துணைவியின் இறுதிப் பயணம் – 12

This entry is part 4 of 8 in the series 10 பெப்ருவரி 2019

சி. ஜெயபாரதன்கனடா

 

என் இழப்பை நினைஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

[39]

அணையாத கனல்

ஏற்றி வைத்த உன்

மெழுகுவர்த்தி ஒருநாள்

காற்றடிப்பில்

பட்டென அணைந்து விடும் !

எரியும் விளக்குகள்

எல்லாமே

ஒருநாள் அணைந்து போகும் !

உன் உடம்பும்

ஒரு மெழுகு வர்த்தியே !

அதிலே ஆட்சி புரியும்

ஆத்ம உயிரும் ஓர்

தீக்கனல் சக்தியே !

ஒருநாள்

அணைந்து போகும் தீக்கனல் !

என் வீட்டில் வாழ

ஏற்றி வைத்த

ஓர் கலங்கரை விளக்கு

என் துணைவி !

அவள் நடமாடும் தீபம் !

குப்பெனப் புயலில் அணைந்து

எங்கும் இருள் மயம் !

துணைவிக்கு

அன்று நான் இட்ட தீ

அணைந்தது,

ஆனால் அதனால்

எனது நெஞ்சில் பற்றிய தீ

இதுவரை

அணைய வில்லை ! அது

அணையுமா ? அணையுமா ? என்றும்

அணையுமா ?

+++++++++++++++

 [40]

அறுந்த தொப்புள் கொடி

பிறந்த சிசுவுக்கு இருப்பது

ஒன்றில்லை ,

தொப்புள் கொடிகள்

இரண்டு !

பெற்ற தாயுடன்

இணைந்தது ஒன்று !

தெரிவது

மனித கண்ணுக்கு !

சேயிக்குத் தெரியாமல்

இயங்கி வருவது

இரண்டாவது தொப்புள் கொடி !

படைப்பாளியுடன்

பிணைந்தது !

ஆத்மப் பிணைப்பு அது !

உயிர்ப் பிணைப்பு !

தெரியும் தொப்புள் கொடி

அறுத்தால்

சேய் தானாய் இயங்கும் !

தெரியாத

தொப்புள் கொடி அறுந்தால்

செத்துவிடும் சேய் !

துணைவிக்கு அறுந்து போனது

பிணைப்புக் கொடி !

+++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

Series Navigationஅண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய            சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *