வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வெளியான கிட்டத்தட்ட நூறு கவிதைகளும் வெளியீடு காண்கிறது. இந்தக் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் களம் அமைத்துத் தந்த திண்ணைக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.இத்துடன் என் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். என் சார்பில் அனைவருக்கும் […]
0 சில்லறை திருடர்களின் சிரிப்பு கார்னிவல். புதுமுக இயக்குனரின் ஆர்வக் கோளாறால் காமெடி, சொதப்பல்! 0 தேசு சின்ன திருட்டுக்களை செய்யும் எரிமலைக்குண்டு கிராம ஆள். அவனுக்கு விலைமாது கல்யாணி மேல் ஒரு கண். மதன் காதலிக்கும் திவ்யா, அவனது முதலாளி ராயப்பனின் மகள். ஒரு கட்டத்தில் நால்வரும் சிதறி ஓட, இடையில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கலை சின்னாபின்னமாக்குகிறது. இயக்குனர் மணிகண்டன், சுந்தர் சி சிஷ்யனோ என்று ஒரு […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் தொடங்கிய 1990 ஆம் ஆண்டில் பாரதி விழாவை நடத்தினோம். அதுவே இந்த கங்காரு நாட்டில் நடந்த முதலாவது பாரதிவிழா. சட்டத்தரணியும் கலை, இலக்கிய ஆர்வலருமான செல்வத்துரை ரவீந்திரனின் தலைமையில் பாரதி விழா மெல்பன் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரியில் நடந்தது. சிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார். அவர் மறைந்து கடந்த 27 ஆம் திகதி ஒரு வருட தினமாகும். இவ்விழாவில் மாணவர்களுக்கிடையே நாவன்மைப் […]
எம். ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்” வன்னி ‘ நாவல் அப்படியானதன்று.தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் […]
பெண்களுக்கு மார்பில் கட்டி உண்டானால் அது புற்று நோயாக இருக்குமோ என்ற பயம் வருவது இயல்பானது. அது நல்லதுதான். மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடையே வளர்ந்துள்ளது நல்ல அறிகுறிதான். ஆனால் எல்லா மார்பகக் கட்டிகளும் புற்று நோயாக இருக்காது. புற்று நோய் இல்லாத சாதாரணக் கட்டிகளும் மார்பகத்தில் தோன்றலாம். அவற்றில் ஒன்றுதான் பைப்ரோஅடினோமா என்னும் தசைநார்க் கட்டி. மார்பில் தோன்றியுள்ள கட்டி எந்த வகையானது என்பதைத் துவக்கத்திலேயே பரிசோதனை செய்து […]