அவனுக்கு தெரிந்த, தெரியாத,
நதி,உபநதி,கிளைநதி
எல்லாமே அவனதுபோல் உணர்வு.
பாடும் பறவைகள்,
வீசும் காற்று,
மலரும் நந்தவனம்
உயர்ந்த மலைகளும்
குன்றுகளும் கோபுரமும்
எல்லாமே அவனதா?
கேள்விக்கேட்டு
தியானத்தில் அமர்ந்தவனுக்கு
அவனே
ஒன்றுமில்லா
உயிராக நின்ற தருணம்
எல்லாமே
ஒன்றுக்குள் ஒன்று
பிண்ணிப்பிணைந்து
உருவாகி, உருமாறி
சூன்யமாய் உணர்ந்தான் .
சூன்யத்தில் சூன்யமாய்
காற்றோடு, ஒளியோடு, ஒலியோடு
மண்ணோடு, நீரோடு
ஆகாயமாய் நின்றுணர்ந்த
தருணமே நிலையானது
தவத்தில் நின்றவனுக்கு.
– ஜெயானந்தன்
- இலக்கியப்பூக்கள் 344
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
- நிறமாறும் அலைகள்
- …………….. எப்படி ?
- *BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]
- வண்ண நிலவன்- வீடு
- தவம்
- கல்விதை
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
- நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
- தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை