ஜென் ஒரு புரிதல் – பகுதி 23

This entry is part 5 of 39 in the series 18 டிசம்பர் 2011

நமது வாசிப்பில் “ஹகூயின்” என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைக் காண்கிறோம்.

ZAZEN பாடல் (ஜஜேன் என்பது பத்மாசனத்தில் பலரும் ஒன்றாய் அமர்ந்த்து தியானம் செய்யும் முறை ஆகும்)
——————
எல்லா உயிர்களும் அடிப்படையில் புத்தர்களே
தண்ணீரையும் பனிக்கட்டியையும் போல
தண்ணீரில்லாமல் பனிக்கட்டி இல்லை
ஏனைய உயிர்களிடமிருந்து பிரிந்த புத்தர்கள் இல்லை

தமக்கு எவ்வளவு நெருங்கியது இவ்வுண்மை என்றறியாமல்
தொலைவில் எங்கேயோ தேடுகிறார்கள்; பரிதாபம்!
தண்ணீரால் சூழப்பட்டர்கள் தாகம்
என்று கதறுவது போல்

ஒரு பணக்காரரின் மகன்
தன் தந்தையை விட்டுத் தள்ளிப் போய்
ஏதுமற்றவர்களுள் ஒருவனாய்த் திசை இழந்து
போனதற்கு ஒப்பாகும் அது
உயிர்கள் ஆறு நிலைகளுக்குள்
மாறி மாறி உழல்வதற்கு இந்த
அறியாமையே காரணம்

(ஆறு வகை உயிர்கள்: நரகத்திலிருப்பவர்கள், பேய்கள்,விலங்குகள், அசுரர்கள், மனிதர்கள், தேவர்கள்)

ஒரு இருளிலிருந்து இன்னொரு இருளுக்கு இடம் மாறும்
அவர்கள்
எப்படி பிறப்பிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட இயலும்?

மகாயானாத்தில் கூறப்பட்டுள்ள தியான முறைகளுக்கு
ஈடு இணை ஏதுமில்லை
ஆறு “பரமிதஸ்”ஸின்
சாராம்சம் தியானமே
(ஆறு “பரமிதஸ்”: 1. கொடுத்தல், 2. கட்டுப்பாடுகளை மேற் கொள்ளல், 3.சகிப்புத்தன்மையும் பொறுமையும்
4.வலிமை (மனத்திண்மை) 5.ஆழ்நிலை தியானம் / சமாதி 6.ஞானம்)

ஒரு முறை அமர்ந்து உண்மையான ஈடுபாட்டுடன்
இருந்தால் அதுவரை செய்த பாபங்கள் அனைத்தையும்
போக்குமளவு தியானம் உயர்ந்தது
அப்போது தீய வழிகள் என்கே இருக்கும்?
புனிதமான பூமி அதிக தூரத்தில் இருக்காது

ஒரு முறையேனும் தர்ம வழி பற்றிப்
பணிவுடன் செவி மடுத்துப்
புகழ்ந்து பின்பற்றி வழி நடப்போர்
எண்ணற்ற மேன்மைகளை அடைவார்

ஆனால் உனது விழிகளை உனக்குள்ளேயே
செலுத்தித் தேடி
உனது அகத் தன்மையை உணரும் போது
எத்தனையோ இருக்கிறது
அக இயல்பு என்றொரு தன்மை இல்லை
என்பதை நீ காண்பாய்
பயனற்ற வறட்டு வாதங்களை
உண்மை அனுமதிப்பதில்லை

அப்போது உன் எதிரே காரணமும் விளைவும் ஒன்றுபடும்
இலக்கை அடையும் கதவு திறக்கும்
உன் எதிரே இருமை, மும்மையும் இல்லாத பூரணத்திற்கான
நேர் வழி நீளும்

அப்போது வடிவம் என்பது வடிவமின்மையின் வடிவே
என்று தெளிவாய்

Series Navigationஅந்தக் குயிலோசை…“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *