ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

This entry is part 3 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

நா. வெங்கடேசன்  [ஶ்ரீம.பா.10.29.1]ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:குதிர் கால இரவில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களைமுகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்தன் யோகமாயையினாலே![ஶ்ரீம.பா.10.29.2]அச்சமயம், கீழ்வானம் ஶிவக்கஅழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பிவெய்யக் கதிரோன் வெயிலில் வாடியவிரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.அஃது, நீண்டு வெளியூர் ஏகித் திரும்பும்மணாளன் தன் அன்பு மனையாளின்ஆசை முகந்தனில்கப்பிய காதலுடன்அப்பிய குங்குமப் பூக்குழம்புபூச்சு போலாச்சே![ஶ்ரீம.பா.10.29.3]குமுதமலர்ந்து பூரணகலை ஒளிசிந்தகுமுதவல்லி திருமுகப்பொலிவாய் சீருடன் புதியகுங்குமப்பூ ஶிவப்பில் சந்திரனவன்இன்னொளியால் வனம் முழுதும் ஶிவந்து கண்ட கோவிந்தன் குழலூதினாரே!கோகுலத்து கோபியர்கள் […]

அழிவுகள்

This entry is part 2 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

அமீதம்மாள் வெட்டுக்கிளிக் கூட்டம்சிட்டுக்குருவியைத்தின்றுவிட்டனநெகிழி ஆப்பிள்கள்அசல் ஆப்பிளைஅழித்துவிட்டதுகற்பூரத்தில்கருவாட்டின் வாசம்பாலையும் இரத்தத்தையும்மென்பொருள்செய்கிறதுசெயற்கை நுண்ணறிவுநெய்த ஆடைநிர்வானம் மூடவில்லைபுணர்தலின்றிபிள்ளை குட்டிகள்ஊடகங்களில்பொய்களுக்கேபூமாலைகடல்களுக்குமேய்ச்சல் நிலமாய்பூமிமண்ணை வெல்லமனிதக் கொலைகள்விவசாய நிலங்களில்வெடிகுண்டு விதைகள்பற்றி எரிகிறதுமொத்தக்காடும்உதிக்கிறது சாம்பலில்புதிய காடுஅமீதாம்மாள்

நின்றாடும் சிதிலங்கள்.

This entry is part 1 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

ரவி அல்லது திரும்பி படுத்தபொழுதில்அழுத்தியபாயின் கோரைக்குநன்றிவிழித்துக் கிடக்கும்இச்சோம்பலில். நினைவகழ்ந்து நெஞ்சுக்குள் புகுந்தஅய்யா வியாபிக்கிறார்போர்வைக்குள் தலையணை நனைய. வாய்ப்பு வசதிகளற்ற நாளில்செக்கிலாட்டிய எண்ணையைசில்வர் பானைகளில்காய வைத்து காப்பதுஅன்றைய நாட்களில்கிராமிய வழக்கம். விளையாடிய வேளையில் யாவையும்எத்தி விழுந்து தட்டிவிட்டதன் கரைகள்பூமியில்பல மழைகள் பார்த்தும்அப்படியேதான் இருந்ததுநோகலின் வடுவாக. வருட சேமிப்புவாசலில் சிதைந்த கோவத்தில்தொரத்திப் பிடிக்கவியலாத ஆற்றாமையில்விலாசிய கம்புமுதுகில்தோல் தெரித்துஇரத்த கசிவானதுஅறுபதுக்கும்ஆறுக்குமான அணுக்கத்தில். துக்க வீட்டின் துயரத்தைப்போலஅய்யாவும்அக்காக்களும்அன்றைய பொழுதில்அழுததைப்போலபிறகு நடந்தபேரிழப்புகளெதிலும் கண்டதில்லைஅவ்வகச்சேர்மான மெய்யை. வேதனையில்விழிக்கும் பொழுதெல்லாம்விளக்கொளியில்மயிலிறகால்தடவிய படி இருக்கும்காட்சிஎந்த ஜென்மத்திலும்அழியாதுபடிமமாகிவிட்டஅய்யாவின் அன்பின்திளைப்பால். சலிக்காமல்சமன் […]

கவிதைகள்

This entry is part 2 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

ரவி அல்லது கரைதலின் மீட்சி சற்றேனும் பிடித்து நிறுத்திட முடியாத இம்மனம்தான் சிலரை கோவிக்கிறது. சிலரை வெறுக்கிறது. சிலரை துதிக்கிறது தலைக்கேறிய கௌரவ தொனியில். அந்தியின் மோனத்தில் யாவும் கூடடைய. இதன் தொண தொணப்புதான் நின்றபடியாக இல்லை மேவும் கலைப்பில். சொல் கேளா அதனுடன் இனியொரு பொழுதும் துயருறுவதாக இல்லை குடை பிடிப்பதான அக்கரை அழைப்பில். சிறுமையின் செருப்பெனக் கொண்டாலும் கருணையினால் கரைவதைத் தவிர யாதொரு சுகமுமில்லை முன்கணம் வரை. *** புரை தீர்க்காதப் புண். அன்று […]

அங்காடி வண்டி

This entry is part 1 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

அங்காடி வண்டியை வீட்டுக்குத் தள்ளிவந்து வீதியில் விட்டேன் வெயிலில் மழையில் பனியில் கிடந்தது துரு தின்றது குப்பைகள் கொண்டது காலவீச்சில் அதன் கால்கள் முறிந்தது வண்டிக்கும் வலியுண்டோ? என்னால்தான் இக்கதி தப்புதான் வண்டியே மன்னிப்பாயா? வண்டி சொன்னது தொழுது வாழ்ந்தேன் இன்று தொழுநோய் கொண்டேன் சித்திரமாயிருந்தேன் சிதைத்தாய் என் சாபம் தொடரும் தர்மம் தண்டிக்கும் நீ தீயில் முகம் கழுவும் தேதிக்குக் காத்திரு அமீதாம்மாள்

கரை திரும்புமா காகம் ?…

This entry is part 3 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

ச.சிவபிரகாஷ் ஏழரை சனி வந்து, எழுச்சி மிக காட்டவே, உக்கிரம் தணிக்க, உத்தேசமாக பரிகாரம் சொன்னார்., ஊரறிந்த சோதிடர். சனிக்கிழமைகளில், காகத்துக்கு… எள்ளு சாதமும், சதா…நாட்களில், சாதமும் வைக்க… சுயநல சூழ்ச்சியறிந்து காகம் – அதை மன்றாடியும், மனதிறங்கி, வரவே இல்லை. கரிசனம் காட்டுமா? கடவுளான கிரகமும், தொண்டை கமறிய, காரியும். வெட்டப்பட்ட மரத்தில் – முன் கூடுகட்டி வாழ்ந்த, காகத்தையும், கடைசி வரை, காணவே இல்லை. காய வைத்த, வத்தல்,வடாமை வாயில் கவ்வ, வட்டமடித்து வந்த […]

செடி

This entry is part 1 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

அந்தச் செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது நானோ அதைக் கிள்ளிப் பறித்து மகிழ்ந்தேன் அதன் கவலையோ கண்ணீரோ வலியோ நான் அறியேன் அடுத்தநாள் அதே செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது அமீதாம்மாள்

வல்லினம்

This entry is part 3 of 3 in the series 28 ஜூலை 2024

குறுக்கு வெட்டாய்  பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி  தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென  கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்……கீரீச்… என குருவிகள் ஓலம். ட்விட்….ட்விட்…. கருங்குருவி கதறல், டக் டக் .டக்,,,,, என  மரங்குத்தி துக்கம். கூடுகளை தேடி  தூக்கனாங் குருவிகள் கூட்டம். மரண ஓலம் பூமியெங்கும்  மரித்துப்போனது ஆலமரம். மெளனமாய் சினுங்கியது  மண்! “எல்லாம் முடிந்துவிட்டது” வேர்! தூரத்தில் புல்டோசர்  […]

வாழ்க்கை

This entry is part 3 of 5 in the series 21 ஜூலை 2024

தொலைந்து போன  ஒத்தை கொலுசில்தான்  ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும்  பத்து ரூபாயில்தான்  சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது.  வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின்  பெருமூச்சு கேட்கின்றது.  பலூன்காரனுக்கு- எப்போதும்  பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம்  எப்போதும் குழந்தைகள்.  சிவன்கோயில் அய்யருக்கு  தட்டுகளில் ஜீவனம்.  பலாச்சுளை விற்பவனுக்கு  பத்து ஈக்கள் சொந்தம்.  குருட்டு பிச்சைக்காரிக்கு  கோவில் வாசலே சுவர்க்கம்.  வரும்போகும் வாழ்கைக்கு  யாரிடம் கேட்பது முகவரி!.                 […]

குடும்பம்

This entry is part 5 of 5 in the series 21 ஜூலை 2024

தோப்பின் நடுவே ஒரு செல்ல மரம் அணில்கள் குருவிகள் பூச்சிகள் வாழ்த்தின கும்மியடித்தன குறுஞ்செடிகள் ஆரத்தி சுற்றின மற்ற மரங்கள் செல்ல மரத்தின் பூக்கள் சிரித்ததில் சுரந்த தேனை வண்டுகள் மேய்ந்தன வழிந்த தேனை எறும்புகள் செரித்தன-அதன் பிள்ளை பேரர்கள் காடுகள் வளர்த்ததில் மழைகள் வாழ்த்தின ஒரு பொட்டல் வெளியில் தனிமரம் ஒன்று ஒத்தையாய் நின்று ஒத்தையாய்  செத்தது அமீதாம்மாள்