கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது.இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் […]
அன்பு நண்பர்களே, வனசாட்சி நாவல் அறிமுகவிழா கோவையில் நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை ()நடைபெறும் இவ் விழாவில் மூத்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், கவிஞர் நிர்மால்யா, திலகபாமா,மு.சி.கந்தையா, பால நந்தலாலா உள்ளிட்டோர் பேசுகிறார்கள். வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். -தமிழ்மகன்
நாள்: 09-03-2013 இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணாசாலை… நேரம்: மாலை 5 மணிக்கு.. நண்பர்களே இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. விழா சிறப்பாக நடக்க அனைவரும் நிகழ்விற்கு அவசியம் வர வேண்டும். இப்போதே 9 ஆம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013 மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும். நன்றி 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் லண்டன்
நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா….. 26 ஏப்ரல் 2013—நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்…… சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர் எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு. அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், […]
PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013 Bangalore Film Society and National Gallery of Modern Arts (NGMA) are hosting a preview screening of Papilio Buddha. It is our pleasure to invite all NECAB Matinee members for the same. Details of the screening: Venue : National Gallery of Modern Art, Manikyavelu Mansion, 49, […]
காரைக்குடி கம்பன் திருநாளின் 75 ஆம் ஆண்டு விழா வரும் மார்ச் மாதம் 21 முதல் 27 ஆம் தேதி வரை பட்டி மன்றம், வட்டத்தொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கம் கம்ப .நாட்டுப் பாராளுமன்றம் எனப் பற்பல நிகழ்வுகளுடன் காரைக்குடியில் நிகழ உள்ளது. கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்க வருக இதனுடன் அழைப்பினை இணைத்துள்ளேன்
ரியாத்தின் குறிப்பிடத்தக்க தமிழர் அமைப்புகளுள் தஃபர்ரஜ்ஜும் ஒன்று. தஃபர்ரஜ் 2013 இஸ்லாமிய விழா கடந்த வெள்ளியன்று அல்முஸ்தஷார் மகிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மெளலவி இப்ராஹீம் ஜும்ஆ உரையை அருந்தமிழில் ஆற்ற காரீ இம்ரான் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை நடத்திவைத்த பின்னர் விழா தொடங்கிற்று. எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற இவ்விழாவில் தஃபர்ரஜ் தலைவர் அஹமது இம்தியாஸ் வரவேற்புரை அளித்தார். துணைத் தலைவர் ஹைதர் அலி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்ச் சிலேடைப் புதிர்களை கவிஞர் இப்னுஹம்துன் பகிர்ந்துகொண்டார். குர்ஆனைப் […]
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. அப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கடந்த பெப்ரவரி 21அன்று மலேசியத் தலை நகர் குவால லும்பூரில் நடைபெற்றது. முதன்மைப் பரிசு ஆதி.குமணன் நினைவுப் பரிசான 10,000 ரிங்கிட்டையும் சென்னைக்குச் சென்றுவரும் விமான டிக்கட்டையும் வென்றவர் “துளசி” எனும் நாவலை எழுதிய ஓர் புதிய இளம் எழுத்தாளரான மாதுரி மனோகரன். முதல் பரிசான […]
தகவல் குறிப்பு திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். (invite enclosed) அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி […]