வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும் அடுக்கு மலைத் தொடர் விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் தோற்றம் மாய்மாலம் செய்யும் மேகக் கூட்டம் புழுதி படிந்து பரட்டைத் தலை விரிய ஏனென்று எப்பவும் கேள்வி கேட்கும் ’ஒத்தப்’ பனை புறப்பட்டுச் செல்ல ஐயனாரை ஏற்றிக் கொண்டு எந்தச் சமயத்திலும் கம்பீரமாய்க் காத்திருக்கும் கல் குதிரை என்றோ தண்ணீர் கரை புரண்டோடிய காலம் எண்ணி எண்ணி மனம் திரைத்து மணல் திரளாகிய வறண்டாறு […]
காலம் தன்னிடம் மண்டியிட்டு அகாலமாய் இறுகியது போல் முகம் கொண்டு கைகளில் குச்சியில் கட்டிய துடைப்பத்தை ஏந்தி, அணி வகுத்து நிற்கும் மரங்களிடம் முன் பின் சொல்லாமல் உதிரும் சருகு மேல் சருகு சேர்ந்த சருகுக் குவியலின் இரகசியத்தைக் கலைத்துப் பார்த்து விட்டு மறுபடியும் குவித்து வைப்பது போல் சருகுகளைக் கூட்டிச் சேர்க்கிறானே முதியவன் அவனைப் பார். தன் முகச் சுருக்கங்களில் காலம் தன் மடிப்புக்களைச் சேர்க்க, விழிகளின் தீட்சண்யத்தில் சூரிய ரேகைகளைச் […]
மழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும். மழை வலுத்தாலும் வலுக்கலாம். பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம். அது அதன் இஷ்டம். வலுத்தாலும் வலுக்கட்டாயமில்லை. நீ நனையலாம். நனையாமலும் இருக்கலாம். உனக்கென்ன கவலை? உனக்குப் பதில் நனைய உன் வீடிருக்கும். இல்லையானால் ஒதுங்க ஒரு கூரையிருக்கும். ஒரு மரத்தடியாவது இருக்கும். ஓடிப் போக முடியாமல் ஒற்றைக் காலில் மரம் தான் நனையும். […]
பெஷாவர் (1) எங்கிருந்தாலும் குழந்தைகள் உயிர் நிலவுகள். நிலவுகளை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள். நெஞ்சில் இருள். (2) குழந்தைகளுக்கு என்ன தெரியும்? பட்டாம் பூச்சிகள் தெரியும். ஓடியாடி விளையாடத் தெரியும். பயங்கரவாதிகளையும் மனிதர்கள் என்று தான் தெரியும். எப்படி மனம் வந்தது சுட? (3) வகுப்பறைகளில் வார்த்தை கற்கும் குழந்தைகள் சுடப்பட்டார்கள். […]
(1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. நடு யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. கடைசி யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. விடியலில் […]
(1) பூக்காரி பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப் பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு லிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத் தினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து மல்லிகைப் பூவை விட முகம் மலர்ந்து முழம் போட்டு மல்லிகைப் பூ தந்து விட்டுப் போகும் ஒல்லிக் குச்சியான பூக்காரியை மல்லிகைக் கூடையுடன் நகர் விட்டு நீங்கிய சில காலம் கழித்து தற்செயலாய் நகரின் நாற்சாலைகளின் ‘சிக்னல்’ சந்திப்பில் […]
(1) சிறகுகளைக் கேட்கும் நான் எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்? எப்படி குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறாய்? எப்படி ஆகாயத்தின் முடிவில்லாக் கனவின் கதவுகளைத் திறந்து முடிவில் ஒன்றுமில்லையென்கிறாய்? எப்படி சித்தம் போக்கில் திரிந்து வெட்ட வெளியில் கற்ற ஞானத்தைக் காற்றின் பாடலாய் எழுதுகிறாய்? எப்படி கோடுகளிழுக்காமல் பகலெல்லாம் நீ பறந்து […]
(1) காத்திருக்கும் காடு செல்லுமிடமெல்லாம் எம்மோடுகூட வரும் செழித்த பெருங் காடு. ஒரு பெரிய ஓவியச் சீலையின் மூலையில் ஏதோ வரைவது போல் ஒரு கலைமான் காட்டில் எங்கேயோ திரிவது தெரியும். எம்மருகில் தெரியும் பெயர் தெரியா மரமும் காட்டில் எங்கேயோ இருக்கும் மரம். மேல் உறைந்து பனி அடியில் நதி மெல்ல நகருமென மெய்யுள் மூச்சோடும். புலி எங்கே? புலி வந்து போகும் சிறு […]
செல்லவில்லை. இல்லை செல்ல முடியவில்லை. செல்ல முடிந்திருந்தாலும் ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடியுமா? ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடிந்தாலும் இற்றைப் பொழுதில் இரு பறவைகளில் ஒரு பறவை தனியாய் இன்னொன்றை நினைந்திருப்பதைப் போல அற்றைப் பொழுதிலும் அவனை நினைந்திருந்திருப்பேன் என்பதன்றி வேறென்ன செய்திருக்க முடியும்? சென்றிருக்க முடியும் என்பதால் இப்படியெல்லாம் என் வாலை நானே விழுங்குகிறேனா? செல்லவில்லை என் பால்ய சிநேகிதன் சாவுக்கு என்பது நினைத்தால் தேள் கொட்டும் இன்னும். கு.அழகர்சாமி
சற்று நில். மண் பற்றிக் கொள்ளட்டும். திரிந்தலையும் மேகங்களைக் கண்டு பறந்தலையும் பறவைகள் உன்னிடம் சேருங் கால் இளைப்பாறுவாய் நீ நினைப்பொடுங்கி நிழல் பரப்பும் தருவாகி. கு.அழகர்சாமி