நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற செய்தியை இரு வருடங்களுக்கு முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை. பெரும்பாலானவை தனியான வீடுகளென்பதால் இங்கு நாய்களில் தொற்று ஏற்பட சாத்தியமில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது. மெல்பனில், கிழமையில் ஒரு நாள் வேலை செய்தபோதிலும் இரு வருடங்களாகத் தொடர்ந்து வேலை செய்து வந்தேன். எல்லோரும் மாஸ்க்குடன் […]
நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும் திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின் தொழில்பாடு போன்றவை. வர்க்கம் ,சாதி, மதம் போன்ற தடைகளை மீறுதல், வன்முறைகளுக்கு எதிராகப் போராடுதல் அல்லது அதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவது என்ற புறச்சார்பு அல்லது உலக நடைமுறை விடங்களைப் பிரதிபலிப்பவையே தமிழ்த்திரைப்படங்கள். இவற்றில் பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட சில படங்களும் […]
நடேசன் இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் சந்தித்தேன். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் அந்தப் பெண்ணை “ அங்கொடை சில்வா “ என்றார். அது ஒரு நகைச்சுவை எனப் பலரும் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை, ஆனால், அந்த வார்த்தையின் உள்ளர்த்தம் என்னைச் சிந்திக்கப் பண்ணியதால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அங்கொடை என்ற இடம் இலங்கையில் பிரதான மன நோய் […]
நடேசன் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும் தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர். புலம்பெயர்ந்த தனது புற, அக அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாதவர்களது, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனது கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார். மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் செல்லும் திசையை அறிய அவரது எழுத்துகள், திசைக்கருவியாக எமக்கு உதவும். அ. […]
நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக், கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத் ( Junagadh) நகரில் இரவு தங்கினோம். நகரத்தின் மத்தியில் அழகான சமாதி (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. கோபுரங்கள் இஸ்லாமிய வடிவமும், வளைவுகள் ஐரோப்பிய முறையும் கலந்த கலவையாக அந்தக் கட்டிட வடிவம் இருந்தது. அந்த நகரத்தில் அதைப் பார்க்கப் பலர் வந்தார்கள். இந்தியாவின் பிரதான கவர்ச்சியாக இருக்கும் தாஜ்மகாலும் ஒரு சமாதி […]
நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே. ஆனால் தெய்வ நம்பிக்கையோ அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான் ஏன் போகவேண்டும் ? தற்போதைய இந்திய இந்துத்துவா அரசியலின் வரலாறு அங்கே தொடங்குகிறது. இந்தியாவின் முக்கிய தலைவர்களாக மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், மோதி என்பவர்கள் ஒரு மாநிலத்திலிருந்து வந்தார்கள். வரலாறு என்பது வலை போன்றது. விரித்தபின் விரும்பியபோது வெளிவரமுடியாது. வரலாற்றால் சிறைபிடிக்கப்பட்ட பல […]
நடேசன் ஒளிப்படங்களுக்கான வருடம்தான் 2021. இந்த வருடத்தில் எவ்வளவு ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல் ஒளிப்படங்கள் எடுப்பார்கள் என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில் பெரும் பகுதி சேமிக்கப்படும் . பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த ஒளிப்படங்களில் குறை கண்டதால் தற்பொழுது கமராவைக் கையாளுதல் மற்றும் அதை எடிட் பண்ணும் திறமையையும் சிறிது பெற்றுள்ளேன் […]
நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில் ஒரு சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை. பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப் பரிசோதிக்கிறோமோ இல்லையோ, எழுத்தில் பதிந்து விடவேண்டும். நான் மட்டும் அந்த கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் விபரங்கள் எனக்கு மட்டுமே. ஆனால், மற்றவர்களுக்காக வேலை செய்யும்போது விபரமாக எழுதவேண்டும். வெளிப்புறமாக ஒரு கார் வந்து […]
கபிரியல் காசியா மார்குவசின் ‘லவ் இன் த ரைம் ஒவ் கொலரா’ (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு (Year12), ஆங்கில இலக்கியப் பாடப் புத்தகமாக்க விரும்பியபோது, அதற்கு எதிராகப் பலர் போர்க்கொடி தூக்கினார்கள். ஒரு சிறிய சம்பவமே இதற்கான காரணம்;. அந்த நாவலில், காதலன் துறைமுகம் அருகே சந்தித்த ஒரு இளம் பெண்ணுடன் […]
நடேசன் அவுஸ்திரேலியா தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர் அவர். அவருடன் மேலும் சில நாள்கள் பழகவில்லையே என்ற குற்ற உணர்வு இன்றும் என்னைப் புழுவாக குடைகிறது. நாஞ்சில்நாடனின் சில சிறுகதைகளை அங்குமிங்குமாகவே வாசித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளரின் நூலை வாசித்து, அவருடன் உரையாட விரும்புவது […]
பின்னூட்டங்கள்