திசையறிவிக்கும் மரம்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

மரம்

முற்றிவிட்டது

துளிர்விட்டுக்கொண்டும்..

******************************

மொட்டை மரங்களும்

அழகிய நிர்வாணத்தோடு

திசையறிவித்தபடி.

******************************

வீழ்த்தப்பட்டபின்னும்

மரக்கிளைகள் வேர்பிடித்து

வேறொருவம்ச ஆணிவேராய்..

**********************************

மரக்குளத்தில்

அலையெழுப்புகின்றன

பறவைக் குரல்கள்..

*********************************

நீர் கிடைத்த கிளைகள்

விரிகின்றன பசுந்தோகையாய்..

கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.

Series Navigation
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *