அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்

author
18
0 minutes, 48 seconds Read
This entry is part 24 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

எலியனார் அப்தெல்லா டௌமாட்டோ

கபிலா qabila (tribe) என்ற வார்த்தை வெறுமே உறவுக் குழுவை மட்டுமே குறிப்பிடுவது அல்ல. அது அந்தஸ்தையும் குறிப்பிடுவது. கபிலி குடும்பங்கள் அரபு மூதாதையர்களான அட்னன் அல்லது கதான் (Adnan or Qahtan,) ஆகியோரிடமிருந்து வழிவழியாக வருகின்றன. காதிரிகள் என்படுபவர்கள் (khadiri) (சுதந்திரமானவர்கள் ஆனால், அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தை காட்டவியலாதவர்கள்). ஆகவே அத்னன் அல்லது கதான் ஆகியவர்களின் வழித்தோன்றல்களாக வரும் ஜாதிகள் தங்களை காதிரிகளிடமிருந்து தனிப்பட்டவர்களாகவும் மேலானவர்களாகவும் கருதிக் கொள்கின்றனர். காதிரிகள் பெரும்பாலான கைவினைஞர்களாகவும், வியாபாரிகளாகவும் படிப்பாளிகளாகவும், எண்ணெய் வளம் பெருகுவதற்கு முந்தைய அரபியாவில் இருந்திருக்கின்றனர்.
கபிலி (அரபு மேட்டுக்குடியினர்) தங்களை மேன்மையான கபிலி ஜாதியினர், கீழ்மையான கபிலி ஜாதியினர் என்று இரண்டாகவும் பிரித்துகொள்கின்றனர். மேன்மையான கபிலி ஜாதியினர் தம்மை, ரத்தத்திலும் மூதாதையரிலும் தூய்மையானவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இவர்கள் அஸல் கபிலி என்று வழங்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மேன்மையான கபிலி ஜாதியினராக அனிஜா, ஷம்மார், ஹார்ப், முஸ்தாய்ர், அஜ்மன், தாபிர், பானு காலித், பானு ஹாஜ்ர், அல் முரா, கடான், உத்ய்பா, தவாஸிர், சாஹுல், மனஸ்ர், பானு யாஸ், ஷிபே, க்வாஸிம், பானு யாம், ஜாப், பானு தமிம் ஆகியோர். கீழ்மையான கபிலி ஜாதியினராக அவாஜிம், ரஷய்தா, ஹூடாய்ம், அகய்ல், சுலுப்பா ஆகியோர். சுலுப்பா ஜாதியினர் பாலைவனம் முழுவதும் பயணம் செய்து, ஆங்காங்கு மேட்டுக்குடி பெடவீன்களுக்கு, இரும்பு வேலைகள், கூலித்தொழில் ஆகியவற்றைச் செய்துவருகிறார்கள். இவர்கள் அரபு ஜாதி அமைப்பில் இருக்கும் மிகக் கீழாவனர்கள்.

கபிலா ஜாதியினருக்கும் காதிரி ஜாதியினருக்கும் இடையேயான மண உறவுகளும், மேலான ஜாதியினருக்கும் கீழான ஜாதியினருக்குமான மண உறவுகளும் சகித்துகொள்ளப்படுவதில்லை. (அரபு ஜாதியினரின் ஜாதி அமைப்பு ஆண்கள் சார்ந்து இருக்கிறது. ஆண்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் அந்த ஜாதியினராக கருதப்படுகிறார்கள்.) கபிலி ஜாதிகளின் அந்தஸ்து அவர்களது ரத்த தூய்மை சார்ந்து இருப்பதால், கலப்பு திருமணத்தால் பிறக்கும் பிள்ளைகள் அந்த ஜாதியினராகவே கருதப்பட்டாலும், கலப்பு காரணமாக, அந்த பிள்ளைகள் பாரபட்சத்துடனே நடத்தப்படுகிறார்கள். இதனால், அவ்வாறு திருமணம் செய்தவரின் ஜாதி முழுவதின் அந்தஸ்துமே சந்தேகத்துக்குள்ளாகிறது. தற்கால சவுதி அரேபியாவில் கிட்டுகிற படிப்பு வசதிகளாலும், பொருளாதார முன்னேற்றத்தாலும், மண உறவுகளில் உள்ள முந்தைய அந்தஸ்துத் தடைகள் உடைந்து வருகின்றன என்றாலும், புதிய அந்தஸ்து வகையறாக்கள் உருவாகியிருக்கின்றன. இவை புராதன ஜாதி அந்தஸ்து வகைகளுடன் போட்டியிட்டு, அரபு ஜாதிக் குழுக்களின் படிநிலையை அசைத்து அதன் சமூக முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.

இன்று, சவுதி அரேபியாவில் ஜாதி விசுவாசத்தை காட்டும் மக்களின் எண்ணிக்கை என்னவென்று தெரியவில்லை. ஆனால், நாடோடிகளாக வாழும் அரேபியர்கள் அனைவருமே ஜாதி அமைப்புக்குள்தான் இருக்கிறார்கள். 1950இல் சவுதி அரேபியாவின் நாடோடி மக்கள்தொகை சுமார் 50 சதவீதமாக கணக்கிடப்பட்டது. வரலாற்றுரீதியாக இத்தகைய ஜாதிகள் விவசாய நிலங்களில் வருடத்தில் சிறுகாலமோ முழுவதுமோ வாழ்ந்து வருகிறார்கள். 1970இல் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையின்படி சுமார் 80 சதவீத அரபியர்கள் தங்களை குறிப்பிட்ட ஜாதிக்கு விசுவாசமானவராக காட்டியிருக்கிறார்கள். இது ஓரளவுக்கு அங்கீகரிக்கப்படக்கூடியது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான நஜத் பிரதேச மக்கள் புராதன மரபுக் குழுக்களைச் சேராத காதிரிகளாக- அப்த் (கருப்பு அடிமைகள் அல்லது அந்த அடிமைகளின் வழித்தோன்றல்கள்) ஆகியோரை மணம் புரிந்திருக்கிறார்கள் என்பதால்- இருக்கலாமென அறியப்படுகிறது. ஹிஜாஜ் பிரதேசத்தின் பெரு நகரங்களான ஜிட்டா, மெக்கா ஆகியவை வெகுகாலமாக அந்நியதேசத்தினரை ஈர்த்திருக்கின்றன. ஆகவே இங்கே சவுதி அரேபியர்களிடையே தங்களை குறிப்பிட்ட ஜாதிக்கு விசுவாசமானவர்களாக காட்டிக் கொள்வதும் குறைவானதாகவே இருக்கலாம்.

அமைப்பு முறையில், நாடோடி பழங்குடி ஜாதிகள் தந்தைவழிமுறையைப் பின்பற்றுகின்றன. இந்த வழிமுறை, தனிநபர்களைச் சமூக அளவில் நாளாவட்டத்தில் பெருகி வரும் குழுக்களாக உள்ளவற்றில் இணைக்கிறது. மிகச்சிறிய ஜாதி அல்லது அலகாக கருதப்படுவது ஹமுலா வம்சம் (lineage) ஆகும். இது மூன்று அல்லது ஏழு தலைமுறைகள் சேர்ந்த பெரும் குடும்பமாகும். இது தந்தை வழியில் இணைக்கப்பட்ட குறுஞ் சமூகமாகும். இந்த வழிமுறையில் உள்ள உறுப்பினர்கள் தந்தைவழிச் சகோதரர்கள். இந்த ஹமுலா பெரும்பாலும் இப்ன் அம்ம் (அப்பாவின் சகோதரரின் மகன்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது அல்லது வெறுமே அஹ்ல் (மக்கள்) என்று அழைக்கப்படுகிறது. அதற்குள்ளாக இருக்கும் ஒரு குடும்ப அலகு பெய்த் (வீடு அல்லது கூடாரம்) என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குடும்பம், மனைவி, அல்லது மனைவிகள், குழந்தைகள் இருக்கும் ஒரு அலகு.

ஒரே மூதாதையரின் கீழே வரும் குடும்ப உறுப்பினர்கள் அருகருகே இருப்பிடங்களை அமைத்து வாழ்கின்றனர். தங்களது ஆடுமாடுகளை ஒரே குழுவாக மேய்க்கின்றனர். இந்த பெருங்குடும்பம் இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்கிறது. அந்த தவறுகளுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதையும் பொதுவாக எடுத்துகொள்கிறது. அதே நேரத்தில் தங்கள் பெருங்குடும்பத்தின் உறுப்பினருக்கு நிகழ்ந்த பாதிப்புக்குப் பழி தீர்க்கவும் தீர்மானம் கொள்கிறது. இந்த குழுக்கள் ஜாதி அந்தஸ்தில் மாறுபட்டாலும், ஒரே ஜாதியின் கீழ் வரும் அனைத்து பெரும் குடும்பங்களும் ஒரே அந்தஸ்தினராக கருதப்படுகின்றனர். தண்ணீர் கிணறுகள், அரசாங்கத்தால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இந்த வழிமுறையின் கீழ் பொதுச்சொத்தாக கருதப்படுகின்றன. நாடோடிகள் மத்தியில், கோடைக்கால முகாம் அடித்த இடத்திலுள்ள அனைத்து கால்நடைகளும் அந்த பெருங்குடும்பத்தின் பொதுச் சொத்தாக கருதப்படுகின்றன. சமூக உறவுகளை பொறுத்தமட்டில், அரசாங்க அதிகாரிகளுடன் உறவு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு ஒருவரின் ஜாதி அடையாளம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

பரம்பரை (lineage)க்கு மேலே பல படிநிலைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் சேர்ந்தே ஜாதி (tribe) அமைக்கப்படுகிறது. ஃபக்த் (fakhd- தொடை) என்பது ஏராளமான பரம்பரைகள் சேர்ந்த ஒரு அலகு. இது பழங்குடியினர் பிரதேசத்தில் இருக்கும் மேய்ச்சல் நிலங்கள், கிணறுகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டில் வைத்துகொள்கிறது. அஷிரா (பன்மை அஷைர்- ashira (plural ashaʾir ) என்பது நிறைய ஃப்க்த் – கள் சேர்ந்த ஒரு அலகு. இதுவே ஒரு ஜாதியின் கீழ் இருக்கும் மிகப்பெரிய அலகு. ஒரே ஜாதியில் இருக்கும் பல்வேறு குழுக்கள் தங்களைத் தந்தை அல்லது மூதாதை கொண்டு அடையாளம் செய்துகொள்கின்றன. இதுவே ஒரே ஜாதியில் இருக்கும் ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையேயான உறவை நிர்ணயம் செய்கிறது. பொதுவாக ஒரு அலகு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் செயல் வழித் தாக்கம் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கையில் குறைவு.

அரபியாவில் வாழும் ஜாதிகளின் உத்தேச பிரதேசங்கள்
அரபியாவில் வாழும் ஜாதிகளின் உத்தேச பிரதேசங்கள்

கிழக்கு அரேபியாவில், ஜாதிக் குழுக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை வைத்து அவர்களது பிரிவு அமைந்துள்ளது. யாமானி (அல்லது கடானி) ஆகியோர் ஓமான் நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் தெற்கில் உள்ள யேமன் நாட்டிலிருந்து புராதன காலத்தில் வெளியேறி இங்கு தங்கியவர்கள் என்று கருதப்படுகிறது. அட்னானி (அல்லது நிஜாரி) ஜாதிகள் வடக்கு ஓமான், ட்ரூசியல் கடற்கரை, பஹ்ரைன், கட்டார் ஆகிய பிரதேசங்களில் காணப்படுகிறார்கள். இவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இன ரீதியாக தெற்கிலிருந்து வந்தவர்களை விட ”தூய்மை” குறைவானவர்களாக கருதப்படுகிறார்கள். கட்டாரில் உள்ள பெரும்பாலான ஜாதிகள் கிழக்கு அரேபியாவை சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். கட்டாரின் ஆளும் குடும்பம் அல் தானி ஜாதி. இவர்கள் மத்திய அரேபியாவின் பானு தாமிம் ஜாதியை சேர்ந்தவர்களாகவும், கட்டாருக்கு பதினேழாம் நூற்றாண்டில் வந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். கிழக்கு அரேபியாவில் மிகவும் பரவலாக காணப்படும் மனஸ்ர் ஜாதியினர் பெரும்பாலும் பெடவீன் நாடோடிகளின் வழித்தோன்றல்கள். இவர்கள் அல் புராய்மி பாலைவனச்சோலை பகுதியிலும், ஐக்கிய எமிரேட்டுகளிலிருந்து கட்டார் அல் ஹாஸா என்னும் மேற்கு பகுதியிலும், ஷார்ஜா மற்றும் ரஸ் அல் காய்மா பகிதியிலும், அல் ஷாஃப்ரா, அல் லிவா என்னும் மேற்கு அபுதாபி பகுதிகளிலும் காணப்படுகிறார்கள். ஓமனின் பலம் வாய்ந்த அல் நாய்ம் (al-Naʿim) ஜாதியினர் கட்டார் மற்றும் கிழக்கு அரேபியாவில் காணப்படுகிறார்கள். பானு யாஸ் ஜாதியினரின் குயாபைஸாத் பிரிவினர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கவார் அல் உதாய்ட் பகுதியில் குடியேற முயற்சி செய்து தோற்றார்கள்.
சவுதி அரேபியாவில் தோன்றியுள்ள புதிய தேச உணர்வு , ஜாதி விசுவாசங்களோடு போட்டி போட்டு, புதிய மைய கருத்தாக உருவாகி வருகிறது. இது ஜாதிகளின் சுயாட்சியை கேள்விக்குள்ளாக்கியிருகிறது. நாடோடி முறை அகன்று மக்கள் ஒரே இடத்தில் தங்குவதால், ஜாதி அமைப்பின் பலன்களை குறைத்திருக்கிறது. குழந்தைகள் அரசாங்கம் உருவாக்கியுள்ள பொது கல்வி அமைப்பின் கீழ் வருகிறார்கள். இதனால் ஜாதி அமைப்பு தரும் கல்வி மறைந்துவருகிறது. ஆனால், நாடோடி மக்களிடம் இருக்கும் ஜாதிய விசுவாசம் இன்னமும் அந்த ஜாதிகள் எவ்வாறு மத்திய அரசாங்கத்துடன் உரையாடல் நிகழ்த்துகின்றன என்பதை நிர்ணயிக்கும் முறையாக உள்ளது. 1980களின் மத்தியிலிருந்து மத்திய அரசாங்கம் ஜாதித் தலைவர்களை நியமிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டுள்ளது. இவர்களே ஜாதிகளின் சார்பாக மத்திய அரசாங்கத்துடன் பேச அதிகாரம் பெற்றவர்கள். இந்த ஜாதித் தலைவர்கள் மாவட்ட அமீர்கள், கவர்னர்கள் ஆகியோர்களுடன் உரையாடி, கல்வி, விவசாய முன்னேற்றம், சட்டவிவகாரங்களில் உதவி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு முன்னேற்றம், சமூக உதவி, சவுதியில் மக்களுக்குக் கிட்ட வேண்டிய குடியுரிமை வழி வளங்கள் ஆகியவற்றைப் பெற ஜாதி உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தும் இடையேயான பாலமாக இருக்கிறார்கள்.

Arab_1

அல் முரா போன்ற ஜாதிகளை பொறுத்தமட்டில், நாட்டுப் பாதுகாவலர்கள் என்பது போன்ற அரசாங்க அமைப்புகள் இந்த ஜாதி அமைப்பை வலுப்படுத்தி அந்த சாதி அமைப்புகள் மைய அரசாங்கத்துடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவியிருக்கின்றன. தேசியக் காவலர் குழுவில் சேர்வது ஜாதி அடையாளத்து வழியேதான் நடக்கிறது, ஜாதிக்குழுவில் தலைமையில் இருப்பவர்களுக்கு இந்தக் காவலர் குழுவில் உள்ள ஜாதி அணியில் தலைமைப் பதவி கிட்டும். முன்னாள் நாடோடிக் குழுக்கள் அரசாங்க காவல்படையினர் மூலமாக, உயர் பதவிகளை அடையும் வழிகளை அறிவது, ராணுவப் பயிற்சி பெறுவது, வீட்டு வசதி மற்றும் சமூக நலத்திட்டங்களிலிருந்து பயன் பெறுவது ஆகியவற்றுக்கு உதவி பெறுகிறார்கள்.
பெடவீன்களாகவே வாழ்க்கையை தொடரும் ஜாதியினருக்கு, அரசாங்கம் தண்ணீர் குழாய்கள், நகரங்களில் சந்தை இடங்கள், கிராமங்களிலும் நகரங்களில் தங்கள் ஆடுமாடுகளை விற்கக்கூடிய இடங்கள், மிருக வைத்தியசாலைகள், தீவன மானியம், விளைச்சல்களைச் சேமிப்பதற்கு கட்டிடங்கள் ஆகியவற்றை தருகிறது. தற்போதைக்கு சுமார் 5 சதவீத சவுதி அரேபிய மக்கள் நாடோடி பெடவீன்களாக வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான ஜாதிகள் சவுதி அரச குடும்பத்துடன் திருமணம் மூலம் உறவு கொண்டிருக்கின்றன. திருமண உறவுகள் மூலம் சவுதி குடும்பம் மற்ற ஜாதிகளுடன் உறவு வைத்துகொள்வது என்பது சவுதி அரசகுடும்பத்தின் கொள்கையாகும். இன்றைக்கு சவுதி அரசாங்கத்துக்கும், இந்த ஜாதிகளுக்குமான உறவை வலுப்படுத்த சவுதி இளவரசர்கள், அரசாங்க அதிகாரிகள் போன்றோர் இந்த பலதரப்பட்ட ஜாதிப்பெண்களை மணமுடிக்கிறார்கள். உதாரணமாக, தெற்கு அரேபியாவின் அல் சார் ஜாதியினர் அரசாங்கம் தங்களுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்பதற்காக தங்கள் ஜாதிப் பெண்களை அரச அதிகாரிகளுக்கு மணமுடித்து தருகிறார்கள்.

ஆங்கில மூலம்: எலியனார் அப்தெல்லா டெமாட்டோ
தமிழாக்கம்: ஆர் கோபால்

http://www.encyclopedia.com/doc/1G2-3424602698.html


மேலதிக குறிப்புகள்.
1) tribes என்பது தமிழில் ஜாதி என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. காரணம், ஜாதி எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் இருக்கிறதோ அதே போல இந்த tribeஉம் பிறப்பின் அடிப்படையிலேயே இருக்கிறது. அரபு ஜாதியில் ஒரு ஆணாதிக்க அம்சம் என்னவென்றால், ஆணின் வழித்தோன்றல் மட்டுமே அந்த ஜாதியை சேர்ந்தவராக கருதப்படுவார் என்பது. There are no specific criteria by which we may distinguish a tribe from a caste. என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆணை திருமணம் செய்துகொண்ட பெண் எந்த ஜாதியாக இருந்தாலும் ஆணின் ஜாதியால் உள்வாங்கப்படுவது இந்திய ஜாதிகளிலும் அதிகம். ஆகையால் tribe என்பதற்கும் ஜாதி என்பதற்குமான வித்தியாசம் எழுதுபவர்களின் அரசியல் சார்ந்ததாக இருக்கிறதே தவிர உள்ளார்ந்த அமைப்பு ரீதியில் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை.

2) இஸ்லாம் இந்த ஜாதிகளுக்கு எதிராக இருப்பதாக சொல்லப்படுவது வெறும் கட்டுக்கதை. இந்த ஜாதிகள் அரேபியாவில் முழு அங்கீகாரத்துடனேயே இயங்குகின்றன. இந்தியாவில் தமிழ்நாட்டில் இஸ்லாம் ஜாதிக்கு எதிரானது என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமே. உண்மையல்ல. இதனை முஸ்லீமல்லாதவர்களும் நம்புகிறார்கள். சவுதி அரசாங்கம் இந்த ஜாதிகளுக்கு எதிராக எந்த விதமான அறிவிப்பையும் செய்ததில்லை. செய்யப்போவதும் இல்லை. ஒரு பெண் மேல்ஜாதியாக இருந்து அந்த பெண் கீழ் ஜாதி ஆணை திருமணம் செய்திருந்தால் பல முறை அது சவுதி நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சவுதி நீதிமன்றங்கள் ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தின் கீழேயே இயங்குகின்றன. இது சம்பந்தமாக செய்திகள் வெளியே வருவதில்லை என்பதால் அது போன்று நடக்கவில்லை என்று இல்லை. உதாரணமாக இந்த செய்தி பாத்திமா அல் திமானி என்ற மேல்ஜாதி பெண் செய்த திருமணம் அவரது சகோதரர்களால் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிபதியால் விவாகரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரம் வெளியே வந்து சில வருடங்களுக்கு பிறகு அந்த விவாகரத்து சவுதி அரசரால் நீக்கப்பட்டது.

3) அரபுகள் சென்று ஆக்கிரமித்த அனைத்து நிலங்களிலும் அரபு ஜாதிகள் மேலானவர்களாகவும் மற்ற ஜாதிகள் கீழானவையாகவும் கருதும் போக்கு உண்டு. உதாரணமாக லிபியாவில் உள்ள ஜாதிகள்.
tribes_libya_tribes-ethnic-map2_318px

4) அரபியாவில் உள்ள ஜாதிகளின் கணக்கெடுப்பும் அவற்றின் பெயர்களும் விக்கிபீடியாவில் இதன் இணைப்பு
https://en.wikipedia.org/wiki/Tribes_of_Arabia

5) ஈராக்கில் உள்ள அரபு ஜாதிகளின் பெயர்களும் அவர்களது பிரதேசங்களும்
https://en.wikipedia.org/wiki/Arab_tribes_in_Iraq

6) சூடான், மௌரிட்டானியா போன்ற அரபு ஆக்கிரமிப்பு பிரதேசங்களின் வாழும் கருப்பினத்தவர் அடிமைகளாக வாழ வைக்கப்படுகிறார்கள்.
அரபுகளால் சூடானின் கருப்பினத்தவர் மீது நடந்த இனப்படுகொலையே தெற்கு சூடான் என்ற தேசம் உருவாகக் காரணமாக ஆனது
6a00d8341c60bf53ef00e54f4e49898834-800wi

மேலதிக தகவல்கள்

Bibliography
Anthony, John Duke. Historical and Cultural Dictionary of the Sultanate of Oman and the Emirates of Eastern Arabia. Metuchen, NJ: Scarecrow, 1976.

Dahlan, Ahmed Massan, ed. Politics, Administration and Development in Saudi Arabia. Jidda, Saudi Arabia: Dar alShorouq, 1990.

Dickson, Harold. The Arab of the Desert. London: Allen and Unwin, 1949.

Doughty, Charles. Travels in Arabia Deserta. Reprint, New York: Dover, 1980.

Hopkins, Nicholas. “Class and State in Rural Arab Communities.” In Beyond Coercion, edited by Adeed Dawisha and I. Zartman. London and New York: Croom Helm, 1980.

Kingdom of Saudi Arabia. Fifth Plan. N.d.

அரபுகளின் மேன்மையை இஸ்லாம் வலியுறுத்துவதை பற்றிய இணையப்பக்கம்

Series Navigationதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு
author

Similar Posts

18 Comments

  1. Avatar
    paandiyan says:

    அரபு மக்களின் தாழ்த்தப்பட்டவர்கள் அல் அக்தம் என்று ஒரு திண்ணை கட்டுரை மிக பிரபலம் அது அப்பட்டமான உண்மை என்று இது நிருபீகின்றது

  2. Avatar
    சவரப்பிரியன் says:

    முக்கியமான கட்டுரை. அரபியாவில் ஜாதியே இல்லை. ஜாதி பிரச்னைக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்று அமார்க்ஸ் போன்ற அறிவுஜீவிகளும், கம்யூனிஸ்டு கைக்கூலிகளும் உளறுவதற்கு நல்ல கசப்பு மருந்து.

    1. Avatar
      paandiyan says:

      அப்படி ஒரு புருடா இருந்தது . ஹிந்து மாதறி பத்திரிக்கை சூடான் எல்லாம் மறைக்கும்போது இவர்கள் ஆடினார்கள் .காலம் மாரி இப்போ மானம் கப்பல் ஏறி விட்டது . இனி இது வேறு இஸ்லாம் வேறு என்ற புருடா காது ஜவ்வு கிழியும்

  3. Avatar
    suvanappiriyan says:

    அரபு நாடுகளில் குறிப்பிட்ட கருப்பினத்தவர்கள் முன்பு ஆப்ரிக்காவில் இருந்து குடியேறியவர்கள். நபிகள் நாயகத்துக்கு முன்பிருந்தே அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்கள். நிறம் மொழி ஜாடை என்று அனைத்திலுமே அரபுகளுக்கு மாற்றாக இருப்பர். திருட்டு, கொலை, விபசாரம் போன்ற செயல்களில் இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் இந்த ஆப்ரிக்க இனத்தவர்களே! இருந்தும் அரசு அவர்களை நேர்வழிப்படுத்த மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறது.

    மற்றபடி தொழுகையில் எங்கும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. திருமண உறவுகளும் வைத்துக் கொள்கிறார்கள். குர்ஆனும் நபி மொழிகளும் பாகுபாடு காட்டுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    ஆனால் நமது இந்தியாவின் நிலையே வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. :-)

    1. Avatar
      சவரப்பிரியன் says:

      //திருட்டு, கொலை, விபசாரம் போன்ற செயல்களில் இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் இந்த ஆப்ரிக்க இனத்தவர்களே! //
      அரபியர்கள் எவருமே திருட்டு கொலை விபச்சாரத்தில் ஈடுபடுவதில்லையா? அப்படி ஒரு இனமா? ஆச்சரியமாக இருக்கிறதே!

      (இந்த இனவெறியையும் அரபியாவிலிருந்தே பெறுகிறீர்களா? அல்லது இஸ்லாமிலிருந்து பெறுகிறீர்களா?)

    2. Avatar
      manithan says:

      //அரசு அவர்களை நேர்வழிப்படுத்த மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறது.//

      he he not Islam!!!!!!!??!!!!!!!

  4. Avatar
    ரவி says:

    ஆக, 1400 ஆண்டுகளாக இஸ்லாம் தோன்றிய இடத்திலேயே ஜாதிகளும், ஜாதிமுறையும் இருக்கிறது. ஜாதிகள் எல்லாம் கலைந்து மறைந்து ஜாதி பெயரே தெரியாமல் ஆகவில்லை!

    ம்ம்ம்….

  5. Avatar
    suvanappiriyan says:

    //அரபியர்கள் எவருமே திருட்டு கொலை விபச்சாரத்தில் ஈடுபடுவதில்லையா? அப்படி ஒரு இனமா? ஆச்சரியமாக இருக்கிறதே!//

    எல்லா இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். இஸ்லாத்தை முறையாக பின்பற்றுபவன் இறைவனுக்கு பயப்படுவதால் திருட்டு கொலை விபசாரம் வட்டி போன்ற வற்றிலிருந்து கூடிய வரை தவிர்ந்து கொள்வான் என்றே நான் சொல்ல வந்ததது

  6. Avatar
    suvanappiriyan says:

    //ஆக, 1400 ஆண்டுகளாக இஸ்லாம் தோன்றிய இடத்திலேயே ஜாதிகளும், ஜாதிமுறையும் இருக்கிறது. ஜாதிகள் எல்லாம் கலைந்து மறைந்து ஜாதி பெயரே தெரியாமல் ஆகவில்லை!//

    ஒரு சில இடங்களில் இருந்தாலும் நம் நாட்டைப் போல் சாதி வெறி புரையோடிப் போயிருக்கவில்லை.

    1. Avatar
      paandiyan says:

      சரிதான் , நாகரீகம் இல்லாமல் கல்லால் அடித்து , வெடுகுண்டு வைத்து , பெண்ணை கடத்தி கற்பழித்து சந்தையில் விற்று மிருகமாக நாங்கள் இல்லை . சரிதான் !!

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஜெனாப் சுவனப்ரியன்

    \\ எல்லா இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். \\

    முத்து முத்தான சொற்கள். சபாஷ்.

    \\ இஸ்லாத்தை முறையாக பின்பற்றுபவன் இறைவனுக்கு பயப்படுவதால் திருட்டு கொலை விபசாரம் வட்டி போன்ற வற்றிலிருந்து கூடிய வரை தவிர்ந்து கொள்வான் என்றே நான் சொல்ல வந்ததது \\

    எந்த ஒரு சமயாசாரத்தை பின்பற்றுபவனும் திருட்டு, கொலை, விபசாரம், போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகியும் வட்டி என்ற சமாசாரத்திலிருந்து கூடியவரை விலகியும் இருப்பார்கள்.

    தர்மசாஸ்த்ரங்கள் வட்டி என்பதை ஒட்டு மொத்தமாக விலக்கவில்லை என்று என் புரிதல். ஆனால் வட்டியினால் வரும் வருவாயிலேயே ஜீவனம் நடத்துவது பாபம் என வலியுறுத்துகின்றன. குறிப்பிட்டு சொல்ல தேடவேண்டும்.

    தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வன்னம் ப்ராப்னுயாத் (தைத்ரீய உபநிஷத்)

    நீ சாப்பிடும் உணவை பெருமுயற்சி செய்து சம்பாதனம் செய்வாயாக.

  8. Avatar
    ஷாலி says:

    ///தர்மசாஸ்த்ரங்கள் வட்டி என்பதை ஒட்டு மொத்தமாக விலக்கவில்லை என்று என் புரிதல். ஆனால் வட்டியினால் வரும் வருவாயிலேயே ஜீவனம் நடத்துவது பாபம் என வலியுறுத்துகின்றன. குறிப்பிட்டு சொல்ல தேடவேண்டும்….//

    Defilling a damsel, usury, breaking a vow,selling a tank,a garden,one’s wife or child.-மனுஸ்மிருதி.11:62.

    Stipulated interest beyond the legal rate being against ( the law),cannot be recovered; they call that a usurious way (of lending ) (the lender) is (in no case )entitled to (more than) five in the hundred.-மனுஸ்மிருதி.8:152.

    அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம்.உன் கடவுளுக்கு அஞ்சிக்கொள்.உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்.அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்கு கொடாதே! உணவை அதிக விலைக்கு விற்காதே!- லேவியராகமம்.25:36,37

    வட்டிக்கு கொடுப்பவனாகவும்,கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானா? அவன் வாழமாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி.அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும்.- எசக்கியேல்.18:13.
    .

    உன்னுடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர்.நீ வட்டி வாங்குகிறாய்,கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி,அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய். நேஈ என்னை மறந்து விட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.- எசக்கியேல்.22:12

    யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் வேறுவிதமாய் எழமாட்டார்கள்: இதற்கு காரணம் அவர்கள்,”நிச்சயமாக வியாபாரம் வட்டியைப்போன்றதே” என்று கூறியதினாலேயாம்;அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை தடுத்திருக்கிறான்.
    -அல் குர்ஆன்.2:275.

    விசுவாசம் கொண்டவர்களே! இரட்டித்துக்கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி வாங்கித்தின்னாதீர்கள்.இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி ( இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். –அல் குர் ஆன்.3:130.

    “வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
    வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
    பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
    பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
    பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
    பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
    எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.’’ –திருவருட்பா.5561.

  9. Avatar
    BS says:

    //தர்மசாஸ்தரங்கள்வட்டிஎன்பதைஒட்டுமொத்தமாகவிலக்கவில்லைஎன்றுஎன்புரிதல். ஆனால்வட்டியினால்வரும்வருவாயிலேயேஜீவனம்நடத்துவதுபாபம்எனவலியுறுத்துகின்றன.//

    பெரியவர் திரு கிருட்டிணக்குமார் அவரக்ல் குறிப்பிடும்தர்மசாஸ்திரங்கள் என்பது இந்துமதநூல்கள். உண்மை இந்துமதம் வட்டியைஅனுமதிக்கிறது. இசுலாம் ஒரேயடியாக மறுதலிக்கிறது. இந்துமதத்தில் வட்டிக்குக் கொடுத்து வாங்கலாம். அதில் சில ஒழுக்கங்களை கடைபிடித்தால் போதும். இசுலாமில் வட்டி என்ற பேச்சே கூடாது. எனவே இசுலாத்தில் இருப்போருக்கும் இந்துமதத்தில் இருப்போருக்கும் வட்டி விசயத்தில் தலைகீழ் வேறுபாடு இருக்கிறது. இசுலாம்வட்டிக்குஎதிராகஇவ்வளவுகோபம்கொள்ளக்காரணம்யூதர்கள்கந்துவட்டி (Usury)முறையில் மக்களை அடிமைப்படுத்தி மிரட்டியதால் என்பது நானறிந்தது. மஹமது அக்கொடுமையை நேரிலேயே பார்த்து மனம்புழுங்கி வருந்தியிருப்பார். பாங்க் என்றசொல்லே யூதர்களிடமிருந்துதான்வந்தது என்றும் சொல்வதுண்டு. சந்தைகளில் பெஞ்சில் அமர்ந்து வட்டிகொடுத்து வாங்கும் மனிலென்டர்களாக யூதர்கள் இயேசு மற்றும் மஹமதுகாலத்தில் வாழ்ந்தார்கள். பெஞ்ச் என்ற சொல்லிலிருந்து பாங்க் வந்தது. இயேசுவின் காலத்தில் சினகாக்குக்கு உள்ளேயே பெஞ்சுகள் போட்டு வட்டிக்கடை நடத்தியதைக் கண்டு கோபம்கொண்ட இயேசு சவுக்காலடித்து அவர்களை விரட்டினார் என்கிறது விவிலியம். ஆனால் கிருத்துவமதம் இந்துமதத்தைப் போல வட்டியை ஒரேயடியாக மறுதலிக்கவில்லை போலும். இயேசுவின் செயல் இங்கு வந்து செய்யாதே என்றளவில் இருப்பதாகதான் தெரிகிறது. ஆனால் யூதவெறுப்பு (அன்டிசெமிட்டிசம்) அவர்களின் கந்துவட்டிச் செயல்களிருந்தே தொடங்கியது. இயேசு கொலை செய்யப்பட்டதால் என்பதெல்லாம் பின்வந்தவை. வட்டிக்குக்கொடுத்து வாங்குவது எல்லாச் சமூகங்களிலும் ஒரு பாவச் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், வட்டி என்பது வங்கித் தொழிலில் தவிர்க்கமுடியாது. வட்டியில்லாமல் வங்கி இலாபம் ஈட்டமுடியாது. பாவம் ஒரு பக்கம் – இன்றியமையாமை இன்னொரு பக்கம்- எனவே ஒழுங்கு முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால் அக்காலத்தில் அப்படியில்லை. எனவே யூதவெறுப்பு. USURY என்ற சொல் ஆங்கிலத்தில் ஓர் அவச்சொல்லாகத்தான் விளங்குகிறது.

    மதுரையில் கந்துவட்டிக் கொடுமையில் தற்கொலை செய்துகொள்வோர் இசுலாமியரைத் தவிர மற்றவர்களே. இசுலாமியர் வட்டிபக்கமே போகவில்லையென்பதால் பிரச்சினையும் இல்லை. கிருத்துவர் (கத்தோலிக்சிரியன்வங்கி, ஃபெடரலவங்கி) இந்துக்கள் (அனைத்துவங்கிகளும்) இந்தியாவில் வங்கிகள் வைத்திருக்கிறார்கள் லார்ட்கிருஸ்ணா என்றவங்கி சிறப்புடன் செயல்படுகிறது. வட்டியால் இவ்வங்கிகள் பிழைக்கின்றன. இவர்களும் மிரட்டல் பாணியை வைத்தே கொடுக்காதவர்களைப் பிடிக்கிறார்கள்.

    ஆக, வட்டி என்றாலே கொடுமை கொஞ்சமாவது இல்லாமலிருக்காது எவ்வளவுதான் ஒழுக்கங்களை கடைபிடித்தாலும். தேன்கூட்டத்தைப் பறித்தவன் புறங்கையில் தேன்துளிகள் ஒட்டாமிலிருக்குமா? அவனும் நக்காமலிருப்பானா? ஆனால் அக்கொடுமை பணக்காரர்களைப் பாதிக்கவில்லை. கோடிக்கணக்கில் கடன்வாங்கியவன் நிம்மதியாக கடனைத் திருப்பித் தாராமல் வாழ்கின்றானே? அவன் ஐமபது வக்கீல்களை வைத்து ஐம்பதுவருடம் வழக்கை இழுக்கின்றானே? யூபிஐ, விஜய்மல்லையாவுக்குக் கொடுத்த கடனைத் திருப்பிப் பெறமுடியாமல் ஓட்டாண்டி அல்லவா ஆகியது? ஆந்திரவங்கியில் நட்டத்திற்குக் காரணம் வாராக் கடனகள்தானே? விஜயவாடாவில் சிலமாதங்களுக்குமுன் அவ்வங்கிஊழியர்கள் சிலபணக்காரர்கள் வீடுகளின் முன் கடனைத் திருப்பிக்கொடு என்று புதுமையான போராட்டம் நடத்தினார்களே?

    மதுரையில் 2013ம் வருடம் நடந்த லோக்அதாலத்தில் ஐஓபிக்கும் ஒருவிதவைப் பெண்ணுக்கும் நடந்த ஒரு வழக்கு தீர்மானிக்கப்பட்டது. அப்பெண் தன்கணவன் திடீரென இறந்தபின், ஆடு வாங்கிப் பிழைக்கலாமென்று அவ்வங்கியில் 100 உருபா கடன்வாங்கிக் கட்டமுடியவில்லை. 20 வருடங்கள் வழக்கு. லோக் அதாலத்தில் அவளிடம் கேட்டதற்கு
    தன்னிடம் கடனைக் கட்ட பணமில்லை என்றஅழ (வட்டியோடுசேர்த்துபெருகிவிட்டது) தீர்ப்பு வழங்கவிருந்த நீதிபதிகள்குழு அக்கடனைத் தாங்களேஅதேயிடத்தில் வங்கிமேலாளரிடம் கொடுத்து அவளை அக்கொடுமையிலிருந்து மீட்டது மறுநாள் பரபரபாக நாளிதழ்களில் வந்த செய்தி இது. லோக்அதாலத்தில் இப்படிப்பட்டபத்துஉருபா, நூறு உருபாக் கடன் வாங்கி வாழ்க்கையை இழந்த ஏழைகளின் கதைகள் ஏராளம் வரும். உண்மையில் அவர்களுக்குத்தான் லோக்அதாலது. பணக்காரன் வரவேமாட்டான்.

    சினிமா தயாரிப்பாளர் ஜிவெங்கடேசுவரன் மதுரை கந்துவட்டியாளர்களிடம் இருந்து வந்த தொடர்மிரட்டல்களால் தற்கொலை செய்தது தமிழ்நாட்டையே குலுக்கியதே?.பேரன்புக்கும்பெருமதிப்புக்குமுறிய பெரியவர் திருகிருட்டிணக்குமார்போன்றவர்கள் இப்படி லோக்அதாலத்தில்நின்று பார்த்து வட்டிக்கொடுமை எப்படி ஏழைகளைஅழிக்கிறதுஎன்றறியலாம். He wll get sensitised to the sufferings of the poor under usury. அம்மனறங்கள் திறந்தவெளியில் நடப்பவை.

    ஜீவி தற்கொலை ;பண்ணியது அவர் மானஸ்த ர்எனபதால். இந்தியாவிலேயே அதிகம் வருமான வரியைக் கட்டி சாதனை படைத்து தன் நேர்மையைக் காட்டியவர்.

    மதுரையில் வாழ்ந்தவன் நேரடியாகப் பார்த்தவன் என்ற காரணத்தால் உலகத்தில் ஒரு மதத்திலாவது இக்கொடுமை அறவே தண்டிக்கப்பட்டதே என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு ஏழைக்குடும்பம் கடனைத் திருப்பித்தர முடியாததால், அவர்களின் வயதுப்பெண்ணையே கடத்திச் சென்றுவிட்டார்கள் மதுரை கந்துவட்டிக்காரர்கள். அவர்கள் மதுரை கலெக்டரிடம் வந்தழுதார்கள்

    மதுரை
    ஒருகந்துவட்டிக்காரர்களின்
    நரகம்.

  10. Avatar
    paandiyan says:

    சமூக தளங்கள் வாயிலாக தலாக் சொல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியாவில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் இஸ்லாமிய முறைப்படி தலாக் சொல்லி பிரியும் தம்பதிகளில் அதிகமானோர், சமூக தளங்கள் வாயிலாக தலாக் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஸ்கைப், வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலமாக தலாக் சொல்லும் விவகாரத்து முறை தற்போதைய காலங்களில் அதிகரித்திருப்பது பெண்களை கவலையடையச் செய்கிறது.

  11. Avatar
    ashak says:

    அதெல்லாம் கோத்திரம் , ஒரு கோத்திரத்தார் மற்றவருடன் ஒரே பள்ளியில் தொழுவார், ஒரே தட்டில் உண்பார், தொட்டால் குளிக்க தேவை இல்லை , திருமணம் செய்ய முடியும்

  12. Avatar
    ashak says:

    தலாக்கை பற்றி சரியான விளக்கமும் புரிதலும் இல்லாமல் நடக்கும் துர் செயல்கள் , இறைவனின் மிகவும் பிடிக்காத செயல்களில் ஒன்று தலாக்

  13. Avatar
    வில்லியம் says:

    ஜாதிகள் எம்மிடம் இல்லை. மற்றவர்களிடமே உண்டு. நாம் ஒரே தட்டில் ஒன்றாகவே சாப்பிடுவோம். ஒரே பள்ளியில் ஒன்றாகவே தொழுவோம் என்பவரின் தலையாக விளங்கும் சவூதியிலுமா சாதி வெறி. முஸ்லிம் நாடுகள் தங்களிடையே இனரீதியாக கொலைகளைச் செய்து விட்டு, அமெரிக்காவின் சதி என்று கூறும் முஸ்லிம்களை என்னவென்று கூறுவது…
    இனம் இனத்தோடு மட்டுமே சேரும். ஆனால் வெள்ளையர்கள் மற்றவர்களையும் அரணைப்பார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் மறந்து விடுகிறது. சிரியா அகதிகளை அருகிலுள்ள எந்தவொரு முஸ்லிம்… முஸ்லிம்… என்று மார்பு தட்டிச் சொல்லும் முஸ்லிம் நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐயோ பாவம் மத்திய கிழக்கு முஸ்லிம்கள்…

  14. Avatar
    நலன்விரும்பி says:

    சவூதியில் இஸ்லாம் சட்டப்படி தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆண் செய்தால் சிறிய தண்டனை. பெண் செய்தால் தூக்கிப்பிடித்து மரண தண்டனை. அதாவது சவூதியில் பெண் அடிமைத்தனம் இன்றும் உள்ளது. சவூதி ஆண்களின் விபசாரம் என்னவென்று சொல்ல. அநேக வீட்டுவேலைக்காரிகளை (வெளிநாட்டு) சுவைப்பது இந்த அரேபியன்கள் தான். அவர்களுக்கு சட்டத்தில் சலுகை. அநேக பெண்கள் சித்திர வதைக்குட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் நாடு திரும்பிய பின் அவர்களுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. எருமைமாட்டு அரேபியனுக்கு தண்டனையும் இல்லை.
    கடந்த வருடத்திற்கு முந்திய வருடம் சவூதியில் ஒரு இமாம் தன் சொந்த மகளை (சிறுமியை) கற்பழித்து, கொலைச் செய்தான். அந்தப் பாவிக்கு எந்தவித தண்டனையும் இல்லை. இதுதான் சவூதியா…. சிந்திக்க வேண்டும். பெண்கள் அடிமைகளாக வீட்டு வேலைக்குச் செல்லவது தவிர்க்கப்பட வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *