அன்றாடத்தின்
அத்தனை அலுவல்களுக்கிடையிலும்
அமிலமென
அரித்துச் சொட்டுகிறது
வலிகள் தந்த
வார்த்தைகள்
எங்கிருந்து
எப்படி வருகிறதெனும்
பாதைகள்
அறிய முடியாத
பரிதவிப்பில்.
பிறரின்
வார்த்தைகளைக் கொண்டு
முகவாடலை
மறைக்க
எத்தனிக்க
யாதொரு
முகமூடிகளற்ற
தவிப்பில்
கழிகிறது
கணங்கள்
கொட்டியவர்
இல்லாதபொழுதும்.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com