திறவுக்கோல்

This entry is part 20 of 45 in the series 9 அக்டோபர் 2011

அகம் சார்ந்த
வாழ்வை
பழித்து விடப்பட்டிருக்கிறது
ஆதலால்
முன்னோர்களின்
வழியின்
திறவுக்கோல்
வைத்து
சரிப்பார்த்துக்கொள்ள
முடிகிறது
நான் எதிர் கொள்ளும்
அனைத்தின் விளைவுகளும் .

இதில்
திறவுக்கோல்
அளவுகள்
பரிசோதிக்க
அவசியம் இருக்கவில்லை
அனைத்துக்குமான
நிறைவை
உள்ளடக்கியது இவை .

என் அகம்
பிரபஞ்ச தொன்மையில்
தொலைந்து போயிந்த ஒன்று
வார்த்தையின் தேடல்களில்
அவை சிக்குவதில்லை
மன உணர்வின்
அதிர்வுகளும்
அறிவதில்லை .

கிடைக்க பெறாத
எதுவுமே
நம்பிக்கையாக்கப்படுவதால்
அவ்வண்ணமே
நானும் ஆக்கப்பட்டேன் .

கொடுர நம்பிக்கை கொண்டு
திறக்கப்பட்ட
அதன் வினையின்
கணம்
மேலும் அழுத்தத்தின்
வெற்றிடமாகவே
காட்சிப்படுத்துகிறது
ஒளிகளின் சேர்ப்பு.

கிடைக்க பெறாத அகமும்
திறவுக்கோலும்
அதன் நம்பிக்கைகளும்
முன்னோர்களின் வழியே
தேடும் பொருளாக
உலவுகிறது என்
பிரபஞ்ச கனவுகள் .
வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationநன்றி மறவா..!வியாபாரி
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *