கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான் ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே ஒத்துழைக்காமல், முதுமையின் தள்ளாட்டாத்தில்தான் இருந்தார். அசோகமித்திரன், ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்றுவிட்டார்.அவரது ஐதாராபாத் வாழ்க்கையும், சென்னை வாழ்க்கையும் கொடுத்த வாழ்க்கைப்பாடங்களே அவரது எழுத்துக்களாய் நம்மிடம் வாழ்கின்றது. அவரது எழுத்துக்களைப்பற்றி, இனி ஒரு வாரமோ, […]
சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் “விளக்கு” அமைப்பையும்,அதன் நோங்கங்களையும் பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின் நவீன எழுத்துக்களையும், எழுத்தாளர்களயும் கண்டு கொள்ளாமல் செல்லும் நிலையில், விளக்கு போன்ற அமைப்புக்கள்தான், அவர்களை கொளரவிக்கவும், நல்ல எழுத்துக்களை வெளியிட்டும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒரு பாதை அமைத்து தரவேண்டும் என்றார். இந்தாண்டு, ஒரு […]
புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம். பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர். பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும் கொண்ட பல தலைவர்கள் நாம் பார்த்துள்ளோம். ஓமந்தூரர் முதல், ஜெயலலிதா வரை பல முதன் மந்திரிகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர். தீடீரென்று, அரசியல் வானில், மன்னார்குடி மங்காத்தா என்ற துர்நட்சத்திரம் ஒன்று தோன்றி, ஒரு ரங்கத்து மாமியை விழுங்கி, முடிவாக தமிழகத்தையும் விழுங்கப்பார்த்தது. இந்த டிவி சீரியலை, பல பெண்கள் பார்த்து, தமிழ் நாட்டு அரசியலை புரிந்துக் […]
இந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும், ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர். பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில் தியானம் செய்துகொண்டு, பொங்கி எழுந்தார். உண்மைகளை போட்டுடைத்தார். போயஸ் தோட்டத்து உண்மைகளை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். இதுவரை, அந்த கூட்டத்துட ன் அங்கமாக இருந்தவர், அவரது பதவிக்கு பங்கம் வந்த போது, பொங்கி எழுந்துள்ளார். இது தர்மமா ? நியாமமா? என்று, நம்மை பார்த்துக் கேட்கின்றார். நாம் தான் ,ஆமாம் சாமிகளாச்சே ! ஆமாம், ஆமாம் சாமி என்று […]
இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை, ஒரு முஸ்ஸிம் எழுத்தாளர் பதிவு செய்து, அடர்ந்த அனுபவங்களின் வாயிலாக, தஸ்ஸிமா நஸ்ரின் நாவலாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் வெளி வந்தவுடன், அவரை கொல்வதற்கு அவரது நாட்டிலேயே ஒரு கும்பல் அவரை […]
இரா.ஜெயானந்தன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இளைஞர்கள்- மாணவர்கள் ( மாணவிகள் உட்பட), சமூக வெளிக்கு வந்து, ஒரு சமூக நோக்கத்துடன், போராட்ட களத்தில் இறங்கி, ஒற்றுமை உணவுர்வுடன், “ஜல்லிக்கட்டு என்ற, அடையாளத்தை அடைவதற்கு கூடியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு செழிப்பான, அரசியல் பார்வை கிடைக்கலாம் என எண்ண தோன்றுகிறது. “இந்தி எதிர்ப்பு” என்ற ஒரு மொழிக்கொள்கையை, கையில் எடுத்துக்கொண்டு, அன்று திமுக , ஒரு அரசியல் பார்வையோடு, அதனை, பல வழிகளில் செலுத்தி, அதன் மேல்,பார்ப்பன, கீழ்- […]
இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத். குறுநாவல்; இருபது வெள்ளைக்காரர்கள். ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத். வெளியீடு ; வம்சி புக்ஸ். விலை ; ரூ 170/= தமிழில் இன்று பல இளம் படைப்பாளிகள், பன்புகப்பார்வையுடன், மரபுகளை தாண்டி, புதிய தடங்களை தேடி செல்கின்றனர். இதற்கு, கணனி உதவியும், தொழில் நுட்ப அறிவும் அவர்களுக்கு கைக் கொடுகின்றது. இவர்கள், எந்த இலக்கிய குருப்பில் சேராமலும், எந்த அரசியல் குழுக்களில் விழுந்துவிடாமலும், சுதந்திர உணவுடன் செயல் படுகின்றனர். அப்படியான […]
“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர். அதே நேரத்தில், காந்தியின் சுதந்திர சிந்தனைகளுக்கும் மதிப்பளித்தவர்.தனது, 17வது வயதில், டி,கே.சண்முகம் நாடக சபாவில் சேர்ந்து, நாடக நடிகராக உருவாகி, சதி லீலாவதி , சினிமா மூலம், சினிமாவில் நுழைந்தார். சதி லீலாவதி படத்திற்கு, அவரே, நகைச்சுவை வசனம்,எழுதி நடித்தும் காண்பித்து, […]
இரா.ஜெயானந்தன். அழிந்த நினைவுகளில், யாரோவின் வாழ்க்கை சட்டங்கள் தொங்கி கிடக்கும் மேலான கீழான காலடிச் சுவடுகள் எழுத முடியாத சுயசரிதை. ஒரு சிலர் கவனமாக தூக்கி செல்வர் வாழ்க்கையை! பலரின் சிலரோ தீர்க்க முடியாத வாழ்வின் சுமைகள் தெருவோர மரநிழலில் ஊசலாடும்! திறந்துதான் கிடக்கும் கதவுகள் வழி தெரியாமல் போன ஆத்மாக்கள் அலைந்தோடும் சவக்குழியில் ! நெஞ்சின் நினைவுகள் வேகும் முன்னே காரியதாரிசி கணக்குப்பார்பான் வெட்டியான் அடுத்தகுழி தோண்டுவான். இரா.ஜெயானந்தன்
புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா. சந்திய பதிப்பகம் 2016 – விலை – 110/= தமிழ் முஸ்லீம் சமூகத்தின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை,கீரனூர் ஜாகிர் ராஜா, தனது எழுத்துத் திறமையால், மிக துல்லியமாக தனது சிறுகதைகளின் வழியாக நமக்கு காட்டுகின்றார். கொமறு காரியம்.… பள்ளிவாசலில் ஊழியம் செய்து, வயோதிகத்தில், பெண் பிள்ளையை வைத்துக் கொண்டு, அவர் படும் அவஸ்தையை, முஸ்ஸிம் மக்களின் கலாச்சார வாடையோடு, கதை உலா வருகின்றது. அதே நேரத்தில், அந்த பெண் பிள்ளையின், […]