எனக்கோர் இடமுண்டு !

This entry is part 6 of 7 in the series 26 ஆகஸ்ட் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

++++++++++++

 

அதோ ! அங்கோர்  இடமுண்டு !

அங்கே நான் போவ துண்டு

இதயம் ஒடியும் போது,

சிரம்  தாழும் போது,

என் மனக் கோட்டை அது !

 

காலம் காத்திருப்ப தில்லை !

தனித்துள்ள போது எனக்குன்

இனிய நினைவு எழும் !

நேசிப்ப துன்னை மட்டும் என்று

நீ சொன்ன வாசகம்,  தினம்

நீ புரியும் செயல்கள் ,

மனதைச் சுற்றி வட்டமிடும் !

 

மனதில் துயரில்லை எனக்கு !

அது தெரியாதா உனக்கு ?

துயர்தரும் மறுநாள் இல்லை  எனக்கு !

அது தெரியாதா உனக்கு ?

 

அதோ ! அங்கோர்  இடமுண்டு !

அங்கே நான் போவ துண்டு

இதயம் ஒடியும் போது,

சிரம்  தாழும் போது,

என் மனக் கோட்டை அது !

 

Series Navigationதொடுவானம் 237. சூழ்நிலைக் கைதிஅன்னாய் வாழி பத்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *