narendran

60 ஆண்டுகால “வடக்கன்” அரிப்பு

This entry is part 13 of 13 in the series 12 மார்ச் 2023

திராவிடப்புண்ணாக்கன் வடக்கத்தியானை விரட்டப் புறப்பட்டிருப்பது ஏறக்குறைய அண்டர்வேருக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்வதற்குச் சமமானது. இங்கே வடக்கத்தியானை விரட்டியடித்தால், வடக்கே தமிழனை விரட்டியடிப்பார்கள். அதன் மூலமாக அரசியல் லாபம் பார்க்கலாம் என்று நினைப்பது பேராபத்தில் முடியும் என்பதினை திராவிடப்புண்ணாக்கன் உணருவது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல்தான். தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவெங்கும் ஏறக்குறைய இரண்டு கோடித் தமிழர்கள் வசிக்கிறார்கள். தோராயமாக பெங்களூரில் பத்து இலட்சம், மும்பையில் முப்பது இலட்சம், தில்லியில் பதினைந்து, பீகாரில் ஐந்து எனப் பரவலாக தமிழர்கள் வசிக்காத இடமே […]

சிலிக்கான்வேலி வங்கி திவால்

This entry is part 12 of 13 in the series 12 மார்ச் 2023

சென்ற வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான்வேலி வங்கி திவாலாகியிருக்கிறது. அதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் மொத்த வங்கியும் நான்கே மணி நேரங்களில் ஊற்றி மூடியதுதான். 2008-ஆம் வருடம் வாஷிங்டன் ம்யூச்சுவல் வங்கி திவாலானதுடன் அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும் சரிவினைச் சந்தித்தது. அதுபோன்றதொரு சரிவு திங்கட்கிழமையன்று ஆரம்பமாகலாம் என அஞ்சப்படுகிறது. 2008-ஆம் வருடச் சரிவினை டாலரை அச்சடித்துத் தள்ளிச் சரிக்கட்டினார்கள். இந்தமுறை அப்படிச் செய்வது சிரமம்தான். சிலிக்கான்வேலி வங்கியில் என்ன நடந்தது என்பதனைக் […]

சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை.

This entry is part 3 of 20 in the series 2 பெப்ருவரி 2020

சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை. நாற்காலியைத் தவிர ஊர்வன, பறப்பன, ஓடுவன, ஓளிவன என அவன் தின்னாத சமாச்சாரமே கிடையாது. மனுசனையும் தின்கிறார்களா என்று தெரியவில்லை என்றாலும் எனக்கு அந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது. அப்படி இல்லாமல் இருக்க ஆண்டவன் அருள்புரிவானாக. பெரும்பாலான சீனர்கள் குரூரமானவர்கள். தாங்கள் தின்னப் போகும் விலங்கு துடித்துச் சாவதை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிற சீனர்களே அதிகம். நானும் மாமிசப்பட்சிணிதான் என்றாலும் அப்படிச் சாப்பிடுவதை ஒரு குற்ற உணர்வுடனேயே […]

தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்

This entry is part [part not set] of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன. அதில் முக்கியமானது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருந்த ப்ளாஸ்ட்டிக்கின் உபயோகத்தை தடைசெய்திருப்பது. நான் பார்த்தவரைக்கும் ஏறக்குறைய 80 சதவீதம் அது வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்வேன். இன்னும் சில இடங்களில் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்ட்டிக் பைகளை கொடுப்பதனைப் பார்த்தேன் என்றாலும் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அது அப்படியே தொடர்ந்தால் நல்லதுதான். இரண்டாவது முக்கிய விஷயம் ப்ளக்ஸ் போர்டுகளை ஒழித்திருப்பது. ப்ள்க்ஸ் போர்டுகள் போனவுடன் ஊரே திறந்து போட்டது மாதிரியானதொரு உணர்வு […]

பாகிஸ்தானில் விலைவாசி

This entry is part 1 of 11 in the series 26 ஜனவரி 2020

பாகிஸ்தானில் விலைவாசி கண்டபடி உயர்ந்து போயிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவு ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்க்கு (பாகிஸ்தானிய ரூபாய்) விற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல கடந்த ஒருவாரத்தில் மட்டும் சர்க்கரையின் விலை ஏறக்குறைய பத்து மடங்கு உயர்ந்து ஏழைப் பாகிஸ்தானிகளை பாதித்திருக்கிறது. பதுக்கல்காரர்கள் கோதுமையையும், சர்க்கரையையும் பதுக்கி வைத்துக் கொண்டு தாறுமாறாக விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல பிரதம மந்திரி இம்ரான்கான் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் காஷ்மீர் பிலாக்கனம் பாடிக் கொண்டிருக்கிறார். இம்மாதிரியான பொருளாதாரச் சூழ்நிலை […]

ஆலயம் காப்போம்.

This entry is part 1 of 11 in the series 12 ஜனவரி 2020

அறமற்ற துறையால் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள் நான் நுழைவதில்லை என்பதில் பலகாலம் பிடிவாதமாக இருந்திருக்கிறேன். நமது பேராலயங்களின் முக்கியத்துவம் அறியாத, அதன் மதிப்பு குறித்து சிறிதும் அறிவில்லாத மூடர்கள் மட்டுமே தமிழக அறமற்ற துறையில் வேலை செய்கிறார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. பாழடைந்து இடியும் நிலையில் உள்ள நமது பேராலயங்களின் கதியைக் காண்கையில் ரத்தக் கொதிப்பு வந்துவிடுகிறது. மண்டபங்களைக் கார் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தும் அறமற்ற துறை அதிகாரிகளை என்ன சொல்வது? அப்படியே […]

என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி

This entry is part 3 of 11 in the series 12 ஜனவரி 2020

தமிழ்நாட்டை விட்டு விலகி பலகாலம் சென்றுவிட்டு மீண்டும் தமிழகத்திற்குள் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு உடனடியாக முகத்தில் அறைவது அதன் மயான அமைதிதான்! தமிழர்கள் சப்தமானவர்கள். அது பேச்சானாலும் சரி, பாட்டானாலும் சரி, உச்சஸ்தாயிதான் அவர்களின் அடையாளமே. இன்றைக்கு அதெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், பல் விளக்காமல் பொடிநடையாக நடந்து, ஓலைக்கூரையிட்ட அய்யாவு டீக்கடைக்குப் போனால், அய்யாவு அப்போதுதான் நன்றாக புளி போட்டுப் பள, பளவென விளக்கிய செம்பு பாய்லரில் பட்டை தீட்டி பொட்டு […]

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”

This entry is part 10 of 12 in the series 12 மே 2019

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை” படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் என்று ஊகிக்க அதிக நேரமாகவில்லை. அனேகமாக மும்பையில் வசிக்கும் அத்தனை வெளி மாநிலத்தவனின் கதைகளுக்கும் அவருடைய கதைக்கு அதிக வித்தியாசம் ஒன்றில்லை. அதே குட்டை. அதில் விழுந்து புழுவாய்த் துடிக்கும் மத்தியமனின் கதை. நானும் ஒருகாலத்தில் அப்படி இருந்தவன்தான் என்பது நினைவுக்கு வருகிறது. அதேசமயம் மும்பையை ஒரு ஏணியாக மட்டுமே உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அல்லது எனது கடும் முயற்சிகளின் காரணமாக […]

Ushijima the Loan Shark

This entry is part 7 of 8 in the series 5 மே 2019

சைக்கோத்தனமான திரைப்படங்கள் எடுப்பதில் ஜப்பான்காரனை மிஞ்ச இன்னொருத்தன் இன்னும் பிறக்கவில்லை. பார்ப்பவர்களைக் குலை நடுங்க வைக்கும் ஜப்பானிய திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள் வேறு எந்த மொழியிலாவது எடுக்கிறார்களா என்பது சந்தேகம்தான். சாமுராய் திரைப்படங்களிலிருந்து, ரத்தக்களரியான யாக்கூசா படங்களையும் தாண்டி அடுத்த லெவலுக்குப் போய்விட்டார்கள். வாரக் கடைசியில் “Ushijima the Loan Shark” என்கிறதொரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண கந்துவட்டிக் கதை. ஆனால் அபாரமான திரைக்கதை. பத்து வருடம் பழையது என்றாலும் அங்கே இங்கே நகரவிடாமல் கட்டிப் […]

Pusher Trilogy

This entry is part 6 of 8 in the series 5 மே 2019

நாமெல்லாம் அறியாததொரு உலகம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது என்பதினை நம்மில் பலர் உணர்வதில்லை. போதைமருந்தும், விபச்சாரமும், வன்முறையும், கொலைகளும் நிகழும் மேற்கத்திய உலகத்தைப் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இந்திய மனோபாவம் அடிப்படையில் வம்பு தும்புகளிலிருந்து விலகியிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். நாமறியாத அந்த வன்முறையைக் காட்டும் நூற்றுக்கணக்கான மேற்கத்திய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் அதில் உச்சமாக நான் கருதும் திரைப்படங்களில் ஒன்று Pusher Trilogy என்றழைக்கப்படும் மூன்று நார்வேஜிய திரைப்படங்கள்தான். மூன்று திரைப்படங்களாக […]