இடம்: ரங்கையர் வீடு நேரம்: காலை மணி எட்டு. உறுப்பினர்: (ஜமுனா, ரங்கையர், கிலாஃபத் கிருஷ்ணய்யா) (சூழ்நிலை: ரங்கையர் வீட்டினுள் அமர்ந்து கணீரென்ற குரலில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெளியே அமர்ந்து ஜமுனா பூக்கட்டிக் கொண்டிருக்கிறாள்) ரங்கையர்: வேதாந்த கீதம் புருஷம் பஜேஹம் ஆத்மானம் ஆனந்த கனம் ஹ்ருதிஸ்தம் கஜானனம் யம்-மகசா ஜனனாம் மாகந்தகாரோ விலயம் பிரயாதி (ஸ்லோகம் சொல்வதைச் சற்று நிறுத்துகிறார்) ஜமுனா: என்னப்பா? ரங்கையர்: இது எதிலே வர்றது சொல்லு பார்ப்பம்! ஜமுனா: […]
இடம்: ஜமுனா வீட்டுக் கிணற்றடி நேரம்: முற்பகம் பதினொரு மணி உறுப்பினர்: ஜமுனா, ராஜாமணி (சூழ்நிலை: ஜமுனா கிணற்றில் தண்ணீர் இழுத்து கொண்டிருக்கிறாள். கிறீச் கிறீச்சென்று ராட்டின ஒலி கேட்கிறது. வாளி இறங்கி தண்ணீரில் தொம்மென்ற ஓசை வருகிறது. ஜமுனா கயிற்றை இழுக்கிறாள். அப்போது தெரு நடையில் செருப்பு சத்தம் கேட்கிறது) ஜமுனா: (கயிற்றை இழுத்துக் கொண்டே) யாரது? ராஜாமணி: (உள்ளே வருகிறான்) நான்தான் ஜமுனா! […]
வையவன் காட்சி-9 இடம்: ஒரு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம். பாத்திரங்கள்: ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி, ரங்கையர். (சூழ்நிலை: ஆட்டோவிலிருந்து ரங்கையர், ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி மூவரும் இறங்குகின்றனர். ஆட்டோ டிரைவர் ஆனந்தலட்சுமியின் பெட்டி படுக்கையை எடுத்து கீழே வைக்கிறார்) ஆனந்தராவ்: ரங்கா அந்த போர்ட்டரை கூப்பிடு. ரங்கையர்: போர்ட்டர் எதுக்குண்ணா? பெட்டியை நான் எடுத்துக்கறேன். படுக்கை சின்னதாத்தானே இருக்கு. மன்னி எடுத்துக்கறா! ஆனந்தராவ்: இதிலே வந்து நீ சிக்கனம் பார்ப்பே! (கை தட்டிக் கூப்பிடுகிறார்) போர்ட்டர்… போர்ட்டர்… இங்கே வா! […]
இடம்: ஆனந்த பவன். ‘கேஷ் கவுண்டர்’ நேரம்: இரவு மணி ஏழரை உறுப்பினர்: தொழிற் சங்கத் தலைவர் கண்ணப்பன், ஆனந்தராவ், கிரைண்டிங் மிஷின் விற்பனைக்கு வரும் நீலகண்டன், ரங்கையர். (சூழ்நிலை: கண்ணப்பன் கேஷ் கவுண்டருக்குப் பக்கத்தில் போட்டிருக்கிற நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரில் ஒரு பெஞ்சின் மீது கிரைண்டிங் மிஷின் விறபனை ஆசாமி நீலகண்டன் உட்கார்ந்திருக்கிறார்) ஆனந்தராவ்: அப்பறம் வந்த சமாச்சாரம் சொல்லுங்கோ கண்ணப்பன்! நீங்க பெரிய […]
இடம்: ரங்கையர் வீடு. நேரம்: மாலை ஆறரை மணி. பாத்திரங்கள்: ஜமுனா, ஆனந்த லட்சுமி, மோகன். சூழ்நிலை: (ஜமுனா பரப்பி வைத்திருக்கும் ஒரு வாழை இலையில் ஒரு தேங்காய்த் துருவியால் தேங்காய் மூடி ஒன்றைத் துருவி கொண்டிருக்கிறாள். லேஸ் லேஸாக தேங்காய்த் துருவல் உதிர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்னக் கூடத்தின் ஓரமாக காலை மடக்கியவாறு உட்கார்ந்து ஆனந்த லட்சுமி வெங்கடேச புராணம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்) […]
இடம்: ஆனந்த பவனில் சமையற்கட்டு. நேரம்: அடுத்த நாள் பிற்பகல் மணி மூன்று பாத்திரங்கள்: ரங்கையர், சுப்பண்ணா, சாரங்கம், மாதவன் ராஜாமணி, ( பாபா என்று ஒரு கிளீனர்) சூழ்நிலை: (வாழையிலைக் கட்டுக்குப் போட்டிருந்த நார்க்கட்டை பேனாக் கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கிறார் ரங்கையர். பாபா பில் எழுதும் டெஸ்கிற்கு மேல் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான். கல்லா மேஜையில் ராஜாமணி அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்) […]
இடம் ஆனந்தராவின் வீடு. காலம்: முற்பகல் பதினோரு மணி. பாத்திரங்கள்: ஆனந்தராவின் மனைவி கங்காபாய் (வயது 45 ராஜாமணி, சிறுமி ஒருத்தி. (சூழ்நிலை: சீடைக்காகப் பிசைந்து வைத்திருந்த மாவை, சிறு சிறு அளவில் உருண்டையாக உருட்டிக் கொண்டிருக்கிறாள். கங்காபாய் ராஜாமணி வருகிற ஷூ ஓசை கேட்டு நிமிர்ந்து பார்க்கிறாள்) ராஜாமணி: என்னம்மா சீடைக்கு மாவா? அடிசக்கை, எப்போ சுடப் போறே? கங்காபாய்: என்னடாது, சீடை சாப்பிட்டு […]
இடம்: ஹோட்டலின் உட்புறம். சமையல் செய்யுமிடம். நேரம்: காலை மணி எட்டரை. பாத்திரங்கள்: சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா குக் ராமையா, தோசை மாஸ்டர் சாரங்கன், ரங்கையர், ஆனந்தராவ். (சூழ்நிலை: சுப்பண்ணா இரண்டாவது ஈடாக மெதுவடை போட்டுக் கொண்டிருக்கிறார். கடபுடவென்று குழாயடியில் டபரா செட்டுக்களும் தட்டுகளும் சரியும் ஓசை. குழாய் பீச்சும் ஒலி. தோசைத் தண்டவாளத்தின் சீற்றம், வெங்காயம் அரியும் கண்ணப்பன், டக் டக்கென்று கத்தியை ஓட்டும் தாளலயம், எண்ணெயில் மெதுவடை முறுமுறுக்கும் […]
இடம்: ஹோட்டல் ஆனந்தபவன் நேரம்: காலை மணி எட்டு பாத்திரங்கள்: ராஜாமணி, ஜமுனா, கெமிஸ்ட்ரி லெக்சர் ராமபத்ரன் (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். கூட்டம் அதிகரித்துள்ளது) (கெமிஸ்ட்ரி லெக்சரர் ராமபத்ரன் ஹோட்டலுக்குள் நுழைகிறார். அவர் ஓர் ஆல் ரவுண்டர் கிரிக்கெட், செஸ், கர்நாடக சங்கீதம், வேத அத்யயனம், கம்யூனிஸம், நவீன இலக்கியம் சினிமா எதற்கும் ஈடு கொடுப்பார். அவர் வர வர கேஷிலிருந்து எழுந்து நிற்கிறான் ராஜாமணி) […]
படம் : ஓவியர் தமிழ் இடம்: ஆனந்த பவன் ஹோட்டல் பாத்திரங்கள்: ஹோட்டலின் வயது முதிர்ந்த சர்வர் ரங்கையர், ஹோட்டல் உரிமையாளர் ஆனந்த ராவ், வாசுதேவாச்சார், கிட்டு, வடிவேலு என்று மூன்று வாடிக்கையாளர்கள். நேரம்: காலை மணி ஏழு. (சூழ்நிலை: சர்வர் ரங்கையர், கல்லா மேஜைக்குப் பின்னால் உயரத்தில் மாட்டியிருந்த ஸ்வாமி படங்களுக்குப் பூ மாட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாமென்று ஆனந்தராவ், மேடையிலிருக்கும் மேஜையை விட்டுக் கீழே […]