author

சீறுவோர்ச் சீறு

This entry is part 3 of 41 in the series 10 ஜூன் 2012

நகரத்தின் மையப்பகுதியில் பரபரப்பான ஒரு சாலை. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இடப்புறம் பெரிய காம்பவுண்ட் போட்ட கட்டிடம். அதற்குள்ளே நுழைந்தவுடன் இரு புறமும் அடர்ந்த மரங்கள், செடி கொடிகள்.. மேற்கொண்டு உள்ளே செல்லச் செல்ல பாதை நீண்டு, கட்டிடங்கள் ஒவ்வொன்றாக வரும்.. அக்கட்டிடத்தின் பின் கோடியில் ஒரு பழைய கட்டிடம். வர்ணமெல்லாம் வெளுத்துப் போய், சுவர்கள் பெயர்ந்து தனியாக ஒதுங்கியிருந்தது.. அந்த மொத்தக் கட்டிடமே ஒரு தனித்தீவு போல இருந்தாலும், இந்த பாழடைந்த அறை மேலும் […]

மாறியது நெஞ்சம்

This entry is part 14 of 28 in the series 3 ஜூன் 2012

கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன தொழில் முறையில் இராட்சச இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கியிருந்தன. இன்று புதிதாக கட்டப்படும் ஷெட்டிற்கு மேலே சிமெண்ட்டு அட்டை போடுவதற்காக இரும்பு கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 30 அடியில் நெடிதுயர்ந்த கட்டிடம். நெருப்பில் வேலை […]

ஞான ஒளி (கலீல் கிப்ரான்)

This entry is part 16 of 33 in the series 27 மே 2012

இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி. ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய் உம் இதயஞான, கீதத்தின் ஓசைகள். சதாசர்வமும் உம் சிந்தையை நிறைத்திருக்கும் எண்ண அலைகள் இனிய சொற்களாய் வடிவுறும் கலையும் அறியக்கூடுமே நீவிர் உம் கனவுகளின் நிர்வாணமதை உம்முடைய விரல்கள் தீண்டும் இன்பம் பெறட்டும். எஞ்ஞான்றும் நன்றே செய்மினே. நீவிர் உம்மின் ஆன்மாவினூடே புதைந்து கிடக்கும் நன்மைகள் எழுச்சியாய் விரையட்டும் முணங்குதலாய்; சாகரம் நோக்கி. கண்காணா ஆழத்தில் புதையுண்டு […]

உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)

This entry is part 16 of 29 in the series 20 மே 2012

அந்நிய ஆதிக்கத்தின் அடிமைத் தளையைக் களைய, வீறு கொண்டு எழுந்த இந்திய தேசத் தியாகிகளின் வரலாற்றில் , சுதந்திரப் போராளி திருமதி சுசேதா கிருபளானிக்கும் மிக முக்கிய இடமுண்டு! ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெரும் பேற்றையும் பெற்றவர் சுசேதா அவர்கள். வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.என்.மஜீம்தார் என்பவருக்கு 1906ஆம் ஆண்டு , ஹரியானா மாநிலம், அம்பாலா எனும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை அரசாங்க மருத்துவராகவும், தேசியவாதியாகவும் இருந்தவர். தில்லியிலுள்ள […]

எம் சூர்யோதயம்

This entry is part 13 of 29 in the series 20 மே 2012

நாம் துவங்கிய தருணமதில் திட்டம் ஏதும் தீட்டாமலே இச்சை கொண்டேன் உம்மீது ஆயினும் காதல் இல்லை உம்மீது என்பதே சத்தியம். உமக்குள்ளே ஊடுறுவி நுழைந்துவிட்டேன் இக்கணம். எம் மனமேடையிலிருந்து முற்றிலும் சரிந்தேவிட்டானவன். உம்மைத்தவிர யாதொன்றும் எம் சிந்தையுள் கொண்டிலேம். உம்மைப்பற்றிய எம்மொழியே எம்மை கலங்கச்செய்கிறது. பொய்மை ஏதுமில்லாத வாய்மையே அனைத்தும் உய்த்துணராத ஒப்புதலாகக் கொண்டு விலகி விடாதே ஆம், ஆம் நீர் எம்மோடே இருக்க, வேண்டி நிற்கிறேன் யான் துப்பு ஒன்றும் உமக்குத் தப்பாமல் தருகிறேன் உரைப்பேன் […]

வசந்தமே வருக!

This entry is part 17 of 41 in the series 13 மே 2012

சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க க்ளையண்ட்டான ஜேம்ஸ் வேறு என்ன செய்ய முடியும். இது போன்ற பெயரை முன்பின் கேட்டதும் இல்லை, உச்சரிப்பதும் எளிதும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி, எஸ் ஃபார் சேம்ஸ் (s for sams, u for umbrella, r […]

ரௌத்திரம் பழகு!

This entry is part 31 of 40 in the series 6 மே 2012

மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று தெருவெல்லாம், சரக்கு வண்டிகளும், இருசககர, நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு வண்ணம் வந்து அந்த மூன்று நிமிடம் காத்திருக்கும் பொறுமை கூட இல்லாமல் சிக்னல் விழுவதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட வேண்டும் என்ற அவசரம் அத்துனை பேருக்கும் இருந்தது. எத்துனை விதமான மனிதர்கள், […]

மறு முகம்

This entry is part 23 of 28 in the series 29 ஏப்ரல் 2012

தோட்டத்தில் மகிழ மரத்தில் கூடுகட்டி வாழும் அந்த புள்ளிப்போட்ட புள் கூட்டம் தான் வைத்த அந்த ஒரு பிடி சோற்றில் உயிர் வாழுவது போல ஒரு மன நிறைவில் இன்பமாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி அங்கையற்கண்ணி, சமயலறை சன்னல் வழியாக. வழக்கம் போல. அன்றாடம் இரவு ஒரு பிடி சோறு தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும், பாத்திரத்தை சுத்தமாக கழுவி கவிழ்க்கக் கூடாது, காரணம் இறந்து போன நம் முன்னோர்கள் சில நேரங்களில் […]

சூல் கொண்டேன்!

This entry is part 37 of 44 in the series 22 ஏப்ரல் 2012

அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும் இனியதொரு பொழுதின் ஏக்கமும் கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும் சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து கனிவான கற்கண்டாய் உருமாறி கவின்மிகு கருவதனைக் கொள்ளவே தவியாய்த் தவித்து மனம் பனியாய் உருகிப் பார்த்திருக்க……. பதமாய் பகட்டாய் பரிதவிப்பாய் காத்திருந்த கருகூலம் கண்டேன் மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும் கண்டறியாதனக் கண்டேன் என கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய் கன்னியவளை கருத்தாய்க் கவரவே காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள் ஆசுவாசமாய் சூல் கொண்டது சூல் […]

கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)

This entry is part 30 of 44 in the series 22 ஏப்ரல் 2012

உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும் அச்செயலுக்கொப்பானத்ன்றோ இதுவும். ஆயின்,நீவிர் மண்ற்கோபுரம் அமைக்கும் தருணமதில் கடலன்னையவள் கரைசேர்க்கும் மணற்குவியலதையும் சேர்த்தே சிதைக்கும் உம்மோடு தாமும் குதூகலம் கொள்கிறதே அக்கடல். உண்மையில் மாசற்ற நகைப்பன்றோ.அது. ஆயினும், கடலென பரந்து விரிந்த வாழ்க்கையற்றவருக்கு மாந்தர் உருவாக்கிய அச்சட்டம் மட்டும் மணற்கோட்டையாய் இல்லாமல் போனாலும்தான் என்ன, ஆயினும், உறுதிமிக்க பாறையாக இருக்கக்கூடிய வாழ்க்கையின்மீது […]