(1)
ஓடும்
ஆற்றைச் சதா பாலம் கடக்கும்.
(2)
ஊருக்கு நடக்கும் முன்னே
ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.
(3)
எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று
ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு நாய்.
(4)
இளைக்க ஓடும் இரயிலின் சக்கரக்கால் பாய்ச்சலை முறியடிக்கும்
மலைத் தொடர் சாவகாசமாய் ஊர்ந்து.
(5)
நீந்த
நதி நெடுக இரு கரையும் சதா காத்திருக்கும்.
(6)
ஊரும் எறும்புகளில் ஊரும் வரிசை ஊரும்
எறும்புகளின் எறும்பாய்.
(7)
யார் செலுத்த முடியும்
முன்கூட்டியே இலக்கை வீழ்த்தும் அம்பை?
(8)
நதி ஓடுகிறதா?
சதா நகரும் இந்தக் கணத்தில் ’உறையும்’ நதி சதா நகர்கிறதா?
(9)
எப்போது புறப்பட்டன ஊரும் எறும்புகள்?
புறப்பட்டாலொழிய புறப்படாத சமயத்திலிருந்தா?
(10)
மரத்திற்கு சந்தேகம் மரத்திலிருக்கும் பறவை
பறக்காமல் இருக்கிறதா அல்லது பறக்காமலா இருக்கிறதென்று.
(11)
கரையென்று ஓடிப் போனது?
கடலேன் இப்படி சதா ஓடிவரும் அலைஅலையாய்க் கரை தேடி.
கு.அழகர்சாமி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3
- ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
- மனத்துக்கினியான்
- வழக்குரை காதை
- பிச்சை எடுத்ததுண்டா?
- ‘காசிக்குத்தான்போனாலென்ன’
- எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
- மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்
- வலி
- கவிதையில் இருண்மை
- மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )
- தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு
- பெரியவன் என்பவன்
- தினம் என் பயணங்கள் – 8
- திண்ணையின் இலக்கியத்தடம் – 25
- சீதாயணம் நாடகப் படக்கதை – 23
- தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி
- செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
- செயலற்றவன்
- நீங்காத நினைவுகள் – 37
- இயக்கமும் மயக்கமும்
- மருமகளின் மர்மம் – 19
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி