அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 329ஆம் இதழ், 27 அக்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: வாசகர் கடிதங்கள் கட்டுரைகள் கலை காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்ரமணன் நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp) – ஆர்.சீனிவாசன் இலக்கியம்/கருத்து நிற(ப்)பிரிகை – பானுமதி ந. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல் அறிவியல் ஆராயும் தேடலில் […]
கோ. மன்றவாணன் பின்இரவு நேரம். சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. கோழிக் கோட்டில் இருந்து மஞ்ஞேரி நோக்கி அந்தப் புதிய மகிழுந்து பறக்கிறது. பின்னிருந்து துரத்தும் நிலாவால் அந்தக் காரை முந்த முடியவில்லை. இன்னும் வேகத்தை அதிகப் படுத்துவதற்காக உடலை அசைத்து நேராக அமர்கிறார் அதன் ஓட்டுநர். அதே நேரத்தில் திடீரெனச் சாலையின் குறுக்கே கை அசைத்தபடி ஒரு முதியவர் ஓடி வருகிறார். மின்னல் எனத் திசைமாற்றியை இடது பக்கம் ஒடித்து, வலது பக்கம் திருப்பி நிறுத்துக் கட்டையை […]
கோ. மன்றவாணன் மரபுக் கவிதைகளுக்குத் தலைமை தாங்குவது வெண்பாதான். அதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை; அதற்கெனப் பல கட்டுப்பாடுகள் உண்டு; அதற்குள் சிந்தனையை அடக்குவது என்பதும் எளிய செயல் இல்லை; சிமிழுக்குள் சிகரத்தை வைப்பது போன்றது என்றே பலரும் கருதுகிறார்கள். பெரும்புலவர்கள் பலரும் வெண்பா எழுத முடியாமல் திணறி இருக்கிறார்கள். புகழ்பெற்ற புலவர்கள் எழுதிய வெண்பாக்களில் தளை தட்டும் இடங்களைச் சுட்டிக் காட்டிப் பேர்வாங்கும் புலவர்களும் உண்டு. வள்ளுவரின் திருக்குறளில்கூட தளை தட்டுகின்றது எனச் […]
ரவி அல்லது குப்பைகள் ஒதுக்கி கொய்த. உற்சாகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது கொத்தித் தின்கிறது புறம். மீய்ந்த சொர்க்கத்தில்தான் மிதக்கிறது வாழ்வு பூரித்தலாக எப்பொழுதும். *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com
ரவி அல்லது காணாத முக வாடலுக்கு கைவரப்பெற்ற எதுவும் உதவவில்லை. பார்த்த பிறகு தான் புரிந்தது. பட்டாலும் பறந்தாலும் பார்ப்பதைத் தவிர பாரினில் பரிதவிப்பை போக்கும் உபாயம் ஒன்றுமில்லையென. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com ***
ஆர் சீனிவாசன் “சீக்கரம் கிளம்பு. நேரமில்லை. இன்னும் கொஞ்சநேரத்துல ஞால ஹைபெர்வேல நெரிசல் அதிகமாயிடும்” சக்திவடிவேல் அலரிடம் சொன்னான். மெதுவாக ஜன்னலுக்கு வெளியே நிலவை பார்த்து கொண்டிருந்தாள் அலர். செயற்கை லாந்தர்களின் ஒளியில் நிலவொளி மறந்து போன காலம் அது. வெட்ட வெளியில் பூர்ண நிலவின் ஒளியில் உலகை பார்க்கும் சிறு இன்பம் மிக குறைவானவர்களுக்கு மட்டும்தான் வசீகரமாக இருந்தது. மெதுவாக மெல்லிய குரலில் “விட்டுட்டு போக மனசே இல்லை” என்றாள். “எனக்கும் தான்… ஆனா வேற […]
வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம் கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது. ‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் எழுதும் சமையற் குறிப்புகள், எமது பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பயணக்கட்டுரைகள், தாங்கள் பிறந்த மண் பற்றிய ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தாயகம், கனடா பற்றிய செய்திகள் […]
வசந்ததீபன் வானத்தில் மிதக்கிறது குளத்தில் மிதக்கிறது என் கனவிலும் மிதக்கிறது நிலா மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் இலக்கியம் புனைவானது கண்காணிப்பு காமிரா வருபவர்களை கண்டுபிடிக்கணும் அவள் மீது அவன் கண்காணிக்கிறான் காகிதத்தில் எழுதி மகிழ்கிறான் 500 கோடி ஆயிரம் கோடி அடித்து வெளியே எறிந்தபடியே இருந்தேன் அந்த கரப்பான்பூச்சி வந்தபடி இருந்தது தனியனான என்னோடு இருக்கட்டுமென விட்டுவிட்டேன் இருளைக் குடித்தது ஒளியாய் உருவெடுத்தது தீபத்தின் சுடர் தெருவோரத்தில் உட்காருகிறான் இந்த நாட்டுக் குடிமகன் வீடற்ற […]
வசந்ததீபன் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான் வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன புத்தன் அலுக்காமல் அலைகிறான் பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன் குழந்தைகளிடம் பாடக் கற்றுக் கொண்டேன் கண்ணாடியிடம் சிரிக்கக் கற்றுக்கொண்டேன் கவிதைகள் பூக்கின்றன பூக்கள் பூக்கின்றன ஈர இதயம் போர்க்களம் பூக்களம் பாக்களம் மன்னிப்பதா ? தண்டிப்பதா ? மனசைக் கேட்டுச் சொல்கிறேன் புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம் அதிர்வுகளை தாங்காது எழுப்பிடும் சப்தம் கனவுகளையே ஜனித்துக் கொண்டிருக்கிறது குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது நின்றபாடில்லை தூர்ந்து போன கிணறு.