ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை

26
0 minutes, 8 seconds Read
This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது.

 

“யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக்‍ காட்டு”

 

ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஒன்றுக்கு போய்க் கொண்டிருந்த அந்த சிறுவன் ஒரு நிமிடம் ஒன்றுக்கு போவதை நிறுத்திவிட்டு அந்த வாசகத்தைக் கேட்டான். மெய் மறந்த நிலையில் அந்த வார்த்தையை பற்றி யோசித்தபடியே இருந்தான்.

தேவாலயத்துக்குள் சென்ற அவன், ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்தை முழுமையாக கேட்டு அறிந்து தெளிந்தான். அப்போது அவன் இவ்வாறு சத்தியம் செய்திருந்தான்.

“இன்று முதல் இந்த உடலில் உயிர் இருக்கும் வரை வன்முறையில் இறங்க மாட்டேன். அன்பு வழியை மட்டுமே பின்பற்றுவேன். யாரேனும் என்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவர் அறைவதற்கு வசதியாக என்னுடைய மற்றொரு கன்னத்தைக் காட்டுவேன்”

மறு கண்ணங்கள் எப்பொழுதுமே காலியாகத்தான் இருக்கின்றன. அவை எப்பொழுதுமே கண்டுகொள்ளப்படுவதே இல்லை. வன்முறையாளன் எப்பொழுதுமே குருடனாகத்தான் இருக்கின்றான். வன்முறையில் இருப்பவனின் கண்களைத் திறப்பது அவ்வளவு சுலபமில்லை. ஏசு கூட, தான் தான் ஏசு என்பதை நிரூபிக்கத் தவறினால் அவரது இரண்டாவது கண்ணம் கவனிக்கப்படாமலேயே போகக் கூடும். ஏசு என்ற இமேஜைத் தவிர இங்கு ஏசுவுக்கோ அவரது வார்த்தைகளுக்கோ பெரிதாக மரியாதை இல்லை. ஏசுவுக்கு மறு கண்ணம் கண்டுகொள்ளப்படாமல் போவதைப் பற்றி தெரியுமோ என்னவோ?….

ஆனால், அந்த சிறுவன் தன் மறு கன்னத்தைக் காட்டுவதைப் பற்றிய நிதர்சன உண்மையை, அவனுக்கு 2 பேர் புரிய வைத்தார்கள். அவன் ஒவ்வொருமுறை மறு கன்னத்தைக் காட்டிய போதும், அந்த 2 பேரும் அதை கடைசி வரை கவனிக்கவேயில்லை. கடைசி வரை என்றால் ……..ஆம் அது கடைசி வரைதான்…..கடைசிவரை அவனது முதல் கன்னத்திலேயே குறியாக இருந்து விட்டார்கள்.

 

அந்தச் சம்பவம் அவன் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நிகழ்ந்தது. பள்ளி விடுவதற்கு இன்னமும்  5 நிமிடங்கள் பாக்கியிருந்தன. அவன் ஒரு ஓட்டப்பந்தய வீரனைப் போல புத்தக மூட்டையை முதுகில் சுமந்தவாறு தயாராக இருந்தான். மணி 3.55. இன்னும் சற்று நேரத்தில் விடுதலையாகப் போகும் சந்தோஷத்தில் கைகளில் ரோமங்கள் குத்திட்டு நின்றன.  நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. முழுதாக 2 நாட்கள் ஜாமீனில் வெளிவரப்போகிறோம் என்கிற பூரிப்பில் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் மணியடிக்கப் போகும் அந்த இனிய காணம் காதினில் இன்பத் தேனாக வந்து பாயப்போகிறது. இன்னும் 5 நிமிடங்கள்தான் பாக்கி. தனக்கு மட்டும் சக்தியிருந்தால் மணியடிப்பவனின் கைகளுக்கு தங்கமோதிரம் செய்து போடலாம் என நினைத்துக் கொண்டான். ஐம்புலன்களையும் ஒற்றை ஆடி மூலம் குவிக்கப்பட்ட சூரிய ஒளியாய் கருத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அந்தமணியோசையை எதிர்பார்த்து காத்திருந்தான்.

ஆச்சரியம் என்றால் இதுதான் ஆச்சரியம், வரலாற்றில் நிகழாத ஆச்சரியம். அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய ஆச்சரியம். 5 நிமிடங்களை முழுதாக முழுங்கிவிட்டு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே மணியோசை கேட்டுவிட்டது. அவனது கண்கள் அகல விரிந்தன. காதுகள் விடைத்தன. கால்நரம்புகள் முறுக்கேறின. முதன்முறையாக உசேன்போல்ட்  தோற்றார். அப்படியொரு ஓட்டம். 50 மீட்டர் தூரத்தை 5 வினாடிகளில் கடந்து சாதனை படைத்த பின்னர்தான் அவன் உணர்ந்தான், தனது சக போட்டியாளர்கள் யாரும் தன்னை பின்பற்ற வில்லை என்று. ஏன்??? யாரும் வகுப்பறையைவிட்டு வெளிவரவில்லை. அனைவருக்கும் என்ன ஆயிற்று என நூறு கேள்விகள் அவனை துளைத்து எடுத்தன. அக்கேள்விகளுக்கு பதில் தேடியபடி திரும்பிய அவன் முன் திடீரென ஒரு கோட்டைச் சுவர் முளைத்தது. அந்த கோட்டைச் சுவர் சுமார் 6 அடி 5 அங்குலம் உயரம் இருந்தது. நிமிர்ந்து, கண்களைக் குறுக்கி சூரிய ஒளியை மறைத்து தனக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த அந்த கோட்டைச் சுவரை அண்ணாந்து பார்த்தான் அவன். அந்தக் கோட்டைச் சுவரின் பெயர் கணேசன் ட்ரில் வாத்தியார். அவர் ஒரு வன்முறையாளர்.

குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் காலத்தில் தான் ஏன் பிறக்கவில்லை என அவர் பல நாட்களாக பார்ப்பவர்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

திரு. கணேசன் தனது பயிற்சிக்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்து, தனது வலது தோல்பட்டையை குலுக்கிக் கொண்டு தயாரானார். திசைவேகம் மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர்கள் இருக்கலாம் அவர் தனது கையை வீசியபோது. அச்சிறுவனின் இடது புறமாக நடைபெற்ற தாக்குதலால் இடது கண்ணம் வீங்கியது.

 

ஜீசஸ் சொல்லியதற்காக மட்டுமில்லை என்றாலும், ஒரே கன்னத்தில் இன்னொரு முறை அடிவாங்கக் கூடிய சக்தி தனக்கில்லை என்கிற ஒரே காரணத்தால் அவன் இன்னொரு கன்னத்தைக் காண்பித்தான்.

 

ஆனால் அந்த சாத்தான். ஒரு கன்னத்திலேயே மாறி மாறி அறைந்து கொண்டிருந்தது. காரணம், அந்த சாத்தானுக்கு அன்று இடது கையில் சுளுக்காம்…..

 

குறைந்தபட்சம் ஜீசஸ் தனது வாசகத்தை இவ்வாறாவது திருத்திக் கொள்ள வேண்டும். அதாவது. இடது கையில் சுளுக்கு பிடித்த ஒருவனிடமாவது. உனது மறு கன்னத்தைக் காட்டாமல் தப்பித்து ஓடிவிடு” என்று குறிப்பிட்டிருந்தால். தனது இடது காது நிரந்தரமாக மந்தமாகாமல் தப்பித்திருக்கும் என நினைத்துக் கொண்டான்.

 

மேலும் அவன் மற்றொரு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டான். ஐஸ் வண்டிக்காரன் பெல் அடிப்பதற்கும், பள்ளிக்கூட மணி அடிப்பதற்கும் வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று……………………

 

நல்லெண்ணங்களுக்கும், சரியான சிந்தனைகளுக்கும் என்றுமே ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவுதான் வாழ்க்‍கை நமக்‍கு பாடம் புகட்டிக்‍கொண்டே இருந்தாலும், மகாத்மா காந்தி, ஏசு போன்றவர்கள் எப்பொழுதுமே எல்லோரையும் கவர்ந்து கொண்டேதான் இருக்‍கிறார்கள். தீவிர வன்முறையாளர்கள் கூட அவர்களை முழுமூச்சாக மறுக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்களது முன்னிலை எந்த ஒரு சாத்தானையும் சந்தேகமில்லாமல் திணறச் செய்து விடுகிறது.

 

எவ்வளுவுதான் வன்முறையற்ற அன்பான வழிகளை கடைபிடிப்பது போன்ற, சரியான முயற்சிகள், அடிகளையும், உதைகளையும் பெற்றுத் தந்தாலும்,எவ்வளவுதான் உண்மையும், சத்தியமும் பயனற்ற முட்டாள்தனமான விஷயமாகத் தோன்றினாலும், மீண்டும் ஒருமுறை அவற்றினுள் இடறிவிழச் செய்யக் கூடிய சக்தி சந்தேகமில்லாமல் அந்த மனிதருக்கு (ஜீஸஸ்)உண்டு.

 

உலகத்திலேயே கோபத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் உண்டென்றால் அது சாத்தான்தான். அவன் மட்டுமே கோபப்படமால் மீண்டுமொரு முறை முயற்சிக்கிறான். சாத்தான் தயாராக இருந்தான், அச்சிறுவனுக்கு எதார்த்தத்தைக் கற்றுக்கொடுக்க. உலகில் எல்லாமே சரியாக இருந்து விட முடியாது. தவறுகள் தான் அவற்றை சமன்படுத்துகின்றன என்கிற உண்மையை உணர்த்த சாத்தான் என்னும் ஆசிரியன் தயாராக இருந்தான்.

 

மீண்டும் ஒருமுறை இடறி விழுந்தான் அந்தச் சிறுவன். கடவுளின் கருணையின் பேரில் அவனுக்கு இன்னொரு காது மிக நன்றாக கேட்டுக் கொண்டிருந்தது.

 

அவன் சத்தியம் செய்தான். வன்முறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன். அன்பை வன்முறையைவிட தீவிரமாக கடைபிடிப்பேன், என்று….  எப்பொழுதுமே குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் தோற்கும்போது சாதாரன மனிதர்களை பொறுத்தவரை மனம் அது சரியா என்பது பற்றி சிந்திக்‍காது. தோல்வியை எப்படி வெற்றியாக்‍குவது, என்பது பற்றியே மனம் தீவிரம் கொள்ளும். தனது முயற்சிக்‍கு சவால் விடுக்‍கும் விஷயங்களில் போராடி வெற்றி கொள்வது எப்படி என்பது பற்றியே சிந்தனை செய்யும். மனம் கொதித்த படியே இருக்‍கும். மனம் தன்னிரக்‍கம் கொள்ளும். வென்று முடிக்‍க வேண்டிய பாதை சரியானதா, தவறானதா என்பது பற்றிய பார்வை மங்கிப் போயிருக்‍கும். மனம் இப்படி இருக்‍கும்போது வேறு என்ன செய்யமுடியும். முயற்சி முயற்சி என்று அதே முள்நிறைந்த பாதையில் மீண்டும் மீண்டும் இறங்கி நடக்‍க ஆரம்பித்து விடுவான்.

அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். தான் தான் உண்மையான தீவிரவாதி. ஒரு உண்மையான தீவிரவாதி அழிவில் மட்டுமல்லாமல், ஆக்க சக்தியிலும், உண்மையை பேசுவதிலும் தன் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தக் கூடிய தைரியம் படைத்திருக்க வேண்டும். இதோ இதை உலகத்திற்கு நிரூபித்துக் காட்ட இன்னொருவன் பிறந்திருக்கிறான்…..என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

 

அப்பொழுது அவன்  10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மாணவர்கள் அனைவருக்கும் ரேங்க்கார்டு வழங்கப்பட்டது. அதில் அனைத்து மாணவர்களும் அவரவர் தந்தையின் கையெழுத்தை வாங்கி வர வேண்டும். ஆனால் அவனுக்கோ தந்தையை தொந்தரவு செய்வதில் கிஞ்சித்தும் உடன்பாடில்லை. அதனால்,  அந்த முரண்பாடான விஷயம் நடந்து விட்டது. அவன் தந்தையின் கையெழுத்து, அவன் தந்தையின் கையால் போடப்படவில்லை என்பது மட்டுமே அந்த முரண்பாடு. மற்றபடி கையெழுத்து என்னவோ அதேதான். அதில் எள்ளளவும் வித்தியாசமில்லை.

ஆனால் ஆசிரியர்கள் என்றுமே கிரிமினல் புத்தியுடையவர்கள். முழியைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்கள். எதார்த்தமாகவும், சகஜமாகவும் அவர் ஒரு  கேள்வியைக் கேட்டார்.

 

“அப்பாவுடைய கையெழுத்தை யார் யாரெல்லாம் தாங்களே போட்டுக் கொண்டு வந்தது. கை தூக்குங்கள் பார்க்கலாம்” என்று கூறியதவுடன்……… ஒரு உத்வேகத்தில் (உண்மையே பேச வேண்டும் என்ற சத்தியத்தை வரித்துக் கொண்டதால் என்று கூட சொல்லலாம்) அவன் கையைத் தூக்கினான். அவனோடு சேர்ந்து நான்கு பேர் உணர்ச்சிவசப்பட்டு விட்டனர்.

 

அந்த ஆசிரியர் எல்லோரையும் போலவே வலதுகை பழக்கம் உள்ளவர். அவர் வலது கையை மட்டுமே தாக்குதலுக்கு உபயோகப்படுத்தினார். நாம் கவனித்துப் பார்த்தோமானால் இந்த மனிதர்கள் எப்பொழுதுமே வலது கையை மட்டுமே அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கும். ஏன்  அவர்கள் இடது கையை பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. சொல்லி வைத்தாற்போல் இடது கையை புறக்கணிக்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு பிறப்பதில்லையே. பின் எப்படி இந்த பழக்கம் மனித இனத்திடம் தொற்றிக் கொண்டது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

 

ஜீஸஸ் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அந்த வார்த்தையைக் கூறுவதற்கு முன்பு, வலது கை பழக்கமுடைய மனித இனம் கண்டிப்பாக அல்லது அதிகபட்சமாக இடது கையை பயன்படுத்தாது என்பதை உணர்ந்து “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்ற வாக்கியத்தை சற்று மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும்.

 

அன்று அந்த ஆசிரியர் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களுக்கு நோயாளிகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே 50 சதவீதம் மந்தமாகியிருந்த அவனது இடது காது அன்று அந்த ஆசிரியரின் கைவண்ணத்தால் நூறு சதவீதத்தை எட்டி சாதனை படைத்தது. அவன் நினைத்தான் நமது ஆசிரியரை ஏன் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு போர் செய்ய அனுப்பக்கூடாது….. மிக நன்றாக சண்டை போடுகிறாரே என்று வியந்தான். எப்பொழுதுமே திறமைசாலிகளை இந்த நாடு அங்கீகரிப்பதில்லை என்று அவன் அங்கலாய்த்துக் கொண்டான்.

 

மற்ற நால்வரில் ஒருவனுக்கு சில்லுமூக்கு உடைந்து ரத்தம் பெருக்கெடுத்தது. அடுத்த முறை ராக்கி படம் பார்க்கும் போது கைத்தட்டி ஆரவரிக்கக் கூடாது என்று அவன் நினைத்துக் கொண்டான் …. “அப்பா என்ன குத்து…..ராக்கியே வந்தாலும் தோற்றுவிடுவார் போல” என்று நினைத்துக் கொண்டான். ஒழுகிய ரத்தத்தை துடைத்தபடியே அருகில் இருந்த நண்பர்களிடம் அவன் கூறினான்….“சில்லு மூக்கு உடைந்தால் உடம்புக்கு நல்லது” என்று. கெட்ட ரத்தம் எல்லாம் வெளியேறிவிடுமாம். அவன் ஆசிரியருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறி நன்றாக அவமானப்படுத்தினான்.

மற்ற மூவர் கன்னத்திலும் ஆசிரியர் தனது ரேகையைப் பதிவு செய்தார். காவல்துறையினரிடம் புகார் கொடுக்கும் பட்சத்தில், அவர்கள் ஆதாரத்திற்காக அலைய வேண்டிய அவசியமே இல்லை. சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே அவர்களால் ஆதாரத்தை துல்லியமாக திரட்ட முடியும்.

 

வன்முறை என்ற வரைமுறைக்குள் வரவேண்டும் என்றால் கன்னத்தில் அறைய வேண்டியிருக்கிறது. ஒரு கணவன், ஒரு மனைவியின் கன்னத்தில் அறைய வேண்டியிருக்கிறது. ஒரு ரவுடி ஒருகாவல்துறை அதிகாரியை தாக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் ஆசிரியரின் தாக்குதல்கள் எல்லாம் வன்முறை என்ற வட்டத்துக்குள வராது. அவர் மாணவர்களை திருத்துவதற்காகவே அடிக்கிறார். அமெரிக்கா அணுகுண்டுகளை தயாரிப்பதன் மூலம், உலக அமைதியை பாதுகாப்பதுபோல.

 

உலகம் என்றுமே ஒருவமனை மதிப்பதில்லை. தொடர்ந்து உதாசீனப்படுத்திக் கொண்டே  இருக்கிறது. நிராசைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் பழிவாங்குவதன் மூலமாகவே மறக்க முயல்கிறான். இந்த சமூகம், தான் இயலாதவனாக இருந்தபோது எப்படி பழிவாங்கியதோ, அதேபோல் தானும் இயலாதவர்களை பழிவாங்கி தன்னுடையநிராசைகளை போக்கிக் கொள்ள முயல்கிறான்.

 

இனப்பெருக்கத்தில் ஈடுபடும்நாயை கல்லெறியத் தூண்டுவது. பொதுவெளியில் காதலர்களின் நெருக்கம் ஏற்படுத்தும் எரிச்சல். பள்ளி மாணவன் பிறப்பெடுத்ததே தன்னிடம் அடிபட்டு ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளத்தான் என நினைப்பது.

 

நானே, பொத்திக்கொண்டு ஒரே ஜாதியில் பெண்ணெடுத்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேஙன். நீ மட்டும் வேற ஜாதி பெண்ணை காதாலிச்சு கல்யாணம் செய்து கொள்வாயோ என அறிவாளைத் தூக்கிக் கொண்டு துரத்துவது…..

 

புதிதாக கதையோ, கவிதையோ எழுத ஆரம்பித்தவுடன் சமுதாயத்துக்கு அறிவுரை கூறி திருத்த நினைப்பது….

ஆசிரியர், அப்பா, அம்மா, சினிமா, பட்டிமன்றம் என சுற்றிவளைத்து அறிவுரையாகக் கூறி என்னை மட்டும் கொலையாக கொன்றீர்கள் அல்லவா, இப்பொழுது நான் அறிவுரை கூறுகிறேன் பார் என சமுதாயத்துக்கு மெஸேஜ் இல்லாமல் எந்த ஒரு படைப்பையும் படைக்காமல் இருப்பது….

 

அடுத்தவனுக்கு அறிவுரை கூறி திருத்துவது தான் தனது தொழில் அதன் மூலம் மற்றவர்களை கேட்பவர்களாகவும், தன்னை, அறிவுரை சொல்பவனாகவும், உருவகப்படுத்தி விட நரித்னமாக (கன்னிங்நெஸ்) முயல்வது.

 

இதுபோன்ற எண்ணங்களுக்கெல்லாம் ஒரு உள்ளார்ந்த நரித்தனம் உள்ளது. மகாபாரதத்தில் வரும் சகுனியைப் போன்று ஒரு உள்ளார்ந்த பழிவாங்கும் தன்மையே, இயல்பான குணமாக உருவெடுத்து, ஒருவனின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது.

 

அதனால்தான், உயரதிகாரிகளாலும், ஆசிரியர்களாலும், ஆட்சியில் இருப்பவர்களாலும், நம்மைவிட ஏதோ ஒருவகையில் மேல்மட்டத்தில் இருப்பவர்களால் நாம் காரணமே இல்லாமல் புண்படுத்தப்படுகிறோம்.

 

உள்ளார்ந்த பழிவாங்கும் நரித்தனத்தை பண்பாக….குணமாக அமையப்பெற்ற ஒருவரிடம் மறு கன்னத்தை காட்டச் சொல்வதன் முரண்பாட்டை ஜீஸஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை.

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

சூர்யா

Similar Posts

26 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //உள்ளார்ந்த பழிவாங்கும் நரித்தனத்தை பண்பாக….குணமாக அமையப்பெற்ற ஒருவரிடம் மறு கன்னத்தை காட்டச் சொல்வதன் முரண்பாட்டை ஜீஸஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை.//
    இயேசுவின் உண்மையான போதனைகளை கிருஸ்தவ உலகம் கண்டுகொள்ளவில்லை. தங்களின் சொந்த விளக்கங்களையே இயேசுவின் வாயில் போட்டு வார்த்தையாக வடிவமைத்து விட்டனர்.
    “ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. –மத்தேயு.5:39.

    என்று இயேசு சொல்வது நல்ல ஒழுக்க பண்பாடுள்ள மனிதனை இச் செய்கை சிந்திக்கச் செய்யும் தன் தவறை உணருவான்.வன் முறையை தவிர்ப்பான்.
    ஆனால் மனிதன் என்னும் போர்வையில் மிருக நடத்தியுள்ள அக்கிரமக்காரர்களுக்கு இவ்வசனம் சொல்லப்பட்டதல்ல.ஏனெனில் சமாதானம் சொல்ல வந்த இயேசுவை ரோமாபுரி காவலர்கள் கைது செய்ய முயன்றபோது, (உலக மக்களின் பாவங்களுக்கு சிலுவை மரணத்தின் மூலம் பரிகாரமாக வந்தவர் தாமாக கைதாகாமல் ) காவலர்களை எதிர்க்க வாளேந்தி சண்டையிடும்படி தன் சீடர்களுக்கு கட்டளை இடுகிறார். அப்படி வாள் இல்லாதவன் தன் ஆடையை விற்றாவது ஆயுதம் வாங்கச் சொல்கிறார்.

    “வாள் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.”
    -லூக்கா.22:26.
    இயேசுவின் கட்டளைப்படி சீடர்கள் வாளை உயர்த்தி சண்டை செய்தபோது ஆலய காவலர் ஒருவனது காது அறுபட்டது.
    உலகில் இருக்கும் தீமைக்கு எதிராக போர் தொடுக்கும்போது சமாதானம் இருக்காது பிரிவினைதான் இருக்கும்.சமாதானத்தை ஏற்பவன்-எதிர்ப்பவன் என்னும் பிரிவினை.இதையே இயேசு சொல்கிறார்.

    ”பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ?சமாதானத்தை அல்ல பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.”-மத்தேயு.12:51.

    மற்றொரு வசனத்தில் இன்னும் தெளிவாக,

    “பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்.சமாதானத்தையல்ல.வாளையே அனுப்ப வந்தேன். (I come not to send peace but a sword)-மத்தேயு.10:34.

    இறைவனை வணங்கும் ஆலயத்தை வணிக விளாகமாக ஆக்கிய அக்கிரமத்தைக் கண்டு இயேசு வெகுண்டேழுந்து சவுக்கை சுழற்றுகிறார்.

    “கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி; அவர்கள் யாவரையும், ஆடு மாடுகளையும் தேவாலயத்திற்கு புறம்பே துரத்திவிட்டு, காசுக் கடைக்காரருடைய (Money Exchanger) காசுகளைக் கொட்டி பலகைகளைக் கவிழ்த்துப் போட்டார்.”
    -யோவான்.2:15.
    மனுஷகுமாரன் இயேசு கூறிய போதனைகள், கடவுள் வார்த்தையாக ரோமாபுரி மத நிறுவனங்களால் மாற்றப்பட்டு,உலக சமாதானத்திற்காக? சிலுவைப்போரின் மூலம் கோடானு கோடி உயிர்கள் நித்திய ஜீவனை அடைந்தன என்பது வரலாறு. புத்தனும்,இயேசுவும் அன்று மனிதர்கள்.தங்களை கடவுள் என்றும்,என்னை வணங்குங்கள் என்று ஒருபோதும் சொன்னதில்லை.இன்று இருவரும் கடவுள்கள். இருவருடைய போதனைகளுக்குக்கு எதிராக கோடானுகோடி மக்களால் வணங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். புத்த பகவான். கர்த்தராகிய,ஆண்டவராகிய இயேசு கிருஸ்து.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் பெரிய சமுத்திரம் போன்றவை. அவற்றை முழுவதும் படித்து உணர்ந்தாலே அதன் தத்துவம் புரியும். அதை விடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு தர்க்கம் செய்வது முறையாகாது. இதை முதலில் நாம் உணர வேண்டும்.

    இங்கு சூர்யா எழுதியுள்ள ” ஜீஸஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை .:” எனும் கட்டுரையில் அவர் இயேசு போதித்த ” ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு .” என்ற வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அது பற்றி சில நடைமுறை சம்பவங்களைக் கூறி கேள்வி எழுப்பியுள்ளார். இது பாமர மக்களுக்கு புரியும் வண்ணம் எளிமையான கருத்தாகும். இதன் மறை பொருள் எளிது. தீமை செய்பவனுக்கு நீயும் பதிலுக்கு தீமை செய்யாதே என்பதே அதன் பொருள். இதற்கு வலது கன்னம் இடது கன்னம் என்றெல்லாம் வாதிடுவது வெட்டி வேலை! ஏன் நம்முடைய பெரியவர் வள்ளுவர் கூடத்தான் இந்த பாணியில் ஒரு குறள் சொல்லியுள்ளார்.

    ” இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

    நன்னயம் செய்து விடல். ” இதன் பொருள் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் அது வருமாறு.

    ” தமக்கு துன்பம் செய்தவர்களைத் துறந்தவர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்தவர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாகும்.

    மறு கன்னத்தைக் காட்டு என்று இயேசு சொன்னதும் வள்ளுவர் கூறியதும் ஒன்றுதான் என்பது என்னுடைய கருத்தாகும்…டாக்டர் ஜி. ஜான்சன்

  3. Avatar
    Indian says:

    There was never an HISTORICAL JESUS. Can Dr Johnson give PRIMARY evidence on this?
    Mythological Jesus? Yes, very much so.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இயேசு என்ற நபர் உண்மையிலேயே வரலாற்றிலிருந்தவரா இல்லை புனைவா என்ற கேள்வி வரலாற்றாயவாளருக்கு. நமக்கேன்? ஒரு கன்னத்தில் அறையப்பட்டால் மறு கன்னத்தையும் காட்டுக. என்பதைப்பற்றி ஏதாவது சொல்லலாமே இந்தியன்?

  4. Avatar
    dharumi says:

    ஜோக் என்று டைட்டில் போட்டு எழுதினால் தான் சில மக்களுக்கு புரியும் போலும். நீங்கள் நன்றாக எழுதியுள்ளதை மக்கள் இப்படி ஒரு கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் போலும்!

  5. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    சொல்லுதல் யார்க்கு எளிது ஆனால் சொல்லிய வண்ணம் செயல்- நல்ல தலைவனிடம் இருக்கும்; ஏசுவிடம் இல்லை சார்.
    யோவான்18:22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ‘ தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ‘ என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ‘ நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? ‘ என்று கேட்டார்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      மொழி பெயர்ப்பு சரியில்லை. ஜான் 18:22 ஐ இணையத்தில் படித்தேன். இங்கே சென்று நீங்களும் படிக்கலாம். http://www.biblegateway.com/passage/?search=John+18&version=KJV கன்னத்தில் அறைந்தார் என்றில்லை. எனவே ஒரு கன்னத்தில் அறையப்பட்டால் இன்னொரு கன்னத்தையும் காட்டு என்ற வசனத்திற்குப்பொருந்தாது

      என் மொழிபெயர்ப்பு உண்மையைச்சொல்லும்: யோவான் 19:22

      19 The high priest then asked Jesus of his disciples, and of his doctrine. (தலைமைக்குரு இயேசுவிடம் அவரின் கோட்பாடு மற்றும் சீடர்களைப்பற்றிக் கேட்டார்.) 20 Jesus answered him, I spake openly to the world; I ever taught in the synagogue, and in the temple, whither the Jews always resort; and in secret have I said nothing. (இயேசு தான் எதையும் இரகசியாகச் சொன்னதில்லையென்றும் தான் சொன்னவை அனைத்துமே பொதுவிடங்களில்தான். அதாவது, யூதக்கோயில்களிலும் யூதர்கள் கூடுமிடங்களிலும் தன் கருத்துக்களை எடுத்தியம்பியதாகவும் பதிலுரைத்தார்.) 21 Why askest thou me? ask them which heard me, what I have said unto them: behold, they know what I said. (ஏன் என் போதனைகளைப்பற்றி என்னிடமே கேட்கிறீர்கள்? எந்த மக்களிடம் சொன்னேனே அவர்களிடமே கேட்டறிந்து கொள்ளலாமே? என்றார்.)22 And when he had thus spoken, one of the officers which stood by struck Jesus with the palm of his hand, saying, Answerest thou the high priest so? (இவ்வாறு இயேசு சொன்னவுடன், அங்கிருந்த அதிகாரிகளுள் ஒருவர், ‘தலைமைக்குருவிடமே இப்படிப்பதில் சொல்கிறாயா?”என்று கேட்டு இயேசுவை கையால்அடித்தார்.)23 Jesus answered him, If I have spoken evil, bear witness of the evil: but if well, why smitest thou me? (நான் தவறுதலாக சொல்லியிருந்தால் அதை நிரூபியுங்கள். இல்லாவிட்டால் ஏனென்னை அடிக்கவேண்டும்? என்று கேட்டார் இயேசு.)

      ஒருவேளை, தே. சாலோமோன் விருப்பத்தின்படியே, அந்த அதிகாரி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார் என்று வைத்துக்கொண்டாலும், மறு கன்னத்தைக்காட்டுமுன், தான் எவ்விதத்தவறும் செய்யவில்லை; தவறாகப்புரியப்பட்டு தண்டிக்கப்படுகிறேன் என்று விளக்கமளிப்பது சரியே. இயேசுவின் தன் கொண்ட உண்மை எவ்வித துன்பத்துக்கிடையிலும்ம தைரியமாகச எடுத்துச் சொல்வதாகத்தான் யோவான் 18:22 எடுத்துக்காட்டுகிறது. இப்படிப்பட்ட உண்மைக்குச்சார்பாக நின்றபின்புதான் அவர் கடைசித்தண்டனையை (சிலுவைப்பாடு) அடைகிறார். ஊமையாகவே நின்றிருந்தால் அவர் கொலைசெய்யப்பட்டிருக்கமாட்டார். தைரியாமாக தன் கொள்கைக்காக நின்றதால் அவருக்கு நீண்ட கொடிய சித்திரவைதைத்தண்டனை கொடுக்க்ப்பட்டு கொல்லப்பட்டார். தான் கொண்ட கொள்கைக்காக உயிருவிடுதல் மாபெரும் தலைவனின் அடையாளம்.

      தனக்குக்கொடுக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டதை மறுகன்னத்தைக்காட்டியதாக தே.சாலோமோன் எடுத்துக்கொள்ளலாமே!

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        ஏற்றுக்கொண்டது மட்டுமன்று; அத்தண்டனையைத் தமக்குக் கொடுத்தோரை ‘”இவர்கள் அறியாமையினால் செய்கிறார்கள். எனவே இவர்கள் செயல்களுக்கு இவர்கள் காரணமல்ல. இறைவனனே இவர்களை மன்னியுங்கள்!”என்ற விண்ணப்பத்தையும் இறைவன் முன் வைக்கிறார் இயேசு.

        இப்போது யோவான் 18:22 ல், இவர் பேசி, அதன் பின் கிடைத்த தண்டனையை அனுபவித்ததையும், இறுதியில் இறைவனிடமே தன்னைக்கொடுமைப்படுத்தியோருக்காக மன்றாடியதை இணைக்கும்போது, //ஒரு கன்னத்தில் அறையப்பட்டால், இன்னொரு கன்னத்தையும் காட்டுக// என்பதன் பொருள் முழுவதும் வெளிக்காட்டப்படுகிறது. இறுதியில் இவரை கொடுமைக்காளாக்கியோர் திருந்தி இவரைப் புனிதர் என்று ஏற்றுக்கொண்டதாக பைபிள் முடிகிறது.

        அதாவது, இன்னாசெய்தாருக்கு இனியவை செய்தால் இறுதியில் அவர்கள் திருந்தப்படுவார்கள் எனபது இதில் சொல்லப்படும் செய்தி.

        Many thanks to D.Solomon for an opportunity to read this part of the Bible online and understand it.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஜான்சன், உங்கள் இரண்டு கருத்துக்களை சமன்வயம் செய்ய முயன்று முடியாமற் போக இந்த உத்தரத்தைப் பகிர்கிறேன்

    \ கிறிஸ்துவனாக இருந்தால் பொதுவான சர்ச்சைகளில் கருத்து கூற முடியவில்லை. உடனே மதத்தையே எல்லாரும் சாடுகின்றனர். அண்ணா கம்பரசம் படித்து அதில் உங்கள் கட்டுரை தொடர்பான சீதையின் முலைகள் பற்றிதானே நான் மேலும் சில கம்பனின் வரிகளைத் தந்தேன். \

    இல்லை. *ரசம்* என்பது தமிழ்ச்சொல்லா? தமிழ் இலக்கண நூற்களில் இது சம்பந்தமாக என்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி உங்களால் விளக்க முடிந்தால் விளக்கவும்.

    \ பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் பெரிய சமுத்திரம் போன்றவை. அவற்றை முழுவதும் படித்து உணர்ந்தாலே அதன் தத்துவம் புரியும். அதை விடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு தர்க்கம் செய்வது முறையாகாது. இதை முதலில் நாம் உணர வேண்டும். \

    பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் பெரிய சமுத்திரம் என்று சொல்லும் நீங்கள் கவிச்சக்ரவர்த்தி கம்பநாட்டாழ்வார் எழுதிய ராமாவதாரம் எனும் கம்பராமாயணத்தை அப்படி ஏன் கருதவில்லை. உங்கள் மத நூல் சமுத்திரம் என்று கருதும் நீங்கள் மாற்று மத நூற்களையும் அவ்வாறு கருத வேண்டாமா?

    ராமாவதாரம் எனும் கம்ப ராமாயணம் இலக்கிய நூல் மட்டுமன்று திருவரங்கப் பெருமான் சன்னிதியில் அரங்கேறிய பெருமை படைத்த – வைஷ்ணவர்கள் உகக்கும் ஒரு மத நூலும் கூட.

    தமிழ் இலக்கியம் என்று எடுத்துப்பேசினால் தமிழ் இலக்கிய இலக்கணங்களுடன் இந்நூலில் சொல்லப்பட்ட விஷயங்களை விவாதிப்பது நலம். உங்கள் விவாதம் அப்படி அமையவில்லை.

    கம்ப ராமாயண நூலிலிருந்து மட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு தர்க்கம் செய்வது முறைமையாகுமா? தமிழில் ஒப்புயர்வற்ற ஒரு காவ்யமான கம்பராமாயணம் பற்றி இலக்கிய ரீதியாகக்குற்றம் சாட்ட விழைந்தால் முழுமையான இலக்கிய இலக்கணங்கள் சார்ந்து உங்கள் நிலைப்பாடுகளை முன்வைக்க விழையுங்கள்.

    அல்குல் என்பதற்கு ஜனனேந்த்ரியத்தை சுட்டுவதாக நீங்கள் பொருள் சொல்லியுள்ளீர்கள்.

    கீழ்க்கண்ட சுட்டியில் மதம் மட்டிலும் சாராது தமிழ் மொழி சார்ந்து அல்குல் என்பது இடுப்பு, ஜனனேந்த்ரியம் என்ற இரண்டு பொருட்களையும் அது சொல்லப்படும் இடம் சார்ந்து பொருள் கொள்ளச் சொல்கிறது. நீங்கள் சொல்வதை நான் முழுக்க நிராகரிக்கப்புகவில்லை. முழுமையாக இலக்கிய இலக்கணம் சார்ந்து நீங்கள் பொருள் கொண்டீர்களா? அல்லது *வால்மீகி ராமாயணத்தில் சீதை மீது அபவாதம் சொன்னது வண்ணான் தான்* என்று அடித்துவிடும் ரீதியில் அங்கிங்கு கேட்டதைக் கேட்டவர்கள் *உண்மை போல* பகிர்ந்த படிக்கு பகிரவிழைந்தீர்களா என்ற ரீதியில் கேழ்க்கிறேன். என்னை விடத் தமிழில் உங்களுக்குப் பலமடங்கு புலமை உண்டெனினும் *கம்பநாட்டாழ்வாரையே* குற்றங்காண தாங்கள் விழையும் போது கேழ்விகள் நிச்சயம் எழும்.

    http://madhavipanthal.blogspot.in/2011/10/alkul.html

    இலக்கியமாக ஒரு நூலை பார்க்க விழைந்தால் இலக்கியமாக அதைப் பார்க்க விழையுங்கள். இலக்கிய இலக்கணம் சார்ந்து அதில் காணப்படும் குற்றம் குறைகளை சுட்ட முயல்வது வாசிப்பனுபவத்தையும் கருத்துப்பரிமாறலுக்கு மெருகையும் அளிக்கும். வெறுமனே ஸ்ரீ அண்ணாத்துரையை சுட்டாது தமிழ் மொழி இலக்கிய இலக்கணங்கள் சார்ந்து கம்பநாட்டாழ்வாரை குற்றம் சாட்ட முனையுங்கள் (சொற் குற்றமோ பொருட் குற்றமோ ஏதாக இருப்பினும்)

    மதநூலாக கம்பராமாயணத்தை அணுக விழைந்தாலும் (ஸ்ரீ அண்ணாதுரை (நாஸ்திகர்) மாற்றுக்குறைவாக கம்பராமாயணத்தைச் சுட்டுவதாக சொல்லியுள்ளீர்கள்) அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு வசனத்தை உருவி தர்க்கம் செய்ய விழைவது – எப்படி பழைய அல்லது புதிய ஏற்பாடு நூல்கள் சார்ந்து முறைமையாகாதோ – அப்படியே ராமாவதாரம் எனும் கம்பராமாயணம் என்ற மதநூல் சார்ந்தும் – முறைமையாகாது.

    ஹிந்துக்களின் மதநூலை ஸ்ரீ அண்ணாத்துரை என்ற நாஸ்திகர் இகழ்ந்து பேசினார் என்றால் —

    பைபிள் மற்றும் குரான்-ஏ-கரீம் என்ற இரண்டு மதநூற்களையும் ஷான் என்ற க்றைஸ்தவ அன்பரின் குழுவும் தவ்ஹீத் ஜமாத் என்ற குழுவினரும் – பரஸ்பரம் குற்றம் குறை கண்டது இணையத்தில் அல்லாடுகிறது. பைபிளை அதனை நம்பாத தவ்ஹீத் ஜமாத் மூலம் அறிய விழைவதும் குரான்-ஏ-கரீமை அதனை நம்பாத க்றைஸ்தவ குழுவினரான அன்பர் ஷான் குழுவினரின் மூலம் அறிய விழைவதும் எவ்வளவு மடமையோ அவ்வளவு மடமை ராமாவதாரம் எனும் கம்பராமாயணம் என்ற நூலை மதநூலாகக்கொண்டு – ஹிந்து மதத்தை – வைஷ்ணவத்தை ஏற்காத – நாஸ்திகரான ஸ்ரீ அண்ணாத்துரை அவர்கள் மூலம் அறிய விழைவது.

    கம்ப ராமாயணத்தை மதநூலாகக் கற்றறிந்த எத்தனையோ மஹனீயர்கள் என் நினைவில் வருகின்றனர்.

    பின்னும், வணக்கத்திற்குரிய — வைணவச்சுடராழி — என்று போற்றப்படும் — தமிழ், சம்ஸ்க்ருதம் — என்ற இரண்டு மொழிகளையும் முறையே தன் குருவான ஸ்ரீ. உ.வே.வீரராகவ ஐயங்கார் ஸ்வாமி மூலம் கசடறக்கற்ற – டி. ஆன்டனி ஜோஸஃப் என்ற ஜோசஃப் ஸ்வாமின் அவர்கள் மூலமாகவும் நீங்கள் நூலின் முழுமையான கருத்துக்களைக் கசடறக் கற்று அறியலாம்.

    cherry picking – pin pricking – copy paste arguments – may in the short run — may help you to score points. In the long run, in deep scrutiny of scriptures with specific context, it simply tear down the baseless — hate filled — senseless arguments. And I had travelled in that route in this website not once.

    I can ignore arguing for the sake of arguments from faceless people. But not a respected person like you. I would expect sensible arguments from your goodself.

    I would expect the same sort of treatment you expect for Biblical statements — you would extend to — other Religious Texts.

    If you would treat it as literature, I would appreciate if you could explain your points with full rigours.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  7. Avatar
    ஷாலி says:

    இரண்டு வாரங்களாக “ மார்பு எழுத்தாளர்கள்”என்ற மேற்படி சமாசாரத்திற்கு பின்னூட்டம் ஒன்றையும் காணோமே என்று நினைத்திருந்தேன்,மேற்படியை பார்த்தது போதும் கீழ்ப்படி சமாசாரத்தை பார்க்கலாம் என்று நண்பர் க்ருஷ்ணகுமார் நினைத்து விட்டாரோ என்னமோ, அல்குல் ஆராய்ச்சில் இறங்கிவிட்டார் “ கறந்த இடத்தை கண்டது போதும்,பிறந்த இடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம்..”என்ற பட்டினத்தார் வழியில் நண்பர் பயணிக்க ஆசைப்படுகிறார்.

    //அல்குல் என்பதற்கு ஜனனேந்த்ரியத்தை சுட்டுவதாக நீங்கள் பொருள் சொல்லியுள்ளீர்கள்.
    கீழ்க்கண்ட சுட்டியில் மதம் மட்டிலும் சாராது தமிழ் மொழி சார்ந்து அல்குல் என்பது இடுப்பு, ஜனனேந்த்ரியம் என்ற இரண்டு பொருட்களையும் அது சொல்லப்படும் இடம் சார்ந்து பொருள் கொள்ளச் சொல்கிறது. நீங்கள் சொல்வதை நான் முழுக்க நிராகரிக்கப்புகவில்லை. முழுமையாக இலக்கிய இலக்கணம் சார்ந்து நீங்கள் பொருள் கொண்டீர்களா?//

    அல்குல் எனும் சொல்லிற்கு ஆயிரம் அர்த்தங்கள் புறநானூறு போன்ற சங்கப்பாடல்களில் இருக்கலாம்.இங்கு கம்பன் எந்தப்பொருளில் எடுத்தாளுகிறான் என்பதே கேள்வி. பாம்புப் படம் போன்ற வளைவுகள் உள்ள இடுப்பா அல்லது இடுப்பில் உள்ள உறுப்பா? ஒரு பாடலைப் பார்ப்போம்,

    இயல்வு உறு செலவின் நாவாய்,

    இரு கையும் எயினர் தூண்ட,

    துயல்வன துடிப்பு வீசும் துவலைகள்,

    மகளிர் மென் தூசு உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அறத் தளிப்ப,

    உள்ளத்து அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!

    அருஞ்சொற்பொருள்:

    இயல்பு உறு செல்வின் நாவாய் – இயல்பாகப் பொருந்திய செலவினை உடைய மரக்கலங்கள்;

    இரு கையும் எயினர் தூண்ட – இருபக்கத்தும் வேடர்கள் உந்துதலால்;

    துயல்வன துடுப்பு – அசைவனவாகிய துடுப்புகள்;

    வீசும் துவலைகள் – வீசுகின்ற நீர்த்துளிகள்;

    மகளிர் – (கலத்தில் உள்ள) மகளிரது; மென்தூசு -மெல்லிய ஆடை;

    உயல்வு உறு – மறைந்து பொருந்திய;

    பரவைஅல்குல் – பரந்த அல்குலை;

    ஒளிப்பு அற தளிப்ப – மறைவு நீங்க வெளித்தோன்றச் செய்ய;

    உள்ளத்து அயர்வுறும் – (இராமன்வனம் புகுந்த நாள்முதலாகப் போகம் இழத்தலின்) மனச்சோர்வுஅடைந்த; மதுகை மைந்தார்க்கு – மனவலிமை உடைய வீரர்களுக்கு;

    அயா வுயிர்ப்பு – வருத்தத்திலிருந்து நீங்குதலை;

    அளித்தது – உண்டாக்கி (உற்சாகப்படுத்தி)யது.
    துடுப்பு வீசும் நீர்த் துளிகளால் மகளிர் ஆடை நனைந்தது; அல்குல் வெளித்தோன்றியது; மைந்தர்க்கு மகிழ்ச்சி விளைந்தது என்க.
    “ஒளிப் புறத்து அளிப்ப” என்று பாடம்தந்து பிரித்து அல்குலின் ஒளியைப் புறத்து அளிப்ப–ஆடை நனைந்தவுடன் உள்ளுறுப்பு பளிச்சென தெரிந்ததை கண்டு வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.
    (ஆதாரம்: தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தின் கம்ப இராமாயண விளக்கம்)

    தன் மனத்திற்கு பிடித்த ராமன் வில்லை முறித்து விட்டான் எனச் சேதி கேட்டவுடன் மகிழ்ச்சியில் அவளது இடையில் இருந்த மேகலை என்னும் ஆபரணம் தெறித்து அறுந்தது., என்றே கம்பராமாயண செயுள்ளை உரைநடையாக மாற்றிய இருபதாம் நூற்றாண்டு பண்பாட்டுக் காவலர்கள் நமக்குச் சொன்னது.ஆனால் கம்பர் சொல்லவந்தது என்ன தெரியுமா?

    வெற்றி பெற்று விட்டான் காதலன்,மனம் கவர்ந்த காதலனை கைப்பிடிக்கப் போகிறோம் என்ற உச்ச பரவசத்தில் சீதையின் அல்குல் விம்மிப்புடைத்து பெருத்து,இடை மேலிருந்த மேகலை தெறித்து அறுந்ததாம்.
    இதல்லாமல்,இதுவரை சீதையைக் கண்டிராத அனுமனிடம் ராமன், சீதையின் அங்க அடையாளங்களை கூறும் அழகு…”செப்பென்பேன்,கலசமேன்பேன்,செவ்விளநீரும் தேர்வன்….”என்கிறார்.

    உண்மையில் கம்பருடைய படைப்பு, பரிசுத்த வேதநூல் அல்ல. அது மனிதனின் வாழ்வியலையும் ஒரு அரசகுடும்பம் அதைச்சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையை அழகியலுடன் எடுத்துச்சொன்ன செவ்விலக்கியம். அந்த நுல் எந்த புனிதத் தன்மையையும் சார்ந்து கட்டமைக்கப்படவில்லை. நல்லதையும் கெட்டதையும் சரிக்குச் சரியாக சொன்ன இலக்கியம்.
    நமது ஹிந்துத்துவா க்ருஷ்ணாக்கள் அதற்க்கு புனித மதச்சாயம் பூசி விட்டதால் இப்பொழுது கம்பருக்கே டப்பிங் வாய்ஸ் கொடுக்கிறார்கள்.ராமனை கடவுளாக்கினால்தான் அரசியல் பண்ண முடியும்.கடவுளின் புனிதத் தன்மையை காப்பதற்காக சீதைக்கு புதிய காஸ்ட்யூம் அணிவிக்கிறார்கள்.படம் ஒடனும்ல்ல……

  8. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களே, நலம். நலமறிய ஆவல்,

    நிற்க. தங்களின் பின்னூட்டம் கண்டேன். உங்களின் ஆதங்கம் அறிந்தேன். என்னுடைய பதிலைக் கூறுமுன் நீங்கள் அடைந்துள்ள சிறு குழப்பத்தை முதற்கண் சுட்டிக்காட்ட விழைகின்றேன். நீங்கள் இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டு குழம்பிப் போயுள்ளீர்கள் முதல் கட்டுரை இயேசு மறு கன்னத்தைக் காட்டச் சொன்னது சரியா என்பது பற்றியது. இரண்டாம் கட்டுரை நம்முடைய சகலகலாவல்வரான ஷாலி

    அவர்கள் சீதையின் முலைகளை கம்பன் ஆபாசமாக வர்ணிக்கலாமா என்பது பற்றியது.நீங்கள் அந்த மேற்படி விஷயத்தைப் ( சீதையின் முலைகள் )

    பற்றி கருது கூறாமல் கீழ்ப்படி . விஷயம் ( சீதையின் அல்குல் ) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதோடு, உங்களின் ஆராய்ச்சியின் முடிவை தவறாக

    இயேசுவின் கட்டுரையில் சமர்ப்பித்திருக்கிறீர்கள். ஆனாலும் விடுவாரா ஷாலி! அவருடைய கட்டுரைக்கு என்னைத் தவிர வேறு யாரும் பின்னூட்டம்

    எழுதவில்லையே என்ற அகங்காரத்தில் திண்ணை முழுதும் தேடி உங்களுடைய அல்குல் கட்டுரையைக் கண்டு பிடித்து தான் சகலகலா வல்லவர்தான் என்ற பட்டத்தையும் தக்க வைத்துக்கொண்டார்.

    இந்த சிக்கலான சூழலில் என்னுடைய நிலையையும் நான் கூறிக்கொள்வது நலம் என எண்ணுகிறேன். நான் கம்பராமானமும் முழுதும் படித்துள்ளேன். பைபிளையும் முழுதும் படித்துள்ளேன். படித்துள்ளேன் என்று சொன்னால் படித்துள்ளேன் .என்பதுதான்.. அதில் ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டங்கள் பெறவில்லை. அப்படிப் பெறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆதலால் என் படித்த அறிவுக்கு எட்டிய நிலையில்தான் கம்பராமாயணம் பற்றியோ பைபிள் பற்றியோ என்னால் கூற இயலும் .ஆதலால் பொறுத்தருள்க. நான் கம்பராமாயணம் பற்றி அண்ணா எழுதியுள்ள கம்பரசம் நூலில் படித்ததைதான் ஷாலி அவர்களின் வாதத்திற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் எடுத்தியம்பினேன். அனால் அவரோ உடன் பைபிளில் உள்ள சாலமன் ராஜாவின் ” உன்னதப் பாட்டை ” சமயோசிதமாகப் பார்க்கச் சொன்னார். அவை நான் படித்து இரசித்தவைதான். ஆனால் அங்கே சாலமன் யூத மக்கள் வழிபட்ட எந்த தேவதையின் முலைகளை வர்ணிக்கவில்லை. அது அவனின் கற்பனையில் தோன்றிய பெண்தான். ஆனால் கம்பன் வர்ணித்து இன்று ஷாலி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது நாம் வணங்கும் சீதா பிராட்டியாரின் முலைகள்! இதுவே இன்றைய பிரச்னை. அனால் அதை விடுத்தது நீங்கள் இரண்டு மூன்று படி ” கீழே ” போய் சீதையின் அல்குல் பற்றி எழுதி சும்மா இருந்த ஷாலிக்கு உந்துதல் தந்து விட்டீர்கள். இனி அவர் விடுவாரா? இனி சீதையின் ” அது ” பற்றி நிச்சயம் விளாசுவார்! அண்ணா கூட சீதையின் அல்குல் பற்றிய கம்பனின கவிநயம் பற்றி கூறியுள்ளார். நான் அதை வெளியிட்டு என் நண்பரான உங்களுக்கு மேலும் சோதனையும் வேதனையும் தரமாட்டேன். மற்றவற்றை நம் இருவருக்கும் பொதுவான நண்பர் ஷாலி பார்த்துக்கொள்வார்…. அனபுடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஜான்சன், ஸ்தோத்ரம்.

    நலக்குறைவு தான். நான் எழுதப் புகுந்த வ்யாசம் பாதியில் உள்ளது. அதை நிறைவு செய்து பதிவிற்கு அனுப்ப வேண்டும்.

    என் வினாக்களுக்கு நீங்கள் முற்றிலும் உத்தரங்கள் பகிர விழையவில்லை. மாறாக உங்களது உத்தரங்கள் தடம் புரண்டுள்ளது.

    உங்கள் உத்தரத்தில் நீங்கள் அல்குல் பற்றிப் பகிர்ந்த கருத்தை ஒட்டி எழுந்துள்ளது இந்த வினாக்கள்.

    இயன்றால் நேரடியாக உத்தரம் பகிரவும். உங்கள் தெளிவிற்கும் வாசிக்கும் வாசகர்கள் தெளிவிற்கும் வினாக்களைப் பகுதி பகுதியாக பிரித்துள்ளேன்.

    ——–

    வினா – 1 – பைபள் போன்று மாற்று மத நூற்களை நீங்கள் மதிப்புடன் அணுகாது இழிவு செய்யப் புக முனைவதேன்?

    க்றைஸ்தவ மத நூலான பைபிள் (புதிய மற்றும் பழைய ஏற்பாடு) சமுத்ரம் என்று கருதும் நீங்கள் கம்பராமாயணத்தை குட்டை என்று கருதுகிறீர்களா?

    க்றைஸ்தவ பைபிளிலிருந்து Cherry picking செய்து அங்கொன்று இங்கொன்றாக உருவிப் போட்டு திரிக்கும் முயற்சியைக் கண்டிக்கப் புகும் நீங்கள் — தாங்களாகவே வலிய வந்து மாற்று மதத்தைச் சார்ந்த நூலான கம்பராமாயணம் பற்றி cherry picking முறையில் விமர்சனம் செய்யப்புகுதல் தகுமா?

    ———

    முகம் தெரியா எழுத்தாளர்கள் மதக்காழ்ப்பு மிக எழுதுதல் எனக்குப் பொருட்டல்ல. உங்களைப் போன்று முறையாகத் தர்க்கம் செய்ய முடிந்த பெருந்தகைகளின் எழுத்துக்களில் மாற்று மத நூற்களை முழுமை சாராது இழிக்க முனைதல் எனக்கு சரியாகப் படவில்லை.

    \ அவருடைய கட்டுரைக்கு என்னைத் தவிர வேறு யாரும் பின்னூட்டம் எழுதவில்லையே என்ற அகங்காரத்தில் \

    ம்……..point noted.

    எதிர்மறை விமர்சனம் நான் எழுதப்புகுவது கூட தகுதியுள்ள ஒரு வ்யாசத்திற்கு மட்டிலும் தான். தகுதியுள்ள உத்தரங்களுக்கு மட்டிலும் தான்.

    அன்பர் ஷாலி அவர்கள் எழுதிய வ்யாசம், வழக்கமாக அவர் கூகுள் சர்ச் செய்து காழ்ப்பைக் கொட்டும் சமாசாரமாக மட்டிலும் உள்ளது. அழகியல் என்பது அறவே இன்றி இழிவு கற்பித்தல் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுதல் என்பதை மட்டிலும் குறிக்கோளாகக் கொண்ட ஒரு வ்யாசமாக அன்னாருடைய வ்யாசத்தை நான் கருதுகிறேன்.

    உத்தரங்களுக்குத் தகுதியற்ற ஒரு வ்யாசம் என நான் புறந்தள்ளிய வ்யாசம்.

    ———-

    வினா – 2 – கம்ப ராமாயணத்தை இலக்கியம் என்று கருதி கம்பன் காவ்யத்தில் குற்றம் காண விழையும் நீங்கள் கம்ப ராமாயணத்தில் கண்ட இலக்கிய இலக்கண பிழைகளைப் பகிரலாமே.

    கம்பராமாயணத்தை இலக்கியம் என்று கருதி பேசப்புக அதை மதநூல் என்று பாய்ந்தும்

    மதநூல் என்று கருதி பேசப்புக இலக்கியம் என்று பாயும் அவலத்தை நீங்கள் செய்யப் புக மாட்டீர்கள் என நம்பி இந்த வினாவை முன் வைக்கிறேன்.

    கம்ப ராமாயணம் முழுதும் வாசித்த நீங்கள் இலக்கியம் என்ற ரீதியில் சீதையை கம்பன் வர்ணிக்க விழைந்தமையை குறை கண்டதாகத் தங்கள் கருத்துப்பகிரல் தெரிவிக்கிறது.

    கவிச்சக்ரவர்த்தி கம்பனின் காவ்யத்தையே குறை காணும் செறிந்த தமிழ்க்கல்வி தங்களிடம் உள்ளதாக தங்கள் உத்தரம் கருத்துப் பகிர்கிறது. நன்று. கம்பனின் காவ்யத்தில் தாங்கள் கண்ட இலக்கிய மற்றும் இலக்கணப் பிழைகளை — அல்லது அழகியல் சார்ந்த பிழைகளை – தமிழிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்து — தாங்கள் சுட்ட முயன்றால் இந்த தளத்தை வாசிக்கும் வாசகர்கள் பயனுறுவார்களே.

    செய்யப்புகுவீர்கள் என நம்புகிறேன்.

    ——

    வினா – 3 – மத நூற்களில் நம்பிக்கையற்றவர்கள் ஆழ்ந்த குறிக்கோளுடன் மத நூற்களிலிருந்து பகுதி பகுதியாக உருவி மதநூற்களை இழிவு செய்யும் பாங்குடன் நீங்கள் உடன் படுகிறீர்களா?

    கம்ப ராமாயணம் ஒரு இலக்கியம் மட்டுமன்று. திருவரங்கப்பெருமான் சன்னிதியில் அரங்கேறிய ஒரு மஹாகாவ்யம். வைஷ்ணவர்கள் விதந்தோதும் ஒரு அரும்பெரும் மதநூல் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் இக்கேள்வி முன்வைக்கப்படுகிறது.

    பைபிள் பற்றி கருத்துப் பகிரும் போது அந்நூலில் இருந்து உருவி cherry picking முறையில் சில வசனங்களை உருவி தர்க்கம் செய்தல் உங்களுக்கு உடன்பாடாக இல்லை என்று கருத்துப் பகிர்ந்திருந்தீர்கள்.

    அதே அலகீடுகளை நீங்கள் மாற்று மதநூற்களுக்கு extend செய்ய மாட்டீர்களா? கம்ப ராமாயணம் என்று வரும் போது மட்டிலும் அங்கொன்று இங்கொன்று என்று உருவி (கு) தர்க்கம்செய்யப்புகுதல் ஏற்புடையதா?

    ——-

    வினா – 4 – எந்த ஒரு மதமாக இருந்தாலும் — அம்மதத்தில் நம்பிக்கையற்றவர்கள் — முன்வைக்கும் மதம் பற்றிய இழிவான பார்வையை — அப்படியே ஏற்பது சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா?

    கம்பராமாயணம் என்று நாமறியும் நூல் ****ராமாவதாரம்**** என்றறியப்படும் என்று நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

    தவ்ஹீத் ஜமாத் குழுவினர் பைபிள் பற்றிய தரம் தாழ்ந்த எதிர்மறையான விமர்சனங்களை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என நம்புகிறேன். பைபிளியலில் ஆழ்ந்த அறிஞர் கருத்துக்கள் சார்ந்து ஆக்ஷேபங்களை நீங்கள் அணுகப்புகுவீர்கள் என நம்புகிறேன்.

    அப்படியே குரான்-ஏ-கரீம் பற்றி க்றைஸ்தவ ஷான் குழுவினர் சாட்டிய தரம் தாழ்ந்த எதிர்மறையான விமர்சனங்கள்.

    நான் உங்களிடம் வினவியது தாங்கள் கம்பராமாயணத்தைப் பற்றி ஸ்ரீ அண்ணாத்துரை முதலியார் எழுதிய நூலைப் பகிர்ந்ததைப் பற்றி. அதுவும் ஸ்ரீ அண்ணாத்துரை அவர்கள் மதம் சார்ந்து அந்நூலை விமர்சனம் செய்ததாக நீங்கள் பகிர்ந்துள்ளீர்கள். ஹிந்து மதத்தில் நம்பிக்கையற்ற – இழிப்பதில் முனைப்பு மிகுந்த அன்னாருடைய கருத்துக்கள் வழியாக — கம்பராமாயணத்தை ஒரு மத நூல் என்று அணுகி அதனை இழிவு செய்ய முனைவது முறையா?

    தவ்ஹீத் ஜமாத்தினரின் பார்வைகள் மூலமும் யஹூதியர்கள் இழித்துப் பழிக்க முனையும் பார்வைகள் மூலமும் உங்கள் மதநூலான பைபிளை விமர்சனம் செய்யப்புகுவது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா?

    மாறாக ****ராமாவதாரம்***** என்ற கம்பனுடைய மஹாகாவ்யத்தை தமிழையும் வைஷ்ணவத்தையும் கசடறக்கற்ற வணக்கத்திற்குறிய ஸ்ரீமான் ஆண்டனி ஜோசஃப் எனும் ஜோசஃப் ஸ்வாமின் அவர்கள் மூலமாக அறிதல் முறையாகும் என நினைக்கிறேன்.

    ——

    என்னுடைய முந்தைய உத்தரத்திலும் இதே வினாக்கள் தான் எழுப்பப்பட்டுள்ளன.

    உங்கள் கருத்துப் பகிரல்களில் ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று கருதத்தக்கதான குஸ்தாகி மாஃப் – double standard – மிக வெளிப்படையாகத் தெரிந்ததன் பாற்பட்டு இவ்வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன.

    உங்கள் உத்தரங்களை நான் உள் வாங்கியதில் என் புரிதலில் பிழை இருக்குமானால் சுட்டவும்.

    தட்டையான வாசிப்புள்ள — வாசிப்பே இல்லாது – இணையத்திலிருந்தும் நாலாந்தர காழ்ப்பாளர்களின் எழுத்துக்களிலிருந்தும் உருவிய விஷயங்களைக் கக்கும் விசிலடிச்சான் குளுவான் கள் உவகை பொங்க விதண்டா வாதம் – வெட்டி வாதம் — செய்ய முனையலாம். அந்த தனியாவர்த்தனம் அது பாட்டிற்கு நடக்கட்டும்.

    ஆழ்ந்து தமிழ் கற்றவர் என நான் நம்பும் தங்களிடமிருந்து — அறிவு சார்ந்த — இலக்கியம் என்ற ரீதியில் — இலக்கியம் சார்ந்த இலக்கணம் சார்ந்த உத்தரங்கள் என்னால் உகப்புடன் வாசிக்கப்படும்.

    உங்கள் பார்வைகளில் இரட்டை அலகீடு இல்லை என நீங்கள் நம்பினால் தெளிவான என் வினாக்களுக்கு சுற்றி வளைக்காமல் தெளிவான உத்தரங்கள் பகிர முனைவீர்கள் என நம்புகிறேன்.

    உங்கள் பார்வைகளில் இரட்டை அலகீடு உண்டு என்று நீங்கள் நம்பினாலோ அல்லது இந்த வினாக்கள் உங்களுக்கு தர்ம சங்கடம் அளிக்கிறது என்றாலோ தாங்கள் உத்தரம் பகிர மறுக்கலாம்.

    இதே வினாக்களை ( நீங்கள் பகிர்ந்த கருத்துக்களுடன்) கசடறத் தமிழ் கற்ற சான்றோர்களிடம் மற்ற தளங்களில் நான் முன்வைக்கப் புகுதலில் உங்களுக்கு ஆக்ஷேபம் ஏதும் உண்டா?

    தெளிவான உங்கள் உத்தரங்களை ஆர்வமுடன் எதிர்நோக்கும்
    க்ருஷ்ணகுமார்

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அனால் அதை விடுத்தது நீங்கள் இரண்டு மூன்று படி ” கீழே ” போய் சீதையின் அல்குல் பற்றி எழுதி \

    அன்பின் ஜான்சன், கம்பராமாயணம் நான் முழுமையாக வாசித்தறியா காவ்யம்.பள்ளிக்கூட நாட்களில் பல தசாப்தங்கள் முன்னர் மனனம் செய்த சில செய்யுட்கள் இன்றும் நினைவில் உள்ளன.

    அல்குல் பற்றிய செய்யுளை எடுத்தாண்டது தாங்கள்.

    தங்களது குறிக்கோள் எது என நான் அறியேன்.

    எதுவாக இருந்தாலும் கம்பன் காவ்யத்தில் உள்ள ஒரு விஷயம் தெள்ளெனத்தெளிவாக தமிழ் சார்ந்து – இலக்கியம் சார்ந்து – இலக்கணம் சார்ந்து — ராமாவதாரம் என்ற பெயர் பெற்றுள்ள கம்பராமாணம் என்ற மதநூல் சார்ந்து — விசாரிக்கப்படுதல் முறை.

    இலக்கிய ரீதியாகவும் மத ரீதியாகவும் விவாதிக்கப்பெற்று விஷயத்தெளிவு கிட்ட வேண்டும் என்பது என் அவா.

    தமிழ் கற்றவர் என்ற ரீதியில் — இந்த காவ்யம் ஒரு இலக்கியம் என்ற ரீதியில் — தாங்கள் காவ்யத்தில் கண்ட குறைகள் ஏதும் இருந்தால் தெளிவுடன் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    காழ்ப்புணர்வன்றி – இழிவின்றி — நேர்மையான கருத்துக்களை — கம்பராமாயணம் என்ற நூலை — ஹிந்துக்களின் — வைஷ்ணவர்களின் — மதநூலாகத் தாங்கள் அணுகிப் பகிர விழைந்தாலும் — அதில் உள்ள நிறைகளை அறிய விழைவேன்.

    மாற்று மதத்தவர்களான ஸ்ரீமான் இஸ்மாயில் கம்பராமாயணத்தைப் போற்றாததா?

    வணக்கத்திற்குறிய வைணவச் சுடராழி ஸ்ரீமான் ஜோசஃப் ஸ்வாமின் அவர்களை மாற்று மதத்தவர் என கனவிலும் நினைக்க ஒண்ணேன்.

    உங்கள் நேர்மையான உத்தரங்கள் உங்கள் பரிச்சயத்தை மேலும் மெருகு செய்யும் என நினைக்கிறேன்.

  11. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள கணபதி ராமன் அவர்களே, நீங்கள் கண்டுபிடித்துள்ள மொழிபெயர்ப்பு தவறு சரிதான். ஆங்கிலதில் ” strike ” என்ற வார்த்தைதான் பன்படுத்தியுள்ளனர். ” slap ” என்ற வார்த்தை பயன்படுத்தவில்லை. இதை விளக்கிய உங்களுக்கு நன்றி.

    இயேசு ஏன் மறு கன்னத்தைக் காட்டவில்லை என்ற வாதம் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாகவே நடந்து வருவதுதான். ஆகவே இதை எழுதியுள்ள சூர்யா புதிதாக ஒன்றும் எழுதிவிட வில்லை. நீங்கள் கூறியுள்ளபடி, ” என்ன தவறு செய்தேன்? என்னை என் அடிக்கிறீர்கள்? ” என்று அவர் கேட்டதில் நியாயம் உள்ளது. அதற்கு மாறாக, ” ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுமாறு போதித்தவன் நான்.ஆகவே என்னை இன்னும் நன்றாக அடியுங்கள் .” என்று அவர் கூறியிருக்க வேண்டும் என்று இங்கு கேள்வி கேட்பவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?

    மறு கன்னம் என்ன? தன உடலையே அவர கடைசி இரத்தம் சொட்டச் சொட்ட ஒப்புக் கொடுத்தாரே! குண்டுகள் பதித்த வாரினால் சதைகள் பிய்த்துத் தொங்கும் வரை அடிகள் வாங்கியபோது அவர் வாய் திறக்காமல் சகித்துக் கொண்டாரே? அது தெரியவில்லையா இன்று கேள்வி கேட்பவகளுக்கு? அது மட்டுமா? கூரிய ஆணிகளால் அவருடைய கைகளையும் கால்களையும் சேர்த்து சிலுவையில் அறைந்தாகளே! அப்போது அவர் என்ன சொன்னார் என்பது இவர்களுக்குத் தெரியாதா? அந்தக் கொடூரமான வேளையிலும் அவர் கூறியது இதுவே!

    ” பிதாவே. இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. ” என்பதுதான்.

    அவர மீது பழி சுமத்தியவர்களுக்காவும், அவர் முகத்தில் துப்பியவர்களுக்காவும், அவரை அடித்தவர்களுக்காவும், அவரை சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும் மன்னிப்புக்காக தம்முடைய பிதாவினிடத்தில் மன்றாடுகிறார்.

    இதுவே கிறிஸ்துவ அன்பு என்பது…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  12. Avatar
    ஒரு அரிசோனன் says:

    ஜீசசைப் பற்றிய கட்டுரை/கதையில் கம்பராமாயண விவாதம் எப்படி இடம் பெற்றது என்று தெரியவில்லை. இருப்பினும், என் மனதில் பட்டதை எழுதுகிறேன்.
    உயர்திருவாளர்கள் டாக்டர் ஜான்சன், ஷாலி, கிருஷ்ணகுமார் அவர்கள் அளவுக்கு எனக்கு ஆழ்ந்த அறிவோ, இலக்கியத் திறமையோ கிடையாது. தமிழின் மீதுள்ள அன்பினால் கம்பராமாயணம் முழுவதையும் படித்திருக்கிறேன். நான் காரைக்குடியில் வளர்ந்ததால் பல தடவை கம்பன் திருநாளில் பல தமிழ் மேதைகளால் வழங்கப்பட்ட கம்பனின் இலக்கிய அமுதைப் பருகி மகிழ்ந்திருக்கிறேன். எனவே, அந்த முறையில் ‘தமிழ் இந்து’ வலையத்தில் ‘கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு’ என்ற கட்டுரைத் தொடர்களையும் எழுதி வருகிறேன்.

    எந்த ஒரு இந்திய இலக்கியத்திற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது என்பது உயர்திருவாலர்கலாகிய தாங்கள் அறிந்ததே. அந்தமுறையில் வால்மீகியும், கம்பனும் அவர்களது மாபெரும் படைப்புகளை அந்த இலக்கிய இலக்கணத்திற்கு உட்பட்டே படைத்தார்கள்.

    இந்திய இலக்கியத்தில் (காவியங்களில்) ஒன்பது சுவைகள் —
    இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகிய ஒன்பதும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது இலக்கியம் என்று ஒப்புக்கொள்ளப்பட மாட்டது. இராமகாதையைக் கம்பரால் திருவரங்கத்தில் அரங்கேற்றி இருக்க இயலாது.
    கம்பராமாயணத்தை முழுவதும் படித்த உயர்திருவாளர்களாகிய நீங்கள் அந்த ஒன்பது சுவைகளையும் (இரசங்களையும்) பருகி இருக்கத்தான் செய்திருப்பீர்கள்.
    அந்த ஒன்பதில் ஒன்றுதான் ‘இன்பச்’ சுவை. அந்த இன்பச் சுவை கொண்ட சிற்பங்கள் கோவில்களில் எங்காவது ஒரு மறைவிடத்தில் இருக்கத்தான் செய்யும். காசஜூராஹோவில் அவை நிறையவே இருக்கின்றன. அது இந்திய, குறிப்பாக, இந்துப் பண்பாடு. அதில் விரசம் ஒன்றும் இல்லை.
    உயர்திருவாலர்கலாகிய நீங்கள், தேவாரத்தைப் படித்தாலும் அந்த இன்பச் சுவை வர்ணனை இருப்பத்தைக் கான்பத்தான் செய்வீர்கள்.
    கிரேக்க, உரோமாநியச் சிற்பங்கள் ஆடையின்றிக் காண்பிக்கப் படுகின்றன. அது விரசமாகப் படுவதில்லை. அது அவர்கள் பண்பாடு.

    மேற்கு நாட்டு ‘Victorian prudishness’ இந்த வர்ணிப்பை விரசம் என்ற கண்ணோட்டத்துடன் காணலாம். மேற்கு நாட்டு மதகுருமார்களும் இவற்றை விரசம் என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகினர்.

    அதன் தாக்கம் உயர்திருவாளர் ஷாலியின் //உண்மையில் கம்பருடைய படைப்பு, பரிசுத்த வேதநூல் அல்ல. அது மனிதனின் வாழ்வியலையும் ஒரு அரசகுடும்பம் அதைச்சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையை அழகியலுடன் எடுத்துச்சொன்ன செவ்விலக்கியம். அந்த நுல் எந்த புனிதத் தன்மையையும் சார்ந்து கட்டமைக்கப்படவில்லை.// என்பதின் மூலம் அறிய இயலுகிறது. அதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.

    உயர்திரு ஷாலி அவர்களே, கவிச் சக்கரவர்த்தி கம்பன் ஆரம்பத்திலிருந்தே இராமனையும், சீதையையும் திருமால் மற்றும் திருமகளின் அவதாரமாகத்தான் வடித்திருக்கிறார் என்பது தங்களுக்கே தெரியும். அப்படி இருக்க ‘இது ஒரு அரச குடும்பத்தைப் பற்றிய இலக்கியம் என்று தள்ளிவிட முடியாது. உங்களுக்கு இலக்கியமாகப் படுவது, பலகோடிப் பேருக்கு சமயநூலுக்கு நிகராக இருக்கக் கூடும் என்பதைத் தாங்கள் மறக்கக் கூடாது.

    இன்றும் இராமனையும், சீதையையும், அனுமனையும் “வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த, வானுறையும் தெய்வமாக வைத்தே” கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபாட்டு வருகிறார்கள்.

    ஊன்றிக் கவனித்தால், கம்பனின் மற்ற படைப்புகளையும் கவனத்தில் கொண்டால், கம்பனைப் பொறுத்தவரையில், இராமனும், சீதையும் கடவுளர்கள்தான். அவன் அப்படிப்படட் நினைப்புடன்தான் இராமாயணத்தை வடிவமைத்தான். அதனாலேதான், இராமகாதையைத் திருவரங்கத்தில் தமிழ் மக்களுக்குச் சமர்ப்பித்தான்.

    எனவே கம்பஇராமாயணத்தின் இலக்கியச் சுவைகளை (இன்பச் சுவையையும் சேர்த்துதான்) பருகுங்கள், பரிகசித்து கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்த வேண்டாமே!

    காலம் சென்ற அண்ணாத்துரை அவர்கள் ஒரு நாஸ்திகர். எனவே, இந்துக்கள் கடவுளராகப் போற்றும் இராமனை எள்ளி நகையாடவே ‘கம்ப ரசத்’தை எழுதினார். ஒரு பெண்ணின் மார்பகத்தை குழந்தை பார்க்கும் பார்வை வேறு, கணவன் பார்க்கும் பார்வை வேறு, தந்தை பார்க்கும் பார்வை வேறு, காமுகன் பார்க்கும் பார்வை வேறு. கம்பன் சீதையை வர்னித்தது ‘இன்ப இரசத்தை’த் தன் காவியத்தில் கொண்டு வருவதற்கே என்றாலும், அவனது பார்வை எப்படிப்பட்டது என்பது நாம் அறியாததா?

    தவிரவும் //நமது ஹிந்துத்துவா க்ருஷ்ணாக்கள் அதற்க்கு புனித மதச்சாயம் பூசி விட்டதால் இப்பொழுது கம்பருக்கே டப்பிங் வாய்ஸ் கொடுக்கிறார்கள்.ராமனை கடவுளாக்கினால்தான் அரசியல் பண்ண முடியும்// என்று தாங்கள் எழுதி இருப்பதும் சரியல்ல.
    இராமனை கிருஷ்ணகுமார் போன்றவர்கள் மட்டுமே கடவுள் ஆக்குகிறார்கள் என்பதும், அதை அரசியல் ஆக்குகிறார்கள் எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இராமன் கடவுளாக வழிபடப்பட்டு வருகிறான். இதில் என்ன அரசியல் இருக்கிறது?
    கிறித்தவர்கள் ஏசுவைக் கடவுளின் மைந்தனாக ஏற்று வழிபடும் பொது, இந்துக்கள் இராமனை விஷ்ணுவின் அவதாரமாக ஏற்பதில் குறை என்ன இருக்கிறது?

    நீங்கள் உயர்திரு கிருஷ்ணகுமாரின் கருத்துக்களிச் சாடலாம். அவரும் என் கருத்துக்களச் சாடி இருக்கிறார். அதில் தவறேதும் இல்லை. எந்த ஒரு சமயத்தவரும் அதன்மேல் பிடிப்புடன் இருப்பதில் தவறென்ன இருக்கிறது? இந்துக்கள் அனைவருமே ‘இந்துத்வம்’ உள்ளவர்கள்தான். ஒரு இந்துவுக்கு வாழ்வே ‘இந்துத்வம்’தான். அதனால்தான் இந்து சமயத்தை “வாழும் முறை” என்று சொல்கிறார்கள். எனவே, ஒரு வாழும் முறையை, இந்துத்வம் என்ற சொல்லை, அருள் கூர்ந்து எள்ளி நகையாடாதீர்கள்.

    அதுவும், கருணைக்கடலான ஏசுவின் கட்டுரையின் பின்நூட்ட்டத்தில் அதைச் செய்யாதீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    கம்பருக்கு டப்பின் வாய்ஸ் யாரும் கொடுக்கவேண்டியதில்லை. அவரது அழியாத இராமகாதையே அதைச் செய்துகொண்டு இருக்கிறது.
    பணிவன்புடன்,
    ஒரு அரிசோனன்

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இந்த நீண்ட பின்னூட்டத்தின் கருத்து இதுவே: //காவியச்சுவைகளுள் ஒன்று காமம். எனவே கமபராமாயணம் அச்சுவையைக் காட்டுதல் சரியே. இலக்கியமென்று பார்க்காமல் சமய நூல் என்று பார்ப்போருக்கு அச்சுவை பெரிதாகத் தெரியாது. பார்ப்பவர்கள் கண்களுக்குத் தக்கதான் பொருளின் குணம் (பெர்க்லியின் கருத்து இது). எனவே கம்பரசம் என்று விவரித்து நாங்கள் கடவுளாக வழிபடும் கதாபாத்திரங்களை நகையாடி எம்மைப்புண்படுத்தாதீர்.//

      இதுதான் ஒரு அரிசோனன் என்ற விநோதமான பெயரில் எழுதும் இவரின் கருத்து. இதே கருத்து இவரைப்போன்றோருக்கும் வருமே!

      அதாவது: அண்ணாத்துரை ஒரு நாஸ்திகர். அவர் பார்வையில் கம்பரின் சீதையைப்பற்றி விலாவரியான விளக்கங்கள் விரசங்களே. ஷாலியின் பார்வையில் அவ்விரசங்கள் ஒரு சமய நூலில் இருக்கக்கூடா எனவே இது வெறும் காவியம் மட்டுமே.

      ஆக, இரு சாராரும் தங்கள்தங்கள் பார்வைகளை வைப்பதில் என்ன பிரச்சினை? ஒருவரை மட்டும் தவறென்று சொன்னால், ஓர்வஞ்சகமாகாதா?

      ஒரு அரிசோனனுக்கு இதையும் சொல்லலாம்: பட்டின‌த்தார் பெண்ணின் உடம்பை இகழ்ந்தது போல வேறெந்த சித்தரும் செய்யவில்லை. அவற்றுள் ஒன்றை ஷாலியும் எழதியிருக்கிறார். இச்சித்தர் ஒரு ஹார்டென்ட் மிசோஜைனிஸ்ட். (Hardcore misogynist) ஆனால் அதை சிவ பக்தியில் மறைத்துப் புனிதமாக்குகிறார். அவரின் அசிங்கமான விரசவரிகளை பெண்கள் படிக்கவே முடியாது. பெண்கள் அவரைக்கடுமையாக விமர்சித்து வெறுத்துப்பேசசினால் ஒரு அரிசோனன் இதே வாதத்தை அங்கு வைப்பாரா? எங்கள் சிவபகதரை இகழ்கிறீர்! எம்மைப்புண்படுத்துகிறீரென்று?

      இராஜாஜி நாஸ்திகரன்று. ‘குறையொன்றுமில்லை கண்ணா’என்ற கீர்த்தனையை எழுதி புகழ்பெற்ற வைணவர். அவர் ஆண்டாளின் விரசவரிகளைப்படித்துச் சொன்னது இவற்றை ஒரு பெண் எழதியிருக்கவே முடியாது. பெரியாழ்வார் என்ற அவரின் வளர்ப்புத்தந்தை எழுதியிருக்கலாம். ஆஸ்திகரோ, நாஸ்திகரோ, விரசம் என்று படும்போது அஃதை அவர்கள் சொன்னால், எம்மைப்புண்படுத்தாதீர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?

      என் பார்வையின் படி, கம்பர் சீதையை இப்படி இழிவுபடுத்தியிருக்ககூடாது. தெயவம் எனக்கொண்டவர் இப்படியா செய்வார்?: தெயவத்தின் முன்புறத்தையும் பின்புறத்தையும் பற்றி எழுதாமலே அவர் படைத்திருக்கலாமே? ஒரு ஒவியர் சரசுவதியை நிர்வாணமாக வரைந்தபோது அவரை நாட்டை விட்டே விரட்டிய நீங்கள், கம்பரின் இராமாயணத்திலிருந்து கம்பரசத்தை நீக்கியே வெளிவிடவேண்டுமென ஏன் போராடவில்லை? ஷாலியும் அண்ணாத்துரையும் இருப்பவைகளே எடுத்துக்காட்டினார்கள். பொய் சொல்லவில்லை. ஆனால் ஹுசேனும் கமபனும் படைத்து தங்கள் விர்ச கற்பனையைக் காட்டினார்கள். எனவே இவ்விரும்தான் இந்துக்களைப் புண்படுத்தியோர்.

  13. Avatar
    ஷாலி says:

    //அன்பர் ஷாலி அவர்கள் எழுதிய வ்யாசம், வழக்கமாக அவர் கூகுள் சர்ச் செய்து காழ்ப்பைக் கொட்டும் சமாசாரமாக மட்டிலும் உள்ளது. அழகியல் என்பது அறவே இன்றி இழிவு கற்பித்தல் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுதல் என்பதை மட்டிலும் குறிக்கோளாகக் கொண்ட ஒரு வ்யாசமாக அன்னாருடைய வ்யாசத்தை நான் கருதுகிறேன்.//

    திரு.க்ருஷ்ணகுமார் அவர்கள் தொடர்ந்து என் மேல் வைக்கும் குற்றச்சாட்டு “ நான் கூகுள் சர்ச் செய்து காழ்ப்பை கொட்டுகிறேன்.” இந்த குற்றச்சாட்டில் ஏதேனும் நியாயம் உள்ளதா? இன்று இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் கூகுளைக் கிண்டியே தகவல் எடுக்கின்றனர்.சொல்லப்படும் செய்தி உண்மையா அல்லது பொய்யா? என்பதை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர கூகுளை கிளரினாயா குப்பையா கிண்டினாயா என்று பார்ப்பதல்ல! திரு.க்ருஷ்ணகுமார் வீட்டில் மாபெரும் நூலகம்,வைத்து அந்நூல்களை புரட்டி ஆய்வு செய்து பின்னூட்டமிட வசதி இருக்கலாம், அல்லது வைதீஸ்வரன் கோயில் நாடி ஜோதிட ஏடுகளைப் புரட்டி அவர் பின்னூட்டமிடலாம். நமக்கு இந்தமாதிரி வசதிகள் ஒன்றுமில்லை.கூகுலாண்டவர் சன்னதியை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை.
    //உத்தரங்களுக்குத் தகுதியற்ற ஒரு வ்யாசம் என நான் புறந்தள்ளிய வ்யாசம்.//

    என் பின்னூட்டங்களுக்கு அன்னாரின் தரச்சான்று தேவையில்லை.அவர் எப்போதும் போல் இந்துத்வா நேசத்தை ஆபிரகாமிய துவேசத்தை தொடர்ந்து பொலியட்டும். தயவுசெய்து நிறுத்திவிட வேண்டாம்.ஏனென்றால் உங்களை வச்சுத்தான் ஹிந்துத்வா வுக்கு “காரியம்” பார்க்கவேண்டியுள்ளது.க்ருஷ்ணகுமார் அண்ணே! என்ன எழுதினாலும் நமக்கு சம்மதம் சந்தோசம்.சங்கீதம்.

  14. Avatar
    ஷாலி says:

    //ராமாவதாரம் எனும் கம்பராமாயணம் என்ற நூலை மதநூலாகக்கொண்டு –ஹிந்து மதத்தை-வைஷ்ணவத்தை ஏற்காத –நாஸ்திகரான ஸ்ரீ அண்ணாத்துரை அவர்கள் மூலம் அறிய விழைவது.
    கம்ப ராமாயணத்தை மத நூலாகக் கற்றறிந்த எத்தனையோ மஹனீயர்கள் என் நினைவில் வருகின்றனர். //
    என்று க்ருஷ்ணகுமார் சொல்வதிலும் நியாயம் உள்ளது. பிரபல பேச்சாளரும் பழுத்த ஆஸ்திகவாதியுமான தமிழ்க் கடல் திரு.நெல்லை கண்ணன் கூறுகிறார், சீதா தேவிக்கு எல்லாமே பெரிதாக இருக்கிறதாம். “ மலை…மலை..மருத மலை’ ரேஞ்சுக்கு இருக்காம். ஆஸ்திகர் சொன்னா க்ருஷ்ணா அண்ணன் அக்செப்ட் பண்ணிக்குவாறு. சரி பாட்டைக் கேட்போம்.

    “ஆடைக்குள் அடங்காத அகன்ற அல்குல்
    அய்யய்யோ மார்பகங்கள் ஐயோ ஐயோ
    ஜாடைக்கு மலைகள் என்று சொன்னால் கூட
    சரியாமோ தவறாமோ சொல்லி வைப்போம்
    கூட நிற்கும் ஆடவரின் தோள் மலை போல்
    கூடுதற்காய் நீர் நிலைக்குள் நெருங்குகின்றார்
    பாடு படும் நீர் நிலையின் பாடதனைப்
    பாடுகின்றான் கம்பனெனும் பாவி மகன்

    எல்லாமே பெரிதாக இருப்பதெல்லாம்
    இறங்கி அந்த நீர் நிலையை நெருக்கும் நேரம்
    அல்லாடிப் போகிறதாம் நீர் நிலையும்
    ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை அன்றே கம்பன்
    வல்லானாய்ச் சொல்லுகின்றான் வியந்து நின்றேன்
    வடிந்திடுமாம் அவர் எடையின் நீர் வெளியே
    சொல்லுக்குச் சொல்லடுக்கித் தமிழாம் தாயைச்
    சொக்க வைக்கும் கம்பனது பாட்டைப் பார்ப்போம்”

    கம்பன்

    “மலை கடந்த புயங்கள் . மடந்தைமார்
    கலை கடந்து அகல் அல்குல் .கடம் படு
    முலைகள் தம்தமின் முந்தி நெருங்க லால்
    நிலை கடந்து பரந்தது நீத்தமே.”

    http://www.nellaikannan.com/2008/06/22/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0
    %AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95-3/

  15. Avatar
    IIM Ganapathi Raman says:

    கட்டுரையாசிரியர் இறுதிவரியை வைத்து அவர் என்ன முடிவாகச்சொல்கிறார் என்பது தெளியலாம். அது இது:: உலகில் கிரிமினல் மைண்ட் என்பது சிலருக்கு உண்டு. அதற்கு காரணம் பழிவாங்கும் உணர்ச்சி. இப்படிப்பட்டோரிடம் ஒருவன் மாட்டிக்கொள்ளும்போது அவர்களை வன்முறைகொண்டே எதிர்க்க வேண்டும்.

    இதுதான் கட்டுரையின் மையக்கருத்து. இதற்கு இயேசு சொன்னதை வைத்து ஆராயவேண்டியதில்லை. பொதுவாகவே சொல்லிவிடலாம்.

    பழிவாங்கும் உணர்ச்சி ஏன் வருகிறது என்பதைத்தான் ஆராயவேண்டும். ஒரு தனிமனிதனுக்கு ஏன்? ஒரு சமூகத்துக்கு ஏன்/ பழிக்குப்பழி என்பது பேகன் சொன்னவாறு; revenge is wild justice. அந்த வைல்ட் ஜஸ்டிஸ் வேண்டுமா? வேண்டாவா? என்று கேட்டால், பேகன் போன்ற மாரலிஸ்டுகள் வேண்டாமென்பர். மற்றவர்கள் வேண்டுமென்பர்.

    இயேசுவின் கருத்தின்படியும் வள்ளுவரின் வாக்கின்படியும், இந்த வைல்ட் ஜஸ்டிஸ் எவரையும் திருத்தாது. அது மேலும்மேலும் வன்முறை வளையத்தையே உருவாக்கும். மாறிமாறி ஒருவரை ஒருவரை அழித்துக்கொண்டே போவர். மகேந்திர பல்லவனுக்கும், இரண்டாம் புலிகேசிக்கும் நடந்த போர்கள் – இப்படி பழிவாங்கும்போர்கள் – இருதலைநகரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; அளவிடங்கா மனிதர்கள் கொல்லப்பட்டு; பெண்கள் உடலால் சீரழிக்கப்பட்டார்கள். தோற்றோரின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இரு சாம்ராஜ்யங்களுமே அழிந்தன. Revenge is wild justice and we want that என்பவரகளால் இன்னும் உலகில் ஒரு இன மக்கள் இன்னொரு இன மக்களை அழித்துவருகிறார்கள். வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பவர்களால் இந்தியாவில் கலவரங்கள் வெடித்துக்கொண்டேயிருக்கின்றன.

    எனவே சூரியா, பழிவாங்கும் உணர்ச்சி எங்கிருந்து வருகிறது என்ற மூலகாரணத்தை கண்டறிந்து சரிப்படுத்தி வாழும் போது மட்டுமே உலகம் அமைதியை அடையும். அதாவது பழிவாங்கும் மனிதர்கள் மாற மாற உலகத்தில் சமாதானமுண்டாகும். அதன் பிறகு ஆசிரியர் மாணாக்கர்களை அடிக்க மாட்டார். இயேசுவின் வள்ளுவரின் வாக்குகளுக்கு இடமில்லை. பழிவாங்குபவரே இல்லாதபோது வன்முறை எப்படி வரும்? வன்முறை வராத போது ஒரு கன்னத்தில் அறைவது யார்/ இன்னா செய்பவர் யார்?

    But there are indeed persons beyond reformation. They are called Human monsters. சூரியா அவர்களைப்பற்றியும் சொல்லியிருந்தால், என் விளக்கம் மேலும் விரிந்திருக்கும் கொஞ்சம் மாறுபாடோடு. பழிவாங்கும் உணர்ச்சி எழுப்பப்படுமொன்று. எப்படி எழுந்ததோ அப்படி அதை ஆற்றிவிடவும் முடியும் குணம் நாடினால்.

    (சூரியா! வாதங்களை அடுக்கடுக்காக தெளிவாக வைக்கவும். எங்கோ தொடங்க எங்கோ முடிகிறது. கடைசி வரி கதையையே மாற்றிவிட்டது. தமிழ் எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும்)

  16. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ அரிசோனன்,

    There is no necessity for me to gatecrash into a discussion regarding Jesus.

    By the by the differences I had in your article has no role in this discussion. Is it not?

    My points were spot on and addressed especially to my beloved friend Dr.Johnson regarding the double standards I found in his moorings. Holy Bible on one hand *RamAvatAram* on the other hand.

    Broadly, I agree with the tone of your comment.

    1. Avatar
      ஒரு அரிசோனன் says:

      பெருமதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

      1. I am very glad that you broadly agree with the tone of my comment. It is a very big honor.
      2. I never intented anywhere in my response that you gate-crashed into a discussion. I saw the comments on Kambaramayanam in a story titled “Jesus….”. Hence, I expressed my surprise. I would rather you not take it as a comment on you.
      3. Your and esteemed Shali’s comments are on and about Kamba Ramayanam. Therefore, I wrote that esteemed Shali could comment on you, and you have commented on my article. Since the comments are about Kamba Ramayanam, and you seem to respond to writings on Kamba Ramayanam, I mentioned about your responses about my article. You cannot dismiss that the differences (or comments) you had penned about my article on Kambaramayanam has no relevence. They are very relevant.

      உயர்திரு IIM Ganapathy Raman,
      //ஆக, இரு சாராரும் தங்கள்தங்கள் பார்வைகளை வைப்பதில் என்ன பிரச்சினை? ஒருவரை மட்டும் தவறென்று சொன்னால், ஓர்வஞ்சகமாகாதா?// என்று கேட்டு இருக்கிறீர்கள். நான் எங்கு உயர்திரு ஷாலி எழுதியதைத் தவறு என்று சொல்லி இருக்கிறேன்?
      //உங்களுக்கு இலக்கியமாகப் படுவது, பலகோடிப் பேருக்கு சமயநூலுக்கு நிகராக இருக்கக் கூடும் என்பதைத் தாங்கள் மறக்கக் கூடாது.// என்றுதானே எழுதி உள்ளேன். எதிர்க் கருத்தைத் தெரிவிக்கும்போது மற்றவர்களின் மனப் பாங்கிற்கும் மதிப்புக் கொடுங்கள் என்றுதான் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.

      பொதுவாக நான் சொல்வது இதுதான்: இன்றைய அளவுகோலைக் கொண்டு பண்டைய இலக்கியங்களை/பலர் மத நூலுக்கு இணையாகக் கருதுவதைப் பற்றி எழுதும்போது அதிகப் பரிவுடன் இருங்கள்(be extra courteous) என்றுதான் வேண்டிக்கொள்கிறேன்.
      உயர்திரு கணபதி இராமன் அவர்களே,
      அரிசோனா என்பது யுஎஸ்ஏவில் இருக்கும் ஒரு மாநிலம். அதில் குடியிருக்கும் நான் ‘ஒரு அரிசோனன்’ என்று என்னைக் குறிப்பிட்டுக் கொள்வது உங்களுக்கு விநோதமாகப் படுவது எனக்கு விநோதமாகப் படுகிறது. தமிழ்நாட்டில் பிறந்த ஊரையோ, இடத்தையோ, தன் பெயருடன் சேர்த்துக் கொள்வது ஒரு வழக்கம் என்பது தாங்கள் அறியாததல்லவே?

  17. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ “ நான் கூகுள் சர்ச் செய்து காழ்ப்பை கொட்டுகிறேன்.” இந்த குற்றச்சாட்டில் ஏதேனும் நியாயம் உள்ளதா? இன்று இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் கூகுளைக் கிண்டியே தகவல் எடுக்கின்றனர் \

    அன்பர் ஷாலி,

    கூகுள் சர்ச் செய்வதை *மட்டிலும்* நான் குற்றமாகக் குறிப்பிடவில்லை.

    காழ்ப்பு ப்ரசாரம் செய்வதை மட்டிலும் குறியாக நீங்கள் கொண்டுள்ளதால் கூகுள் சர்ச் மட்டிலும் செய்து உரல் உரலாக வெட்டியாக கருத்துப் பகிர்வதும் உள்ளபடி மூலநூலில் என்ன உள்ளது என்று பார்க்கக்கூட முனையாது *சவடால்* அடிப்பதும் அறவே கண்யமின்றி கருத்துப் பகிர்வதும் உங்களது தொடரும் செயல்பாடுகள். அதற்கு ஒத்து நாயனம் ஊத ஒரு கும்பல் சேர்ந்து விட்டால் கூச்சலே உண்மை.

    நூறு பேர் சேர்ந்து கூச்சல் போட்டாலும் எண்ணிறந்த முறை கூகுள் சர்ச் செய்து உரலாதாராம் காட்டினாலும் *தகர முதல எழுத்தெல்லாம்* என்பது திருக்குறள் ஆகாது.

    கூகுள் சர்ச் மட்டிலும் செய்து *தகர முதல எழுத்தெல்லாம்* தான் திருக்குறள் என்பது போல (ஐயன்மீர், ஒரு எளிமையான உதாஹரணம். அவ்வளவே. நீங்கள் இந்த மாதிரி சொல்வீர்கள் என்பது விஷயம். இதையே சொன்னீர்கள் என்று சொல்லவில்லை) சவடால் விடுவது மட்டிலும் அல்ல அதைக் குழு சேர்த்து கூச்சல் இடுவதும் உங்களது செயல்பாடாக இருந்துள்ளது. அதையே குறை சொல்லியிருந்தேன்.

    ஜனகனுக்கு அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் ராமபிரான் என்றும்

    வால்மீகி ராமாயணப்படி சீதையின் மீது அபவாதம் கூறியது வண்ணான்

    என்பதும் கூகுளைத் தோண்டித் துருவி தாங்கள் உதிர்த்த முத்துக்கள்.

    இந்தச் சவடால் காப்பியை நான் மதிக்கும் பெருந்தகை கற்றோர் சபையின் முன் மீள் காப்பி செய்து பரிபவப்பட்டதை என் சொல்வது?

    குறை உங்கள் மீது இல்லை. உங்களது அபத்தமான சவடால் மிகு சாரமற்ற கருத்துக்களையும் ஒரு பொருட்டாக மதித்து கருத்துப் பகிர்வது தான் தோஷமுள்ள செயல்பாடு.

  18. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களே, வேலை பலு காரணமாக உங்களுடைய கேள்விகளுக்கு உடன் பதில் தர முடியவில்லை. எனது மருத்துவப் பணிகள் நடுவில் இங்குள்ள பத்திரிகைகளுக்கு ஒரு தொடர் கதையும் , மருத்துவ கேள்வி பதிலும் எழுத வேண்டியுள்ளது. அதனால் இந்த சர்ச்சையில் முழு மூச்சுடன் ஈடுபட முடியவில்லை. அதோடு இது மதங்கள் சார்ந்த சர்ச்சை. நான். கிறிஸ்துவன், .இயேசுவை நம்புபவன்.நீங்கள் இயேசு என்பவரே பிறக்கவில்ல என்பவர். அதோடு நீங்கள் இந்து மத சமய நூல்களான இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கரைத்துக் குடித்தவராகவும் உள்ளீர்கள். நான் அந்த இரண்டையும் மத நூல்களாக ஏற்பதில்லை. அவற்றை வெறும் இதிகாசங்களாகப் பார்க்கிறேன். இதிகாசங்களை பக்தி நூலாகக் கருதுவது எப்படி என்றும் எனக்குத் தெரியவில்லை. அதிலும் மகாபாரதம் ஒரு நீண்ட போர் பற்றியதாக இருந்தாலும் அது நடந்ததெல்லாம் வட இந்தியாவில் என்பதால் அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் கம்பராமாயணம் கதையில் தென்னாடும் வருவதால் அது பற்றி பெரியாரும் அண்ணாவும் எழுப்பிய விழிப்புணர்வால் என் கவனம் அதில் சென்றது உண்மை. வால்மீகி ஏன் தென்னாட்டவர்களைக் குரங்குகளாகச் சித்தரித்து மகிழ்ந்தார் என்பதே என்னுடைய ஆதங்கம்.அதன்பின்பு அண்ணாவின் கம்பரசம் படித்தபின்புதான் சீதையின் முலைகள் பற்றிய கம்பனின் வர்ணனைகள் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்தப பின்னணியில், திண்ணையில் சகலகலாவல்ல ஷாலி அவர்கள் ” முலைக் கவிஞர்கள் ” என்று எழுதியபோது நானும் கம்பரசம் பற்றிக் கூறினேன்.உங்கள் மதத்தை இழிவு படுத்த நான் எண்ணியதில்லை.அதே வேளையில் ஒரு பிரபல கவிஞர் என் இப்படி ஒரு தெய்வ மகள் என்று கொண்டாப்படும் சீதையின் முலைகள் பற்றியும், அல்குல் பற்றியும் அவ்வளவு விரிவாக வர்ணித்துள்ளார் என்பதே என் கேள்வி. நான் அங்கொன்றும் இங்கொன்றும் தேடி எடுக்கவில்லை. முன்பே நமது சகலகலாவல்ல ஷாலி எடுத்தியம்பியதைத்தான் நானும் லேசாகத் தொட்டேன். வேறு ஒன்றுமில்லை. எது எப்படியோ! தென் நாட்டவரை குரங்குகளாக சித்தரித்துள்ள வால்மீகியையும் கம்பரையும் தமிழ் நட்டு மக்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்! தமிழரை இழிவு படுத்தியும், ஒரு தெய்வ மகளான சீதையை கேவலப்படுத்தியும் எழுதப்பட்டுள்ள கம்பராமாயணத்தையும் ஒரு சமய நூலாக ஏற்கவும் மாட்டேன்.! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  19. Avatar
    ஷாலி says:

    //ஜனகனுக்கு அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் ராமபிரான் என்றும்
    வால்மீகி ராமாயணப்படி சீதையின் மீது அபவாதம் கூறியது வண்ணான்
    என்பதும் கூகுளைத் தோண்டித் துருவி தாங்கள் உதிர்த்த முத்துக்கள்.
    இந்தச் சவடால் காப்பியை நான் மதிக்கும் பெருந்தகை கற்றோர் சபையின் முன் மீள் காப்பி செய்து பரிபவப்பட்டதை என் சொல்வது?//

    மஹாசயர் க்ருஷ்ணகுமார் அவர்களிடம் பெரிய மனிதர்களுக்குள்ள தன்மை இருப்பதாகத் தெரியவில்லையே!
    “ஜனகனுக்கு அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் இராமன்” என்று தவறாக எழுதி விட்டேன் தசரதனுக்கு என்று இருக்க வேண்டும்.இந்த தவறை க்ருஷ்ண குமார் சுட்டிக்காட்டி நல்ல பெயர் வாங்கியிருக்கலாம்.நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டார்.” என்று மறு பதிவில் எனது தவறை நானாகவே ஒப்புக்கொண்டேன்.இதையே இங்கு எழுதி என்னை மட்டம் தட்ட முயலுகிறார்.

    உலகத்தில் உள்ள (330)மொத்த ராமாயணமும் பேசுவது இராமனையும் சீதையையுமே.
    சீதையின் மீது வண்ணான் அபவாதம் கூறிய செய்தி பத்மா புராணத்தில் இன்றும் உள்ளது. இதை மறுக்க க்ருஷ்ணாக்களால் முடியாது.ஆனால் வால்மீகி ராமாயாணம் என்று சொல்லி விட்டதால், வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார். இதுதான் சவடால் காப்பியாம்.
    எனக்கு பதிலளிப்பது அவருக்கு தோஷமுள்ள குறைபாடாம். சுவாமிகளே! நீங்கள் என்ன சொன்னாலும் உங்களை தப்ப விடமாட்டேன்.

    “சிக்கெனப் பிடித்தேன்,எங்கே எழுந்தருள்வது இனியே!”

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ வால்மீகி ராமாயாணம் என்று சொல்லி விட்டதால், வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார். இதுதான் சவடால் காப்பியாம் \

    அன்பர் ஷாலி,

    வால்மீகி ராமாயணம் என்ற நூலை ஒரு எழுத்து கூட வாசிக்காது பொது தளத்தில் *சீதை மீது அபவாதம் சொல்லியது வால்மீகி ராமாயணப்படி ஒரு வண்ணான் தான்* என்று பேசுவது பொய் மட்டிலும் அல்ல.

    வெட்டி வாதத்துடன் கூடிய சவடால்.

    பாத்ம புராணம் பற்றி நீங்கள் தகவல் கொடுத்த தகவலை உரிய மதிப்புடன் சரிபார்க்கிறேன் என்று சொல்லி பின்னர் சரிபார்த்து உங்களுக்கும் நன்றியும் சொல்லியுள்ளது இந்த தளத்தில் பதிவாகியுள்ளது.

    தனக்குத் தெரியாத விஷயத்தை சவடாலாகப் பொதுதளத்தில் பேசக்கூடாது என்று பாடம் பெறவும்.

    உங்களுடைய வாதத்தில் கண்யம் என்ற விஷயம் இருக்கவியலாது என்பதில் எனக்கு வியப்பு இல்லை.

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    எனது அன்பிற்குறிய வைத்யர் ஸ்ரீ ஜான்சன்,

    தாங்கள் எனக்குப் பகிர்ந்த உத்தரத்தில் முழுமை அறவே இல்லை.

    \ அதோடு இது மதங்கள் சார்ந்த சர்ச்சை. நான். கிறிஸ்துவன், .இயேசுவை நம்புபவன்.நீங்கள் இயேசு என்பவரே பிறக்கவில்ல என்பவர். \

    சரித்ரம் சார்ந்து ஏசு என்பவர் இல்லை என்று மட்டிலும் தான் சொல்லியிருக்கிறேன் ஆதாரங்கள் சார்ந்து. ஏசு என்ற தேவமைந்தன் – க்றைஸ்தவர் நம்பும் (நான் நம்பாத) ஒரு celestial being பற்றி எனக்கு பிணக்கு ஏதும் இல்லை. இதை பலமுறை இந்த தளத்தில் பகிர்ந்துள்ளேன்.

    எனக்கு ஏசுபிரான் மீதும் க்றைஸ்தவர்களது மதநூலான பைபிள் மீதும் நம்பிக்கை இல்லை.

    மிகப் பலமுறை க்றைஸ்தவர்கள் ஏசுபிரானை நம்புவதையும் வழிபடுவதையும் நான் மதிக்கிறேன் என்று தெளிவாகச் சொல்லியுள்ளேன். நான் பகிர்ந்த எனது முதல் வ்யாசத்தில் தெளிவாக இது பகிரப்பட்டுள்ளது.

    நான் மறுப்பது ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்துள்ளார் என்று சொல்லப்படும் விஷயத்தை மட்டிலும். அதை சரித்ர ஆதாரங்களும் பைபள் என்ற நூலில் ஏசுபிரான் சம்பந்தமான முன்னுக்குப் பின் முரணான சுவிசேஷாதிகளை வைத்து இந்த தளத்தில் விவாதித்துள்ளேன். அன்பர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (அல்லது) அய் அய் …..கணபதி….. அவர்கள் தனது பூர்வாவதாரமான காவ்யா என்ற அவதாரத்தில் இந்த விவாதத்தில் கலந்துள்ளார்.

    ராமபிரானாக இருந்தாலும் க்ருஷ்ணனாக இருந்தாலும் ஏசுவாக இருந்தாலும் சரித்ரம் என்று வரும்போது ஆதாரங்கள் சார்ந்து மட்டிலும் ஒரு விஷயத்தை ஏற்பேன்.

    \ அதோடு நீங்கள் இந்து மத சமய நூல்களான இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கரைத்துக் குடித்தவராகவும் உள்ளீர்கள் \

    ஐயா நான் மிகத் தெளிவாக ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய வ்யாசத்தில் பகிர்ந்த விஷயம் வால்மீகி ராமாயணம் என்ற நூலை நான் அடிப்படையாக வாசித்துள்ளேன் என்பது மட்டிலும்.

    மஹாபாரதம் அந்த அளவுக்குக் கூட நான் வாசித்ததில்லை.

    ஆகவே இரு நூற்களையும் கரைத்துக்குடித்தவன் என்று எக்காலும் சொல்லிக்கொள்ள மாட்டேன்.

    ஆனால் நான் படித்து அறிந்த விஷயங்களை basis ஆக வைத்து வேறுபடும் கருத்துக்களை மிகத் துல்யமாக ஆதாரங்களுடன் பகிர்வேன்.

    \ அது பற்றி பெரியாரும் அண்ணாவும் எழுப்பிய விழிப்புணர்வால் என் கவனம் அதில் சென்றது உண்மை \

    ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற இனவெறியாளரும் அண்ணாதுரை அவர்களும் ஹிந்துமத வெறுப்பாளர்கள் என்பது உலகறிந்த உண்மை. நீங்கள் பெற்றது விழிப்புணர்வு என்று நினைப்பது மாயை.

    தவ்ஹீத் ஜமாத்தினர் பைபள் பற்றி அவதூறாகச் சொல்வதை நீங்கள் ஏற்பீர்களா அல்லது முறையாக க்றைஸ்தவ இறையியல் வாசித்தவர்கள் முன்வைக்கும் தரவுகளை ஏற்பீர்களா? தவ்ஹீத் ஜமாத்தினருடைய அல்லது ஜெனாப் ஜாகிர் நாயக் அவர்களுடைய ப்ரசங்கங்களைக் கேட்டு நான் பைபிள் பற்றிய விழிப்புணர்வு பெற்றேன் என்பது எவ்வளவு சாரமுடையதாக இருக்குமோ அது போன்ற சாரமுடையது அண்ணாத்துரை மற்றும் இனவெறியாளர் ஈ.வெ.ரா நாயக்கர் மூலமாக ராமாயணம் மற்றும் மஹாபாரதம் பற்றி அறிய விழைவது.

    அதே அளவுகோலை ஹிந்து மத நூற்கள் சார்ந்தும் ஏற்க முயலவும். பொதுஜனங்கள் வெகுவாக அறியும் தமிழும் சம்ஸ்க்ருதமும் வைஷ்ணவ நூற்களும் முறையாகக் கற்ற எனது பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய வைணவச் சுடராழி ஸ்ரீமான் ஆண்டனி ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களது விளக்கங்களைத் தாங்கள் வாசிப்பது முறையானதாக இருக்கும்.

    \ வால்மீகி ஏன் தென்னாட்டவர்களைக் குரங்குகளாகச் சித்தரித்து மகிழ்ந்தார் \

    நீங்கள் உங்கள் தரப்பிலிருந்து வால்மீகி ராமாயணத்தையோ அல்லது அதன் மொழிபெயர்ப்பையோ வாசிக்க முயலுங்கள். உரல் சொல்லும் விஷயங்களையோ நாலாந்தர ஐந்தாம்படையினரின் கருத்துக்களின் ஆதாரங்களின் படி விஷயங்களை அறிய முனையாதீர்கள்.

    கூசாது பொதுதளத்தில் பொய் சொல்லும் சவடால் பேர்வழிகளது *சகலகலா வல்ல* புளுகுகளையோ ஹிந்துக்கள் மதிக்கும் நூற்களை முனைந்து இழிவு செய்யும் நச்சுப்பதர்களது கருத்துக்களை *விழிப்புணர்வு* என்று ஏற்பதையும் அறியாமை என்று மட்டிலும் ஏற்க முடியுமா? அல்லது அதற்கு மேல் இதற்கு முகாந்திரம் ஏதும் உள்ளதா அறியேன்.

    எனது இது சம்பந்தமான வ்யாசம் எழுதி வருகையில் சரீர ச்ரமம் காரணமாக தடை பட்டுள்ளது. அதையும் தாங்கள் வாசித்து முறையான நூலாதாரங்கள் சார்ந்து விஷயத்தெளிவு பெறவும். ஒரு முழுமையான பார்வை பெறவும்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது ஹிந்துமதக்காழ்ப்பு படைப்பிற்கு மறுதலிப்பான வ்யாசம் சார்ந்த பணி முற்றுப்பெற்றதும் நீங்கள் முன்வைத்த கருத்துக்களில் உள்ள அதீத பக்ஷபாதம் — க்றைஸ்தவ நூற்களை தாங்கள் சமுத்ரம் என்று கருத முயல்வதும் மாற்று மத நூற்களை அதனை இழிவு செய்ய முனையும் காழ்ப்பாளர்கள் – த்ராவிட நச்சுப்பதர்கள் — மூலமாக *விழிப்புணர்வு* பெற்று எதிர்மறையான — அரைகுறைக் கருத்துக்களை பகிர முனைவதும் தனி வ்யாசமாக எழுத வேண்டும். கையில் உள்ள பணி முற்றுப்பெற்றதும் அதையும் செய்ய முயலுகிறேன்.

    முருகனிடம் தெம்பைத் தா என யாசித்து என் பணிகளைத் துவங்குகிறேன்.

    உங்களது மதம் சார்ந்த நற்கருத்துக்களை உங்களது மதநூலான பைபள் சார்ந்து உங்களது பொலிவான தமிழில் வைக்க முயல்வது நேர்மையான பணி. மாற்று மத நூற்களை இழிவு செய்வதன் மூலம் உங்கள் மதத்திற்கு நீங்கள் சேவை செய்ய முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை ஐயா. கூடவே பொதுவில் உங்களது மதம் சார்ந்த எதிர்மறைக் கருத்துக்களையும் முறையான ஆதாரங்கள் சார்ந்து நீங்கள் பகிர முனையலாம்.

    த்ராவிட நச்சுப்பதர்கள் கம்பராமாயணம் மட்டிலும் என்ன சிலப்பதிகாரம் மற்றும் திருக்குறள் வரை தமிழ் நூற்களை இழிவு செய்துள்ளனர் என்பது தமிழகம் அறிந்த விஷயமே. கம்பன், இளங்கோவடிகள் மற்றும் திருவள்ளுவரை இழிவு செய்து விட்டால் தமிழையே அழித்து விட முடியும் என்பது கன்னட மொழி பேசிய இனவெறியாளர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களின் பகற்கனவாக மட்டிலும் இருக்கலாம்.

    எனது பணி முற்றியதும் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *