துணைவியின் இறுதிப் பயணம் – 12

துணைவியின் இறுதிப் பயணம் – 12
This entry is part 4 of 8 in the series 10 பெப்ருவரி 2019

சி. ஜெயபாரதன்கனடா

 

என் இழப்பை நினைஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

[39]

அணையாத கனல்

ஏற்றி வைத்த உன்

மெழுகுவர்த்தி ஒருநாள்

காற்றடிப்பில்

பட்டென அணைந்து விடும் !

எரியும் விளக்குகள்

எல்லாமே

ஒருநாள் அணைந்து போகும் !

உன் உடம்பும்

ஒரு மெழுகு வர்த்தியே !

அதிலே ஆட்சி புரியும்

ஆத்ம உயிரும் ஓர்

தீக்கனல் சக்தியே !

ஒருநாள்

அணைந்து போகும் தீக்கனல் !

என் வீட்டில் வாழ

ஏற்றி வைத்த

ஓர் கலங்கரை விளக்கு

என் துணைவி !

அவள் நடமாடும் தீபம் !

குப்பெனப் புயலில் அணைந்து

எங்கும் இருள் மயம் !

துணைவிக்கு

அன்று நான் இட்ட தீ

அணைந்தது,

ஆனால் அதனால்

எனது நெஞ்சில் பற்றிய தீ

இதுவரை

அணைய வில்லை ! அது

அணையுமா ? அணையுமா ? என்றும்

அணையுமா ?

+++++++++++++++

 [40]

அறுந்த தொப்புள் கொடி

பிறந்த சிசுவுக்கு இருப்பது

ஒன்றில்லை ,

தொப்புள் கொடிகள்

இரண்டு !

பெற்ற தாயுடன்

இணைந்தது ஒன்று !

தெரிவது

மனித கண்ணுக்கு !

சேயிக்குத் தெரியாமல்

இயங்கி வருவது

இரண்டாவது தொப்புள் கொடி !

படைப்பாளியுடன்

பிணைந்தது !

ஆத்மப் பிணைப்பு அது !

உயிர்ப் பிணைப்பு !

தெரியும் தொப்புள் கொடி

அறுத்தால்

சேய் தானாய் இயங்கும் !

தெரியாத

தொப்புள் கொடி அறுந்தால்

செத்துவிடும் சேய் !

துணைவிக்கு அறுந்து போனது

பிணைப்புக் கொடி !

+++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

Series Navigationஅண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய            சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *