1968 இல் அமரர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் காலத்திலேயே ஆனந்த விகடன் என்னைப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் செய்திருந்தாலும் அவரது மறைவுக்குப் பின்னர் ஆசிரியராய்ப் பொறுப்பு ஏற்ற திரு எஸ். பாலசுப்ரமணிபன் அவர்களை 1983 இல் தான் நான் நேரில் சந்தித்தேன். வாசக இளைஞர் ஒருவர் ஒரு நாள் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது ஆனந்த விகடன் எழுத்தாளராக ஓரளவு நான் பிரபலமாகி யிருந்ததால் விகடன் அலுவலகத்தில் தனக்கு ஏதேனும் வேலை வாங்கித்தர முடியுமா […]
திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த நாளில் அவர் அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்தவாறு மேடை நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த நாளிலேயே எனக்கு இவரது அறிமுகம் கிடைத்தது. கலாகேந்திரா திரு கோவிந்த ராஜன் எங்கள் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த சமயத்தில் அவரைச் சந்திக்க […]
The English transcreation by me of my historical noval MANIKKODI, based on India’s freedom struggle, has been released by Cybetwit.net Publishers, Allahabad, under the title Goodbye to Violence. Thanks. – Jyothirllata Girija
ரமணியின் முக மாற்றம் விளைவித்த திகைப்பு மாறாத பார்வையை நீக்கிக் கொள்ளாமல், வேலுமணி அவனைப் பார்த்தவர் பார்த்தபடியே நின்றார். ”நீங்களாவே என்னை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா, இல்லாட்டி, அவர் சொல்லி வந்தீங்களா?” என்று அவன் கேட்டதும், வேலுமணி, “நானாத்தான் வந்தேன், ரமணி.. முதல்ல நீ தங்கியிருக்கிற சேதுரத்தினம் சார் வீட்டுக்குத்தான் போனேன். கதவு பூட்டி யிருந்தது. அதனால, இங்க வந்து பார்க்கலாம்னு வந்தேன்….” என்றார். இதற்குள் ராமரத்தினமும் சேதுரத்தினமும் அங்கு வந்து சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இருந்தது […]
ரமணியை அந்தப் பரதேசிப் பெண்ணிடமிருந்து பிரிப்பதற்கு என்ன வழி என்று எவ்வளவோ யோசித்தும் கணேசனுக்கு உருப்படியாக எந்தத் திட்டமும் புலப்படவில்லை. சினிமாக்களில் வருவது போல் ஆள் வைத்து அந்தப் பெண்ணின் கையையோ, காலையோ முறித்தாலென்ன என்று கூட ஒரு கணம் அவர் யோசித்தார். பின்னர் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று தோன்றியதில் சினிமாத்தனமானது என்று தம்முள்ளேயே முனகிக்கொண்டு அவ்வெண்ணத்தைக் கைவிட்டார். அப்படியே அவர் செய்தாலும், மிகவும் நல்லவனான ரமணி அவர்தான் அதைச் செய்தவர் என்பது தெரியவரா […]
குழந்தை ஊர்மிளா கோமதியின் முழுப் பொறுப்பு ஆனதில் அவளுக்குப் பொழுது மிக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. தன் அம்மாவுக்குத் தானே ஒரு குழந்தை என்பதாய் அதுகாறும் நினைத்துக்கொண்டிருந்த கோமதி அந்தக் குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் தாய்மை உணர்ச்சிக்கு ஆளானாள். தன்னை வயதில் பெரியவளாய் நினைக்கவும் தலைப்பட்டாள். முன்பின் அறிமுகமே இல்லாத பிற குடும்பத்துக் குழந்தையிடம் இவ்வளவு ஒட்டுதல் ஏற்படுமா என்னும் வியப்பு அவளுக்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. அவளுள் ஏதேதோ கற்பனைகள் விரிந்தன. அப்போதெல்லாம், ‘சேச்சே’ என்று அவள் தலையைக் […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் – சில சேர்க்கைகளுடன் – என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வழக்கம் போல் இச்செய்தியை வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அல்லாஹாபாத்தில் உள்ள Cyberwit.net பதிகப்பகம் இதனை வெளியிடப் போகிறது. இதன் தலைப்பு GOODBYE TO VOILENCE என்பதாகும். (Click to enlarge the image) […]
ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினம் வழக்கம் போல் அலாரம் இல்லாமலே ஐந்தரை மணிக்கு எழுந்துகொண்டு காலைக்கடன்களை முடித்த பின் காப்பி போட்டான். ரமணி கண்விழித்த போது ஆறரை மணி ஆகிவிட்டிருந்தது. மேசையருகே அமர்ந்து காப்பி குடித்த போது, “நீங்களே தினமும் காப்பி போட்டுப்பீஙளா?” என்று ரமணி சேதுரத்தினத்தை விசாரித்தான். “ஆமா. காலை ப்ரேக்ஃபாஸ்டும் நானே பண்ணிடுவேன். இட்டிலி அல்லது தோசை. சில சமயம் பம்பாய் ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா. சின்ன வயசுலேர்ந்தே சமையல் பண்ணிப் பழக்கம். […]
கணேசனின் மல்லாந்து கிடந்த நிலையினின்று அவர் மயக்கமுற்று விழுந்திருந்திருக்க வேண்டும் என்று வேலுமணி நினைத்தார். “ரமணி, ரமணி!” என்று கூவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார். “என்ன, அண்ணா! என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு ரமணி தன்னறையினின்று வெளிப்பட்டான். “உங்கப்பா மயக்கமாயிட்டாருன்னு தோணுது. மல்லாந்து கிடக்கார்….” “தண்ணி எடுத்துண்டு வாங்கண்ணா!” என்று சொல்லிவிட்டு ரமணி பதற்றத்துடன் ஓடினான். அவன் போன போது அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வேலுமணி சொன்னது போல் மல்லாந்து […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் – சில சேர்க்கைகளுடன் – என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வழக்கம் போல் இச்செய்தியை வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அல்லாஹாபாத்தில் உள்ள Cyberwit.net பதிகப்பகம் இதனை வெளியிடப் போகிறது. இதன் தலைப்பு GOODBYE TO VOILENCE என்பதாகும். அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா