“தமிழ்ச் சென்ரியு கவிதைகள்”

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 7 in the series 27 ஏப்ரல் 2025

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை 

@

பாண்டவர் கூத்தில் தருமர்

மகிழுந்தில் சென்ற பாட்டி

வீட்டிற்கு நடந்து வந்தார்

வாக்குச்சாவடி 

@

விடாமுயற்சியே வெற்றி 

பேச வந்தவரின் ஒலிவாங்கியில்

தொடர் சிக்கல்

@

பிள்ளையார் சிலை

மறைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்

கைபேசியில் பூசாரி 

@

வீட்டைப் பூட்டிய பின்

இழுத்து உறுதி செய்தார்

பணிக்குச் செல்லும் திருடன்

@

பசிக்கும் வயிறு

அவசரமாய் சாப்பிட்டான்

ஆகாரத்துக்கு முன் மாத்திரை 

@

குத்துச்சண்டை வீரர்

கதறி கதறி அழுகிறார்

சொத்தைப் பல்

@

தேர்தல் பிரச்சாரம் 

சேகரிக்கப்பட்டன

பிரியாணி டோக்கன்

@

நீண்ட சாலை

வளைந்து செல்லும் கால்கள்

குடிமகன்

@

தொடர்வண்டி கழிவறை

ஒட்டவே இல்லை

சங்கிலியில் ஜக்கு

Series Navigationகம்பரின் ஏரெழுபது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *