This entry is part 10 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

சேயோன் யாழ்வேந்தன்

இலைகள் உணவு தயாரிக்கின்றன
இலைகள் உணவாகின்றன
இலைகள் உணவு பரிமாறுகின்றன
இலைகள் எரிபொருளாகின்றன
இலைகள் உரமாகின்றன
இலைகள் நிழல் தருகின்றன
இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன
இலைகள் குடையாகின்றன
இலைகள் கூரையாகின்றன
இலைகள் ஆடையாகின்றன
இலைகள் பாடையாகின்றன
இலைகள் வர்ணங்கள் செய்கின்றன
இலைகள் தோரணாமாகின்றன
இலைகள் எழுதும் மடலாகின்றன
இலைகள் மருந்தாகின்றன
இலைகள் படுக்கையாகின்றன
இலைகள் புகைக்கப்படுகின்றன
இலைகள் போதை தருகின்றன
இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன
இலைகள் மந்திரிகளாக்குகின்றன
இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி
இறுதிவரை சொல்லவே இல்லை
இலைகள் கனிகளை மறைப்பதையும்
கவிதைகள் சமைப்பதையும்
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஉதவிடலாம் !சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி