பாடல் : சி. ஜெயபாரதன், கனடா
இசைப்பாடகி : வே.ரா. புவனா
காட்சி அமைப்பு : பவளசங்கரி
சி. ஜெயபாரதன், கனடா
- தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி
- மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- நீ வருவாய் என…
- நான்காவது கவர்
- யாரோடு உறவு
- சிப்பியின் செய்தி
- தமிழர்களின் புத்தாண்டு எப்போது?
- திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.
- வாய்ச்சொல் வீரர்கள்
- சொல்லத்தோன்றும் சில
- வடகிழக்கு இந்திய பயணம் – 4
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்
புதுச் சேர்க்கையுடன் இதை மீண்டும் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன்.
நன்றி,
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
[கவிக்கோ, கவியரசு, கவிப்பேரரசு சேர்க்கை]
தங்கத் தமிழ்நாடு
சி. ஜெயபாரதன் & இராம. மேகலா
தங்கத் தமிழ்நாடு! எங்கள் தாய்நாடு!
சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
முத்தமிழ் வேந்தர் வளர்முத் தமிழ்மொழி
மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
வங்கக் கடலெழு செங்கதிர் ஒளிபடும்
தென்னக முனையில் வள்ளுவர் சிலைநிழல்
ஆத்திசூடி ஓளவை, திருப்பாவை ஆண்டாள்,
திருக்குறள் வள்ளுவர், சிலம்பு இளங்கோ,
புரட்சிக்கவி பாரதி, புதுமைக்கவி பாரதிதாசன்,
அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர்,
கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ, சேக்கிழார்
யாவரும் உனது மாதவ மக்கள்!
யாதும் நாடே யாவரும் கேளிர்!
மேதினியில் உனைப் பாதுகாத் திடுவோம்!
காசினி மீதில் நேசமாய்த் திகழும்
மாசிலா நாடே! மைந்தர்கள் ஒன்றாய்
வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
பாரதத் தாயின் தவத்திரு நாடே!
பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!
++++++++++++++++
அற்புதம்