உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -4, 5, 6

This entry is part 11 of 13 in the series 18 டிசம்பர் 2016

கி.பி. [1044  – 1123]

 

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள்.  அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார்.  உமர் கயாம் பாரசீக  அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம்.  நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது.  முதன்முறை செய்தவை  என்றும் சில பதிப்புகள் கூறும்.

4.   புத்தாண் டிப்போ  போன ஆசைகள் புதுப்பிக்கும்

சிந்திக்கும் ஆத்மா தனிமை நாடி ஒதுங்கிடும்

மோசஸ் வெளுத்த கை கிளைமேல் தீயணைக்கும்

ஏசு நாதர் தரணி மேல் விடுவது பெரு மூச்சு.

 

  1. Now the New Year reviving old Desires,

      The thoughtful Soul to Solitude retires,

      Where the WHITE HAND OF MOSES on the Bough

      Puts out, and Jesus from the Ground suspires.

  

5.  ஈராம் பறவை போனது  உண்மை, தன் மலரோடு

ஏழு வளைக் கும்பா போன தெங்கே என்றறியார்,

ஆயினும் உள்ளது திராட்சை; பூர்வ ரூபி பயன்தரும்,

இன்னுமொரு பூங்கா நதிக் கருகில் மணம் வீசும்.

  1. Iram indeed is gone with all its Rose,

      And Jamshyd’s Sev’n-ring’d Cup where no one knows;

      But still the Vine her ancient Ruby yields,

      And still a Garden by the Water blows.

6.  தாவிதின் வாயிதழ்கள் மூடித்  தெய்வீகமாய்

ஊது குழல் முழக்கும், “ஒயின், ஒயின், ஒயினென !

கூவும் குயில் பூவிடம்  கேட்கும், “செந்நிற ஒயின்.”

கன்னியின் மஞ்சள் கன்னத்தில் பொன்  மினுக்கும்.       

 

  1.  And David’s Lips are lock’t; but in divine

           High piping Pehlevi, with “Wine! Wine! Wine!

           “Red Wine!”—the Nightingale cries to the Rose

            That yellow Cheek of hers to incarnadine.

++++++++++++++

Series Navigationநல்லார் ஒருவர் உளரேல்மார்கழியும் அம்மாவும்!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *