Posted in

ஒன்றின்மேல் பற்று

This entry is part 14 of 32 in the series 24 ஜூலை 2011

மூடிய கண்களுக்குள்
விழித்துக்கொண்ட ஒரு யோசனை
பூனையை குருடாக்கியது
விட்டத்தின் மீதும் மதில் மீதும்
விட்டேற்றியாக அலைந்த பூனையை
திடீரென குறுக்கிட்ட ஒரு எலி
பதுங்க வைத்துவிட
கண்டபடிக்கும் வியூகம்
அமைக்க வேண்டியதாயிற்று.

எலியின் சேட்டை அதிகமானாலும்
பூனைக்கு மிகவும் பிடித்திருந்தது
வாலைக்கூட ஆட்டாமல்
கண்களை முழுசாய் திறக்காமல்
பாசாங்கு செய்ய வேண்டிதாயிற்று
சிறு குடலை பெருங்குடல்
தின்னும் பசியிலும்
இரை விழுங்கிய மதப்புடன்
சுருண்டு கிடக்கும் பாம்பாய்
நடிக்க வேண்டிதாயிற்று.

கும்பலாய் கூச்சலிடும்
எலிக் கூட்டத்தில் ஏதெனும் ஒன்றை
வேட்டையாடும் யோசனையும்
மறந்து போய்விட
பூனையை நடைப்பிணமாக்கிய
பெருமை அந்த எலிக்கு வந்தது
அந்த எலியானது
இதுமாதி¡¢ நிறைய பூனைகளை
வாலை சுருட்ட வைத்திருக்கிறது
என்பது இந்த பூனை
அறிய வாய்ப்பில்லை.

Series Navigationதியாகங்கள் புரிவதில்லைமுடிவை நோக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *