author

இந்த இரவு

This entry is part 7 of 9 in the series 4 ஜூன் 2023

பகலிலேயே வந்து மூடும்இந்த இரவை என்னென்று சொல்வது? கிளிகள் பழமுண்ணாமல்பரிதவித்துத் தவிக்கின்றன. தன் புண்னைக் கொத்தவரும்காக்கையை விரட்ட முடியாமல்காளை தலையை ஆட்டிப் பார்க்கிறது. ஆந்தையின் மகிழ்ச்சியைஅந்தப் பொந்தினுள் கண்டேன். இரவின் இருளுக்குக்கருமையென்றும்நீலமென்றும்வண்ணம் வடிக்கிறார்கள். பகலை விட்டுவிட்டுஇரவு மெதுவாகவெளியே ஏறும்போதுநிலவு வந்து கொண்டிருந்தது. இப்போதுதான்அந்தக் கள்ள இரவுஉண்மையில் வந்து தீர வேண்டும். இந்த நிலவின் ஒளியில்அப்போதுதான்இரவை விரட்டி அடித்துஇன்பம் அள்ளலாம்.

பழுப்பு இலை

This entry is part 6 of 9 in the series 4 ஜூன் 2023

வளவ. துரையன் தேய்ந்து கொண்டே போய்இல்லாமல் ஆகிவிடும்நாள்காட்டியாக போலத்தடுமாறுகிறது நெஞ்சம். திருவிழாவில் தொலைத்துவிட்டபெற்றோரைத் தேடும்சிறுவன் போலத்தவிக்கிறேன். யாரைப் பார்த்தாலும்உதவிசெய்ய வருபவர்போலவே தெரிகிறது. ஆனால் அவர்கள் மனத்திலிருந்துசுத்தமாக என்னைஅழித்திருப்பதைஅறியும்போதுதான்அழுகை வருகிறது. தண்ணீரில் தத்தளிக்கும்சிற்றெறும்பு ஒன்றுதுரும்பொன்றைத் தேடுகிறது. விழுகின்ற பழுப்பு இலைகளைமனம் விட்டுவிடாமல்எண்ணிக் கொண்டிருக்கிறது.

பட்டறிவின் பகிர்வுகள் – எஸ்ஸார்சியின் ”ஞானவாபி”

This entry is part 12 of 12 in the series 17 ஏப்ரல் 2023

[எஸ்ஸார்சியின் ”ஞானவாபி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு. வீட்டிற்கு வாடகைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு முன்பணமும் தந்துவிட்டுக் கொரானோ வந்ததால் வராதவர், வீட்டை விற்பனை செய்ய வரும் தரகரின் மறுபக்கம், வீட்டுப் பூட்டைத் திறக்க வந்த பாய் வேலை செய்யாததால் காசு வாங்க மறுப்பது, குடித்தனம் வருபவரின் தொல்லைகள், […]