____________________________________
ருத்ரா
சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை
பல்கலைக்கழகம் எனும்
அடிப்படைக்கட்டுமானத்தையே
அடித்து நொறுக்கி விட்டது.
தேர்வு எழுத வரும் மாணவர்கள்
இந்த செல்லமான பூனைக்குட்டியை
வைத்துக்கொண்டு
புயல் கிளப்புகிறார்கள்.
உண்மை அறிவு காணாமல்
போய்விட்டது.
செயற்கை அறிவின் இந்த
கருவி
வெறும் மண்ணாங்கட்டியைக்கூட
நோபல் பரிசு
வாங்க வைத்து விடும்.
மனிதர்களின் மூளையின் நிழலே
இனி ஆட்சி செய்யும்.
அமெரிக்க பள்ளிக்கூடங்கள்
மாணவர்கள் இந்த
சேட்ஜிபிடியை
பயன்படுத்த தடை
விதித்துக்கொண்டிருக்கிறது.
கணினியுகம் கண்மூடித்தன்மான
ஒரு யுகத்துள் விழுந்து விட்டதால்
இனி பிறக்கும் குழந்தைகளின்
கபாலங்கள் காலியாகவே
இருக்கும்
மூளைகள் இன்றி.
செயற்கை அறிவின் கதிர்வீச்சில்
இயற்கை சிந்தனைகள்
பூண்டற்றுப்போகும்.
ஒரு இறுக்கமான பனியுகம்
நம் அறிவை உறையவைத்து
இந்த உலகையே
விறைத்துப்போகவைக்கும்
பேரழிவு
நம் கைபேசி வழியே வந்து
குதிக்கப்போகிறது.
ஒரே தீர்வு
திருக்குறளை தினமும்
ஓதுவது தான்.
நம் நியூரான்களுக்குள்
கிளர்ந்து கொண்டிருக்கும் அந்த
டிஜிடல் சுனாமியை
எதிர் கொள்ள
ஓ மனிதா!
மனிதம் எனும் ஆற்றலை
ஒரு எரிமலையாய்
உன்னிலிருந்து
உமிழச்செய்.
சமுதாய உணர்வின் பிரளயம்
ஒன்றே இதைத்தடுக்கும்.
அமிழ்ந்து விடாதே
சுயநல வெறியின்
இந்த அகங்காரக்கடலில்.
- இரு கவிதைகள்
- ஓ மனிதா!
- அகழ்நானூறு 13
- மகாத்மா காந்தி மரண நினைவு நாள் [1869-1948]
- காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு
- இரண்டு ரூபாய்….
- இரவுகள் என்றும் கனவுகள்.
- கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி
- இரண்டாம் தொப்பூழ்க் கொடி
- படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின் தூங்கா நகர் நினைவுகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை
- புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
- பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?
- முத்தப் பயணம்
- சருகு
- நித்தியகல்யாணி
- தேர் வீதியும் பொது வீதியும்…
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4
- வேரில் பழுத்த பலா
- நெய்வேலி பாரதிக்குமாரின் மனித வலியுணர்த்தும் எழுத்துகள்