இரைச்சலிடும் தையல் இயந்திரம் ஒருக்கால் அறுந்துபோன என் கனவுகளைத் தைக்கலாம். ஆனால் ஊசியின் ஊடுருவலும் பாபினின் அசைவும் கனவுகளை மிகக்கோரமாய் ரத்தம் கசியவைக்கும். குருதிப்பெருக்கில் திகிலுற்று என் பாட்டி கேட்பாள் “ஏன் உன் கனவுகள் தைக்கப்பட வேண்டும்?”. பதில் என்னவோ சுலபம்தான். அறுந்துபோன கனவுகளை ஒரு தையல் தைக்கும்போது நிர்வாணமான மனதை மூடிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. ரமணி
விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘இலக்கியப்பூக்கள்-2’ நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும். *கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும் இணைத்தல் வேண்டும். *நூலின் பிரதி அனுப்ப அவர்களின் தெளிவான முகவரி அனுப்ப தவறக்கூடாது. அனுப்ப வேண்டிய முகவரி:R.MAHENDRAN. 34.REDRIFFE ROAD, PLAISTOW. LONDON, E 13 0JX மின்னஞ்சல் முகவரி:mullaiamuthan@hotmail.co.uk. mullaiamuthan@gmail.com […]
அம்ஷன் குமார் தொடர்ந்து உயிர்மை, கால்ச்சுவடு, ஹிண்டு போன்ற இதழ்களில் எழுதி வருபவர். சுப்பிரமணிய பாரதி, சர் சி வி ராமன், அசோகமித்திரன், வங்க நாடக முன்னோடி பாதல் சர்க்கார் ஆகியோ ர் பர்றிய சிறப்பான ஆவணப் படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய “ஒருத்தி” (கதை – கி ராஜ நாராயணன்) திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றிருக்கிறது சிறந்த திரைப்படத்துக்கான அரசு விருதை பாண்டிச்சேரி மானிலம் வழங்கியுள்ளது.னியூ ஜெர்சி சிந்தனை வட்டமும் இந்தப் பட்த்திற்கு […]
(Ice Age, Sea-Floor Rise & Fall) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கலியுகம் விழிக்கும் முன்னே பதினெட் டாயிரம் ஆண்டுக்கு முன் பனியுகம் தவழ்ந்தது! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூழ்ந்திடும் பரிதிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறை உருகிடும் ! நீர் மட்டம் உயர நிலத்தின் நீட்சி மூழ்கும்! கடல் மடி நிரம்பி முடிவில் புதை பூமியாய் சமாதி யானது, குமரிக் கண்டம்! […]
– கவிஞர் முல்லை முஸ்ரிபா, இலங்கை கவிதை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதம்; அந்த அற்புதத்தைப் பருகத் தொடங்குகையில் மனசில் குதூகலிப்பு மீளப் பொங்குதல் தொடங்கும். அந்தப் பொங்குதல் இன்பமாக அல்லது இன்பத்தின் வலியாக அல்லது துன்பமாகக் கூட தொடரலாம். கவிதை எனும் தொன்மையூற்று தொட்டணைத்து அகலப் பரந்தூறி விரிகையில் அதன் ஈரத்தில் ஊறாமல் யாரிருத்தல் முடியும். அத்தகைய ஈரத்தில் ஊறியபடிதான் கவிதை வாசித்தல் அல்லது நேசித்தல் வரலாறு இருந்து வந்துள்ளது. அத்தகைய வாசிப்புக்கு ஊடு […]
(மாலினி) எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது […]
இலங்கை ‘தடாகம்’ கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.எழுத்தாளர் ‘கலைமகள்’ ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் ‘அகஸ்தியர்’ விருதுதினையும், ‘கலைத்தீபம்’ பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன், ‘தமிழ் தென்றல்’ அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் […]
விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார். 10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் […]
1. வீதியில் குழந்தைகள் விளையா டும் சப்தம் ஒழுங்கற்று. இரண்டு மாதமாகக் பள்ளிவிடுமுறை நிச்சயக்கபட்டாத பாடத்திட்டம். புத்தகங்கள் வாங்கும், பைண்டிங் செய்யும் வேலைகள் இல்லை. திறப்பு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதிறப்பு நாள் பற்றி பல யூகங்கள். துவைத்து காயப்போட்ட புத்தகப் பைகள் சிரித்தபடி கயிறுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. 2. கலகலப்பாக இருந்தது வீடு. விடுமுறையில் எத்தனையோத் திட்டங்கள் எத்தனையோ வேலைகள் . கூட யாராவது இருந்தபோது ஆறுதலாக இருந்த்து. மகள் இருந்தது இன்னும் […]
செய்தி : புதுவை எழில் பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை. இதற்கு விலக்காக நடை பெற்ற விழா, இலக்கிய விழா-இலக்கியத் தேடல் விழா! சூன் திங்கள் 4 -ஆம் நாள் பாரீஸ் 14 – ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்ற இடத்தில் இவ்விழா நடந்தேறியது. இதில் மகா கவி தாகூரின் 150 -ஆவது ஆண்டு விழாவும் […]