ரவி அல்லது பேச்சற்ற பின்னிரவு நேரத்தில்விழுங்கியஉணவு கவலத்திற்குஅம்மாவின் கேவல்தெரியாது. சிருங்காரித்துசேர்ந்தமர்ந்துசெல்லும்வாகனத்தின்டமா டமாவின்கரும்புகையோடானமல்லிகை வாசனைவியக்க வைப்பவர்களுக்குஅம்மாவின்விசும்பல்தெரியாது. பிறிதொரு சமயம்மூன்றாம் வகுப்பில்சாயலொத்த ஒருவன்இருக்கிறானென்றவியப்பில்சொன்னதற்குஅம்மாஅழுததுஅப்பொழுதுஅதன் காரணம்எனக்குத் தெரியாது. ஆள் காட்டி விரலுக்குஅசைந்தாடும்கூட்டத்திற்குஅறக்கூற்றானஅப்பாநீதியாகஎனக்குள்நின்றிருந்ததைபொட்டழிக்காமல்புறப்பட்ட அம்மாபொசுக்கிவிட்டுபோனது அவருக்கே தெரியாது. நடு நிசிகனவெனநான்நினைத்தஒரு கேவல்…ஒரு அறை…ஒரு கெஞ்சலின்…பொருட்டாகசிறாரில் தொடங்கிவிடுதி மாறிவிடுதியாகவேலையெனவெகு தூரம்வந்தவனிடம்அக்காஅழுதுகொண்டேகெஞ்சினாள்அப்பாவைகடைசியாககாணொளியிலாவதுபாருடாகல் நெஞ்சக்காரவென்று. காரணமறியாமலையேபோகும்அப்பாவுக்கும்கடுஞ்சினமானவீட்டாருக்கும்அம்மாவின்சாயலொத்தஎன் மாற்றம்அறியாததுதான். -ரவி அல்லது.
மீனாட்சி சுந்தரமூர்த்தி. ‘இராகவா நாளைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வந்துடு’‘எதுக்குமா,இந்த வாரம் முழுக்க லீவே போட முடியாது’‘ஏற்கெனவே மூணுபேர் லீவுல இருக்காங்க மா’‘ஏண்டா உன்ன அரை நாளுதானே போடச் சொல்றேன்’‘அதான் எதுக்கு னுதான் சொல்லேன்’‘நாளைக்கி வேலூர்ல ஒரு பொண்ண பார்க்கப் போறோம்’‘சரி போயிட்டு வாங்க, நானெதுக்கு?’‘யசோதா அவனுக்குப் புரியல, உனக்குதான் பொண்ணு பார்க்கறோம்.’என்று சொல்லிக் கொண்டே மடிப்புக் கலையாத காக்கி உடையில் தொப்பியைக் கையில்எடுத்துக்கொண்டு வந்தார் கோவிந்தன்.‘அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம், ரெண்டு வருஷம் போகட்டும்’‘நீதான் […]
நா. வெங்கடேசன் [ஶ்ரீம.பா.10.29.1]ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:குதிர் கால இரவில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களைமுகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்தன் யோகமாயையினாலே![ஶ்ரீம.பா.10.29.2]அச்சமயம், கீழ்வானம் ஶிவக்கஅழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பிவெய்யக் கதிரோன் வெயிலில் வாடியவிரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.அஃது, நீண்டு வெளியூர் ஏகித் திரும்பும்மணாளன் தன் அன்பு மனையாளின்ஆசை முகந்தனில்கப்பிய காதலுடன்அப்பிய குங்குமப் பூக்குழம்புபூச்சு போலாச்சே![ஶ்ரீம.பா.10.29.3]குமுதமலர்ந்து பூரணகலை ஒளிசிந்தகுமுதவல்லி திருமுகப்பொலிவாய் சீருடன் புதியகுங்குமப்பூ ஶிவப்பில் சந்திரனவன்இன்னொளியால் வனம் முழுதும் ஶிவந்து கண்ட கோவிந்தன் குழலூதினாரே!கோகுலத்து கோபியர்கள் […]
ரவி அல்லது திரும்பி படுத்தபொழுதில்அழுத்தியபாயின் கோரைக்குநன்றிவிழித்துக் கிடக்கும்இச்சோம்பலில். நினைவகழ்ந்து நெஞ்சுக்குள் புகுந்தஅய்யா வியாபிக்கிறார்போர்வைக்குள் தலையணை நனைய. வாய்ப்பு வசதிகளற்ற நாளில்செக்கிலாட்டிய எண்ணையைசில்வர் பானைகளில்காய வைத்து காப்பதுஅன்றைய நாட்களில்கிராமிய வழக்கம். விளையாடிய வேளையில் யாவையும்எத்தி விழுந்து தட்டிவிட்டதன் கரைகள்பூமியில்பல மழைகள் பார்த்தும்அப்படியேதான் இருந்ததுநோகலின் வடுவாக. வருட சேமிப்புவாசலில் சிதைந்த கோவத்தில்தொரத்திப் பிடிக்கவியலாத ஆற்றாமையில்விலாசிய கம்புமுதுகில்தோல் தெரித்துஇரத்த கசிவானதுஅறுபதுக்கும்ஆறுக்குமான அணுக்கத்தில். துக்க வீட்டின் துயரத்தைப்போலஅய்யாவும்அக்காக்களும்அன்றைய பொழுதில்அழுததைப்போலபிறகு நடந்தபேரிழப்புகளெதிலும் கண்டதில்லைஅவ்வகச்சேர்மான மெய்யை. வேதனையில்விழிக்கும் பொழுதெல்லாம்விளக்கொளியில்மயிலிறகால்தடவிய படி இருக்கும்காட்சிஎந்த ஜென்மத்திலும்அழியாதுபடிமமாகிவிட்டஅய்யாவின் அன்பின்திளைப்பால். சலிக்காமல்சமன் […]
ரவி அல்லது கரைதலின் மீட்சி சற்றேனும் பிடித்து நிறுத்திட முடியாத இம்மனம்தான் சிலரை கோவிக்கிறது. சிலரை வெறுக்கிறது. சிலரை துதிக்கிறது தலைக்கேறிய கௌரவ தொனியில். அந்தியின் மோனத்தில் யாவும் கூடடைய. இதன் தொண தொணப்புதான் நின்றபடியாக இல்லை மேவும் கலைப்பில். சொல் கேளா அதனுடன் இனியொரு பொழுதும் துயருறுவதாக இல்லை குடை பிடிப்பதான அக்கரை அழைப்பில். சிறுமையின் செருப்பெனக் கொண்டாலும் கருணையினால் கரைவதைத் தவிர யாதொரு சுகமுமில்லை முன்கணம் வரை. *** புரை தீர்க்காதப் புண். அன்று […]
ச.சிவபிரகாஷ் ஏழரை சனி வந்து, எழுச்சி மிக காட்டவே, உக்கிரம் தணிக்க, உத்தேசமாக பரிகாரம் சொன்னார்., ஊரறிந்த சோதிடர். சனிக்கிழமைகளில், காகத்துக்கு… எள்ளு சாதமும், சதா…நாட்களில், சாதமும் வைக்க… சுயநல சூழ்ச்சியறிந்து காகம் – அதை மன்றாடியும், மனதிறங்கி, வரவே இல்லை. கரிசனம் காட்டுமா? கடவுளான கிரகமும், தொண்டை கமறிய, காரியும். வெட்டப்பட்ட மரத்தில் – முன் கூடுகட்டி வாழ்ந்த, காகத்தையும், கடைசி வரை, காணவே இல்லை. காய வைத்த, வத்தல்,வடாமை வாயில் கவ்வ, வட்டமடித்து வந்த […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 323ஆம் இதழ், 28 ஜூலை , 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் அஞ்சலி எழுத்தாளர் பொன்னம்மாள் – பாஸ்டன் பாலா கலை எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2 – வெங்கட்ரமணன் இலக்கியம் கொடை மடம் – கே.எம்.ஆர்.விக்னேஸ் ஈவா ஹாஃப்மன் எழுதிய ‘இலுமினேஷன்ஸ்: அ நாவல்’- ஓர் உளவியல் பார்வை – ஸ்ரீவித்யா எஸ் சமூகம் டச்சு […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி மழைமேகம் இருண்டு திரண்டு கொண்டிருந்தது.குண்டூசி இலேசாகப் பட்டால் போதும் படாரென வெடிக்கும் பலூன்போல சடசடவெனக் கொட்டக் காத்துக் கொண்டிருந்தது. வினாயகம். மழை வருவதற்குள் வீடு சேர அலுவலகத்திலிருந்து புறப்பட்டிருந்தார். பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று எல்லோரும் திரும்பும் நேரமென்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. தனியார் வங்கி ஒன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார்.ஆறு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார். சிக்னலில் நிற்கும்போது அலைபேசி சிணுங்கியது. வண்டி ஓட்டும்போது பேசும் வழக்கம் இல்லை […]
வெங்கடேசன் ராஜமோகன் ” பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்ற அறிவிப்பின் மத்தியில் , ஓயாத இறைச்சலோடு , இயங்கி கொண்டு இருந்த எழும்பூர் ரயில் நிலையம் அன்று காலை அங்கு வந்து இறங்கிய பயணிகளை வெளியே அனுப்ப , திணரிக்கொண்டு இருந்தது. ” எங்க சார் போகனும் ” ? அந்த குரலை கேட்டதும் தான் , கதிர் தன் அருகே உரசிடாமல் நிற்கும் ஆட்டோவையும், அதனுள்ளிருந்து அந்த கேள்வியை கேட்டவரையும் கண்டான். “வடபழனி ” அண்ணன்…. […]
சோம. அழகு நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் […]