author

கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்

This entry is part 3 of 22 in the series 4 டிசம்பர் 2016

“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர். அதே நேரத்தில், காந்தியின் சுதந்திர சிந்தனைகளுக்கும் மதிப்பளித்தவர்.தனது, 17வது வயதில், டி,கே.சண்முகம் நாடக சபாவில் சேர்ந்து, நாடக நடிகராக உருவாகி, சதி லீலாவதி , சினிமா மூலம், சினிமாவில் நுழைந்தார். சதி லீலாவதி படத்திற்கு, அவரே, நகைச்சுவை வசனம்,எழுதி நடித்தும் காண்பித்து, […]

அழியா ரேகை

This entry is part 8 of 22 in the series 4 டிசம்பர் 2016

இரா.ஜெயானந்தன். அழிந்த நினைவுகளில், யாரோவின் வாழ்க்கை சட்டங்கள் தொங்கி கிடக்கும் மேலான கீழான காலடிச் சுவடுகள் எழுத முடியாத சுயசரிதை. ஒரு சிலர் கவனமாக தூக்கி செல்வர் வாழ்க்கையை! பலரின் சிலரோ தீர்க்க முடியாத வாழ்வின் சுமைகள் தெருவோர மரநிழலில் ஊசலாடும்! திறந்துதான் கிடக்கும் கதவுகள் வழி தெரியாமல் போன ஆத்மாக்கள் அலைந்தோடும் சவக்குழியில் ! நெஞ்சின் நினைவுகள் வேகும் முன்னே காரியதாரிசி கணக்குப்பார்பான் வெட்டியான் அடுத்தகுழி தோண்டுவான். இரா.ஜெயானந்தன்

புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.

This entry is part 19 of 19 in the series 20 நவம்பர் 2016

புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா. சந்திய பதிப்பகம் 2016 – விலை – 110/= தமிழ் முஸ்லீம் சமூகத்தின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை,கீரனூர் ஜாகிர் ராஜா, தனது எழுத்துத் திறமையால், மிக துல்லியமாக தனது சிறுகதைகளின் வழியாக நமக்கு காட்டுகின்றார். கொமறு காரியம்.… பள்ளிவாசலில் ஊழியம் செய்து, வயோதிகத்தில், பெண் பிள்ளையை வைத்துக்  கொண்டு, அவர் படும் அவஸ்தையை,  முஸ்ஸிம் மக்களின் கலாச்சார வாடையோடு, கதை உலா வருகின்றது.  அதே நேரத்தில், அந்த பெண் பிள்ளையின், […]

மௌனம் பேசுமா !

This entry is part 9 of 17 in the series 13 நவம்பர் 2016

இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் அக்காமார் நத்தைகள் பலவண்ண படமாய் நெளியும் சின்ன அட்டை பூச்சிகள் வெளவால் குருவிகள் கொளசிக பட்சிகள் மூக்கு திரிஞ்சான்கள் தலைகீழ் விகிதங்களாய் வெளவால் குடும்பங்கள்1 செவந்தி மலரில் கால் பதிக்கும் வண்ணத்து பூச்சிகள்! பாடித் திரியும் தேனீக்கள். ஊர்வலமாய் பாடித் திரியும் ஊசித் தும்பிகள்! செவ்வாய் நாரைகள் ஓடையில் நீந்தும் களவாய் மீன்கள் சுகித்து […]

பிஞ்சு.

This entry is part 12 of 14 in the series 6 நவம்பர் 2016

இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே – உன் பிஞ்சுக் கால்களில்தான் – என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் – நீ பிறப்பெடுத்தாய் – உன் குழி விழுந்த கன்னத்தில் – யார் புன்னகையை தவழ விட்டான் ! கம்பளி பூச்சிப்போல் – என் அன்பு உன் மேனியெங்கும் தவழும் நீ நெளியும் போது – நான் வண்ணத்துப் பூச்சியாய் பறந்து விடுவேன் ! என்னையே சுமந்து சென்று – மீண்டும் குழந்தையாக்கினாய் என்னை ! உனது […]

ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.

This entry is part 6 of 15 in the series 5 ஜூன் 2016

                         இரா.ஜெயானந்தன். முதல்வரின் கடைக்கண் பார்வை, ஸ்டாலின் மேல் விழுந் துள்ளது. மு.க.வின் பிள்ளையாக பார்க்காமல், எதீர்க்கட்சி தலைவர் என்ற நோக்கில் அவரை அணுகுகின்றார். அந்த காலத்திலிருந்தே, ஸ்டாலின் ஒரு நாகரீக அரசியல்வாதிய வலம் வந்துள்ளார். யாருக்குமே வளையாத முதல்வர், திமுகவுடன் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு அரசியல் முதிர்ச்சி என்று, அவரது தொண்டர்கள் பாரட்டுகின்றனர். எல்லாம், அரசியல் சதி […]

அம்மா நாமம் வாழ்க !

This entry is part 6 of 12 in the series 22 மே 2016

ஜெயானந்தன். தமிழக அரசியல் 2016 முடிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அம்மா அலைதான் வீசுகின்றது. அம்மா போட்ட அரசியல்  கணக்கில், நரியாக செயல்பட்டு, வைகோ சரியாக அவரது சேவையை  செய்துவிட்டார். இந்த விளையாட்டில், பாவன் ஒரு காதநாயகன் தன் உரு இழந்து, கோமாளியாக மாறிப்போனக்கதை, அவருக்கும்  அவர்து மனைவிக்கும் புரிந்திருக்கும். போன தேர்தலில்,  ஒரு காமடியன், தன் சினிமா வாழ்க்கையே இழ்ந்தார். அம்மா உணவகம், அம்மா வாட்டர், அம்மா டாஷ்மார்க், அம்மா மிதிவண்டி, அம்மா கனணி, […]

சாலையோரத்து மாதவன்.

This entry is part 8 of 23 in the series 20 டிசம்பர் 2015

இரா. ஜெயானந்தன். “இதுவரை எழுதி என்ன கண்டோம் “என்று மூத்த எழுத்தாளர் மாதவன் 1994-ல் சலித்துக் கொண்டார். கூடவே, “தாசிக்கு வயசானலும் கொண்டை நிறைய பூ வைத்துக்கொள்ள ஆசைதான்” என்றும் தனது ஆசையினையும் கூறியுள்ளார். 2015-ல் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும், டெல்லிக்கும் வெகு தூரம்தான்.கூடவே, அரசியலும் நுழைந்துக்கொண்டு படாய்படுத்துக்கின்றது. திருவனந்துப்புரத்து சாலை வட்டாரத்தழிழை, மனிதர்களை உயிர்துடிப்புடன் பேசவைத்தவர் மாதவன் என்று, மலையாள எழுத்தாளர் சி.மணி கூறியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் கூட, […]

மாமழையே வருக !

This entry is part 15 of 23 in the series 20 டிசம்பர் 2015

இரா. ஜெயானந்தன். சாதிமத பேதங்கள் வேரோடு களைய மாமழையே வருக ! மனிதமன மாசுகள் முற்றிலும் அகல மாமழையே வருக ! ஏழை பணக்காரன் எண்ணங்கள் ஒழிய மாமழையே வருக ! இந்து முஸ்ஸீம் கிருத்துவம் இணய மாமழையே வருக ! இளைய நெஞ்சங்களின் இணப்பகம் அறிய மாமழையே வருக போலி அரசியல் முகமூடிகள் கிழிய மா மழையே வருக ! உண்மை அரசியல்தோன்றி ஊழ்கள் ஒழிய மா மழையே வருக ! மனிதம் என்றொரு மாமேரு […]

வெளி ரங்கராஜன் – இரு நூல்கள்

This entry is part 2 of 16 in the series 22 நவம்பர் 2015

 (`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.10000/- மதிப்புள்ள இந்த விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிகழ்கலைக் கலைஞர்களுக்கு முக்கியமாக அகாலத்தில் மறைந்த ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம் அவர்களுக்கு வெளி ரங்கராஜன் அர்ப்பணித்திருக்கிறார்.) வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள். ஆசிரியர்; வெளி ரங்கராஜன். நம்மோடு வாழ்ந்து, பல நிகழ்கலைப் படைப்பாளிகள், […]