களிப்பருளும் “களிப்பே”!

0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 31 in the series 4 மே 2014
ருத்ரா.
அரிஸ்டாட்டில்
ஒரு சிறு நேர்கோட்டை
பாதியாக்கு என்றார்.
மீண்டும் பாதியாக்கு.
பாதியையும் பாதியாக்கு
பாதி..பாதி..
அது புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம்.
ஆனாலும்
பாதியாக்கு
பாதியை பாதி ஆக்கு…
எது ஞானம்?
எது அஞ்ஞானம்?
அது மெய்ஞானம்?
எது விஞ்ஞானம்?
முடிவில்லாததற்கு
முடி போட்டு குடுமி போடமுடியாது.
முனை தெரியும் வரை
கையில் கருத்தில் நிரடும் வரை
பாதியாக்கு
பாதியாக்கிக்கொண்டே இரு.
கிரேக்க மொழியில்
மெலிடஸ் (கிமு 610_540)
இதை “அபெய்ரான்” என்றார்.
இன்ஃபினிடி என்று
இது நுண்கணிதம் ஆயிற்று.
லிமிட்டிங் டு சீரோ என்பது
டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
இன்டெக்ரல் கால்குலஸ்.
தொகுத்ததை பகுத்த போதும்
பகுத்ததை தொகுத்த போதும்
வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
குவாண்டம் பிடித்து
ஒரு லிங்கம் செய்தால்
அதுவே இங்கு ஒரு
குவாண்ட லிங்கம்.
ஃபெர்மியானும் போஸானும்
கொண்டு பிசைந்த லிங்கமே அது.
பாலுக்குள் தயிர் உண்டு.
பால் இல்லாமலேயே
தயிர் அங்கு எப்படி வந்தது?
வெறுமையே மத்தாகி
வெறுமையே கடலாகி
கடைந்து வந்ததில்
“திடீர்” என்று
எப்படி அது திரண்டு வந்தது?
ஹிக்ஸ் துகளே
“கடவுள்” துகள் ஆகிப்போனது.
பால் கடைவது போல்
தீ கடைந்த மனிதனுக்கு
தீயே திடீர் அச்சம் ஆனது.
அச்சமே “கடவுளை” இங்கு
எச்சம் இட்டது.
ப்ராபபளிடியில்
ஒரு தொடர்பு எனும்
தொப்பூள் கொடியை
விழுது ஆக்கி
வித்தை ஆக்கத்தெரிந்தவனே
அண்டத்தையும்
விண்டு பார்க்கத்தெரிந்தவன் ஆனான்.
அந்த “கப்ளிங் கான்ஸ்டான்டை”
சூத்திரம் செய்யவே
இங்கு விஞ்ஞானிகளின் வேட்டை.
இந்த நுரை அளபடைவெளிக் கோட்பாட்டின்
(குவாண்டம் ஃபோம் தியரி)
திரை இன்னும் விலகவில்லை.
கடவுள் உண்டு என்பதிலும்
கடவுள் இல்லை என்பதிலும்
ரகசியம் ஏதுமில்லை என்பதே
சிதம்பர ரகசியம்.
யார் கண்டது?
குவாண்டத்தின் அந்த “பஞ்சு நுரை வெளி”
எனும் அந்த “திருவாதிரைக்களியில்”
தெரியலாம் அந்த சூத்திரம்.
Series Navigation
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *