கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…

This entry is part 10 of 31 in the series 31 மார்ச் 2013

  ராஜேந்திரன்     ” அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்” பின்னூட்டத்தில் பின்வருமாறு சொன்னது மனதை இன்னும் அரிக்கிறது.. Dr.G.Johnson says: March 28, 2013 at 8:02 am ஈழத் தமிழர்களுக்காக தமிழக மாணவர்களும் மாணவிகளும் கொதித்து எழுந்து போராடுகின்றனர். அவர்கள் உண்மையில் தமிழ் இன உணர்வால் போராடினால் அதை நான் பாராட்டுகிறேன். தமிழ் நாட்டு மாணவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிமானிகளே. இதற்கு நாம் ஏதும் செய்ய முடியாது. அவரவரின் அரசியல் தலைவரின் […]

பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?

This entry is part 9 of 31 in the series 31 மார்ச் 2013

புனைப்பெயரில்      பரதேசி படத்தில், தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழும் மக்களை இனம் புரியா நோய் தாக்கி அவர்கள் பிடுங்கிப் போட்ட செடி போல் செத்து விழுவார்கள். அது தொடர்ந்து , அங்கு வரும் ஒரு டாக்டர், அவர்களுக்கு இயேசப்பன் நாமம் சொல்லி வைத்தியம் பார்ப்பார். வைத்தியம் பார்ப்பது விட, அவர்களின் நாக்கிலும் நெற்றியிலும் அவரும் அவருடன் வரும் பெண்மணியும் இயேசு நாமத்தை குறியீடாக்குவார்கள். அப்புறம், இயேசுவின் நாமம் சொல்லி ஒரு குத்துப்பாட்டு ஆடி பன்களையும் […]

தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்

This entry is part 8 of 31 in the series 31 மார்ச் 2013

ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கிநகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின்மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இவற்றை வாசிக்கும்படி கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம். இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான்மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் அடிப்படை […]

கந்தா ( தமிழ் )

This entry is part 7 of 31 in the series 31 மார்ச் 2013

சிறகு இரவி. அடுத்தவனுக்கு நடக்கும் அநியாயத்தைக் கண்டும் காணாமல் போகும் சராசரி மனிதன், அது தனக்கே ஏற்படும்போது, கொதித்தெழும் வழக்கமான கதை. பல நாள் தயாரிப்பில், காரம் குறைந்து போன மசாலா படம். கந்தா ( கரண் ), வரதராசன் ( ராஜேஷ் ) வாத்தியாரால் வளர்க்கப்படும் அனாதை. அவனை பண்போடு வளர்க்கும் அவர், தான் பெற்ற மகனை தத்துக் கொடுத்ததால், ஏற்படும் வினைகள்தான் முழுக்கதையும். கோலாலம்பூரில் இருந்து வரும் கந்தா, வாத்தியாரைக் கண்டெடுக்கும் இடம், ஒரு […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக

This entry is part 6 of 31 in the series 31 மார்ச் 2013

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2  பாகம் -3 மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின்”வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence]சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒருகற்பனை நிகழ்ச்சி. […]

டௌரி தராத கௌரி கல்யாணம்…!

This entry is part 5 of 31 in the series 31 மார்ச் 2013

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.   சித்ரா…சித்ரா ..! மாப்பிள்ளை யாத்துக்காரா எல்லாரும் கிளம்பியாச்சாம்…இன்னும் அரைமணி நேரத்தில் வந்துடுவாளாம் இப்போ தான் ஃபோன் பண்ணினார்.  என் கணக்குக்கு இந்த டிராஃபிக்கில் மாட்டிண்டு வெளில வந்து சேர எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் . அவாள்ளாம்   வரும்போது நம்ம கௌரியை ரூமுக்குள்ள போய் உட்காரச்சொல்லு . நாம கூப்பிட்ட போது வந்தாப் போறும்ங்கிட்டியா ஈஸ்வரன் ஈனஸ்வரத்தில் சொல்லிவிட்டு போகிறார். ஒ……நான் அப்பவே சொல்லியாச்சு கேட்டேளா….நம்மாத்துல ..இதென்ன […]

“சூது கவ்வும்” இசை விமர்சனம்

This entry is part 4 of 31 in the series 31 மார்ச் 2013

கவ்வும் இசை ( சூது கவ்வும் )   அட்டக்கத்தி’யிலேயே தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்தவர் சந்தோஷ் நாராயணன். பின்னர் பிஸ்ஸா’வில் மோகத்திரை’யில் நம்மை மயக்கிவிட்டு இங்கு முழுக்க ஒரு கலவையாக ஜூகல்பந்தி வைத்திருக்கிறார். மெலிதான ராப், கொஞ்சம் ட்விஸ்ட்டும், கொஞ்சம் Yodelingம் கலந்து, ஒரு பாடல் முழுக்க பழைய பாடலை ஞாபகப்படுத்துவதாகவும், இன்னொன்று ஜேம்ஸ்பாண்டின் பின்னணி இசைக்கலவையோடு விருந்து படைத்திருக்கிறார், யுவன் “ஆரண்ய காண்டத்தில்” பரீட்சித்துப்பார்த்து வெற்றி பெற்றது போல இங்கும் வென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு […]

‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’

This entry is part 3 of 31 in the series 31 மார்ச் 2013

‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது….அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான்.’ நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் […]

ரேபீஸ்

This entry is part 2 of 31 in the series 31 மார்ச் 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் இரவு பத்து . அவசரப் பிரிவிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல். நான் அன்று அவசர அழைப்பு மருத்துவர்( on call doctor ). இரவு முழுதும் வரும் அவசர நோயாளிகளைப் பார்த்து தேவையெனில் வார்டில் சேர்க்கவேண்டும். அதன் பின்பு வார்டு மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொள்வார்கள். நான் வீட்டில்தான் இருப்பேன். நோயாளி வந்தால் மட்டுமே வெளியேறுவேன். அவசர அவசரமாகப் புறப்பட்டு அவசரப் பிரிவிற்குச் சென்றேன். சிவகங்கை […]

காவல் நாய்

This entry is part 1 of 31 in the series 31 மார்ச் 2013

நம்பி     மரத்தடியில் இவன் செய்த தவம் எதுவென்று இப்போது புரிகின்றது சமீப தினங்களாய் காரணம் ஏதுமில்லாமலேயே அவனை பார்த்து குரைக்கும் நாய்களின் ஊளையில் சிரிப்பு வந்து விட்டது எனக்கு அனுபவத்தின் போதாத தன்மை உன் எல்லா நடத்தைகளிலும் அடையாளம் காணமுடிகிறது. உன் அவசரப் புத்தி கன்னத்தில் அறை வாங்கும் ஆசை பொதுமையாய் யோசி எல்லா எவனும் நல்லவனாய் இருக்க மாட்டான் உன்னை கவனித்துக் கொண்டிருக்கும் எவனோ ஒருவன் வாள் கொண்டு கை நிறைய அள்ளிப் […]