அகஒட்டு( நாவல்)விமர்சனம்

This entry is part 9 of 37 in the series 18 செப்டம்பர் 2011

அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.

கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற  பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்நாவலில் அத்திவெட்டி என்ற ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார்   மகன் செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம்.    இவரது கைவண்ணத்தில் தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள் முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.

செல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின் குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி  தந்தை சின்னசாமி,  தாய் சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக் காட்டவும் முடியாமல், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.

செல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன் நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின் குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.

“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற உணர்வு வந்து படுத்தியது.   இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள், அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா,  நல்ல தண்ணீர், நல்ல காற்று  என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போக வேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”

என்ற   நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர் மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே, பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப் போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.

படிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க, அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப் படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம் அதிகமில்லாத ஆனால்  பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத அந்தப் பணியை நம்பி தஞ்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார் வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச் சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் செல்வம் அலைப்புறுகிறார்.

தனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.

ஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத் தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச் செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம்  இருச்துச் செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.

முரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன் தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.

“முரளி தங்கியிருந்த  ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி இவன்…. ‘ என எரிச்சலடைந்தான்.  `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த  ருமு என்னா ஹைதர் அலி காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று கேட்டான் செல்வம்.

…`சரி.. தொலஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்”  என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை தெளிவாகிறது.

இதன்பின் முரளி என்ற பாத்திரத்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து  வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார், பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறான்.

இரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம் என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன் காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.

உறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின் காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.

அகவொட்டு என்ற  நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக் காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர் வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள் புரிந்து கொள்ள  முயலவேண்டியுள்ளது.

நாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை ஓட்டியபடி அத்திவெட்டியில் அறிமுகமாகிறார்.  தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ் சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும், நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக் கூடும்.

இந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின் கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத் தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும்.  தொடரவேண்டும்.

———- முன் அனுப்பப்பட்டத் தகவல் ———-
அனுப்புநர்: palaniappan m <muppalam2006@gmail.com>
தேதி: 12 செப்டெம்ப்ர், 2011 8:27 am
தலைப்பு: திண்ணைக்காக அகஒட்டு என்ற நூலின் விமர்சனம்
பெறுநர்: editor@thinnai.com

அகஒட்டு( நாவல்)

இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.

கவிதையையே தன் வாழ்க்கையாக வரித்துக் கொண்டவர் கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற  பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்நாவலில் அத்திவெட்டி என்ற ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார்   மகன் செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம்.    இவரது கைவண்ணத்தில் தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள் முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.

செல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின் குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி  தந்தை சின்னசாமி,  தாய் சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக் காட்டவும் முடியாமல், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.

செல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன் நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின் குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.

“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற உணர்வு வந்து படுத்தியது.   இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள், அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா,  நல்ல தண்ணீர், நல்ல காற்று  என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போக வேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”

என்ற   நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர் மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே, பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப் போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.

படிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க, அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப் படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம் அதிகமில்லாத ஆனால்  பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத அந்தப் பணியை நம்பி தஞ்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார் வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச் சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் செல்வம் அலைப்புறுகிறார்.

தனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.

ஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத் தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச் செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம்  இருச்துச் செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.

முரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன் தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.

“முரளி தங்கியிருந்த  ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி இவன்…. ‘ என எரிச்சலடைந்தான்.  `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த  ருமு என்னா ஹைதர் அலி காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று கேட்டான் செல்வம்.

…`சரி.. தொலஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்”  என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை தெளிவாகிறது.

இதன்பின் முரளி என்ற பாத்திரத்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து  வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார், பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறான்.

இரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம் என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன் காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.

உறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின் காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.

அகவொட்டு என்ற  நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக் காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர் வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள் புரிந்து கொள்ள  முயலவேண்டியுள்ளது.

நாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை ஓட்டியபடி அத்திவெட்டியில் அறிமுகமாகிறார்.  தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ் சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும், நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக் கூடும்.

இந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின் கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத் தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும்.  தொடரவேண்டும்.

 முனைவர் மு. பழனியப்பன், இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி,புதுக்கோட்டை

Series Navigationஜென் ஒரு புரிதல் 11அடைமழை!
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *