நிறமாறும் அலைகள்

நிறமாறும் அலைகள்
This entry is part 3 of 12 in the series 27 ஜூலை 2025

சம்சா மாலையில் 

கடற்காற்றோடு விற்பவன் 

வாழ்வின் இருண்ட பகுதிகளில் 

முளைந்தெழுந்த 

படகு காதலிகளின் கண்ணீரில் நனையும் 

கைக்குட்டைகளில் 

காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி 

போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன். 

அடுத்த படகில் 

அதே காதலன் 

வேறு காதலி. 

கண்ணகி நேற்று 

மாதவி இன்று 

மணிமேகலை நாளை வருவாள். 

சம்சா விற்றவன் 

விவேகானந்த பாறையில் 

தியானம் செய்தான் 

ஒரு மாலை நேரத்தில்.

கிட்டத்தட்ட சந்நியாசி ஆனான். 

கடற்கரை காற்றில் 

கற்பின் வாடை தெரியவில்லை. 

பழைய பஞ்சாங்க மாமாக்கள்தான் 

கட்டங்களைப்பார்த்து 

பெண்ணிற்கு செவ்வாய்தோஷம் என்றனர். 

படகுகள் இருக்கும் வரை 

செய்வாயோ, புதனோ 

எப்படியும் ஒரு சுக்கிரன் 

சிக்கினால் போதுமென்று 

இன்னுமும் எம்ராய்ட்ரி 

போடுவர் காதலிகள்.

  -ஜெயானந்தன். 

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 4…………….. எப்படி ?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *