சோம. அழகு எந்தவொரு மனநிலையிலும் அதற்கு ஏற்ற (அல்லது ஏற்பில்லாத) எவ்வுணர்வையும் பூசிக்கொண்டு எந்தத் தொனியிலும் கூற முடிகிற ஒரு வாக்கியம் இது. ரொம்பவே வெட்டியாக இருந்த அந்த சுபதினத்தன்று ஒரு நொடி சந்திரமுகியாக (ஜோதிகாவைச் சொன்னேன்!) மாறி கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு தினுசாகச் சொல்லிப் பரிசோதித்த பின்பே எழுதுகிறேன். இன்பம், துன்பம், சோகம், விரக்தி, கோபம், சினம், துயரம், பயம், கவலை, ஏமாற்றம், பரிவு, எரிச்சல், சலிப்பு, அலட்சியம், வெறுப்பு, வியப்பு என […]
சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! படித்தோம் சொல்கின்றோம் : சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன…? ! முருகபூபதி “ வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் […]
வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா. 10.47.11] ஒரு தேன் வண்டைக் கண்ட கோபிகை, கண்ணனுடன் இணையும் சிந்தனையில் தன்னையே தேற்றிக்கொள்ள, தாமோதரனின் தூதாக அதையெண்ணி கற்பனை செய்து கூறலானாள்: [ஶ்ரீம.பா. 10.47.12] கோபிகை கூறுகிறாள்: தேனீ! அக்கபடனின் நண்ப! நப்பின்னை கொங்கைகள் நசுக்கிய மார்பு மலரின் குங்குமக்கறை உன் மீசையில் எப்படி? தொடாதே எமது பாதங்களை! வணங்குவதுபோல் பாசாங்கு செய்யும் உன் நொண்டிச் சமாதானம் தேவையில்லை எமக்கு! சொல்லாமல் சொல்கிறாயா எமது போட்டிக் காதலிகளோடு அவ்வனமாலீ ஆடும் பல் […]
ஜி. ஏ. கௌதம் நினைவிருக்கிறதா ? முன்னால் காதலியைமீண்டும் காதலிக்கும் ஒருவனின்கவிதையொன்றை எழுதும் முன்என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்… நினைவிருக்கிறதா !? நீ காதலிக்கப்பட்டமுதல் தருணம் ! அவள் கண்கள்முழுதும் நிறைத்தகாதலின் பூரணம் கண்டுநீ மகிழ்ந்த தருணம் ! கண்சிமிட்டாமல் பார்த்தபடிமடியிலிருந்து இதழுக்குநத்தையாக நகர்ந்துஉன் காதலைமுத்தத்தில் சொன்ன விதம் ! யாருமற்ற உன் வாழ்வின் பாதைஅவள் பாதங்களில் முடியும்ரகசியம் அறிந்த அந்த இரவு ! அவள் கல்லூரியின்மரங்கள் அடர்ந்த பாதையில்சிந்திய மலர்கள்உங்கள் பாதங்களை ஏந்திக்கொள்ளஅவள் கரங்களை இறுகப்பற்றியபடிஅவளுடன் நடந்த […]
ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி . வேப்ப மரத்துக் குயில் கூவியது. அலாரமே தேவையில்லை. இதையாவது நிறுத்தி விட்டுத் தூக்கத்தைத் தொடரலாம் ஆனால் இந்த பொல்லாத பூங்குயிலை ஒன்றும் செய்ய முடியாது. சரியாக ஐந்து மணிக்கெல்லாம் கச்சேரியை ஆரம்பித்துவிடும். யாராவது கேட்கிறார்களா, இரசிக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை.ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றுபவர் போல என்று சொல்லலாமா? ரஞ்சனிக்கு என்னவோ அது தன்னை எழுப்புவதற்கே நாள் தவறாமல் வருவதாக எண்ணம். எந்தபக்கமும் திரும்ப முடியாதபடி ஆளுக்கொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கையைப் […]
சுலோச்சனா அருண் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த […]
Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET யோகா என்றால் என்ன?யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல்லான “யுஜ்” என்பதிலிருந்து உருவானது, இதன் விளக்கம் இணைப்பது அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இது தவிர யோகா என்ற பதத்திற்கு “சங்கமம்” அல்லது “ஒன்று கலத்தல்” என்ற பொருளும் உண்டு. உடல், மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு […]
நிழலாடும் நுரைமங்கள். தேநீரின்உறிஞ்சு சுகத்திற்கிடையில்மீளும்இந்நினைவினைவானொலியில்ஒலித்தபாடல் தான்மீளருவாக்கியதுஆற்றில்குளிக்க வந்தஇவ்வேளையில்.அநேக கற்பிதங்களில்ஆட்பட்டுக்கிடந்தஅன்றைய நாளில் பார்வைகளைத்தவிரபெரிதாகபரிமாறியதில்லைகாதலில்கசிந்துருகினாலும்.கையொடியகாலையில்கடலை கொல்லைக்கு தண்ணீர் இறைத்ததுகண நேரம் தரிசனம்கண்டுவிடத்தான்என்பதைமுதல் வகுப்பில்வாங்கும்பிரம்படியின்போதானவேதனை தாழாதுதுடித்தழும் உன்முக வாடல்நிழலாடுகிறதுநீ சென்ற பாதையைபார்த்தவாறுஇப்பொழுதும். வறுமையின் கோலமெனவருந்தினார்கள்எனக்கெனவெனஅறியாத அநேகர்கள்ஆறு நாளும்அதே பாவாடை தாவாணியில்வருவதைவாஞ்சையுடன்நினைத்து.சிதிலமடைந்த படித்துறையில்முத்தமிடும் பெயர்களின்முதலெழுத்து அணுக்கம்தவிரவேறெதுவும் நடக்கவில்லைகாதலில்கண்ணியம் கொண்டதனால்.தனித்தோடி தலைமறைவாகவாழ்ந்துசுயாதீன காதலெனசுடரொளி காட்டி இருக்கலாம்தான்படி தாண்டாதவாழ்க்கையை பழகித் தொலைக்காமல்இருந்தாலெனமருகுகிறதுமனம்தாமிரபரணியில்தலைமுழுகவரும்பொழுதெல்லாம்தவிப்பாககரையேற முடியாமல்மூழ்கி. மீட்டலின் பொருட்டான கரிசனம். மறு கன்னத்தைதிருப்பிக்காட்டாதபொழுதுபரிவுகளை பேசுவதுபயனற்றதுபுரிதல் நிகழ்வதற்கு முன்னால்.கவனம் பெறுவதற்காககாட்டப்படும்கன்னமெனகடிந்தாலும் சிவந்து கொண்டேஇருக்கிறதுசெய்வதறியாதுஅன்றாடம்மேலதிக நம்பிக்கைகள் கொண்டு.நீங்கள்சிந்தை கலங்கியவனெனசொன்னாலும்புரியுமொருகணத்திற்கானகாத்திருப்பெனஅறியும் பொழுதுவழியும்கண்ணீர் துடைக்காமல்வெகு […]
சசிகலா – விஸ்வநாதன் அந்தி சாயும் நேரம் தேநீர் கோப்பை கையில் எதிரே நாற்புறமும் வரிசை கட்டி நிற்கும் பச்சையும் நீலமும் ஊதாவும் பழுப்பிலும் மலைத் தொடர் மடிப்பு; விரிந்த நீல வானில் வெண் பனிக்கட்டிகள் வெண் மஞ்சு மஞ்சம். மெல்ல மெல்ல கதிரவன் கீழே இறங்க; மென் காற்று அலை; மேனி சிலிர்த்தது. சாரல் மழையில்; வானில் வில் ஒன்று தோன்றி மறைவதற்குள்; துணை வானவில். கண்மூடி திறப்பதற்குள்; கண் முன்னே ஒரு அற்புதம்! காணுதல் […]
வெங்கடேசன் நாராயணஸ்வாமி கம்பன் சொல்லுகிறார்…. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே நம்மாழ்வார் சொல்லுகிறார்: துன்பமும் இன்பமுமாகிய செய்வினையா யுலகங்களுமாய், இன்பமில் வெந்நரகாகி இனியநல்வான் சுவர்க்கங்களுமாய், மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால், இன்புரும் இவ்விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்லலிலனே. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூவகை அருந்தொழில் பரமனுக்கு மிக மிக எளிது என்பதை ‘விளையாட்டு’ என்ற சொல்லாட்சி குறிக்கிறது. ‘காத்தும் படைத்தும் கரந்தும் […]