திண்ணையின் இலக்கியத் தடம் -31

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்:
ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409091&edition_id=20040909&format=html )

உரத்துப் பேச- எஸ். என் நடேசன்

கோணிப்பையால் உடல் மூடி
வீதிக் குளிரில் முடங்கி நடுங்கும் “எம்
குட்டி இளவரசிகளின் சின்னக் கைகளை
அம்மா நீ அறிவாயா?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409094&edition_id=20040909&format=html )

காகிதங்கள் + கனவுகள்= மீரா -நெப்போலியன்

புத்தகம் சம்பந்தமாய் வந்தாய்
ஒரு புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம்
புத்தகமாகவே ஆனாய் நண்பனே- கி.ராஜ நாராயணன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409096&edition_id=20040909&format=html )

செப்டம்பர் 16 2004 இதழ்:

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்- ஜெய மோகன்- இலக்கியவாதியின் முன் நிற்பவன் எதிர்கால வாசகன். அவன் படைப்பின் மூலம் கண்டடையப் படும் புதிய வாசகன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409161&edition_id=20040916&format=html )

செப்டம்பர் 23 2004 இதழ்:
மக்கள் தெய்வங்களின் கதைகள்- 2- அ.கா.பெருமாள்-
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409231&edition_id=20040923&format=html )

மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்- நரேந்திரன்- தென்னமெரிக்க நாடுகளின் பல அரசுகள் மாஃபியாக்களை எதிர்த்து ஒன்றுமே செய்ய இயலாமல் இருக்கின்றன அல்லது மாஃபியாக்களால் ஆளப் படுகின்றன என்பதே உண்மை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409232&edition_id=20040923&format=html )

செப்டம்பர் 30 2004 இதழ்:

மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்-2- நரேந்திரன்- பராகுவே நாட்டின் சியாடட் மாஃபியாக்களின் சொர்க்க பூமி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409301&edition_id=20040930&format=html)

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 3- அ.கா.பெருமாள்- தோட்டுக்காரி அம்மன் கதை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409303&edition_id=20040930&format=html )

முப்பதாண்டு கால முயற்சி- புதுவை ஞானம்

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயில் ஆச்சுதடி- மயில் என்பது சோதி வடிவம். குயில் என்பது நாத வடிவம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409304&edition_id=20040930&format=html )

தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்- வெங்கட் சுவாமிநாதன்- பெரியவர் வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரைகளைக் கூடுமான வரை நான் படித்திருக்கிறேன். அவருக்கு கனடாவில் இயல் விருது வழங்கப் பட்ட போது காலச்சுவடு (குறிப்பாக கண்ணன்) நடத்திய அரசியல் வேலைகளும் நுஃமானை வைத்து எழுதிய கட்டுரையையும் இந்தக் கட்டுரையில் மையப் படுத்தப் பட்டிருக்கின்றன. இலக்கிய விமர்சனத்தை நடுநிலையாக ‘இஸம் ‘ சார்பில்லாமல் எழுதி வருபவர் வெ.சா. அவரது 50 வருடத்துக்கும் மேலான இலக்கியப் பணி ஒப்பற்றது. விஷ யத்துக்கு வருகிறேன். நான் படித்ததிலேயே மிகவும் காட்டமான அவருடைய கட்டுரை இது என்றே கருதுகிறேன். ரௌத்திரம் பழகு என்னும் பாரதியின் வாக்கே நினைவுக்கு வருகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409306&edition_id=20040930&format=html )

புத்தகம்- ஹா ஜின் எழுதிய காத்திருப்பு- அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன் – ஜெயமோகன்
உச்சியில் சர்வாதிகாரம் கொண்ட ஓர் அரசு மனித வாழ்க்கையின் எல்லாப் புள்ளிகளிலும் தலையிட்டு வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்குவதை அழுத்தமாகப் பதிய வைப்பது இப்படைப்பு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409309&edition_id=20040930&format=html )

அக்டோபர் 7,2004 இதழ்:

யூனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி!- துரைப் பாண்டியனுடன் ஒரு நேர்காணல்- யூனிக்கோடில் கொரிய மொழிக்கு மட்டும் 12177 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. சீன கொரிய ஜப்பானிய மொழிகளுக்கு சேர்த்து சுமார் 25000 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. சிங்களவர்கள் கூட 400 இடங்களை வாங்கி விட்டார்கள். ஆக, செயலற்றவர்கள் தமிழர்களும் இந்தியர்களும் தான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20410071&edition_id=20041007&format=html )

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 4- அ.கா.பெருமாள்-உச்சிமாகாளி கதை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410072&edition_id=20041007&format=html )

கீதையை எப்படிப் படிப்பது ஏன்?- பகுதி 1- ஜெயமோகன்- கீதை இந்நோக்கிலேயே “நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு, செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப் பட்டது (சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ) என்று வகுத்துரைக்கிறது. இரண்டாம் வரி திட்டவட்டமாக பிறப்பு சார்ந்த சாதிப் பிரிவினைக்கு எதிரானது என்பதை எவரும் உணரலாம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=604100714&edition_id=20041007&format=html )

‘சொல்லப் படுகிறது’ கொஞ்சம் – ‘நம்பப் படுகிறது கொஞ்சம்’- சுந்தர ராமசாமி- முந்தைய இதழில் வெங்கட் சுவாமிநாதன் அவர்களின் கட்டுரைக்கு சு.ரா அவர்களின் பதில். வெ.சா. ஆதாரங்களே இல்லாமல் யார் பெயரையும் குறிப்பிடாமல் செவி வழி வந்தவற்றை வைத்துக் கட்டுரை எழுதியிருக்கிறார் எனத் தம் மறுப்பில் சு.ரா. பதிவு செய்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410078&edition_id=20041007&format=html)

அக்டோபர் 14, 2004:

காற்றினிலே வந்த கீதங்கள்- வெங்கட் சுவாமிநாதன்- சு.ரா.வின் பதிலுக்கு விரிவான பதிலைக் கொடுத்து இனி சர்ச்சையைத் தொடர விரும்பவில்லை என்று முடிக்கிறார். வெ.சா. ( என் குறிப்பு; வெ.சா. அவர்கள் இதை எழுதியது 2004ல். 2012ல் ஒரு மூத்த எழுத்தாளரின் மனைவியும் கவிஞருமானவர் அகால மரணம் அடைந்து அந்த எழுத்தாளர் மிகவும் மனமுடைந்திருந்தார். அப்போது அம்பை ஒரு அஞ்சலி செய்தி எப்படி எழுதப் படக்கூடாது என்று நிரூபிக்கும் விதமாகத் தரக்குறைவாக எழுதினார். நான் மிகவும் மனம் கொதித்து காலச் சுவடுக்கு கண்டனம் எழுதினேன். சுருக்கமாகக் கூட அது வெளியிடப் படவில்லை. என்னுடன் அப்போது தொடர்பில் இருந்த இரு சமகால எழுத்தாளர்களும் கண்டித்து எழுதியிருந்தார்கள். அவையும் காலச் சுவடில் வெளியாகவில்லை. காலச்சுவடுக் குழுவில் வெகுகாலமாக இயங்கும் சீனிவாசன் என் நண்பர். அவரிடம் நான் ஏன் இப்படி என்று கேட்ட போது “நீங்கள் தேவி பாரதியிடம் பேசுங்கள்” என்று ஒதுங்கிக் கொண்டார். வெ.சா. வை நியாயப் படுத்தும் வேலைகள் வேறு சிலவும் நிகழ்ந்திருக்கும். பதிவாகவில்லை. அவ்வளவே.)

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410146&edition_id=20041014&format=html )

சுகந்தி சுப்ரமணியனின் “மீண்டெழுதலின் ரகசியம்”- சின்னச் சின்னக் காட்சிகள்- பாவண்ணன்-

வழியும் நிலவின் ஒளிவெள்ளதில்
தேங்கிக் கிடக்கும் குளம்
கேட்பாரற்ற அமைதியில்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410147&edition_id=20041014&format=html)

கீதையை எப்படிப் படிப்பது ஏன்?- பகுதி 2- ஜெயமோகன்-
இந்து மத மரபுகளில் பல கீதையை நிராகரிப்பவை. நிராகரிக்கும் உரிமையை வழங்கும் ஒரு நூல் எப்படி ஆயுதமேந்திய நூலாக முடியும்?

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410141&edition_id=20041014&format=html )
மக்கள் தெய்வங்களின் கதைகள்-5-அ.கா.பெருமாள் -சோமாண்டி கதை

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410149&edition_id=20041014&format=html)

அக்டோபர் 21 2004 இதழ்:

மக்கள் தெய்வங்களின் கதைகள்-6- அ.கா.பெருமாள் -பிச்சைக் காலன் கதை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410215&edition_id=20041021&format=html )

எழுத்து வன்முறை – திலக பாமா- பண்டிகை காலங்களில் கடைகளில் அறிவிக்கப் படுகின்ற தள்ளுபடி எனும் வார்த்தை போல நவீனம், பின் நவீனம், தீவிர இலக்கியம் என்னும் எந்த வார்த்தையும் இவர்களின் எழுத்துக்களினால் அர்த்தம் தொலைந்தபடியே தான் இருக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410219&edition_id=20041021&format=html)

அக்டோபர் 28 2004 இதழ்:

சொற்களின் சீனப் பெருஞ்சுவர்- நாகூர் ரூமி

அமைதிக்காக ஒரு போர்
போருக்குப் பின்
ஒரே அமைதி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20410285&edition_id=20041028&format=html )

மக்கள் தெய்வங்களின் கதைகள்-7-அ.கா.பெருமாள்
வெங்கலராசன் கதை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60410287&edition_id=20041028&format=html)

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *