நடந்ததை நடந்தபடியே எழுதியிருக்கிறார்//என்ற இந்த வாசகம் நான் சொல்லவில்லை.உங்கள் Tamilhindu தள ஸ்ரீமான் ராமன் எழுதியது.போய் அவரிடம் போய் கேளுங்கோ! இராமாயணம் நடந்த சரித்திரமா? கதை புனைவா? என்று. எனது அன்பிற்க் குரிய திரு.க்ருஷ்ணக்குமார் அவர்களே!எதையும் நிதானமாக படியுங்கள்.அவசரப்படாதீர்கள்.ஆத்திரப்படாதீர்கள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.என்பது உங்களுக்கு தெரியாததல்ல.ஹிந்து மதத்தை வேறு எவரும் தாழ்த்த முடியாது.நிதானம் இழந்த,நியாயம் மறந்த தீவிர ஹிந்து ஆத்துமாக்களால் தான் அது முடியும்.ஊதுற சங்கை ஊதி வைக்கிறேன்.விடியும் போது விடியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *