பாச்சுடர் வளவ. துரையன் மாகலக்கமூள் வாரணங்கள்முன் பாகலப் பசாசுகள் பரக்கவே. 531 [மா=மிகுந்த; கலக்கம்=துன்பம்; வாரணம்=யானை; பாகலம்=யானைகளுக்கு வரும் நோய்] யானைகளை வருத்திக் கொள்ளும் பாகலம் எனும் நோய்க்கு ஆளானவை போல எதிரிகளின் யானைப் படைகள் மிகவும் துன்பத்திற்கு ஆளாயின. வெள்ளி வாய்மதிக் குடைவிளிந்த ஓர் […]
பாச்சுடர் வளவ. துரையன் நாம ராசியை உதிர்த்து உரோணிதன் சோம ராசிஅள கமம் சுலாவியே. 501 [நாமம்=பெயர்; உரோகிணி=ஒரு நட்சத்திரம்; சோமராசி=சந்திரனுக்கு உவப்பானவன்; அளகம்=தலைமுடி] பன்னிரண்டு பெயர்களை உடைய ராசிகளை உதிர்த்து உரோகிணி என்னும் சந்திரனுக்கு விருப்பமான நட்சத்திரத்தின் கூந்தலைப் பிடித்துக் கலைத்தனர் சில பூதர்கள். சேய மாதிரத் தேவர் தேவிமார் […]
பாச்சுடர் வளவ. துரையன் செயிர்த்து உதரத்து எரிச்சுரர் பொற்சிகைக் கதுவச் சிரித்தே உயிர்ப்பில் இணைக் குருக்களை இட்டு உருக்கித் தகர்த்து உரைத்தே. 476 [செயிர்த்து=கோபித்து; உதரம்=வயிறு; சிகை=தலை முடி=உயிர்ப்பு=பெருமூச்சு; இணைக்குருக்கள்=வியாழன்,சுக்கிரன்] தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்காததால் வயிற்றில் பசித்தீ பற்றி எரிந்து அது உச்சித் தலைமுடிக்கு மேலே தெரியக் கண்டு சிரித்த பூதப்படைகள் தேவர்களின் மூக்குத் துளைகள் வழி வந்த பெருமூச்சில் பொன் வெள்ளி என்னும் இரண்டு […]
வளவ. துரையன் கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான் ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே. 451 [கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது] அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன். அந்தச் சிவனோ ஒற்றை ஆலமரத்தின் வெறுமையான நிழலில் வீற்றிருப்பான். வான் ஏறுஉரூம் எனது ஆயுதம் அவன் ஆயுதம் மழுவாள் யான் ஏறுவது அயிராபதம் அவன்ஏறுவது எருதே. 453. [உரும்=இடி; அயிராவதம்=ஐராவதம் என்னும் […]
பாச்சுடர் வளவ. துரையன் சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல் தாமும் நின்ற; அவர்தாள் நிலம் தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி தோயுமேல் அவையும் மாயுமே. 426 பூதப்படைகள் களைப்படைந்து எதன் மீதும் சாய்வது இல்லை. அதனால் மேருமலை போன்ற மலைகள் எல்லாம் அசையாமல் நின்றன. பூதப்படைகளின் கால்கள் நிலத்தைத் தொடுவதில்லை. அப்படி நிலத்தில் படிந்திருந்தால் இப்பூமியே அழிந்திருக்கும். நிலத்தினும் […]
வளவ. துரையன் ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள் அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர் சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச் செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே. [401] [வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி; அசலம்=மலை] பூதகணங்களில் சில யானைகள் ஆயின; சில பாய்ந்தோடும் குதிரைகள் ஆயின; சில ஆயுதங்கள் மற்றும் போர்க்கருவிகள் ஆயின; சில மலை போன்ற தேர்கள் ஆயின; சில காலாட் படைகள் ஆயின; இவற்றை […]
வளவ. துரையன் சங்கெ டுத்து உடைத்த யின்றி தன்துணைத் தனிப் பெரும் கொங்கு டைச் சரோருகக் கிழங் ககழ்ந்து கொண்டுமே. [381] [கொங்கு=தேன்; சரோருகம்=தாமரை; அகழ்ந்து=தோண்டி] பூதப்படைகள் குபேரனின் சங்கநிதியைப் பிடித்து அதிலிருந்த சங்கை எடுத்து உடைத்தன. அதில் உள்ள பூச்சிகளைப் பிடித்துத் தின்றன. தேன் உடைய தாமரை மலரின் கிழங்குகளத் தோண்டி எடுத்து உண்டன. கைவழிக் குலப் பொருப்போர் எட்டுடன் கலந்து கொண்டு […]
வளவ. துரையன் பள்ளி வெற்பின் மாறுகோள் பெறாது விஞ்சை மன்னர்புகழ் வெள்ளி வெற்பு எடுத்துஇடும் குதம்பை காதில் மின்னவே. [371] [பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை; குதம்பை=ஒருவகை காதணி] பூதப்படைகள் சிவபெருமான் உறையும் வெள்ளிமலைக்கு ஈடாகாவிட்டாலும், வித்தியாதரர் வசிக்கும் இடமான வெள்ளிமலைகளை எடுத்துத் தம் காதுகளில் குதம்பை என்னும் காதணிகளாய் அணிந்தன. குஞ்சி வேர்பறித்த குண்டர் செம்பொனின் குயின்றபேர் இஞ்சி வேர் அகழ்ந்து காதில் […]
வளவ. துரையன் கார்கிழித்து அமர்நாடு கண்டுஉடன் பார்கிழித்து உரகர் பூமி பற்றியே. [361] [கார்=மேகம்; அமரர்=தேவர்; உரகர்=நாகர்] மேகத்தைக் கிழித்துக் கொண்டு பூதப் படைகள் தேவர் உலகம் சென்றன. அதன் பின் பூமியைப் பிளந்துகொண்டு பாதாள உலகம் சென்று நாகர் உலகையும் விழுங்கின. =====================================================================================குடத்தெடுத்து நல்அமுது கொண்டவர் படத்தெடுத்த சூடிகை பறித்துமே. [362] [படம்=பாம்பின் படம்; சூடிகை= தலையில் சூடி உள்ள நாக மணி; […]
வளவ. துரையன் [அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து] அண்மையில் அன்பாதவன் எழுதி வெளிவந்துள்ள புதினம் “பிதிர்வனம்”. சிறந்த கவிஞராக, சிறுகதை ஆசிரியராக தம்மை வெளிக்காட்டியவர் இப்பொழுது நாவலாசிரியராகப் புது பரிணாமம் எடுத்துள்ளார். 2006-ஆம் ஆண்டு மும்பை புறநகர்ப் பகுதியில் ரயில் நிலையங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை நாவலின் மையமாக்கி இருக்கிறார். அன்பாதவன் சில […]
பின்னூட்டங்கள்