ஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. !

This entry is part 15 of 16 in the series 26 அக்டோபர் 2014

 

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

1

“சரி” என்று நான் உடன்பட்டேன் நேற்று;

“இல்லை” என்கிறேன் இன்று காலையில்,

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிறங்கள்

வேறாய்த் தெரிந்திடும் பகற்பொழுதில் !

2

உன்னதமாய் வாத்தியக் கருவி இசைக்கும் போது

புன்னகை புரியும் விளக்குகள் மேலும் கீழும்.

“என்னை நேசி”, என்பது நகைப்பாய்த் தொனிக்கும் !

உடன்பாடோ, மறுப்போ அதற்கேற்ற பதிலாகலாம்.

3

மாதரின் தவறென்றோ, உரிமை என்றோ சொல் !

ஏதோ விளக்கொளி மின்னு வதாய்ச் சூளுரை;

உன் முகத்தோ டொருவன் பார்க்க முடியாது

என் துயரில் ஏற்படும் மாறுதல் எதையும் !

4

பாபம் விழுவது நம்மிருவர் மேல்தான்;

ஆடும் சமயம் கவர்ந்து மயக்குவ தில்லை;

கவர்ச்சி வெளிச்சம் பேதமைக் குறுதி 

என்னை இகழ்வ துன்னைத் தாக்கும் !

5

மங்கை மனதைப் பற்றக் கற்றுக் கொள்

கண்ணியமுடன், அது உன்னத மாவதால்,

தைரியமாய் இரு பிறப்பிலும், இறப்பிலும்;

காதலுக் குறுதி அளிக்கக் கற்றுக் கொள்.

6

அழைத்துச் செல் அவளை விழாக் களுக்கு

விண்மீன்கள் வானத்தைச் சுட்டிக் காட்டு

காப்பாய் அவளை உன் உண்மைப் பேச்சால்

களவு உறவைக் கடந்து நேர்மை காட்டு.

7

உனது மெய்யுறவு அவளது நிஜ மன நிறைவு

நேர்மை உறவே பழமை மனையாள் ஆக்கும்

சரி யெனச் சொல்லும் அவள் உடன்பாடு  

அரிதாய் என்றும் நிலைக்கும் மனப்பாடு.

 

++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/
Series Navigationதந்தையானவள் அத்தியாயம்-6வாழ்க்கை ஒரு வானவில் -26
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *