author

தேனீச்சையின் தவாபு

This entry is part 7 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன் இருப்பு மெல்லிதழ்களின் வருடலுக்காய் யாசித்து தன் தவாபை தொடர்ந்தது. மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே பிறந்ததொரு அதிசயக் களிப்பில் தேன்மணத்தை நாவால் தடவி வனாந்திர வெளியில் நீந்திச் சென்று சுவனத்தின் வாசலைத் தீண்டியது. கூடடைய வழியுண்டா முத்தமென்பதை மரணமென்று புரிந்து கொள்ள தேனீச்சைக்கு அனுபவம் போதவில்லை.

மாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா

This entry is part 9 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடுகலை இலக்கியப்பெருமன்றம் திருவண்ணாமலைக் குழுவின் சார்பில் மாற்றுத்திரை 2011 குறும்பட,ஆவணப்பட திரையிடல் நிகழ்வும் கருத்தரங்க அமர்வுகளும்திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் 2011 ஆகஸ்டு 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற உள்ளது. இணைப்பு நிகழ்ச்சிநிரல்

புத்தன் பிணமாக கிடைத்தான்

This entry is part 8 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

காட்டிடையே வருவோர் போவோரின் விரல்களை எல்லாம் துண்டுதுண்டாய் வெட்டி நறுக்கி மாலையாக்கிப் போட்டுத் திரிந்த அங்குலிமாலாவின் துரத்தல் தொடர்கிறது. புத்தன் அகப்படவில்லை போதிமரத்தடியில் கிடைத்த ஞானத்தை எல்லோருக்கும் வாரிவழங்கி வெற்றிடமாய் போனேன் வருத்தப்பட்டு உரையாடிக் கொண்டிருந்த புத்தனின் கழுத்தில் சயனைடு பாட்டில்கள் தொங்கின இங்கொரு மண்டபத்தின் இடிபாடுகளுக்கிடையே புத்தன் பிணமாக கிடைத்தான். ஹெச்.ஜி.ரசூல்

பொம்மை ஒன்று பாடமறுத்தது

This entry is part 25 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஹெச்.ஜி.ரசூல் குரலைத் திருடியது யாரென்று தெரியவில்லை பொம்மை ஒன்று பாடமறுத்தது பொம்மையின் பேச்சு எப்படி இருக்கும் பொம்மைகள் விளையாடிக் கொண்டிருந்தன பூக்களைதலையில் சூட்டியும் நாசியால் முகர்ந்தும் குழந்தைகளை இடுப்பில் தூக்கியும் முத்தம் கொடுத்தும் துப்பாக்கிமுனைகளை துடைத்தும் சுடுவதாய் பாவனை செய்தும் பொம்மைகள் பொம்மைகளாய் இருந்தவரை பொம்மைகளின் விளையாட்டில் படைக்கப்பட்ட உலகம் யாருக்கும் வசப்படாதது பார்ப்போருக்கும் கேட்போருக்கும் பொம்மையின் பேச்சு பிடிபடுவதாக இல்லை இடியோசை கேட்டும் மின்னல்களைப் பார்த்தும் பொம்மைகள் பயப்படவில்லை ஏற்கெனவே அறிமுகமான பொம்மை ஜின்களின் தலைகளில் […]

வாளின்பயணம்

This entry is part 21 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

1 கசப்பில் உருவான கொலைவாளை மூர்க்கத்தனமாய்வீசியதில் கருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன. மரணரத்தத்தை பூசியவாறு நிறைமாத சூலிகளின் உயிரைக்குடித்து திரிந்த வாள் குழந்தைகளின் தலைகளை வெட்டிஎறிய வேகம் கொண்டன. அறுபட்ட்டுக் கிடந்த தலைகளை ஒவ்வொருநாளும் எண்ணிமுடியாத வெறியில் வாளின்பயணம் தொடர்கிறது. 2 வெகுகாலமாய் தூரத்திலிருந்து துரத்திவரும் கொம்புமுளைத்த ஜின்களின் காலடியோசைகளும் லத்திமுனைவீச்சுக்களும் வெகுஅருகாமையில் கேட்கின்றன. என்னை நெருங்கிவரும் வீச்சரிவாளின் ஓசை கழுத்தை துண்டித்து கொன்றுதீர்க்க எத்தனிக்கிறது. தர்காமுற்றத்தில் விரிந்துவளர்ந்த வேம்படிமரநிழலில் துஆ செய்தேன் வாவாவென ஆவல்மேலிட தன்னை […]

காக்கைப்பாடினி நாடோடியாய் அலைகிறாள்

This entry is part 9 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளையும் நூறுல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்துறையும் இணைந்து ஒருங்கிணைக்கும் கவிதை எழுத்து பயிலரங்கம் ஆகஸ்டு15,16 ஆகிய தேதிகளில் அக்கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. சங்ககாலகவிதை அகமும் புறமும்,பக்திமரபுஆண்டாள் காரைக்கால் அம்மையாரை முன்வைத்து,அருணகிரிநாதரும் தமிழ் அடையாள உருவாக்கமும்,மறைஞான கவிதைமரபு சித்தர்களும் சூபிகளும் என அமைக்கப்பட்டுள்ளன. கவிதை நவீனமான கதை அரங்கில் எழுத்துமரபு , வானம்பாடிமரபு, தலித்கவிதை, பெண்கவிதை எழுத்து என்பதான பொருண்மைகளில் ஆய்வுரைகள் வாசிக்கப்படுகின்றன. முனைவர் பா.ஆனந்தகுமார், முனைவர் […]

பிணம் தற்கொலை செய்தது

This entry is part 26 of 47 in the series 31 ஜூலை 2011

அசைவற்று கிடந்தது பிணம் அதன்மீது அழுகைஒலிகள் தேங்கியிருந்தன வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரத்தின் ரேகை படர்ந்திருந்தது. எழுந்து நடந்து செல்ல முடியாதென்பது பிணத்திற்கு தெரிந்திருக்க கூடும் தன்னை எரிப்பதற்கோ அல்லது புதைகுழியில் அடக்குவதற்கோ எதுவாக இருப்பதற்கும் தயாராயிருந்தது. பிணங்களோடு வாழ்தலில் உள்ள ஆர்வம் வற்றிப் போகவில்லை. வானத்திறப்பின் நிகழ்தலில் முடிவற்றதொரு நெடும்பயணம் தேவதைகளைத் தேடி தேடி பிணத்தின் பயணம் தொடர்கிறது. முக்ம்பார்த்து நாளாயிற்று எதிரும் புதிருமாய் கூட சந்திக்கமுடியவில்லை. எதையேனும் வெற்றிக் கொள்ள அல்லது தோல்வியுற உருவாகும் உலகில் […]

இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி

This entry is part 3 of 32 in the series 24 ஜூலை 2011

இந்த பிரபஞ்சத்தில் கண்விழித்துப் பார்க்க மிக ஆவலோடு கருவறையில் காத்திருந்த அந்த குழந்தையின் புன்னகையைக் கூட வெட்டிவீசினாய் தொட்டில் சீலையான உம்மாவின் கவுணியில் தெறித்த ரத்தவாடையின் உறைதலில் நகர்கிறது நடுச் சாமம். சாம்பல் மிஞ்சிய இருப்பிடமெங்கும் தொடரும் கருகிய வேதனையின் வரைபடம் சூலாயுதங்களின் கூர்முனைகளில் பிறையும் பொழுதும் அறுபட்டுத் தொங்குகிறது. மேசைமீது கிடந்த நினைவுக் குறிப்புகளிலிருந்து வெள்ளைக் கொடி வீசி மெல்ல எழும்பிவந்த கருணை சொரியும் அந்த கண்கள் தீரா கோபத்தின் தாண்டவ உடல் மறுபடியும் சீறிப் […]

வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை

This entry is part 19 of 34 in the series 17 ஜூலை 2011

ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக நகரங்களை உருவாக்குபவன் என்வீதிவழியே வந்து என்னை தட்டி எழுப்பிச் சென்றான். கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்து இரவின் கதையை எழுத பிறையின் ஒளியை முத்தமிட்டு அதிசயித்து பார்க்கும் கண்கள் மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது. தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர அவன் கூக்குரலிட்டான். நிரம்பிய கண்ணீரில் ஒளுவெடுத்து புனிதப்படும் உள்ளங்கைகளும் நெடுவெளி மணற்காட்டில் தய்யம் செய்யும் விரல்களும் அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில் அவனின் அபயக்குரல் தொடர்ந்தது. லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும் உடைபட்டு […]

மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்

This entry is part 15 of 38 in the series 10 ஜூலை 2011

சிரிக்கவும் இயல்பாய் கரைந்துருகி அழவும் மரணிக்கவும் தெரிந்த கடிகார விட்டத்தின் முட்கள் ஒலிஎழுப்பி தெரிவிக்கும் அதன் குறிப்புணர்த்தலில் காலம் கட்டுண்டு கிடக்கிறது நிறுத்தினால் முடியாத கால ஓட்டத்தை பந்தயவீரர்கள் கடந்துவிட முயற்சிக்கிறார்கள் காலத்தை கைப்பற்றும் முயற்சியில் எல்லோரும் தோற்றுப் போக அகாலவெளியில் சூரியன் மட்டும் பறந்து கொண்டிருக்கிறது. சகுனம் பார்த்துச் சென்ற நாயொன்றோ பிறிதொரு நாயைத் தேடி அலைந்தது. காலம் மீறி தன் நிழல்பார்த்து குரைத்தபோது தூரத்தில் இன்னும் நாய்கள் தெரிந்தன. நிழல் உருவம் பெரிதாக இன்னும் […]